October 02, 2008

சிலுக்குக்கு இருக்கு.. சிவாஜிக்கு இல்லையா?

நேற்று ஒரு மாபெரும் மேதையின் பிறந்த தினம்..தமிழை திரை மூலம் முழங்கவைத்த ஒரு இமயத்தின் பிறந்த நாள் .ஆயிரக் கணக்கான அழகான தமிழ் வரிகளுக்கும் ,சொற்க்களுக்கும் உயிர் கொடுத்த பெருமகன் .திரையில் ஒரு சிங்கம் ,தமிழ் சங்கம். பல சரித்திரப் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த செம்மல்.எங்கள் மத்தியில் வாழ்ந்து, மறைந்த ஒரு வரலாறு.
                                                                


இப்படியான மாறாப் புகழ் கொண்ட ஒரு பெருமகனை நாம் மறந்து விடலாமா? சினிமா மட்டுமே போதும் சோறு கூட வேண்டாம் எனும் தமிழகத்தினரே இந்தப் பொன்னாளை மறந்து போகலாமா ?
குலுக்கித் தழுக்கிய சிலுக்கினை நினைவு வைத்துக் கொண்டாடிய எங்கள் வலைப்பதிவு உலகம் இந்த சிம்மக் குரல் செவாலியே சிவாஜியை மறந்ததேனோ? என்னாங்கடா உங்க நியாயம்? ஒரு வரி கூட யாரும் எழுதலையே (என்னைத் தவிர?) 

அதனால தான் இந்த சிலுக்குக்கு இருக்கு.. சிவாஜிக்கு இல்லையா?

அது சரி உங்களுக்கு பல்டி மன்னன் ரஜினி நடித்த சிவாஜி வந்த பிறகு,சரித்திர மைந்தன் சாகாப் புகழ் பெற்ற சிவாஜி கணேசனை மறந்து விட்டதே..படிக்காதவன் படத்தில் தன் பெயரை முதலில் போட்டு,சிவாஜியையே பின்னிறுத்தியவரின் பக்த கூட்டங்களன்றோ நீங்களெல்லாம்..எப்படி ஞாபகம் இருக்கும் அந்த நடிப்பின் இமயத்தை?
கேப்டன் சிவாஜியை நினைவுகூர்ந்து நடிகர் சங்கம் சார்பாக அக்டோபர் முதலாம் திகதியை தமிழ் திரையுலக நாளாக அறிவித்தாரே அதுவும் மறந்து போச்சா?
நாளை கருப்பு M.G.R  ஆட்சிக்கு வந்தால் புரட்சித் தலைவரையும் யாரென்று கேட்பீர்கள் .. 

நீ யார் உனக்கெதுக்கு அக்கறை என்று கேட்பீர்கள்..

சினிமா மோகத்துள் முற்றாக வீழாதவன் தான் நான்..என்னுடைய சமூகம் அவ்வாறு சினிமாப் பைத்தியங்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதிலும் அதிக அக்கறை கொண்ட ஒரு பொறுப்பான(கொஞ்சமாவது) ஊடகவியலாளன் நான்.எனினும் தமிழ் திரைப்படங்களைக் கொஞ்சமாவது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படச் செய்தவருக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்ற ஆதங்கமே என்னை இவ்வாறு உங்களைக் கேள்வி கேட்கச் செய்தது.
(சன் டிவி,கலைஞர்,ஜெயா,விஜய் இலும் எந்த விசேடத்தையும் காணோம்..நோன்புப் பெருநாளின் மகிமையோ?ஆனால் அர்ஜுனுக்கும் ,முதல்வனுக்கும் நோன்புக்கும் என்ன சம்பந்தம்?)

பி.கு : நாளை சிவாஜியைப் பற்றி ஒரு வித்தியாசமான கோணத்தில் பதிவொன்றைத் தர இருக்கிறேன்..





12 comments:

Anonymous said...

:)
நல்ல பதிவு

Unknown said...

நிச்சயம் நினைவுகூறப் படவேண்டிய பச்சைத் தமிழன் சிவாஜி கணேசன்.
சிம்மக் குரலோன் சிவாஜி கணேசனை
மறக்க மாட்டார்கள் உண்மைத் தமிழர்கள்.

சி தயாளன் said...

நீங்களாவது ஞாபகம் வைத்து போட்டீர்களே.. நன்றி..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நியாயமான ஆதங்கம்.

Nimal said...

சிவாஜியின் பிறந்த தினத்தை ஞாபகம் வைத்திருக்க அவசியமில்லை, அது எமது ஞாபகசக்தியை பொறுத்தது. (எனக்கு எனது பிறந்த தினமே மறந்து போகுமளவுக்கு ஞாபக மறதி இருக்கு)

ஆனாலும் அவருக்கு உரிய மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

Reshzan said...

ரஜினியின் மீது என்ன வன்மையோ!
சிவாஜி நடிகர் திலகம் தான் யாரும் அறிந்ததே அவரைப்பற்றி எந்த குறிப்பும் சொல்லாதது ஊடகங்களின் தவறு தான்.
சரியான ஆதங்கம் ஈழத்தவர் நல் சினிமா ரசிகர்களே!

வந்தியத்தேவன் said...

சிவாஜியா? ரஜனி நடித்த படமா? இப்படிக்கேட்பவர்கள் பலர். கூகுளில் கூட சிவாஜி என தேடிப்பாருங்கள் ரஜனியின் படம் பற்றிய விபரம்கள் தான் வருகின்றது. அந்தப் படத்திற்க்கு ஒரு இமயத்தின் பெயரை வைக்க சந்திரமுகி கொடுத்த வெற்றியில் சிவாஜி குடும்பத்தவர்கள் ஒத்துக்கொண்டார்களோ?

நீங்கள் குறிப்பிட்ட எந்த தொலைக்காட்சிகளும் ரம்ழான் விசேட நிகழ்ச்சிகள் ஒளிபரப்புச் செய்யவில்லை. காந்தி ஜெயந்திக்குத் தான் உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் என பல நல்ல காந்தி பற்றிக் கருத்துச் சொல்லும் திரைப்படங்களை உலகத் தமிழரின் தலைவர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். சிறப்பு மானாட மயிலாட நிகழ்ச்சி ஏனோ ஒளிபரப்பவில்லை. ஜெயாவும் விஜய்யும் தங்கள் வழமையான நிகழ்ச்சிகளை இரவு ஒளிப்ரப்பினார்கள் பகல் என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை.

சிவாஜி மறக்கப்பட்ட கலைஞனாகி சில ஆண்டுகள் சென்றுவிட்டன. சில நாட்களில் யாரும் கத்துக்குட்டி நடிகன் சிவாஜிக்கு நடிப்புச் சொல்லிக்கொடுத்ததே நான் என அறிக்கை விட்டாலும் விடுவான்.

ஜோ/Joe said...

நடிகர் திலகத்தை யாரும் மறந்து விடவில்லை .நடிகர் திலகத்தின் 80-வது பிறந்த நாள் விழா கலைஞர் தலைமையில் சீரும் சிறப்புமாக அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது .

http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/16401.html

ஜோ/Joe said...

கலைஞர் தொலைக்காட்சி செய்தி வீடியோ
http://video.yahoo.com/watch/3628197/10001596

தினமலர் செய்தி
http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=4024&cls=row3&ncat=TN

ARV Loshan said...

நன்றி ஜோ, இந்த இரு செய்திக் குறிப்புக்களையும் நான் பார்த்தேன்.. ஆனால் வலைப்பதிவுகளிலும்,தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் அந்த சிகரம் இல்லாமல் போனதைத் தான் நான் ஆதங்கத்தோடு குறிப்பிட்டேன்.
கலைஞர்,தன் நீண்ட கால நண்பரை மறக்க மாட்டார் என்று தெரியும்,ஆனால் அவரது தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலமாக கௌரவிக்க மறந்தது கவலைப்பட வேண்டிய விடயமல்லவா?

ஜோ/Joe said...

//ஆனால் அவரது தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலமாக கௌரவிக்க மறந்தது கவலைப்பட வேண்டிய விடயமல்லவா?//

வீணர்களின் எதிர்ப்பையெல்லாம் மீறி கலையுலக தலைமகனுக்கும் சிறப்பான இடத்தில் சிலை திறந்தவர் கலைஞர் தான் .இன்றும் பிறந்த்தநாள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்ததும் கலைஞர் தான் .இது போக விட்டால் கலைஞர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை அவரே தயாரித்து இயக்கியிருக்க வேண்டும் என சொல்லாமல் விட்டீர்களே!

கடற்கரையிலேயே சிலை வைத்த போது இங்கே வலைப்பதிவிலே கூட 'சிவாஜி என்ன செய்து கிழித்துவிட்டார்' என்ற ரீதியில் பேசியவர்கள் தான் அதிகம்.

இவர்கள் ஒன்றும் அவரை பெருமைப்படுத்த வேண்டாம் ஐயா ..சிறுமைப்படுத்தாமல் இருப்பதற்கே நன்றி சொல்வோம்.

N.H. Narasimma Prasad said...

//உங்களுக்கு பல்டி மன்னன் ரஜினி நடித்த சிவாஜி வந்த பிறகு,சரித்திர மைந்தன் சாகாப் புகழ் பெற்ற சிவாஜி கணேசனை மறந்து விட்டதே..படிக்காதவன் படத்தில் தன் பெயரை முதலில் போட்டு,சிவாஜியையே பின்னிறுத்தியவரின் பக்த கூட்டங்களன்றோ நீங்களெல்லாம்//

முரட்டு காளை படத்தின் போஸ்டரில் ஜெய்சங்கரின் படத்தை பெரிதாக போடும்படி சொன்னவர் ரஜினி. இன்னும் சொல்லபோனால், சிவாஜி மீது மிகுந்த மரியாதை உள்ளவர் ரஜினி. கண்டிப்பாக தலைவர் அவ்வாறு செய்ய சொல்லியிருக்க மாட்டார். அப்படி செய்திருந்தால், அவர் பின்னாளில் சிவாஜியின் குடும்பத்திற்கு 'சந்திரமுகி' என்ற படத்தை நடித்து கொடுத்திருக்க மாட்டார்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner