November 06, 2008

இலங்கையில் ஒரு தமிழ் ஜனாதிபதி!

அமெரிக்க வரலாற்றில் புதிய சரித்திரப் பதிவை ஏற்படுத்திய பராக் ஒபாமா பற்றியே நேற்றும் இன்றும் பரபரப்பு!  

ஆபிரிக்கப் பின்னணியுடன் சாதாரண நடுத்தர வாழ்வு வாழ்ந்த ஒரு வழக்கறிஞர் இன்று உலகின் மிகப் பெரும் வல்லரசின் முதல் குடிமகன்.  

முன்னொரு காலத்தில் அடிமைகளாகக் கருதி சிறுமைப்படுத்தி, கொடுமைப்படுத்திய இனத்திலிருந்து (இன்று வரை கறுப்பினத்தவரின் உரிமைகளுக்காகப் போராடும் ஜெஸி ஜக்ஸன் போன்றவர்கள் இருக்கின்றார்கள்) பெரும்பான்மையினரான வெள்ளையர் பலபேரின் வாக்குகளோடும் அமெரிக்கத் தலைவனாகியுள்ளார்.  

சர்வதேச பொலிஸ்காரன் என்று சகலநாடுகளின் விடயங்களிலும் மூக்கை நுழைத்து அடாவடி அமெரிக்கா ஒபாமாவின் வெற்றி மூலம் நல்ல பெயரை சம்பாதித்துள்ளது.  

விளையாட்டுக்களில் வெற்றிகளையும் பதக்கங்களையும் குவிக்க மட்டுமல்ல; வேலைத்தளங்களில் கடினவேலை செய்யமட்டுமல்ல ; போர்க்களங்களில் இரத்தம் சிந்த மட்டுமல்ல ; தமது நாட்டை வழிநடத்த தலைவனாகவும் சிறுபான்மையினரில் ஒருவரான கறுப்பர் ஒருவரைத் தம்மால் தெரிவுசெய்ய முடியும் என்பதைப் பறைசாற்றியுள்ளனர்.  

உண்மையிலேயே ஜனநாயகம் மீது பற்றுக்கொண்ட நாடு அமெரிக்கா என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சிவேண்டும்?  

அதுசரி இந்தியா என்ற மிகப் பெரியநாட்டில் ஒரு சீக்கியர்,ஒரு ஆந்திரர்,ஒரு வடநாட்டவர் என்று யார் வேண்டுமானாலும் பிரதமராகலாம்...(வெளிநாட்டுப் பெண் என்றால் மட்டும் கொஞ்சம் சிக்கல்!!!) எந்த இனத்தவரானாலும் இந்தியாவின் முதல் குடிமகனாகலாம் (ஒரு தமிழர் - இஸ்லாமியர் கூட )  

அமெரிக்காவிலே ஒரு கறுப்பினத்தவரால் முடிந்திருக்கிறது.  

ஆனால் 
இலங்கையில் மட்டும் சிங்கள பௌத்தராக இருந்தால் மட்டுமே ஜனாதிபதியாகலாம். ஜே ஆர் ஜயவர்த்தனா முதல் இன்றுள்ளவர் வரை பலபேர் உண்மையில் கிறிஸ்துவ மதத்தினராக இருந்தாலும் அவையெல்லாவற்றையும் மறைத்து பூந்தட்டு ஏந்தி, போதி (அரசமரம்) வழிபாடு செய்து ஜனாதிபதி ஆனது தனிக்கதை.
 
எனினும்,எந்த அரசினதும் அரசு கட்டில்களைத் தாங்கி நிற்கும் சிறுபான்மையினர் யாருக்கும் (தமிழரோ, முஸ்லிமோ) பிரதமர் பதவி கூடக் கிடையாது இலங்கையிலே!  

1977இல் தமிழ்பேசுவோர் பெரும்பான்மையாக வாழும் வடகிழக்கின் அமோக வாக்குகளோடு தமிழர் விடுதலைக் கூட்டணியின் வெற்றியும், எதிர்கட்சித் தலைவராக அமிர்தலிங்கம் தெரிவு செய்யப்பட்டதும் அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்தனாவின் கண்களை உறுத்தின. 

அதன்பின்னர் உருவாக்கப்பட்ட யாப்பின் பிரகாரம் தான் இந்த சிங்கள பௌத்தரல்லாதோர் ஜனாதிபதியாக மாற முடியாத நிலை விகிதாச்சாரத் தேர்தல் முறை மூலமும் சிறுபான்மைக்கட்சி எதுவுமே எதிர்க்கட்சி ஆகவும் முடியாது.
 
மூன்றில் இரண்டு பெரும்பான்மை வந்தாலே யாப்பு மாற்றப்படலாம். எந்தப் பேரினவாதி தான் சிறுபான்மையை ஸ்ரீலங்காவில் தலை தூக்கி விடுவான்? இதேவேளை நேற்று அமெரிக்காவில் ஒபாமா வென்றது கொழும்பில் பல சிங்கள நண்பர்களுக்கு பிடிக்கவில்லை.  

ஏதோ தமிழ்ப்புலியொன்று வெற்றி பெற்று விட்டதாகவோ அல்லது பராக் ஹூசைன் ஒபாமா என்ற முஸ்லீம் தமது உரிமைகளை எடுத்துவிட்டார் என்ற எரிவு! 

மக்கெயின் வென்றிருந்தால் மகிந்தவே அமெரிக்கா ஜனாதிபதி ஆனது போல ஆடியிருப்பார்கள்...

22 comments:

Anonymous said...

எனது சிங்கள பல்கலைக்கழக சக மாணவர்களுக்கும் சரியான கவலை. தமிழர்களின் சம உரிமையை மறைமுகமாகக் குத்திக் காட்டுவதாலும்..

தங்க முகுந்தன் said...

அருமையான ஆக்கம்!
நன்றி லோசன் வாழ்த்துக்கள்!
மனமுண்டானால் இடமுண்டு!
எமது நாட்டில்தான் அது கிடையவே கிடையாதே!!

IRSHATH said...

நான் BBC இல் கேட்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒபாமா வின் பிரசாரம் ஒரு போதும் கறுப்பின மக்களை நோக்கி குவிந்ததாக இருக்கவில்லை. அது ஒரு தேசத்தின் பெருவாரியான மக்களின் நலன் சார்ந்து இருந்தது. அதனால் தான் அவர் வென்றார்.

இங்குதான் முழு தேசதிட்குமாக பேசினால் கைக்கூலி என்று போட்டு தள்ளுகிறார்களே. கதிர்காமருக்கு அந்த வாய்ப்பு இருந்ததை நாம் மறக்க கூடாது.

இர்ஷாத்

ARV Loshan said...

அது சரி கதிர்காமர் தமிழர் என்பதில் அவரது பெயரைத் தவிர வேறு ஆதாரம் ஏதாவது உண்டா? அவர் தமிழில் பேசி நாம் யாராவது ஒருவர் கேட்டிருகிறோமா?

அவர் சர்வதேசம் எங்கும் பிரயாணம் செய்து விடுதலைப் புலிகளைத் தடை செயுமாரி கோரியதைத் தவிர வேறு என்ன உருப்படியாக செய்தார்?

என் அவருக்கு பிரதமர் பதவியைப் பெறமுடியாமல் போயிற்று?

இர்ஷாத் உங்கள் பார்வை கோணத்தை கொஞ்சம் மற்ற வேண்டும் நீங்கள்..

அதுசரி A.C.S.ஹமீதுக்கு அல்லது M.H.Mohamadக்கும் பிரதமர் பதவி கிடைக்கவிலையே.. ஏன்???

நந்தவனத்து ஆண்டி said...

வணக்கம் அண்ணா ! உங்கள் பதிவு அருமை
அதற்கு வந்த பின்னூட்டமொன்றில் . . . இர்ஷாத் என்ற நண்பர் ? ? ?
// கதிர்காமருக்கு அந்த வாய்ப்பு இருந்ததை நாம் மறக்க கூடாது. // என்று பெரிய காமடியொன்றை பின்னூட்டமாக இட்டுப்போயிருக்கிறார். இவரெல்லாம் இலங்கைப்பதிவராக இருந்து கொண்டு குறுகிய வட்டத்துக்குள் சிந்திப்பதால் தான் இலங்கைப்பதிவரது மானம்,அவர்களது எழுத்துக்கள் எல்லாம் கேலிக்குரியவையாக இருக்கின்றன . .

அவரது பதிவுகளும் ஆங்காங்கே இடும் பின்னூட்டங்களும் கேவலமாக இருக்கின்றன !
உங்களகல் இயன்றஅளவு உங்கள் கோபத்தைக்கட்டுப்படுத்தி அவருக்கு உண்மையைப்புரியவையுங்கள்

நன்றிகளுடன்
ஆண்டி

சயந்தன் said...

என்னது
கதிர்காமர் தமிழரா.. எப்பேல இருந்து ? :) சொல்லவேயில்லை..

பாவம் அந்த மனுசன் உலகமெல்லாம் திரிந்து புலிகளை தடை செய்தவர். ஆனா ஒரு பிரதமர் பதவியை கூட குடுக்கிறதுக்கு சிங்கள மேலாண்மை விட வில்லை. கடைசிநேரத்திலயாவது அதை பற்றி சிந்தித்து மனம்வருந்தியிருப்பாரோ..

IRSHATH said...

நான் சொன்னது ஒபாமா தேசிய ரீதியில் அரசியல் நடத்தினார் என்பதே! அவர் இன ரீதியாக நடத்தவில்லை.

அவ்வாறன ஒப்பீட்டுக்கு கதிரை தவிர வேறு யாரும் இல்லை.

ஹமீட் மற்றும் முஹம்மது இருவரும் ஒரு பிரதமர் பதவிக்கான எத்தனிப்பையும் செய்யவில்லை.

ஆண்டி, உங்கள் கருத்துக்களை ஏற்று கொள்ளாவிட்டால் அது கேலிக்குரியதா? நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்!

பின்னூட்டம் போட வேண்டாம் என்று இந்த வலை உரிமையாளர் சொன்னால் இதில் என் கருத்துக்களை சொல்லமாட்டேன். அவ்வளவுதான்!

அல்லது உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். இருவரில் யாருக்காவது தெளிவு கிடைக்கும்

இர்ஷாத்

Anonymous said...

ஒரு தமிழர் இலங்கையில் சனாதிபதியாக வர முடியாது. அப்படி வருவதாக வைத்துகொள்வோம்.என்ன நடக்கும்? அவர் புலிகளை ஆதரிக்காவிட்டால் இர்ஷாத் கூறியமாதிரி கைக்கூலி என்று போட்டு தள்ளப்படுவார்.

Anonymous said...

//புலிகளை ஆதரிக்காவிட்டால் இர்ஷாத் கூறியமாதிரி கைக்கூலி என்று போட்டு தள்ளப்படுவார்.//

புலியை விடுங்களையா. புலி இல்லை என்றே வைத்துக்கொள்வோம் .......... உங்களால் ஒரு மயிரையும் (தமிழ் தானே ) ஒன்றும் பண்ண முடியாது . எடுத்ததுக்கெல்லாம் நாங்க புடுங்கி இருப்போம் புலி விடாது புலி விடாது என்று எத்தின நாளைக்கு பேய் காட்ட போறீங்க.

Paheerathan said...

அதிகமாக இந்தியாவுக்கு கடிதம் எழுதுபவருக்கு கொடுப்பதாக இருந்தால் ......ஆநோந்த சங்கரிக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது.
ஹி ஹி ஹி நானும் ஏதாவது காமெடி பண்ணலாமெண்டு பார்த்தேன்.

IRSHATH said...

என்ன உருப்படியாக செய்தார் எண்டு எல்லாம் கேட்க கூடாது! யார்தான் செஞ்சிருகாங்க உருப்படியா?

ஆமா! ஆனந்த சங்கரி இருக்கார்ல. சில நேரம் அவர் பெயர சொல்லியிருந்தன் எண்டால் தமிழர் என்பதில் அவரது பெயரைத் தவிர வேறு ஆதாரம் நிறைய இருந்திருக்கும். எல்லாரும் அவர் தமிழ்ல பேசி கேட்டிருக்காங்க.

Anonymous said...

இலங்கையில் ஒருதமிழ் ஜனாதிபதியென்றவுடன் ஏதோ நீங்கள் அடுத்த தேர்தலில் நிக்கிறீங்களாக்குமெண்டு நினைச்சுப்போட்டேன்.

ஒபாமா ஒபாமா இந்த கறுப்பினத் தலைவரும் என்னத்தை கொண்டுவருவாரோ ஆர் கண்டது.

பொறுத்தார் புவியாழ்வார். பழமொழியொண்டு தேவையில்லாமல் ஞாபகத்துக்கு வருது.

சாந்தி

கொழுவி said...

பொறுத்தார் புவியாழ்வார்//

யா யா
பொங்கினார் பொங்கல் சாப்பிடுவார்

Anonymous said...

இந்த அசாத்திய துணிவுதான் உங்களின் முதல் வெற்றி

Anonymous said...

அமரிக்காவில் போரா நடக்கிறது.அமைதியும் சமாதானமும் வேண்டி உலகப் பந்தின் மூலை முடுக்கெல்லாம் அகதிகளாக அலையும் இலங்கைத் தமிழர் நாடாளுமன்றில் தங்களுரிமைகள் 2/3வாக்குப் பலம்கொண்டு பறிக்கப்பட்டபோது அயல்நாடாகிய இந்தியாவிடம் உதவி கேட்டார்கள். ஜனநாயகம் செத்துக்கொண்டிருந்த புத்தபூமியில் மனித உரிமை பற்றிப் பேசியதால் இராணுவம் தமிழ் இனத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. சமத்துவம் பேசிய இடதுசாரிக் கட்சிகள் வாயடைத்துப் போய் பேரினவாத பயங்கரவாதிகளின் கைப்பொம்மையாகிப் போனது வரலாறு.
வாழத் துடிக்கும் உங்களைப் போன்றவர்கட்கு வெற்றிபெற்ற ஜநாதிபதியின் அரவணைப்பும் உதவியும் கிடைக்கும் வரை தொடருங்கள்.

வாழ்த்துக்கள் பல என்றும் உங்களுடன்.

Anonymous said...

லோஷன், ஒபாமாவிற்கும் கதிர்காமருக்குமிடையில் எந்த வித்தியாசமும் இல்லை. ஒபாமாவிற்கும், கதிர்காமருக்கும் ஆங்கிலம் தான் தாய்மொழி. இருவரும் சிறுபான்மையினர் பெரும்பான்மையாக உள்ள தொலைதூர மாகாணத்தில் பிறந்து, பிறகு படிப்புக்காகவும், பதவிக்காகவும் தலைநகரத்தில் குடியேறினார்கள். இருவரும் சட்டம் படித்தவர்கள். ஒபாமா ஜனநாயக கட்சியில் சேர்ந்தார். இலங்கையில் அந்தக் கட்சியின் கொள்கையை கொண்ட சுதந்திரக் கட்சியில் தான் கதிர்காமர் சேர்ந்தார். கொள்கையளவில் இலங்கை சுதந்திரக் கட்சியை, அமெரிக்க ஜனநாயக கட்சியுடனும், அதே போல யு.என்.பி.யை குடியரசுக் கட்சியுடனும் ஒப்பிட்டு பார்க்கலாம். இருவரும் தங்களைப் போல நன்றாக சம்பாதிக்கும் உயர் வர்க்கத்தில் தான் சிநேகம் வைத்துக் கொண்டவர்கள். இருவரும் தமது தேசத்தின் சிறுபான்மை இனத்தில் இருந்து வந்தவர்கள். ஆனால் தங்களது இனத்தோடு சேர்த்து அடையாளம் காண விரும்பவில்லை. இருவரும் முழு தேசத்திற்கும் உரியவராக காட்டிக் கொண்டனர். கதிர்காமர் தன்னை ஒரு நாளும் தமிழர் என்று சொல்லிக்கொள்வதை விட சிறிலங்கன் என்று சொல்லிக் கொள்ளவே விரும்பினார். அதே போல ஒபாமா தன்னை ஒரு கறுப்பர் என்று சொல்லிக்கொள்வதை விட அமெரிக்கன் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறார். இருவரும் அப்படி நடந்து கொண்டதால் தான் உயர்ந்த இடத்திற்கு வர முடிந்தது. ஒரு காலத்தில் சந்திரிகாவும் ஜே.வி.பி.யும் கதிர்காமரை ஜனாதிபதியாக்க விரும்பின செய்தியை நீங்கள் கேள்விப்படவில்லையா?
இன்று அமெரிக்காவில் கறுப்பின தீவிரவாத அமைப்பு இருந்திருந்தால் ஒபாமா அதற்கு எதிராக செய்யல்பட்டிருப்பார். ஹா...இன்னொரு விடயம் சொல்ல மறந்து விட்டேன். ஒபாமாவின் தந்தை ஒரு முஸ்லீம், ஆனால் ஒபாமா பெரும்பான்மை மதமான கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகிறார். முஸ்லீம் நாடான ஆப்காநிஸ்டானுக்கு இராணுவத்தை அனுப்புவேன் என்கிறார். தமிழர்களுக்கு புலிகள் போல முஸ்லீம்களுக்கு தாலிபான் இருக்கிறது. கதிர்காமர் புலிகளை அழிக்க விரும்பியது போல ஒபாமா தாலிபானை அழிக்க விரும்புகிறார். இருந்து பாருங்கள், தமிழர்கள் கதிர்காமரை துரோகி என்று சொன்னது போல, முஸ்லீம் மக்கள் ஒபாமாவை துரோகி என்று சொல்லுவார்கள்.

இலங்கையில் கதிர்காமர் பதவியில் இருந்த சுதந்திரக்கட்சி தமிழ் பிரதேசத்தில் யுத்தம் நடத்தியது. அமெரிக்காவில் ஒபாமா பதவியில் இருந்த ஜனநாயக கட்சி சூடான் மீதும், ஆப்கானிஸ்தான் மீதும் குண்டு போட்டது. ஒபாமாவின் தந்தை ஆப்பிரிக்கர், அதோடு முஸ்லீம். ஒபாமாவின் கட்சி சூடான் மீது குண்டு வீசிய சம்பவத்தை வைத்து, ஆப்பிரிக்கர்களும் முஸ்லீம்களும் ஒபாமாவை துரோகி என்று சொல்லலாம். இலங்கையில் கதிர்காமர் பதவியில் இருந்த சுதந்திரக் கட்சி தமிழ் பகுதிகளில் குண்டு போட்ட காரணத்திற்காக, தமிழர்கள் கதிர்காமரை துரோகி என்று சொல்லவில்லையா?
இவ்வளவு உதாரணம் போதுமா? அல்லது இன்னும் வேணுமா?

Anonymous said...

எனக்கொரு சிறு சந்தேகங்க.. உங்க இலங்கையில முஸ்லிம்க தமிழ்ல பேச மாட்டாங்களா?

இந்த அனானி அண்ணாச்சி தமிழர் மேல ரொம்ப வன்மமா இருக்காரே..

இப்போ எனக்கு ஒரு சந்தேகங்க ..
கதிர்காமரு நல்லவரா? கெட்டவரா?
யாராவது சொல்லுங்களேன்..

மதுரை புருஷோத்தமன்

அற்புதன் said...

லோசன்,

நீங்கள் மீண்டும் பதிவுலகதுக்கு வந்ததை இட்டு மகிழ்ச்சி.எதற்கும் அவதானமாக இருங்கள்.

ஒபாம ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற போது நான் அமெரிக்காவின் ஒரு நகரத்தில் வேலை விடயமாகச் சென்றிருந்தேன்.அங்கே அந்த நேரத்தில் ஒரு உள் ஊர் தொலைக் காட்சியில் ஒபாமாவின் பின் கறுப்பின அரசிய பற்றி ஒரு கலந்துரையாடால் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட அனைத்து கறுப்பு இனத்தவரும் சொன்னது ஒபாமா ஜனாதிபதியானது ஒரு குறிப்பிடத் தக்க நிகழ்வுதான் ஆனால் இதனால் சிறுபான்மையினரின் பிரச்சினைகளோ கறுப்பின அரசியலோ முற்றுப் பெறவில்லை என்றே கூறினார்கள்.கருத்துக் கணிப்புக்களின் படி பெரும்பான்மையான வெள்ளை இனத்தவர் மக்கேயினுக்கே வாக்களித்தனர்.கறுப்பினத்தவரும் ,லதீனோக்களும் தமது வாக்குக்களைச் சிதறடிக்காமால் தொண்ணூறு சதவிகிதம் ஒபாமாவுக்கு வாக்களித்தனர்.இன்றைய அமெரிக்க சனத் தொகையில் இந்த இரு இனத்தவரினதும் ஏனையை சிறுபான்மை இனத்தவரின் வாக்குக்களும் வெள்ளையரின் வாக்குக்களுக்குச் சமனாக வரும்.
ஆகவே இனத்துவம் இத் தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தி உள்ளது.அமெரிக்காவில் பெருகி வரும் லதினோக்களின் செல்வாக்கும் புஸ்சுக்கு இருந்த மிகப்பெரிய சரிவும் ஒபாமாவுக்கு உதவின.ஆனால் ஒபாமாவால் மாற்றங்களைக் கொண்டு வரமுடியுமா என்பது மிகப் பெரிய கேள்வி.மக்கள் மாற்றங்களைக் கோரி வாக்களித்தாலும் ,அமெரிக்காவை ஆளும் வர்க்கம் அதன் கொள்கைகளையோ கோட்பாடுகளையோ மாற்றிக் கொள்ளப் போவதில்லை.ஒபாமாவின் பெரும்பான்மையான் நியமனங்கள் கிளிண்டன் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறது.ஆகவே இவர்கள் பெரிய மாற்றங்களைக் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.அமெரிக்காவின் பொருளாதார் வீழ்ச்சியினால் அதன் இராணுவ வல்லமை பாதிக்கப்படும்.பல் துருவ உலகத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு வீழ்ச்சியுறும்.ஆகவே ஒபாமாவால் அமெரிக்கச் சமூகத்தில் அடிப்படையான் மாற்றங்களைக் கொண்டு வராமல் பெரிதாக ஒன்றையும் சாதிக்க முடியாது.

இலங்கையின் இன விகிதாசாரத்துக்கு ஏற்ப, எந்தத் தமிழராலோ இசுலாமியராலோ ஜனாதிபதி ஆக முடியாது.சிங்கள கிரித்துவராலையே ஆக முடியாத போது.அப்படி ஒருவர் பேருக்கு ஜனாதிபதி ஆனாலும் அதனால் மக்களீன் பிரச்சினைகள் தீர்க்கப் படப் போவதில்லை.ஏனெனில் சிங்கள அரசு என்பது பேரினவாதத்தில் இருந்து கட்டியமைகப் பட்டிருப்பது.

இன்றைய கிழக்கின் விடி வெள்ளி பிள்ளையான் முதல் அன்றைய முதலமைச்சர் வரதர் வரை இது தான் கதை.புலிப் பிராந்தி பிடித்த சிலருக்கு அம்மணமாகத் தெரியும் உண்மைகள் கண்ணுக்குத் தெரிவதில்லை.

Anonymous said...

ஜனாதிபதியாக வரமுடியாது என்பது வேறு, வரக்குடாது என்பது வேறு. இலங்கை சட்டம் உள்ளது சிங்களவர் மட்டுமே ஆக முடியும் என்பது சட்ட விதி.

அற்புதன் said...

//ஜனாதிபதியாக வரமுடியாது என்பது வேறு, வரக்குடாது என்பது வேறு. இலங்கை சட்டம் உள்ளது சிங்களவர் மட்டுமே ஆக முடியும் என்பது சட்ட விதி.

//
அன்னணி அண்ணை உப்பிடி அனாமதேயாமா வந்து பிழையான தகவல்களை எழுதிறது.பிறகு தேசியவாதிகளுக்கு வரலாறு தெரியாது என்று உப்பிடியான துரும்புக்களைப் பிடிச்சு வச்சு அதுக்கு வாலும் குன்சமும் வச்சு மறுப்பறிக்கை மச்சள் கடதாசியில எழுத்திறது எல்லாம் உங்கட உழுதுப்போன சுத்து மாத்துக்கள்.
உதால மக்களுக்கு எந்த விமோசனமும் வரப் போறதில்லை.
தமிழர் ஜனாதிபதி ஆவதோ முதலமச்சர் ஆவதோ முக்கியமல்ல ஆவதால் தமிழ் மக்களுக்கு என்ன பயன் என்பதே முக்கியமானது.

Anonymous said...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே இந்த கதி என்றால், 5,6 பேரை போட்டிங்களா இதுவரை, எந்த தமிழர் ஜனாதிபதியா வருவது பற்றி நினைக்க முடியும்.

சட்டம் என்பது எழுதிதான் இருக்க வேண்டும் என்பதில்லை. இனவெறி, கொலை வெறிக்கு எல்லாம் எந்த நாட்டிலும் சட்டம் கிடையாது.

Anonymous said...

//ஜனாதிபதியாக வரமுடியாது என்பது வேறு, வரக்குடாது என்பது வேறு. இலங்கை சட்டம் உள்ளது சிங்களவர் மட்டுமே ஆக முடியும் என்பது சட்ட விதி.//

I am interested to see that law article. Will you copy that page from SriLankan law book, which you refer? I don't believe that Sri Lankan government would write that stupid law. Otherwise anyone can file a case in the court, against that discriminative law.
Some Tamils here comment only ethnicaly motivated hatred propaganda. These Tamil extremists spread only non sense in the name of Tamil national interest. They think and act like Sinhala extremists. Both extremists use racist language against other community. Tamils and Sinhalese must get rid of these extremists for a better world. Sri Lanka will be peacefull paradise again, when Tamils reject Tamil nationalists, and Sinhalese reject Sinhala nationalists. Tamil and Sinhalese people must unite against extrem nationalists who are responsible for the bloody war.

-A Sri Lankan citizen

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner