இவற்றை முன்னிட்டு விஷேட நிகழ்ச்சிக்கு தயார் பண்ணிக் கொண்டு காலை நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கிக் கொண்டு இருக்கும் போது, இந்த இரு நிகழ்வுகளை விட மிக முக்கியமான ஒரு தினத்தைப் பற்றி எனக்கு ஒருவர் ஞாபகப் படுத்தினார்.
அது தான் தமிழ் பேசும் மக்கள் செய்த தவப்பயனின் காரணமாக தமிழ்த் திரையுலகத்துக்குக் கிடைத்த தவப் புதல்வி ஸ்ரேயா அவர்களின் பிறந்த தினமாம். அடடா மறந்திட்டீங்களே என்றார்.. பாரதி எங்கே, இந்த பாதி ஆடைப் பைங்கிளி (அடடா கவிதை மாதிரி வருதே..) எங்கே..
வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு அந்த மிக முக்கிய தகவலை வானொலியில் சொன்னேன். பாரதியைப் பற்றி ஞாபகப் படுத்தி வந்த அதேயளவு smsகளும்,தொலைபேசி அழைப்புகளும் அந்த தலுக்கழகிக்கும் வந்தன.
என்ன செய்தாய் பாரதி நீ எம் தமிழ் சாதிக்கு இவர்கள் உன்னை ஸ்ரேயாவை விட ஞாபகம் வைத்திருப்பதற்கு? நீ அறை குறை ஆடையோடு வந்து இடுப்பாட்டினாயா? அல்லது இடை,தொடை காட்டினாயா? காசுக்காக காமெடி நடிகனின் கட்டிலில் தான் புரண்டாயா?
குஷ்பு,நமீதாவுக்கு கோவில் கட்டிய நாட்டவரின் அயல் நாட்டவரன்றோ?
வந்த கோபத்தில் ஒரிரன்று கடுமையான வார்த்தைகளை நிகழ்ச்சியில் உதிர்த்த பிறகே கொஞ்சம் சாந்தமாகி,யோசித்துப் பார்த்தபோது சினிமா நட்சத்திரங்களை கடவுளாக மாற்றியது இந்தியத் தொலைக்காட்சிகள்,பத்திரிகைகள் மட்டுமன்றி நாமும் தான் என்பது உறைத்தது.
அந்த வரலாற்றுத் தவறுகளை நான் எப்போதும் செய்தவனல்ல (நான் சார்ந்திருந்த ஊடகங்கள் செய்த போதும் கூட).என் பதவிக் காலத்தில் இது போன்ற தனி நபர் வழிபாடுகளைக் கூடியளவு குறைத்தே இருக்கிறேன். (சூரியனில் முடியுமானவரை )
வெற்றி ஆரம்பித்த பிறகு சினிமா நட்சத்திரங்களை மையப் படுத்தி எந்த நிகழ்ச்சிகளையும் அமைக்கவில்லை. பூனைக்கு மணி கட்ட நாம் தயாராகி விட்டோம். ஆனால் இந்திய சினிமாவோடு ஊறிப்போன நேயர்கள்?
9 comments:
வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு அந்த மிக முக்கிய தகவலை வானொலியில் சொன்னேன்.//
அதை சொல்லாமல் விட்டிருக்கலாம் தானே?
அல்லது மேலதிகாரிகள் உத்தரவோ.. ?
super.netthiyadi.naanu intha nigalchi ketten.engal sanam thirunthathu.
aayiram Bharadhi vanthaalum ivanga thiruntha maatangal.
Sentheepan ,Colombo 13.
அன்பின் கொழுவி,
மேலதிகாரி? எனக்கு அப்பிடி யாருமே இல்லை.இருந்தாலும் கூட ஸ்ரேயாவின் பிறந்த நாளை வானொலியில் சொல்லச் சொல்லும் அளவுக்கு இருக்க மாட்டார்கள் என நம்புகிறேன். சும்மா ஒரு நக்கல் தகவலாக நான் சொன்னதே அது. ஆனாலும் அதையும் நான் சொல்லி இருக்கக் கூடாதோ என இப்போது தோன்றுகிறது.
ஒவ்வொரு நாளும் அன்றைய நாளின் சிறப்புக்கள் பற்றி வெற்றிFM இல் சொல்லும்போது அன்றைய நாளில் பிறந்தவர்களையும் சொல்வதுண்டு.அது போல் தான் இதுவும் நடந்தது சகோதரா
------
நன்றி செந்தீபன் உங்கள் பதிவுக்கு.. அப்படி இருந்தாலும் 1001வது பாரதியை தேடி அழைத்து வரவேண்டியது எங்கள் எல்லோருக்கும் இருக்கும் கடப்பாடு.. (முடியல)
அண்ணா இதே நிலை நான் இணையத்தில் அங்கம் வகிக்கும் ஒரு இந்தியக் குழுவிலும்(ஏறத்தாழ 10000 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட அங்கத்தவர்களை கொண்டுள்ளது) இடம்பெற்றது.இன்று பாரதியின் நினைவு தினம் என்று ஒரு பக்கத்தை ஆரம்பித்து பாரதியை பற்றிய சில தகவல்களையும் வழங்கி இருந்தேன்.ஆனால் அதற்கு கிடைத்த பின்னூட்டங்கள் 4 மட்டுமே.ஆனால் வளமையாக பல உப்பு சப்பில்லாத விடையங்களுக்கெலாம் சுமார் 150க்கு மேற்பட்ட பின்னுட்டங்கள் கிடைப்பது வளமையானது.அதற்கு பின் மீண்டும் ஒரு பின்னுட்டத்தை இவ்வாறு தெரிவித்தேன்
"இன்று பரதியாருடைய நினைவு தினம் அத்துடன் நடிகை ஸ்ரேயாவின் பிறந்தநாள் கூட இன்று இலங்கையின் வெற்றி வானொலியில் இவற்றை கூறினார்கள் .எங்கள் இலங்கை
நேயர்கள் பாரதியை விட்டுவிட்டு ஸ்ரேயாவுக்கு வாழ்த்துகளை கூறி
குறும்தவல்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். இதை அந்த நேரத்தில் வானொலியில் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த அறிவிப்பளர் கூட பாரதியை தமிழர்கள் மறந்து கொண்டு வருகிறார்கள் எனக் கவலையுடன் கூறினார் இதற்கு கிடைக்கும் பின்னூட்டங்களை பார்க்கும் போதும் பாரதியை தமிழர்கள் மறந்து கொண்டு வருகிறார்கள் போலத்தான் தெரிகிறது"
இதன் பிறகு சில பின்னூட்டங்கள் இவ்வாறு கிடைத்தது.
1)"பாரதியை மறக்கமுடியாது
மறந்தால்தானே நினைவு நாள் தேவை
பாரதியும் வள்ளுவனும் நம்மோடு கலந்து விட்டவர்கள்"
2)"உண்மையே..... ஆனால் இன்றைய இளம் தலைமுறையினருக்கு பாரதியையும் வள்ளுவனையும் திரைப்பட மயக்கத்திலிருந்து விடுவித்து, நாம் நினைவுபடுத்திட வேண்டும். அது நம் கடமையும் கூட"
3)நேற்று என் நண்பர் என்னைத் தொலை பேசியில் அழைத்தார். இன்று பாரதி நினைவு நாள். ஒரு பாரதியார் பாடல் பாடுங்களேன் என்றார்.
“தொலைபேசியிலேயா”
“அதனால் என்ன “
நான் அவர் ஆசையை நிரைவேற்ற அவர் வீட்டுக்கே சென்றேன்.
“நல்லதோர் வீணை செய்தே” என்ற பாடலைப் பாடிவிட்டு அவருடன் இரவு உணவு உண்டுவிட்டு திரும்பினேன்
அவர் ஒரு செய்தி விளையாட்டாக சொன்னார்
கூகிள் இமேஞ் தேடுதலில் “ பாரதி” என்று போட்டு தேடினால் அந்த முண்டாசு (அவர் பாரதியை இப்படித்தான் செல்லமாக கூப்பிடுவார்) வருவதைக் காட்டிலும்
வளக்கமாக பல நங்கைகள் படமே வந்தன"
இவ்வாறு பல பின்னூட்டங்கள் கிடைத்தன.
இன்னும் ஒரு 50 வருடங்களின் பின் இணையத்தில் பாரதியை தேடினால் நடிகைகளின் படங்களை மட்டுமே பெற முடியும். பாரதியையும் தெரிந்து கொள்ளலாம்.
""மொழிபெயர்ப்பின் மூலமே""
உண்மையில் பாரதியை மட்டுமல்ல ஏனைய தமிழ் மொழி அறிஞர்களையும்,எம்மவர்களுக்கு நாமே தான் நினைவுபடுத்த வேண்டும்.இதற்கு வெற்றியின் பங்கும் இருக்கும் என நான் நிர்சயமாக நம்புகிறேன்.
இலங்கையில் இந்திய சினிமா மோகம் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது.
இலங்கையில் ஒரு திரைப்படத்தையோ அல்லது ஒரு நாடகத்தையோ உருவாக்கினால் நாங்கள் எத்தனை பேர் அதற்கு ஆதரவு அளிக்கின்றோம்? மாறாக அவற்றை குறை கூறிக்கொண்டு இருக்கின்றோமே தவிர ஆதரவு அளிப்பது கிடையாது. திரைப்படத்தை வெளியிட சினிமா கொட்டகையை பெறுவதற்கே கடினமாக இருக்கிறது என்பதை நினைக்கும் போது மிகவும் கவலையாகத்தான் இருக்கிறது.
திருக்குறளை பாடலாக்கும் முயற்சியில் ஏ.ஆர்.ராஹூமான் ஈடுபட்டு இருப்பதும் ஒரு நல்ல முயற்சியே இதே போல் பாரதியார் பாடல்களையும் இசைப்படுத்த முயற்சி செய்தால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.
வணக்கம் அண்ணா உங்களை வலையுயுலகில் சந்தித்ததையிட்டு மகிழ்ச்சி தொடர்ந்தும் ஆக்கங்களை எதிர்பார்க்கிறேன்
நன்றி
உங்கள் வலைப்பூவை இலங்கைவலைத்திரட்டியில் இப்பொழுதே இணைக்கிறேன்
மற்றும் இந்த தளங்களுக்கும்சென்று இணைய முயற்சி செய்யுங்கள்
http://kurungkavi.yeanthiram.com/tamilblogs/
http://www.thamizmanam.com/
நன்றியுடன்
மாயா
நன்றி.. தமிழ்மணத்தில் இணைய விரும்பிய போதும்,என் பதிவில் ஆங்கிலச் சொற்கள் பல காணப்படுவதாகச் சொல்லி அவர்கள் சேர்க்கவில்லை. உங்களால் முடிந்ததால் இணைத்துவிடுங்கள்.
உங்கள் பதிவுகளை நீண்ட காலமாக படித்து வருகிறேன்
மீண்டும் வணக்கம்
உங்களது பதிவை தற்போது தமிழ்மணம் இணைய வலைப்பூதிரட்டியில் இணைக்குமாறு அனுப்பியிருக்கிறேன்
அவர்கள் உங்களுக்கு பதில் அனுப்புவார்கள்
அதன்பின்னர் உங்கள் வலைப்பூ பதிவுகளை தமிழ்மணம் திரட்டியில்பதிவிடமுடியும்
S.S.Maya
சில நாட்களாக அலுவலகப் பணி நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டி இருந்ததால் வேறுவழி இல்லாமல் ரேடியோ கேட்க வேண்டி வந்தது. ஏற்கனவே என் உறவினர் ஒருவர் வெற்றி எவ் எம் பரவாயில்லை என்றார் அவர் பரவாயில்லை என்பன மற்றவர்களுக்கு நல்லதாகத் தெரியும். ஆகவே உங்கள் பாசையில் சொல்லப்போனால்வெற்றியுடன் இணைந்திருந்தேன். சினிமாப் பாடல்கள் ஒலிபரப்பினாலும் அதிகமாகச் சினிமாச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத அதிசயத்தைக் கண்டேன் இல்லை இல்லை கேட்டேன். அதிலும் வேகம் விவேகம் நன்றாக இருக்கின்றது ஒரே ஒரு குறை தொலைபேசி இலக்கங்களை உங்கள் அறிவிப்பாளர்கள் மிகவும் அவசரமாகச் சொல்வதால் புதிய நேயர்களுக்குப் புரிவதே இல்லை. அதனை ஆறுதலாகச் சொல்லச் சொல்லுங்கள்.
பாரதியை எந்த தொலைகாட்சிகளும் நினைவுகூரவே இல்லை. பாவம் செய்த மனிதன் அவர். செப்டம்பர் 11 பெரும்பாலானோருக்குத் தெரியாது ஆனால் டிசம்பர் 12 தெரியும். ஊடகங்களும் டிசம்பர்12 ற்க்கு கொடுக்கும் முக்கியத்தை பாரதிக்கோ கண்ணதாசனுக்கோ கொடுப்பதில்லை. நம்ம நாட்டிலும் சில ஒளி, ஒலி ஊடகங்களும் சில பத்திரிகைகளும் இதனைத்தான் செய்கின்றன.
நன்றி மாயா.. தமிழ்மணத்தாருக்கும் நன்றிகளைத் தெரிவித்து மடல் ஒன்று அனுப்பியுள்ளேன்.
வந்தியத்தேவன், நன்றி, நேற்று நிங்கள் நிகழ்ச்சிக்கு அனுப்பிய உம் கிடைத்தது.உங்கள் முகம் ஞாபகம் இல்லை. கண்டால் சட்டென்று அடையாளம் கண்டுகொள்வேன் என நினைக்கிறேன்.
உங்கள் இரு பதிப்புக்களையும் நான் நீண்ட காலம் பார்த்து வருகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்..எம்மைப் பற்றியும் ..
Post a Comment