January 26, 2009

துணிச்சல் வேணும் தம்பி !

நேற்றைய நாள், காலை முதலே பரபரப்புத் தொற்றிய ஒருநாள்!
பலவிதமான பரபரப்புச் செய்திகள்,வதந்திகள்,வாழ்த்துக்கள் என்று குறைவில்லாமல் முழுநாளுமே ஒருவித முக்கியமான நாளாகவே காணப்பட்டது.

அதிகாலையிலேயே (ஞாயிறு என்றால் எனக்கு காலை 9மணியும் அதிகாலைதான்) வந்த வெளிநாட்டு அழைப்பொன்று 'அணைக்கட்டும் 5000உம் சரியாம்' என்று செய்தி சொல்லிப்போனது.

பிறகு வந்த தகவல்கள் (முன்வீடு,பக்கத்துவீடு,பேப்பர்காரன் என்று பலபேரும் சொன்னது) 500 முதல் 10000 வரை பலதரப்பட்டது.

உண்மையைத் தெரிந்த விஷயங்களையே சொல்லமுடியாமல் ஊமையாய் இருக்க வேண்டிய நிர்பந்தமுள்ள எங்கள் இலத்திரனியல் ஊடகங்கள் இதுபற்றி எதுவுமே சொல்லாதது ஆச்சரியமில்லைத் தானே? (துணிச்சலாய் எழுதிய பல பத்திரிகைகளே பேனாக்களை இறுக்கி மூடியபின்னர் டிவி,வானொலிகள் எம்மாத்திரம்)

கலைஞரும் ஜெயாவும் (தொலைகாட்சிகளைத் தான் சொன்னேன்) 1500 என்றன! இணையத்தளங்களும் வலைத்தளங்களும் 500 முதல் 50000 வரை சொல்லின! சில அறுதியிட்டு அப்படியெதுவுமே இல்லை;அவ்வளவுமே பொய் என்றன.

நவம்பர் 14க்கு முன் என்றால் என்வீட்டுத் தொலைபேசிக்கும் என்னுடைய செல்போனுக்கும் அழைப்பெடுத்து விபரம் கேட்டும் பலரும் இம்முறை என் நலனையோ தம் நலனையோ கருத்தில் கொண்டு எந்தவொரு விபரமுமே கேட்கவில்லை. அப்படியும் சிலர் 'தம்பி செய்தி உண்மையோ?' என்று மட்டும் கேட்டு வைத்தனர்.

இன்னும் ஒரு சிலர் அதியுச்ச பாதுகாப்போடு தொலைபேசியில் நான் வீட்டில் இருக்கிறேன் என்று கேட்டு நேரிலே வந்து விஷயம் விபரம் கேட்டனர்.
'உறுதியாகத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுவோம். இணையத்தளங்களில் இவ்வாறு தான் இருக்கிறது'என்று சொல்லி அனுப்பனேன்.

பதினொன்றரை அளவில் இன்னுமொரு புதிய செய்தி பரவ ஆரம்பித்தது. ஆளுகின்ற தரப்பில் மூன்று பெருந்தலைவர்கள் முடிந்தது அல்லது மோசமான நிலையில் என்று.அமைச்சரொருவர்,முடிவெடுக்கும் முக்கியஸ்தொருவர்,அமைச்சராவதாக செய்தி அடிபடும் புதிய நாடாளுமன்ற உறுப்பினரொருவர்.(எனக்கேன் வம்பு? நீங்களே கண்டுபிடிச்சுக் கொள்ளுங்கள் யார்,யாராக இருக்கலாம் என்று)

மீண்டும் அதே தகவலறியும் ஆர்வம் - தேடிப்பார்த்தேன் சாடை மாடையாய் நம் செய்திப்பிரிவு நண்பர்கள் பத்திரிகையுலக நண்பர்களிடம் கேட்டு பார்த்தேன். அவர்களும் தங்களுக்கும் இப்படித் தகவல்கள் வந்ததாகவும் உறுதிப்படுத்த முடியவில்லையென்றும் சொல்லினர். எல்லோர் குரலிலும் சந்தோஸமா, உறுதிப்படுத்த முடியாத கவலையா, சந்தேகமா தொனித்தது தெரியவில்லை.

Facebook,Skype என்று ஒட்டுக் கேட்க முடியாது என்று நாம் ஒரளவு உறுதிப்படுத்தியுள்ளவை ஊடாக இந்த விஷயங்கள் சூடு கிளப்பும் நேரம் எங்கள் ஊடகங்களில் முல்லைக்குள் நுழைந்த கதையை அரசு சொன்னது. எனினும் மாலையில் வெற்றியில் நான் செய்தி வாசித்தபோது என் செய்திகளில் அதுபற்றி எதுவும் இருக்கவில்லை.

வேலை முடிந்து வரும்போது வழமையாக நான் வாழைப்பழம் வாங்கும் கடைக்கு முன்னால் நான் வாகனத்தை நிறுத்தியபோது எங்கள் குடும்ப நண்பரொருவர் என் வாகன ஓட்டி இருக்கைக்கு முன்னால் வந்தார். நானும் கண்ணாடியை இறக்கினேன்.

அவர் இவ்வாறான செய்தி விஷயங்களில் ரொம்பவே ஆர்வமுள்ளவர் - துணிச்சலோடு எங்கென்றாலும் எதுபற்றியும் பேசுவார்.
"என்ன தம்பி அந்தப் பக்கம் சூடு பறக்குது அஞ்சாயிரம் பேர் சரி;இங்கை மூண்டுபேர் முடிஞ்சதாம். நீங்கள் ஒண்டுமே சொல்றியளில்லை?" என்று கொஞ்சம் ஆர்வமும் கடுப்புமாகக் கேட்டார்.

"நாட்டு நிலமை தெரியாதோ" என்றேன்.

"என்ன நாட்டு நிலமை தம்பி – பேப்பர்காரன் றேடியோகாரன் என்டால் துணிச்சல் வேணும். இல்லாட்டி என்னத்துக்கு? உண்மையளைத் துணிஞ்ச சொல்லவேணும். சும்மா பாட்டுப் போடவே றேடியோ"

"அங்கிள் சொல்லுறது – சுலபம் கொஞ்சம் வந்து எங்கட இடத்தில இருந்து பாருங்கோ தெரியும்"

"அப்படியில்லைத் தம்பி – பயப்பிடாமல் உண்மையைப் பட்டென்று சொல்லவேணும். இப்ப பாரும் ஒன்றை அண்ணன்ரை மகன் எப்பிடியெல்லாம் நெட்டிலை எழுதிறான்." பெருமையோடு சொன்னார்.

"நெட்டிலை? இங்கை இருந்தோ" என்று கேட்டேன்.

"சீச்சி அவன் அவ்வளவு முட்டாளே – வெளிநாட்டில இருந்து வேற பெயரிலை" என்று சொன்னவர் கொஞ்சம் மெதுவான குரலில் "தம்பி கனநேரம் ஒருத்தன் எங்களையே உத்துப் பார்க்கிறான் - உம்மோடை கதைக்கிறதை CIDகாரர் கண்காணிக்கினமோ தெரியாதே! தற்செயலா ஆரும் கேட்டா என்னைப் பற்றி ஒண்டும் சொல்லாதேயும் - நீர் வெளில வந்த பிறகு பயத்தில தான் உம்மை வந்து பார்க்கவும் இல்லை" என்று படபட என்று சொல்லிவிட்டுப் பாய்ந்து விழுந்து அந்த இடத்தை விட்டுப் போய்விட்டார்.

18 comments:

Anonymous said...

you are confusing.. cant get a news from your blog.. but it gives an indication as something happend..

Anonymous said...

- கனடா கந்தசாமி

‘ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்!’ ‘பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்!!’ ‘கல்மடுக்குளத்தின் அணையை புலிகள் உடைத்துவிட்டதால், 1500 இராணுவத்தினர் வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர்!!!’ ‘புலிகள் இராணுவத்தை விரட்டியடித்து சாவகச்சேரி வரை முன்னேறி தாம் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றி கைப்பற்றியுள்ளனர்!!!!’ ‘சார்க் மாநாட்டு பாதுகாப்புக்கு என வந்த 3000 இந்திய இராணுவத்தினர், திரும்பி போகாமல் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து வன்னியில் புலிகளுக்கு எதிராக போரிடுகின்றனர். அவர்களில் சிலரும் கல்மடுக்குள உடைப்பின்போது வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர்!!!!!.’

என்ன இது! ஒரே அதிரடி செய்திகளாக இருக்கின்றன என அதிர்ந்து போய்விட்டீர்களா? இது எமது ‘தேசியத்தலைவர்’ வே.பிரபாகரன் அவர்களின் செல்லப்பிராணிகளால், ஜனவரி 24ந் திகதி கனடிய தமிழ்மக்கள் மத்தியில் பெருமெடுப்பில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வதந்திகளாகும். இந்த வதந்திகளை பரப்புவோர் யார் என்பதும், அவர்களின் நோக்கம் என்னவென்பதும் ஒன்றும் புரியாத புதிரல்ல. புலிகள் கடைசியாக வன்னியில் சேடமிழுத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து, தமது இறுதிமூச்சை விடுவதற்கு முன்னர், இந்த மாதிரியான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு, புலம்பெயர் தமிழர்களை வலையில் வீழ்த்த வகுக்கப்பட்ட தந்திரம்

http://www.thenee.com/

Sinthu said...

சொல்வது சுலபம், அதைச் செய்வது தான் கடினம் என்று தெரிந்த போதும் புரிந்த போதும் புரியாதவர்களாக சிலர் இருப்பது ஏன்?

சி தயாளன் said...

காதில் இருந்து ரத்தம் வடியுது....:-)

Anonymous said...

நல்ல பதிவு... இன்னொரு விஷயம் தெரியுமா...எனது நண்பன் ஒரு பிரபல பத்திரிகையில் நிருபராக உள்ளான். அவன் சொன்னது....

" குமுதம் ரிப்போர்ட்டர், ஜு.வி இரண்டிலும் ஈழம் பற்றி தொடர் எழுதும் எழுத்தாளர்களிடம் சிங்கள அரசு சார்பில் பேசுகிறோம் என்று ஒரு தொலைபேசி. எவ்வளவு வேண்டும்? புது வீடு வேண்டுமா? தொடரை நிறுத்துங்கள் என்று பேரம் பேசி இருக்கிறார்கள். பிறகு தொடர்பு கொண்டபோது யாரும் எடுக்கவில்லை.

கல்மடு குளம் உடைந்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் எவளவு என்று தெரியவில்லை. அதை மறைபதற்கே சிங்கள அரசு பத்திரிகைகளையும் வளைத்துள்ளது. இலங்கையில் துப்பாக்கி காட்டி மிரட்டியும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும் பணத்தை காட்டி கெஞ்சியும் புலி ஆதரவு அல்லது ஈழ தமிழர் ஆதரவு செய்திகளை போடக் கூடாது என்று கெஞ்சி உள்ளார்கள். தினமும் இலங்கை தூதரகத்தில் பத்திரிக்கை, அரசியல் வாதிகளுக்கு பார்ட்டி நடக்கிறது.

மேலும் அந்த பாரம்பரிய என்று சொல்லிக்கொள்ளும் பத்திரிக்கை, டெலிகிராம் பத்திரிக்கை பற்றியும் ஒரு செய்தி சொன்னான். // திடீர் instruction from management. நேற்று வந்துள்ளது. அதாவது புலி ஆதரவாகவோ ஈழ தமிழர் ஆதரவாகவோ செய்தி எந்த தலைவர் அல்லது யார் கொடுத்தாலும் போடக் கூடாது என்பதாம். //

அதனால் தான் இன்று எல்லா பத்திரிகையும் தமிழோசை தவிர அந்த செய்திகளை தவிர்த்துள்ளன.

kuma36 said...

துணிச்சல் வேணும் தம்பி !

யாருக்கு அண்ணா???

#நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!!!

#உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!!

இப்ப‌டி வீர‌வ‌ச‌னங்களால் ம‌ட்டுமே தான் க‌விப்பாட‌முடியும்.

ARASIAL said...

தைரியம் வேணும் என்று பயந்தபடி சொல்லும் கோழைகளால்தாம் நமக்கு இந்த நிலை!!

Arulkaran said...

Because of driven by the desire to enjoy royal happiness...!!!???

Gajen said...

தற்போது செய்திகள் வெளிவரும் வேகத்தை பார்த்தால், வடிவேல் சொல்வது போல, வீட்டுக்குளேயே ரெண்டு நாளா உட்கார்ந்திருந்து யோசித்து தான் வெளியிட்டுள்ளனர் போல.. :( The diaspora has been taken for a ride I guess :(

எனினும் ஈழச்சொந்தங்களுக்கு இவ்வாறு சலிப்பை ஏற்படுத்த அரசாங்கம் தான் கதையை கட்டிவிட்டதாக எங்கேயா வாசித்த ஞாபகம். :(

Anonymous said...

நாமாலும் குழம்பித்தான் இருந்தோம் அண்ணா பிறகு தன் விளங்கியது எல்லாம் செய்திகளை விட வதந்திகள் அதிகம் என்று

Anonymous said...

MS bought fb sometimes back and all details from facebook is fed in their system. Hancock was promoted thru fb. obama used fb. so its not safe anymore; i also read the news. waiting to hear from someone there...

கார்த்தி said...

BBC Newsக்கு இடையில இசைபோட்டது மாத்திரமில்லாம இப்ப வெளிநாட்டு ஆக்களுடன் உது சம்பந்தமான விசயம் கதைக்கிறபோதும் ஒட்டு கேட்டு மற்றபக்கத்துக்கு Musicபோட்டு எல்லோருக்கும இசைஅறிவு வழங்குகிறாங்களாம் கவனம் கண்டியளோ கதைக்கேக்க!!!!

Anonymous said...

வணக்கம் அண்ணா ..
அன்று இங்கு சனிக்கிழமை நான் எனது கல்லூரியில் வகுப்பறையில் இருந்தேன். அபோது எனக்கு நீங்கள் அறிந்த இந்த செய்தி அனைத்தும் sms ல் வந்தது. அப்போது எனக்கு பாடம் ஏறிச்சோ இல்லயோ இந்த செய்திகள் மட்டும் தேனாக பாய்ந்தது. அதன் பின்பு அங்கிருந்தே இணையத்தளத்தில் பார்த்தால் எனக்கு வந்த செய்திகளில் சில போடபட்டிருந்தன..அன்றைய நாள் சந்தோசமாக கழிய அடுத்தநாள் என்னமோ செய்திகள் எல்லாமே பார்க்கும் போது கசத்தது..ஆனாலும் எதற்குமே சோந்து போகாம நம்பிகையுடன் கார்த்திருக்கிறோம் ...

ஆனாலும் எங்களுக்கு உங்கள் நிலைமைகள் புரியும் அண்ணா நீங்கள் என்ன செய்யமுடியும் வாயிருந்தும்,பேசும் திறமை இருந்தும் பேசமுடியாமல் செய்துவிட்டார்கள் உங்களை,,
jeya (canada)

Subankan said...

அண்ணா இதை எல்லாம் பரப்புபவர்களின் நொக்கம் சீரியஸ்சா இல்லை காமெடியா?

Anonymous said...

கடந்த ஆறு மாதங்களாக... தமிழ் நாட்டில் வெளிவரும் தி பொந்து... மற்றும் தினம.. பத்திரிக்கைகளில்... தினமும் சிங்கள படைகள் சில கிலோ மீட்டர் முன்னேறுவதாக செய்தி வெளியாக வருகிறது...மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடந்த போது கூட தினம... சிங்கள் படைகள் 5 கி.மீ. முன்னேறி விட்டதாக எழுதி இருந்தது...அதை வைத்து என் நண்பர் ஒருவர் கூட என்னிடம் சிங்கள படைகள் வெற்றி அடைவதாக பேசினார்...

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பத்திரிக்கைகள் எழுதும் கி.மீ. கணக்கை வைத்து பார்க்கும் போது சிங்கள படையின் ஒரு பிரிவு தலை மன்னாரை கடந்து ராமேசுவரம் வழியாக... ராமநாதபுரதை கடந்து இப்போது உத்திரகோசமங்கையில் தமிழர்களை வீழ்த்தி இருப்பதாகவும்... சில நாட்களில் பரமகுடி வந்து விடுவார்கள் போல் தெரிகிறது...

சிங்கள படை மற்றொரு பிரிவு யாழ்பாணத்தை கடந்து கோடியகரை... வேதாரண்யம் வழியாக... வேளாங்கன்னியை கடந்து... இப்போது பொய்ங்கைநல்லூரில் தமிழர்களை வீழ்த்தி இருப்பதாகவும்... நாளை அவர்கள் நாகப்பட்டினர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்... மற்றும் மாவட்ட ஆட்சியரையும் பிடிக்க போவதாக அறிவித்துள்ளனர்...

இப்படி பொந்து... தினம.. கணக்குபடி... சிங்கள படைகள் விரைவில் கிலோ மீட்டர்... கிலோ மீட்டராக முன்னேறி சென்னைக்கு வந்து முதல்வர் கலைஞரையும்... ஆளுனர் பர்னாலாவையும் பிடிக்க சிங்கள சிறைகளில் அடைக்கப் போகிறார்களாம்... பின்னர் சோ பயல் தான் தமிழக ஆளுனராம்... பொந்து ராம்... ஜெ போன்றவர்கள் சிங்கள அமைச்சரவையில் முக்கிய பதவி வழங்கப்பட போகிறதாம்...

சிங்கள படைகளின் வீர தீர வெற்றிகளை பாராட்டி... மன்மோகன்... சோனியா... அத்வானி... கூட்டனி... சி.பிஎம். போன்ற கட்சிகள் பேரதரவோடு... தமிழ் நாட்டை சிங்களர்களுக்கு அடிமையாக எழுதி கொடுக்க போகிறார்களாம்... அந்த அடிமை சாசனத்தை பிரனாப் முகர்ஜி முன்னிலையில்... சிவசங்கர மேனன் எழுதி தர போகிறாராம்...

இனிமேல் தாய் தமிழர்கள்... சிங்களர்களின் அடிமை...

Anonymous said...

Attack Pandiya,
Awesome comment.. I cant stop laughing though its a serious issue....

Loshan,
Better be careful about facebook ya. As someone said its with Microsoft now.

Anonymous said...

உங்களுக்கான தனிப்பட்ட பின்னூட்டம். பிரசுரிக்கும் நோக்கோடு பதியப்பட்டதல்ல.

இங்கேயும் கொஞ்சம் வந்துபாருங்கள்.

http://marmayoagi.blogspot.com/2009/01/blog-post_1008.html

மீண்டும் இலங்கைக்கு
இந்திய அரசு ஆயுத உதவி!!!

Anonymous said...

கனடா கந்தசாமி, நீங்கள் தமிழரோ? இல்லாட்டி வேற ஏதாவதோ? நல்லா பிரசாரம் பண்ணுறீங்கள்..

தாசன் - மகிழவெட்டுவான்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner