January 09, 2009

ஃபெயில் பண்ணிப்பார்

98ஆம் ஆண்டு நான் கடுப்பில் எழுதிய கவிதை..

அண்மையில் எலி வேட்டைக்காக வீடு துப்புரவானபோது அகப்பட்டது. எனது அன்றைய அருமையான,முத்து முத்தான கையெழுத்தைப் பார்த்தபோது உண்மையில் இப்போது மோசமாகி இருக்கும் எனது கையெழுத்தை நினைத்து கவலை தான் வந்தது.. (தலைஎழுத்தும் அப்படித் தான் போலும்)

உயர்தரப் பரீட்சையில்(A/L) நான் ஃபெயில் பண்ணவில்லை என்றாலும் கூட (எல்லாப் பாடங்களிலும் சித்தி அடைந்துவிட்டேன்) பாஸ் பண்ணவில்லையே.. அதாவது பல்கலைக் கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் அளவுக்கு பெறுபேறுகள் இருக்கவில்லை.. 

ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் எனது இந்த சாதாரணப் பெறுபேறுகள் மூலமாகவே எனக்கு பேராதெனிய பல்கலைக்கழகத்திலே பௌதீக விஞ்ஞான பீடத்துக்கான வாய்ப்புக் கிடைத்தது.. இந்த ஊடகத் துறை ஈடுபாடு காரணமாக நான் இணையாமல் விட்டது வேறு கதை..

இரண்டாம் முறை பரீட்சை எடுப்பதற்காகத் தனியார் வகுப்பு செல்லும் கொடுமை இருக்கிறதே.. ஒரு தனியான தலைக்குனிவு அனுபவம் அது.. அந்த அவமானம்,வெறுப்பு எல்லாம் கலந்து பிறந்தது தான் இந்தக் கவிதை.. 

பி.கு - இப்படி கவிதை எழுதுவதிலும்,கண்ட கண்ட விஷயங்களிலும் கவனம் செலுத்தித் தான் இரண்டாம் முறையும் கவிழ்ந்து போனேன்.. ஆனால் முதல் முறையை விடப் பரவாயில்லை.. :)    


முன்னறிவித்தல்:- காதலித்துப்பார் – வைரமுத்து இற்குப் போட்டியாக – A.R.வாமலோசனின் (எனது முழுப் பெயர்)  ஃபெயில் பண்ணிப்பார்

ஃபெயில் பண்ணிப்பார் 

ஃபெயில் பண்ணிப்பார்
பேயிலும் இழிவாகத்தெரிவாய்!
பெற்றோரிற்கு வேண்டா வெறுப்பான
பிள்ளை ஆவாய்!
நீ முகம் பார்க்கும் கண்ணாடியே – உனைக்
கணக்கெடுக்காதது போல நீ உணர்வாய்!
நீ எழுதிய நோட்சிலுள்ள
உனது எழுத்துக்களே- 
ஒன்றுடன் ஒன்று
உன்னைப் பற்றி குசுகுசுத்து
எள்ளி நகையாடுவதைப் பார்ப்பாய்!
வீதியில் செல்லும் அனைவருமே
உன் 'ரிசல்ட்ஸ்' கேட்டு
உன்னைக் கிண்டலடிக்க வந்தவரே என
நடுநடுங்குவாய்!
இரவில் கனவுகளில் இரசாயனமும் - பௌதிகமும்
இரட்டை அரக்கராய்த் துரத்த – நீ
விழுந்தடித்துக்கொண்டோடுவதாய் - 
விபரீத கனவுகள் காண்பாய்!
படித்த பாடசாலையை
பட்டலந்தை வதை முகாமாய்ப் பார்ப்பாய்!
படிப்பித்த ஆசிரியர் – 
பாம்பாட்டிகளாயும் - நீயோ
பல் பிடுங்கிய பாம்பாயும் உணர்வாய்!
வீதியில் திரியும் நாய்கள் கூட
உன்னைப் பார்த்தே
குரைப்பதாய் நினைப்பாய்!
வீதியால் செல்லும் லொறி, பஸ் அனைத்தும்
உன்னைக் கொல்லவே
பறப்பதாய் நினைப்பாய்!
வீதியில் செல்லும் பைத்தியத்தை
வீட்டுக்காரர் திட்டுவதைக்கூட
உன்னையே திட்டுவதாய்
உருவகிப்பாய்!
மனதில் இருக்கும் விரக்திகளால்
முப்பத்தைந்து செல்சியஸ் வெயில் கூட
முதுகில் உறைக்காமலிருப்பாய்!
உடலினை மூடும் உடைகளைக்
கிழித்தெறிந்துவிட்டு வீதியில்
மரதன் ஓட எண்ணுவாய்!
படித்துப் பெற்ற பி.எஸ்ஸி – எம்.எஸ்ஸி
பட்டங்களைவிட – 
பாஸாகாமல் பெற்ற – றிப்பீட்டர்
பட்டம் பாரமானதாக உணர்வாய்!
இவையெல்லாவற்றையும் விட- 
உலகில் ஒரு முறை மட்டுமே போகக்கூடிய இடம்
கல்லறை எனவும்,
ஒரு முறையும் போகமுடியாத இடம்
கருவறை எனவும்,
எப்போதும் இரண்டாம் முறை 
போகக்கூடாத இடம்- 
ஏலெவல் டியூசன் வகுப்பறை
என்றும் உணாவாய்!
சுயபுத்தி இருக்கும் போதே
பைத்தியம் பிடிக்க வேண்டுமானால் - 
நிச்சயம் ஒரு முறையாவது
ஃபெயில் பண்ணிப்பார்!


 ( பி.கு:- வைரமுத்துவே மன்னித்துக்கொள்ளுங்கள் )

24 comments:

Sinthu said...

அண்ணா வைரமுத்துவின் கவிதையைக் கேட்டுக்கொண்டே உங்கள் கவிதையையும் வாசித்தேன் (ஆனால் அவரின் மொழி நடையில் இனால் வாசிக்க முடியவில்லை.) அருமையாக இருக்கிறது....

Sinthu
Bangladesh

FunScribbler said...

ஹாஹா...மேட்டர் சீரியஸா தான். ஆனா, கவிதைய படிச்சு படிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது லோஷன்.

//ஒரு முறையும் போகமுடியாத இடம்
கருவறை எனவும்,//

highlight comedy!:)

Anonymous said...

அண்ணா கவிதை அருமை

Anonymous said...

தனியார் கல்வி நிலையங்களுக்கு இரண்டாம் முறையும் செல்வதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். அது முன் ஜென்ம புண்ணியப் பயனால் விளைவது.

வேத்தியன் said...

//வீதியில் செல்லும் அனைவருமே
உன் 'ரிசல்ட்ஸ்' கேட்டு
உன்னைக் கிண்டலடிக்க வந்தவரே என
நடுநடுங்குவாய்!\\

கலக்கீட்டீங்க அண்ணே...
அனுபவிச்சு எழுதியிருக்கீங்க..
அதனால கவிதை நல்லா வந்திருக்கு :)

சிங்கம் said...

இன்றுதான் பெயில் ஆனவர்களின் மனநிலை புரிகிறது, ஆனால் இது வாழ்வில் முன்னேற நினைப்பவனுக்கே மட்டுமே பொருந்தும்.

சந்தனமுல்லை said...

highly creative!! ROTFL!!

Mathu said...

Verrrryy nice :) I could imagine how you would have felt at that time. Enaku ippa exams, so this poem is actually very motivating!! (I needed some motivation).

98 kavidhai ellam ippavum vachirukinga...That poor rat is gaining quite a bit on ur blog then :)

சி தயாளன் said...

அது ஒரு வலி தரும் அனுபவம் தான்...:-)

Gajen said...

//வீதியில் செல்லும் அனைவருமே
உன் 'ரிசல்ட்ஸ்' கேட்டு
உன்னைக் கிண்டலடிக்க வந்தவரே என
நடுநடுங்குவாய்!//

அண்ணா, இரண்டு தரம் A/L செய்து, இரண்டாம் தடவை முதல் தடவையை விட கம்மியாக பெறுபேறுகள் பெறுபவன் அனுபவிக்கும் கொடுமை இருக்கிறதே....ஐயோ சாமி...கேக்கவே வேணாம்..பெறுபேறுகள் வந்த அன்று வீடே மயான அமைதியுடன் விளங்கும்..ஒவ்வொரு முறையும் தொ(ல்)லைபேசி அடிக்கும்போதும் உள்ளுக்குள் பொத்துக்கொண்டு கோவம் வரும்.."இவனுங்களுக்கு இப்ப தான் நம்மல எல்லாம் ஞாபகம் வரும்" என்று..மொத்தத்தில் உங்கள் பதிவின் ஒவ்வொரு வரியும் நான் அனுபவித்ததே..அதற்கு ஒரு சலாம்!

ஆதிரை said...
This comment has been removed by the author.
ஆதிரை said...

லோசன் அண்ணாவினை எப்படி சகித்தீர்களோ (lol) அதற்கு மேலாகவும் சகிப்புத்தன்மை, பொறுமை பெற வேண்டுமா? (குருவி பார்க்காதவர்களுக்கும் இன்னொரு வாய்ப்பு) மேலே செல்க...

http://kadaleri.blogspot.com/2009/01/blog-post_09.html

Najim said...

லோஷன் உங்க கவிதை, தற்போது பரிட்சை பெருபேறுகள் கிடைத்த மாணவர்களில், ஒரு சில மாணவர்களுக்கு மாத்திரம் (ரொம்ப ரொம்ப) ஆறுதலலிக்கும் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நன்று,
இதை ஒட்டிய நவீன ரக பாடல் ஒன்றைப் படியுங்களேன். கவிஞர் அன்புடன் புகாரியுடையது.

http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_6671.html

RJ Dyena said...

ஹா ஹா ஹா ஒரே நகைச்சுவை போங்கள்....!

தமிழ் மதுரம் said...

ம்...ஆரம்ப காலத்திலே இருந்தே அசத்துறீங்கள் என்பதைக் கவிதையினூடே சொல்லிட்டீங்கள்... கவிதை நன்று. இரண்டாம் முறை கல்வி நிலையங்களுக்குச் செல்பவர்கள் எப்போதும் பாக்கியசாலிகளாம்... ஏன் தெரியுமா??? பாடசாலை நேரம் விடுமுறையாக இருக்கும்.. ஆக மட்டும் ரியூசனும் கடற்கரையும் தானே மீதியாக இருக்கும்/? நல்ல அதி பாக்கியசாலிகளப்பா!

Anonymous said...

லோசன் - நீர் "ஆத்ம திருப்தி"க்காகத் தானே ஊடகத்துக்குப் போனீர்?

Anonymous said...

realy superb......
thank god u didnt go to uni...

ARV Loshan said...

சிந்து நன்றி..

தமிழ் மாங்கனி.. எங்க வேதனை உங்களுக்கு சிரிப்பா? (இது கவிதையான்னு நினைச்சு சிரிச்சீங்களோ?)

நன்றி துஷா..

சயந்தன், அது உங்க மாதிரி 'குடுத்து' வச்சவங்களுக்கு.. ;) நாங்கள் அப்பாவி ஜென்மங்கள்.. படிக்க மட்டுமே பிறந்தவர்கள்..

நன்றி வேத்தியன்.. உண்மையில் அனுபவித்த படியாலே இந்தக் கவிதை வந்தது..

சிங்கம்.. ஆமாம்.. உண்மை தான்.. தோல்வி என்று தெரிந்தவனுக்கு எல்லாம் ஒன்று தானே.. ;)

நன்றி சந்தனமுல்லை.. :)

மது நன்றி.. அப்பாடா நான் A/Lஇல் தோற்றது கூட ஒரு Motivationக்கு உதவியிருக்கே.. இது தான் கடவுள் சித்தமா? ;)
ம்ம் அந்த எலி இறந்தும் கொடுத்த சீதக்காதி ..

டொன் லீ. ஆம்மா.. எலி தேடித் தந்த கவிதை மூலமாக மீண்டும் வந்தது..

நன்றி தியாகி. நல்ல காலம் அந்தக் கொடுமை எனக்கு நடக்கவில்லை.. ஆனால் இதுவே எனக்கு ரொம்பவே கசந்து போனது..

ஆதிரை.. பார்த்தேன்.. ;) அது என்ன என்னை சகித்தது பற்றி ஒரு லொள்ளு.. ;)

நன்றி நஜீம்.. ஆமா அப்படித் தானே நம்ம கட்சிக்கு ஆள் திரட்ட முடியும்?

நன்றி ஜோதிபாரதி

கமல், நீங்களும் நம்ம ஜாதியா? I mean இரண்டாம் முறை பரீட்சை எடுத்தவரா? அனுபவப்பட்டவர் போலவே சொல்லுறீங்க? நானும் நண்பர்களுடன் (ஆண்கள் மட்டுமே.. நம்புங்க) கடற்கரை சென்றுள்ளேன்.. ;)

அனானி நீங்கள் ஆத்ம திருப்தி என்று சொல்லுவது எதை?

அனானி.. நக்கல்? உண்மைதான். இல்லேன்னா கேட்டுப்போயிருப்பேன் என்று தான் பல்கலை நண்பர்கள் சொல்கிறார்கள்.. ;)

சுபானு said...

wow.. அசத்தல்.. no words to explain..

//உலகில் ஒரு முறை மட்டுமே போகக்கூடிய இடம்
கல்லறை எனவும்,
ஒரு முறையும் போகமுடியாத இடம்
கருவறை எனவும்,
எப்போதும் இரண்டாம் முறை
போகக்கூடாத இடம்-
ஏலெவல் டியூசன் வகுப்பறை...

:) கலக்கலாயிருக்கு..

சுபானு said...

என்ன கவலை என்றால் இந்தக் அனுபவம் கிடைக்காமல் போய்விட்டதே.. விரைவில் இதற்கு மாற்றீடான கவிதை ஒன்று நான் எழுதிப் பார்ப்பம் என நினைக்கின்றென்..

Ahamed Suhail said...

பரீட்சை மண்டபத்தில் அப்புக் குட்டி

http://aiasuhail.blogspot.com/2010/10/blog-post_31.html


Nangalum eluthirukkom annaa eppadi irukku..???

ஷஹன்ஷா said...

அண்ணா.... 2010ல் வாசிச்சாலும் சூப்பர்....காலத்தை வென்ற கவிதை...காவியம்....

thuvarameera said...

உங்கள் கவித்துவமான வரிகள் அருமையாக உள்ளது அண்ணா

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner