May 12, 2009

மதமும் மண்ணாங்கட்டியும்..


ஞாயிற்றுக்கிழமை எனக்கு ஒரு sms வந்தது.

GREAT NEWS :

The Lion of Cricket game "Brian Lara" accepts Islam by the hands of Tableeghi Jamat under Junaid Jamshed & Saeed Anwer.

"ALLAHU AKBAR"

உலகப் பிரபல கிரிக்கெட் வீரர் பிரயன் லாரா இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார். அல்லாவுக்கு வெற்றி எனப் பொருள்படும் தகவலே அது.

பொதுவாக சமயங்களில் பெரிதாக ஈடுபாடில்லாத எனக்கு, இது போன்ற சமயம் பரப்பும், சமயங்களைத் திணிக்கிற, என் மதமே பெரிது, 7 பேருக்கு அனுப்பு என்று வருகிற smsகளைப் பார்த்தாலே கோபமும் எரிச்சலும் பற்றிக்கொண்டு வரும்.(sms மட்டுமல்ல கடிதம்,துண்டுப் பிரசுரம் வந்தாலும் கூடத்தான்)

இதே smsஐ ஒரு இந்துவோ, கிறிஸ்துவோ அனுப்பியிருந்தாலும் கூட இதேயளவு எரிச்சல் எனக்கு ஏற்பட்டிருக்கும்.

இதிலென்ன சிறப்பு/அதிசயம் இருக்கிறது? இஸ்லாம் மதத்துக்கு லாரா மாறியதால் அவரது முன்னைய சமயத்தவர் வருத்தமடையமாட்டார்களா என்று பதிலனுப்பினேன்.

அந்த நண்பர் அதற்கு 'இஸ்லாமுக்கு இது ஒரு வெற்றி தான்! இஸ்லாம் சமயத்தவருக்கு எதிராக உலகில் இடம்பெறும் மேற்குலக சதிகளுக்கெதிராக இப்படிப்பட்ட வெற்றிகள் முக்கியமே..... நீல் ஆம்ஸ்ரோங் கூட சந்திரனுக்குப் போய் வந்த பிறகு இஸ்லாமியரானார். அதை மேற்குலக ஊடகங்கள் மறைத்துவிட்டன.' என்று பதில் அனுப்பியிருந்தார்.

அத்தோடு அவர் விட்டிருந்தால் பரவாயில்லை. நேற்றுக் காலை நான் வானொலியில் நிகழ்ச்சி செய்யும் போதும் எனது நிகழ்ச்சிக்கு 2, 3 smsகளை (அதே Great News) அனுப்பி வைத்தார்.

அதில் என்ன இன்பமோ?
நான் அவற்றைப் பொருட்படுத்தவில்லை.

ஒருவர் மதம்விட்டு மதம் மாறுவது பெரிய வெற்றியா?

ஒருவரது மனதை மாற்றுவதே கடினமானதே தவிர மதம் மாற்றுவது அல்ல!

மீண்டும் நாடு காண் பயணங்களின் மதம் பரப்பும் காலத்துக்குள் நுழைகிறோமோ?

லாரா சமயம் மாறியது பற்றி வேறெங்கிலும் எந்த செய்திகளையும் நான் பார்க்கவில்லை.
உண்மை, பொய்களை தேடிப் பார்க்கவும் எனக்கு இது ஒன்றும் பெரிய விஷயமாக இருக்கவில்லை..

யாரோ ஒருவன் என்ன காரணத்துக்காகவோ சமயம் மாறினால் அது அந்த சமயத்தின் வெற்றி என்று வெறியோடு கொண்டாடுவதில் என்ன பயனுள்ளது என்று எனக்கு உண்மையிலேயே புரியவில்லை..

யாராவது என் மனதில் பட்ட இந்தக் கருத்துக்களை இங்கே வெளிப்படையாக சொல்வதால் மனம் புண்பட்டால் மன்னித்து விடுங்கள்.. மதங்களை விட நான் மனிதர்கள் பார்த்தே பழகிப் பழக்கப்பட்டவன்.

மதவெறி, பரப்புரைகள்,மதமாற்றங்கள் ஏற்கனவே விதைத்துள்ள விஷ விருட்சங்கள் போதாதா?

இன்னும் மதமாற்றங்கள் மாறல்களைக் கொண்டாடப் போகிறோமா?

கவலைப்படவும், கோபப்படவும் உலகில் எத்தனையோ பல முக்கியமான விடயங்கள் இருக்கும் நேரம் இதெல்லாம் மயிராச்சு..

அவரவர் விரும்பிய பாதையைத் தேர்ந்தெடுக்கட்டும்....

அதைக் கொண்டாடவும் வேண்டாம்.. கொலை வெறியுடன் துரத்தவும் வேண்டாம்!

இது 21ம் நூற்றாண்டு.... இன்னமும் மதங்களை வைத்துக்கொண்டு மலிவான விளையாட்டுக்கள் வேண்டாம்!

மதமும் மண்ணாங்கட்டியும்..
போங்கடா போய் மனிதர்களைப் பாருங்கள் முதலில்..




84 comments:

RIFAN said...

UNGAL MATHAM UNGALUKKEA ENGAL MATHAM ENGALUKKEA. OK ANNA VISAYAM TERIYAMAL MATHANGALAI PATRI PESA VEANDAM

கோவி.கண்ணன் said...

ஒருவர் மதம் மாறியதை வெற்றியாகக் கொண்டாடி பெருமை பாராட்டுபவர்கள், அதே மதத்தின் பெயரால் நடைபெறும் தீவிரவாதச் செயலுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளாமல் மதத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை என்பது முரண்பாடாக இருக்கிறது.

இறை நம்பிக்கை உடையவர்களுக்கு மதம் தேவையற்றது. எந்த மதத்தையும் இறைவன் தோற்றுவிக்கவில்லை என்பதே உண்மை. பித்தர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது.

Tech Shankar said...

மதப்பித்துப் பிடித்த மாக்களுக்கு சரியான சவுக்கடி.

//
மதமும் மண்ணாங்கட்டியும்..
போங்கடா போய் மனிதர்களைப் பாருங்கள் முதலில்..

ARV Loshan said...

RIFAN said...
UNGAL MATHAM UNGALUKKEA ENGAL MATHAM ENGALUKKEA. OK ANNA VISAYAM TERIYAMAL MATHANGALAI PATRI PESA VEANDAM//

அதைத் தான் நானும் சொல்கிறேன்.. இதை சொல்வதற்கு மதங்கள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமென்று தேவையில்லை சகோதரா..
என்ன விஷயம் எனக்கு தெரியாமல் போனது? தெளிவாக சொன்னால் விளங்கிக் கொள்கிறேன்..

ARV Loshan said...

கோவி.கண்ணன் said...
ஒருவர் மதம் மாறியதை வெற்றியாகக் கொண்டாடி பெருமை பாராட்டுபவர்கள், அதே மதத்தின் பெயரால் நடைபெறும் தீவிரவாதச் செயலுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளாமல் மதத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை என்பது முரண்பாடாக இருக்கிறது.//

மதங்களின் அடிப்படைகளைப் புரியாத மடையர்களின் வேலை அது.. கோவியாரே இதற்காக ஒட்டுமொத்தமாக அந்த சமயத்தவரை குற்றம் சுமத்துவதும் தவறானதே..


//இறை நம்பிக்கை உடையவர்களுக்கு மதம் தேவையற்றது. எந்த மதத்தையும் இறைவன் தோற்றுவிக்கவில்லை என்பதே உண்மை. பித்தர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது.//

சரியாக சொன்னீர்கள்.. மனிதர்களுக்காகவே மதங்களே அன்றி மதங்களுக்காக மனிதர்கள் அல்ல என்பதை எல்லோரும் புரிந்து கொண்டாலே போதும்.

ARV Loshan said...

தமிழ்நெஞ்சம் said...
மதப்பித்துப் பிடித்த மாக்களுக்கு சரியான சவுக்கடி.

//
மதமும் மண்ணாங்கட்டியும்..
போங்கடா போய் மனிதர்களைப் பாருங்கள் முதலில்..//

வருகைக்கு நன்றி நண்பரே..
மனதில் பட்டதை சொன்னேன்..

ers said...

ஒருவரது மனதை மாற்றுவதே கடினமானதே தவிர மதம் மாற்றுவது அல்ல!
/////இங்க சில மனங்கள் துருப்பிடித்து கிடக்கிறது. மதம் என்ற மண்ணுக்குள் புதைந்து போன இவைகள் அபாயகரமானது. இந்த மனங்களை தோன்டி எடுத்து சீர் செய்தாலும் எதற்கும் உருப்படாது. காரணம் மதங்களால் துருவேறிய மனது கரடுமுரடானது

ARV Loshan said...

நெல்லைத்தமிழ் said...
ஒருவரது மனதை மாற்றுவதே கடினமானதே தவிர மதம் மாற்றுவது அல்ல!
/////இங்க சில மனங்கள் துருப்பிடித்து கிடக்கிறது. மதம் என்ற மண்ணுக்குள் புதைந்து போன இவைகள் அபாயகரமானது. இந்த மனங்களை தோன்டி எடுத்து சீர் செய்தாலும் எதற்கும் உருப்படாது. காரணம் மதங்களால் துருவேறிய மனது கரடுமுரடானது.//


துருவேறாமல் இருக்கும் ஒரு சில மனதுகலாவது திருந்தினால் நல்லது..

Anonymous said...

நல்லா சொன்னீங்க லோஷன்
மதம் என்பதற்கு பொருளே அதற்கு சாட்சி

மதம் நமக்காகத்தானே தவிர மதத்திற்காக நாம் அல்ல
இதை உணர வேண்டுமென்றால் அவன் மனிதானக இருக்க வேண்டும் மதத்தினனாக இல்லை.


சூப்பர் ஸ்டார் சொல்வது போல

“கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீ தான் அதற்கு எஜமான்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமான்”


மதமும் அப்படித்தான் உன் மத ஈடுபாட்டின் அளவை பொறுத்து உனது இடமும் சமூகத்தில் இருக்கும்

உணரடா மனிதா . . . எப்போது நீ மனிதனாவாய்

நட்புடன்

ரெஜோலன்

Anonymous said...

//மதமும் மண்ணாங்கட்டியும்..
போங்கடா போய் மனிதர்களைப் பாருங்கள் முதலில்.//

அது தான் தேவை.வாழ்த்துக்கள்.

Media 1st said...

மதம் நமக்காகத்தானே தவிர மதத்திற்காக நாம் அல்ல
இதை உணர வேண்டுமென்றால் அவன் மனிதானக இருக்க வேண்டும் மதத்தினனாக இல்லை.

Media 1st said...

++ கிழக்கை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள தனுஷிகாவின் படுகொலை

இதை வெளியிவிடவும் உங்க பிளாக்கர்ல தயவு செய்து
http://dshan2009.blogspot.com/2009/05/blog-post_3748.html

இருமேனிமுபாரக் said...

மதத்தை ஒரு அரசியல் கட்சி மாதிரி நினைப்பவர்களாலும் அடிப்படையான மார்க்க அறிவில்லாதவர்களாலும் இம்மாதிரியான பிரச்சினைகள் தோன்றுகின்றன. ஒரு பிரையன் லாலா,அல்லது அவரை மாதிரி ஒரு பிரபலத்தினால் தான் இஸ்லாம் உயிர்ப்புடன் இருக்கின்றது என்று யாரேனும் நினைத்தால்,சொன்னால் பரப்பினால் அவர்கள் இஸ்லாமியர்களாக இருக்கவே தகுதி அற்றவர்கள்.இறைவன் அவர்களைக் காப்பாற்றுவானாக.(எந்த இறைவனை யார் நம்புகிறார்களோ அந்த இறைவன்)

முனைவர் இரா.குணசீலன் said...

இடுகைக்கு ஏற்ற தலைப்பு.

முனைவர் இரா.குணசீலன் said...

இடுகைக்கு ஏற்ற தலைப்பு.

இர்ஷாத் said...

லாரா இஸ்லாத்துக்கு மாறினாரா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை..

"ALLAHU AKBAR" என்பதன் பொருள் அல்லாஹ் பெரியவன் என்பதே.. எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்வது போல் இந்த செயலுக்கு இறைவன் தான் காரணம் என்று கூறும் ஒரு தன்னடக்கமே..

மனம் மாற்றத்தின் உச்ச கட்டமே மத மாற்றம்.. அவ்வாறு ஒரு செய்ய துணிவது என்பது ஒரு அதீத நம்பிக்கையை காட்டுகின்றது.. எனென்றால் அதன் மூலம் அவர் பல சமூக நெருக்குதல்களை எதிர்கொள்கிறார்.. அவ்வாறான் நெருக்குதல்கள் வேறு சந்தர்ப்பங்களில் ஏற்படுவதில்லை..

மரணத்துக்கு பின்னான வாழ்க்கை பற்றிய தேடுதலின் விளைவே மதம்.. அது அல்லாமல் உலக ஆதாயங்களை நோக்காக கொண்டு செய்யப்படும் மத மாற்றங்களே திணிப்புகளாக கொள்ளப்படவேண்டும்..


இஸ்லாம் திணிக்கப்படுகின்றது என்று யாராவது பொருள் கொள்வாராயின் அது தவறாகும். ஏன் என்றால் இஸ்லாத்தில் ஈமான் என்று அழைக்கப்படும் இதயசுத்தியான நம்பிக்கைக்கே மதிப்பளிக்கப்படுகின்றது.. ஒருவர் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை விளங்காமல் இஸ்லாமிய கடமைகளை செய்வதன் மூலம் அவருக்கு எந்த பயனும் ஏற்படாது என்று இஸ்லாம் கூறுகிறது..

அதே போல் ஒருவர் மதம் மாறுவது என்பது அவர் மரணத்திற்கு பின்னான வாழ்க்கையில வெற்றி பெறுவதற்கே.. அவர் மதம் மாறுவதன் மூலம் இறைவனுக்கு எந்த நன்மையும் கிடைக்க போவதில்லை.. அவ்வாறான தேவை இறைவனுக்கு இல்லை.. இறைவனை இறைவனாக நம்புவதே இஸ்லாம்.. உதாரணமாக மனிதன் மதம் மாறுவதன் மூலம் இறைவனுக்கு வெற்றி என்றால் இறைவன் மனிதனின் மீது தங்கியிருப்பதாக ஆகிவிடும்..

உங்களின் பதிவு ஒரு நாத்திக வாதியின் கோணத்தில் இருக்கிறது.. மரணத்துக்கு பின் என்ன நடக்கிறது என்று சிந்த்தித்து அதன் பின் மதம் தேவையா என்று முடிவெடுங்கள்.. பின் மதங்களை ஆராய்ந்து தேர்ந்தெடுங்கள்.. எது என்றாலும் ok.

ஒவ்வொரு ஆத்மாவும் அதனதன் செயலுக்கே பொறுப்பு..

ஒரு அகன்ற விஷயத்தை உங்கள் பதிவு தொட்டிருக்கிறது.. சுருக்கமாக ஏன் கருத்தை தெரிவித்திருக்கிறேன்.. விரிவான விளக்கம் பின்..

B.Karthik said...

Well all the religion teach us the same thing but most humans do these idiotic things not knowing that love towards others is the real religion. Well one example would be our country.
Nothing more to tell. Exhausted of mentioning this several times.
Only thing we can do is to laugh at these people.

Anonymous said...
This comment has been removed by the author.
Indian Muslimah said...

சகோதரரே,

இந்த குறுஞ்செய்தியின் நம்பகத்தன்மை நிச்சயம் கேள்விக்குரியதே. அது போல தான் உங்கள் முஸ்லிம் நண்பர் கூறிய நீள் ஆம்ஸ்ட்ரோங் விஷயமும். சில முட்டாள்களுக்கு இது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவதே வேலை.

இருந்தாலும், ஒருவர் இஸ்லாத்திற்கு, உண்மையாகவே, தூய்மையான இறைபற்றோடு, தன்னை முழுவதுமாகவே இறைவனிடம் சமர்பிக்க வந்து விட்டால், அதை சக முஸ்லிம்கள் கொண்டாடவே செய்வார்கள். இதற்க்கு, மற்ற மதங்களை இழிவு படுத்தும் நோக்கம் இல்லை. எல்லா மனிதர்களும் ஆதாம் ஏவாள் (அவர்களின் மீது அமைதி நிலவட்டும்) வழியில் பிறந்த சகோதரர்கள் ஆனாலும், இஸ்லாத்திற்கு வந்த பிறகு அவர் இன்னொரு முஸ்லிமுக்கு இன்னமும் நெருக்கமாகிறார். இதுவே காரணமாகும்.

மேலே சகோதரர் இர்ஷாத் கூறியது போல, அல்லாஹு அக்பர் என்றால் 'இறைவன் மிகப்பெரியவன்' என்று அர்த்தம் (God is Great). அவருடைய பதிலை நான் வழிமொழிகிறேன்.

\\அவரவர் விரும்பிய பாதையைத் தேர்ந்தெடுக்கட்டும்\\

நிச்சயமாக இஸ்லாம் எந்த ஒருவரையும் வலுக்கட்டாயமாக இஸ்லாத்தில் நுழைப்பதை அனுமதிக்கவில்லை. "மார்க்கத்தில் எந்த ஒரு கட்டாயமும் இல்லை" என்பது குரான் கூறும் செய்தி.


தூய்மையான இறைப்பற்று தான் ஒரு மனிதரை வெற்றி அடைய செய்யுமே தவிர, வெறும் வாய் வார்த்தைகள் அவருக்கு எந்த பயனும் அளிக்காது. அதனால் தான், இஸ்லாத்தில் "செயல்கள் யாவும் எண்ணங்களை போலவே அமைகின்றன" (actions are based on intentions) என்ற ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் ஒருவரின் நன்மை, தீமைகள் கணக்கிடப்படுகின்றன. நான் தொழுகிறேன், நோன்பு பிடிக்கிறேன், ஹிஜாபை (பர்தா) வை கடைப்பிடிக்கிறேன், பிறருக்காக செலவு செய்கிறேன்; அனால் என்னுடைய எண்ணம் மற்ற மனிதர்கள் என்னை பற்றி உயர்வாக பேசுவார்கள் என்ற எண்ணத்தோடு செய்தால் அதற்க்கு எவ்வித கூலியும் இல்லை.

Indian Muslimah said...

\\ஒருவர் மதம் மாறியதை வெற்றியாகக் கொண்டாடி பெருமை பாராட்டுபவர்கள், அதே மதத்தின் பெயரால் நடைபெறும் தீவிரவாதச் செயலுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளாமல் மதத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை என்பது முரண்பாடாக இருக்கிறது.\\

சகோதரரே, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் நிச்சயமாக இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் தீவிரவாதத்தை தட்டி கேட்கத்தான் செய்கிறார்கள். மீடியாக்கள் அதை மூடி மறைப்பதால் உங்கள் காதுகளுக்கு அது எட்டவில்லை.

எத்தனை பேருக்கு தெரியும், மும்பையில் அநியாயம் செய்த தீவிரவாதிகளின் பிணங்களை அங்குள்ள மையவாடியில் புதைக்க இஸ்லாமிய தலைவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை?

http://news.scotsman.com/world/Mumbai-killers-to-be-denied.4748630.jp

http://news.bbc.co.uk/2/hi/south_asia/7719059.stm



"The problem is not that condemnations do not exist; it is that they are not well publicized in the media. Allie Shah wrote in the Star Tribune in Minnneapolis, MN:

"The fact is that many prominent American Muslim groups have clearly and publicly denounced acts of terror in the name of Islam as barbaric, heinous and just plain wrong. Though they religiously send out press releases and e-mail statements after every attack, somehow their message doesn't seem to penetrate." 1

Two of the largest Muslim groups in the U.S. -- the Muslim Public Affairs Council (MPAC) and the Council on American-Islamic Relations (CAIR) regularly issue statements. However, they rarely appear in local newspapers, on TV or radio.

.....................................

http://www.religioustolerance.org/islfatwa.htm

Anonymous said...

மதம் மாற்றம் என்பது சாதாரணமானதல்ல.
ஒரு தனி மனிதனின் பாரம்பரியம் பாரம்பரியமாக வழிவழி வந்த
கலாசாரம் அழிக்கப்படுகிறது.

அஜுவத் said...

அல்லாஹுஅக்பர் என்றால் அல்லாஹுக்கு வெற்றி என்று பொருள் அல்ல அல்லாஹ் மிகப்பெரியவன் என்று பொருள். நன்பர் ரிபான் சொன்ன "உங்க மதம் உங்களுக்கு எங்க மதம் எங்களுக்கு" என்பது ஒரு இறை வசனம். அதன் எதார்த்தம் வேறு. லாறா மாறியதால் இஸ்லாத்திற்கு வெற்றி என்பதெல்லாம் முட்டாள் தனம் யாராலும் இஸ்லாத்திற்க்கு பெருமை கிடையாது; தான் ஒருஇஸ்லாமியன் என்பதில் அவனுக்கு தான் பெருமை இதை முதலில் அந்த நன்பர் புரிந்து கொள்ள வேண்டும். அண்ணா உங்களின் இந்த பதிவில் எனக்கு கொஞ்சம் கூட உடன் பாடில்லை.(மதமும் மண்ணாங்கட்டியும், நாடு காண் பயணம்.) இனி இவ்வாறு தெரியாத்தனமாக பதிவுகளை இட வேண்டாம். மதத்தில் ஈடுபாடு குறைவு என்பதற்காக இப்பிடியா அண்ணா; என்னண்ணா(spell சரியா) நீங்க. என் மனத ரொம்ப புண்படித்தீட்டீங்க.

இர்ஷாத் said...

Triumph
//"நல்ல வேலை இந்த மதத்தில் பிறக்கவில்லை" என்டு சந்தோசம் தான் வரும்... //

உங்கள பார்த்து கட்டாயம் பலர் நினைப்பாங்க.. அவ்வளவு நாகரீகமாக கருத்தை தெரிவித்திருக்கிறீர்கள்..

//இந்த நிமிசம் நிலையானதா என்டு தெரியுமா உங்களுக்கு.. அதுவே தெரியாது.. //

அப்போ எதுக்கு படிக்கிறீங்க? எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இல்லாமலா?

//செத்த பிறகு நடக்கிறதைப் பற்றி யோசிக்கச் சொல்லுறியளே..//

அது உங்களை இல்ல அப்பு.. யோசிக்க கூடியவங்களுக்கு.. யாருக்கோ சொல்ல இது நடுவில கெடந்து சாகுது..

//கொஞ்சமாவது புத்தி / லொஜிக் வேண்டாம்?//

ஏன் overflow ஆகுதோ உமக்கு?

//உங்கள் இனம், உங்கள் பால் (Gender), உங்கள் உருவம், அது இது என்டு எதையுமே எப்படி மாற்றாமல், நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டுமோ,, அப்படியே இந்த மதத்தையும் மாற்றாமல், வேலையப் பாருங்கோப்பா....//

இனம், உங்கள் பால் (Gender), உங்கள் உருவம் - அது விதி..

மதம் என்பது நம்பிக்கை.. உங்கள் நம்பிக்கை பிழையாயின் சரியானத்ட்கு மாறுவதுதான் புத்திசாலித்தனமான நடவடிக்கை..

லோஷன் அண்ணா, சரியான புரிதல் இல்லாமல் ஒருவர் சொன்னது, அதை ஒரு கோணத்தில் புரிந்துகொண்டு நீங்கள் பதிவேழுதியது..இப்போது இஸ்லாம் மீதான வெறுப்பை காட்டுவதற்கு பலருக்கு களம் அமைக்கிறது..

Subankan said...

சரியாகச் சோன்னீர்கள் அண்ணா, மதத்தின் பெயரால் மனிதர்களை மதிக்காதவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்.

//இறை நம்பிக்கை உடையவர்களுக்கு மதம் தேவையற்றது. எந்த மதத்தையும் இறைவன் தோற்றுவிக்கவில்லை என்பதே உண்மை. பித்தர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது.//

வழிமொழிகின்றேன்.

ismath said...

annaaa....... idu ungalukkum sms friendukkum idayil ulla thanippatta pirachhinai. adadkaha ungalukkul ulla inatthuwesathei kattuwada. sari appadiye thawarendralu badilukku ningalum oru sms anuppi irukkalam. adai anaiwarum parkum wahaiyil ningal seidadu ungaludaiya muttal thanatthayum awasarap putthiyayum kattude.

Anonymous said...

இப்படியான சமயங்களின் முக்கியமான தினங்களில் அந்த தினங்கள் பற்றி சொல்லும்போது ரொம்பவும் அவதானமாக, சொல்கின்ற எல்லாத் தகவல்களும், அவை பற்றிய ஐதீகங்களும் மிகச்சரியாக இருக்கின்றனவா என்று உறுதிப்படுத்துவது ஒவ்வொரு ஒலிபரப்பாளனிதும் கடமை. கொஞ்சம் தவறினாலும் நிறையப்பேரின் மனமும்,உணர்வுகளின் புண் பட்டுபோய் விடும்..

This is your first article
மனிதர்களின் பாவங்களை தான் ஏற்று மனிதருக்காக முள்முடி, சிலுவை தாங்கிய மகானை எந்த மதத்தவராக நாம் இருந்தாலும் கொஞ்சம் இன்று சிந்தித்துப் பார்ப்போமாக..

Ithuvum ungal munnaya pathivil ullathu

So, Matham sambanthamana visayangala konjam kavanama irunga annaa......

வாகீசன் said...

சிறிது காலமாக உங்களின் கருத்துக்களை வாசித்து வந்தாலும் இதுவே எனது முதலாவது பின்னூட்டம்.

மதத்தைப் பற்றி பலர் ஏன் இவ்வளவு தூரம் கவனமெடுக்கின்றார்கள் என்று எனக்குப் புரிவதில்லை. அதை விட மதம் மாறவேண்டிய தேவை ஏன் வருகின்றது என்றும் புரிவதில்லை. கடவுள் எங்களைப் படைத்தானா என்று எங்களுக்கு உறுதியாகத் தெரியாது, ஆனால் எங்களின் அம்மாவை, அப்பாவைத் தெரியும். அவர்கள் தான் உண்மை - அதைவிட வேறொன்றும் பெரிதில்லை. மாதா, பிதா, குரு தெவம் என்ற ஒழுங்கு மிக மிகச் சரி. சைவனாகப் பிறந்து முஸ்லீமாக மாறினால் சிவன் வெறுக்கப்போவதும் இல்லை, அல்லா அணைக்கப்போவதும் இல்லை. அப்படி செய்யும் கடவுளுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் என்ன வேறுபாடு? ஐதேக இருந்து சுக போவதுபோலத்தான் மதமாற்றமும் என்று ஆகாதா?

"அவ்வாறு ஒரு செய்ய துணிவது என்பது ஒரு அதீத நம்பிக்கையை காட்டுகின்றது.. எனென்றால் அதன் மூலம் அவர் பல சமூக நெருக்குதல்களை எதிர்கொள்கிறார்" - அதீத நம்பிக்கையை அல்ல அதீத மடமையைக் காட்டுகின்றது. ஒரு கடவுளிலும் பார்க்க மற்றய கடவுள் ஏதோ விதத்தில் மேன்பட்டவர் என்று அந்த மதமாற்றவாதி நம்புவது சரி என்று யாரேனும் கூறமுடியுமா? அதைவிட இவ்வாறு மதம் மாறுபவர்களுக்கு யாரேனும் நெருக்குதல் கொடுப்பார்களேயானால் அவர்களும் மூடர்களே. அவர்களும் உண்மையில் தங்களின் மத்தின்மீது நம்பிக்கையற்று வாழ்பவர்களே.

Jegatheepan said...

அன்பை பற்றி சரியாக போதிக்காத வரைக்கும் , மனிதன் மறந்துவிட்ட மனிதாபிமானத்தை திரும்ப அவனுள் ஏற்படுத்தாத வரைக்கும் மதங்கள் எல்லாமே நீங்கள் சொல்வது போன்று மண்ணாங்கட்டி தான். இவர்கள் எப்போது மதங்களை பரப்புவதை நிறுத்தி விட்டு மனித நேயத்தை பரப்ப போகிறார்கள் ? அப்படி ஒரு நிலைமை இருந்திருந்தால் ஏன் இந்த முரண்பாடுகளும் யுத்தங்களும் ?

Jegatheepan said...

/இறை நம்பிக்கை உடையவர்களுக்கு மதம் தேவையற்றது. எந்த மதத்தையும் இறைவன் தோற்றுவிக்கவில்லை என்பதே உண்மை/
இதை புரிந்து கொள்ளாத வரை மதம் மனித இனத்துக்கே தேவை இல்லாத ஒன்று . God's love is a relationship that has nothing to do with religion. Love God not religion

தர்ஷன் said...

எனக்கு பிடித்த தங்கள் பதிவுகளில் இதுவும் ஒன்று
மதங்களைப் பற்றி எழுதுகையில் நாம் சார்ந்திராத மதங்களைப் பற்றி கவனமாக பேசுதல் வேண்டும். பெரியார் கூட அம்பேத்கர் புத்த மதத்துக்கு அழைத்த போது அங்கு வந்து நான் ஹிந்து மதத்தை விமர்சித்தால் அது வேறு மாதிரி கருதப்படும் என்றாராம்.
இங்கு கூட உங்களின் மத சார்பின்மையும் மதங்களின் மீதான வெறுப்பும் ஏதோ இஸ்லாமியத்துக்கு மாத்திரம் எதிரானது என கருதப்பட வாய்ப்புண்டு.
ஆமாம் ஏன் இப்போதெல்லாம் தினமும் எழுதுவதில்லை

Anonymous said...

see this..its not confirm jet

http://wiki.answers.com/Q/Has_Brian_Lara_accepted_Islam

எட்வின் said...

மதங்களினால்... மதம் பிடித்திருக்கிறது சிலருக்கு. மனிதனை மனிதனாக பார்த்தாலே பெரிய விஷயம்.

இவங்க எல்லாம் எப்போ திருந்த போறாங்களோ?

இரா.வி.விஷ்ணு (ராஜ் ) said...

உங்கள் மனதை வெளிப்படையாக கட்டுரையாக்கியிருக்கிறீர்கள். இவ் விவாதமும் ஆரோக்கியமானதுதான் லோஷன் அண்ணா. மதங்கள் மதிக்கப்படவேண்டியவைதான் அதற்காக சிலரின் பித்துப்பிடித்ததனமான நடவடிக்கைகளை சகிக்க முடியாமல் இருக்கிறது. உங்களுக்கு லாறா இவ்படித்தான் என்னுடைய லிபியா நண்பர் ஒருவர் பிரபல கால்பந்து வீரர் காக்கா {பிறேசில்} {சாரியாக ஞாபகம் இல்லை அல்லது கிறிஸ்.றொணாள்டோ}கிருஸ்தவ மதத்திலிருந்து
இஸ்லாமிய மதத்துக்கு மாறியபோது நண்பர் செய்த கொண்டாட்டம். அச்சமயம் அவர் பிரயோகித்த வார்த்தைகள் சில என்னையும் இப்படி ஒரு கடுப்புக்கு உள்ளாக்கியது.மதம் மாறுவது மனது சம்மந்தப்பட்டது அதை முறையாக பின்பற்றுவது ஆத்ம திருப்தி சம்மந்தப்பட்டது. மதத்துக்கு அப்பால் மனிதரை மட்டும் சார்ந்து மதங்களை வெறுப்பதோ. பின்பற்றாமல் இருப்பதோ அறிவியல் சம்மந்தப்பட்டது. அண்மையில் எங்கோ படித்தது இது ஒரு ஆய்வுத்தகவல் அறிவியலாளர்கள் பலர் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாகவே இருக்கிறார்களாம் அவர்கள் அறிவியலை மட்டும்தான் நம்புகிறார்களாம். லோஷன் அண்ணா உங்கள் மத நம்பிக்கை பற்றி சொல்லிவிட்டீர்கள் உங்கள் கடவுள் நம்பிக்கை எப்படி?..

Anonymous said...

இஸ்லாம், இந்து, கிறிஸ்தவம் என்று உலகம் முழுக்க ஆயிரம் மதங்கள். அங்கும் இங்கும் ஈர்த்துக்கொள்ளும் மதமாற்றங்கள். எல்லாம் இருக்கட்டும். முல்லைத்தீவில் இருக்கும் கிறிஸ்தவ அப்பாவிச் சிறுவனோ சிறுமியோ இந்துவாக மதம் மாறிக்கொண்டால் சிங்கள புத்த மத இராணுவத்தின் எறிகணையிலிருந்து உயிர்தப்பிக்கொள்ள முடியுமா? சொல்லுங்கள். நீங்கள் எல்லோரும் இதற்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும்!!!!! இல்லாவிட்டால் நீங்கள் கொண்டாடும் உங்கள் மதத்தை இழிவுபடுத்தியவர்கள் ஆவீர்கள். சொல்லுங்கள் பதில்!!!!

SurveySan said...

well said.

KaLyaN said...

உங்க மதம் (இஸ்லாம்) கூறும் உண்மைகள SMS அனுப்புங்க உங்க மதம் பற்றி மற்றவர்கள் தெரிசிகிவாங்க அத விட்டுட்டு Brian Lara" மதம் மாறிடான் அவன் மாறிடான் இவன் மாறிடானு இவனுக்களுக்கு வேற வேலையே இல்லையோ? அந்த MSG அனுப்பினவன் இஸ்லாம் மதத்துக்கு (அழ)பெரிய சேவை ஆற்றிடான் ஹீ ஹீ //...மதமும் மண்ணாங்கட்டியும்..
போங்கடா போய் மனிதர்களைப் பாருங்கள் முதலில்..//

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...
This comment has been removed by the author.
Vathees Varunan said...

மதம் மாறுவது என்பது ஒரு பெரிய விடயமல்ல. அதையொரு பெரிய விடயமாக்கவும்கூடாது.

"மக்களுக்காக மதங்கள் இருக்கவேண்டுமேதவிர, மதங்களுக்காக மக்கள் இருக்கவேண்டுமென எதிர் பார்ப்பது தவறு.

kniroshansl said...

Well done Loshan,
Every X muslims should be understand this...
I thing it is better if you said this in ur program.... slighty...

Unknown said...

7 பேருக்கு அனுப்பு என்று வருகிற smsகளைப் பார்த்தாலே கோபமும் எரிச்சலும் பற்றிக்கொண்டு வரும்

எனக்கு ஒரு sms வந்தது...

தயவு செய்து கீழுள்ள செய்தியினை குறைந்தது 10 நண்பர்களிடமாவது SMS or Text மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். பிறநாட்டு நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Just 41 days,1410 Tamils killed & 4100 wounded,Brothers & Sisters please make your voice heard,Your voice our life.Only you can save us. Eelam Tamils

ஆனால் எனக்கு கோபம் வரவில்ல..

மார்க்கம் இல்லதவனுகக்தன்
மதமும் மண்ணாங்கட்டியும்...

இந்த பதிவு உங்களுடைய முட்டாள் தனத்தையும் அவசரப் புத்தியையும் கட்டுதே . மதங்களின் மேல் உள்ள இனததுவசத்தையும் வெறியையும் வேளிபடுதுதிறது.உங்கள் மனதை வெளிப்படையாக கட்டுரையாக்கியிருக்கிறீர்கள்.

விஷயம் தெரியாமல் மதங்களை பற்றி பேச வேண்டம். எந்த மதத்தையும் இஸ்லாம் மதம் மதிக்கின்றது.இஸ்லாத்தை படித்து விளங்கி பேசுங்கள்.
சமுகத்தில் பெரிய இடத்தில் இருக்கும் நிங்கள் இவ்வாறு இனத்துவசத்தை வெளிப்படுத்த வேண்டம்.

உங்கள் மதம் உங்களுக்கேபட்ட எங்கள் மதம் எங்களுக்கேபட்ட .

RIFAN said...

hi loshan. neengal vilakkam keattirintheeng adukkana vilakkam nanbar susan tandirukkirar.idooooooo

பேருக்கு அனுப்பு என்று வருகிற smsகளைப் பார்த்தாலே கோபமும் எரிச்சலும் பற்றிக்கொண்டு வரும்

எனக்கு ஒரு sms வந்தது...

தயவு செய்து கீழுள்ள செய்தியினை குறைந்தது 10 நண்பர்களிடமாவது SMS or Text மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். பிறநாட்டு நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Just 41 days,1410 Tamils killed & 4100 wounded,Brothers & Sisters please make your voice heard,Your voice our life.Only you can save us. Eelam Tamils

ஆனால் எனக்கு கோபம் வரவில்ல..

மார்க்கம் இல்லதவனுகக்தன்
மதமும் மண்ணாங்கட்டியும்...

இந்த பதிவு உங்களுடைய முட்டாள் தனத்தையும் அவசரப் புத்தியையும் கட்டுதே . மதங்களின் மேல் உள்ள இனததுவசத்தையும் வெறியையும் வேளிபடுதுதிறது.உங்கள் மனதை வெளிப்படையாக கட்டுரையாக்கியிருக்கிறீர்கள்.

விஷயம் தெரியாமல் மதங்களை பற்றி பேச வேண்டம். எந்த மதத்தையும் இஸ்லாம் மதம் மதிக்கின்றது.இஸ்லாத்தை படித்து விளங்கி பேசுங்கள்.
சமுகத்தில் பெரிய இடத்தில் இருக்கும் நிங்கள் இவ்வாறு இனத்துவசத்தை வெளிப்படுத்த வேண்டம்.

உங்கள் மதம் உங்களுக்கேபட்ட எங்கள் மதம் எங்களுக்கேபட்ட .

நந்தன் said...

எதை எதோடு ஒப்பிடுகிறீர்கள் பாருங்கள். சுசன், உங்கள் கீழ்த்தரமான மனநிலை புரிகிறது.

இந்தப்பதிவில் எந்தவொரு இடத்திலும் லோசன் எந்தவொரு மதத்தையும் தனிப்படத் தாக்கவில்லையே. அப்படியிருக்க ஏன் இந்தக் கோவப் பாய்ச்சல்கள்?
இது தான் எதுவோ அளவெண்டு சொல்லிறதோ?

இதுக்கு இன்னொருத்தர் வக்காலத்து.நீங்கள் எல்லாம் மனுசப் பிறவிகளா?
இப்ப எல்லாருக்கும் உங்களைப் பற்றி விளங்கி இருக்கும்.

லோசன் இவங்களுக்கு உங்கட பதில் எங்கே?

Unknown said...

நந்தன் said...
எதை எதோடு ஒப்பிடுகிறீர்கள் பாருங்கள். சுசன், உங்கள் கீழ்த்தரமான மனநிலை புரிகிறது.


சகோதர புரிந்து விட்டதா??? இதை பார்த்து நிங்கள் இவ்வாறு .......... கொந்தளிகின்ரிர்கள்,(தனக்கு வந்தால் புரியும்)முஸ்லிம்களை நாங்களும் கன்ணியபடுதுவேம் ,இதை அனைவெரும் புரிய வேண்டும் என்றுதன் அதை எழுதினேன்,
ஆளுக்கு ஆள் கருத்தை அள்ளி வீசுவதில்லை,எதை பேசுறோம் என்றும் பார்க்க வேண்டும்,

நந்தன் said...
இந்தப்பதிவில் எந்தவொரு இடத்திலும் லோசன் எந்தவொரு மதத்தையும் தனிப்படத் தாக்கவில்லையே.

இதில் எந்த மதம் விளங்குது...

1) The Lion of Cricket game "Brian Lara" accepts Islam by the hands of Tableeghi Jamat under Junaid Jamshed & Saeed Anwer.

"ALLAHU AKBAR"

உலகப் பிரபல கிரிக்கெட் வீரர் பிரயன் லாரா இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார். அல்லாவுக்கு வெற்றி எனப் பொருள்படும் தகவலே அது.
இது போதும் ..
................................

2)பின்னுட்ங்களையும் பாருங்கள் மதத்தை தனிப்படத் தாக்கவில்லையா?

*லோசன் என்ன கடவுலா???
(நிங்களும் வக்காலத்து) தன்னை படைத்தவேன் யார் என்றே தெரியதவேன்...
அவன் யார்...


Loshan said..
போங்கடா போய் மனிதர்களைப் பாருங்கள் முதலில்..

மனிதர்களைப் பார்த்து லோஷன் கடவுளாயிட்டார?

இர்ஷாத் said...

**இஸ்லாம் என்பது என்ன? வாப்பா தாத்தா செய்ததா? அல்லது அந்த SMS அனுப்பியவர் செய்ததா? இது எதுவும் இல்லை.. நபிகள் நாயகம் செய்ததுதான் இஸ்லாம்.. அதை மீறியவர் வாப்பா என்றாலும் இஸ்லாத்தை மீறியவர் ஆவார்.. அடிப்படையை தெரிந்து கொள்ளுங்கள்..

அதுதான் அளவுகோல் . இது கூட தெரியாமல் விமர்சிக்க வேண்டாம்..

மசூதியில் இறைவன் இருக்கிறான் என்று உங்களிடம் எந்த முஸ்லிமாவது தெரிவித்தார்களா?


//அவர்களும் இரவில் பெரிய விருந்தே சாப்பிடுவார்கள். //
//பல் விளக்காமல் வகுப்புக்கு //
//மதத்தில் குடிக்கக் கூடாது என்டு தான் சொல்லி இருக்கு, அதனால் சிகரட் குடிக்கலாம் என்டு குதற்கமாக லொஜிக் கண்டு பிடிப்பவர்கள் //
//தைப்பொங்கலுக்கு மாவிலை தோரணம் கட்டுவதில் இருந்து பொங்கி சூரியனுக்கு படைப்பது வரை எங்கள் தாத்தாவுடன் வாப்பா தாத்தா செய்வார்..//
////நிறைய பேர் அப்படித்தான் எங்களின் யுனியில்... //
மீண்டும் ** ஐ வாசிக்கவும்..

//அவர்கள் நோன்பு இருக்கிறோம் என்டு பறை அடிப்பது கூட இல்லை.. நிறைய பேர் பறை அடிப்பதைப் பார்க்க வேதனையாகத் தான் இருக்கும்//

Indian Muslimah said...
மற்ற மனிதர்கள் என்னை பற்றி உயர்வாக பேசுவார்கள் என்ற எண்ணத்தோடு செய்தால் அதற்க்கு எவ்வித கூலியும் இல்லை.

வாசிக்கவில்லையோ?

//மதம் மாற வேண்டிய நிலையில் தான் மோட்சம் கிடைக்கும் என்டால் நான் நரகத்துக்கேப் போகத் தயார்...//
அது உங்கள் இஷ்டம் அப்பு..

//மாறினால், உன் படிப்பு செலவை நாங்கள் ஏற்போம், தங்க நல்ல வீடு கிடைக்கும், போய் வர எங்கள் ட்ரைவர் உதவுவார். அது இது என்டு ஒரே அலம்பல்ஸ்..//

இர்ஷாத் said..
.ஒருவர் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை விளங்காமல் இஸ்லாமிய கடமைகளை செய்வதன் மூலம் அவருக்கு எந்த பயனும் ஏற்படாது என்று இஸ்லாம் கூறுகிறது..

வாசிக்கவில்லையோ?

//தமிழனுக்கு என்டு ஒரு நாடு கிடைக்கும் பட்சத்தில், முதலில் ஒழிக்க வேண்டியது சாதியையும் மதத்தையும் தான்... //
தமிழன் என்பது என்ன? ஒரு ஸ்பெசல் இனமா? எலாரும் மக்கள் தானே.. அப்போ எதுக்கு நாடு..?

//What the heck. So are you trying to say that converting to another religion is a wise idea.. my foot... See see... This is the prob in ur guys.. Check my above post if you want more detail. Its quite long though.//

still you couldn't understand religion is a faith. like you support to LTTE. WHEN YOU FEEL LTTE IS NOT IN CORRECT THEN YOU SUPPORT KARUNA.. SOMETHING LIKE THAT. IF YOU ARE WISE AND IF YOU REALIZED WHAT YOU PRACTICED ALL THESE DAYS IS WRONG, YOU HAVE TO SHIFT TO THE CORRECT ONE ISN'T IT?

//Even you dont seem to convince others by showing the good face of islam.. //

WILL YOU ABLE TO UNDERSTAND? IF SO YOU MAY READ WHAT I SAID ABOVE IN PREVIOUS COMMENTS.

gayan said...

loshan naan ngal pathivuhalai ondru vidamal padittullean.netru varai ungal rasihan. aanal neengal islattin meedu tevaikkillamal oru padivai ittu neengalum oru muttal enbadai teriyappadutti irukkireengal.mathamum mannang kattiyum endraal ean muslimgalai jafnavil irundu virattineenga? muslim madattavarkalodae vala mudiyamala? muslim teeviravadi endrellam solreenga, aanal LTTE tamil teeviravadi illaya? ettanayoo appavikalin uyirai eduttiruppangal. muslim palli vayalhalilum bouda pansalayilum ettanayo podu makkalai kondeenga? aduvellam yaru? avanga teeviravadi illaya? INI PADIVU PODUM PODU 1000 MURAI YOSICHCHI PATHIVIDAVUM
summa time pass pandradukku mathangalai patti padivu pottu ungaladu peyrai keduttukkolla wendam

benza said...

வாகீசன்
யாழ்ப்பாணம் குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தமிழன் நான்.
++++++++++++++++++++++++++++++++++++++++
சிறிது காலமாக உங்களின் கருத்துக்களை வாசித்து வந்தாலும் இதுவே எனது முதலாவது பின்னூட்டம்.

மதத்தைப் பற்றி பலர் ஏன் இவ்வளவு தூரம் கவனமெடுக்கின்றார்கள் என்று எனக்குப் புரிவதில்லை. அதை விட மதம் மாறவேண்டிய தேவை ஏன் வருகின்றது என்றும் புரிவதில்லை. கடவுள் எங்களைப் படைத்தானா என்று எங்களுக்கு உறுதியாகத் தெரியாது, ஆனால் எங்களின் அம்மாவை, அப்பாவைத் தெரியும். அவர்கள் தான் உண்மை - அதைவிட வேறொன்றும் பெரிதில்லை. மாதா, பிதா, குரு தெவம் என்ற ஒழுங்கு மிக மிகச் சரி. சைவனாகப் பிறந்து முஸ்லீமாக மாறினால் சிவன் வெறுக்கப்போவதும் இல்லை, அல்லா அணைக்கப்போவதும் இல்லை. அப்படி செய்யும் கடவுளுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் என்ன வேறுபாடு? ஐதேக இருந்து சுக போவதுபோலத்தான் மதமாற்றமும் என்று ஆகாதா?

"அவ்வாறு ஒரு செய்ய துணிவது என்பது ஒரு அதீத நம்பிக்கையை காட்டுகின்றது.. எனென்றால் அதன் மூலம் அவர் பல சமூக நெருக்குதல்களை எதிர்கொள்கிறார்" - அதீத நம்பிக்கையை அல்ல அதீத மடமையைக் காட்டுகின்றது. ஒரு கடவுளிலும் பார்க்க மற்றய கடவுள் ஏதோ விதத்தில் மேன்பட்டவர் என்று அந்த மதமாற்றவாதி நம்புவது சரி என்று யாரேனும் கூறமுடியுமா? அதைவிட இவ்வாறு மதம் மாறுபவர்களுக்கு யாரேனும் நெருக்குதல் கொடுப்பார்களேயானால் அவர்களும் மூடர்களே. அவர்களும் உண்மையில் தங்களின் மத்தின்மீது நம்பிக்கையற்று வாழ்பவர்களே.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
தர்ஷன்

* Age: 25
* Gender: Male
* Industry: Education
* Occupation: Teacher
* Location: மாத்தளை : மலையகம் : Sri Lanka

About Me

பெரிதாக சொல்ல எதுவுமில்லை பல வலைப்பூக்களை பார்த்து ஆர்வத்தால் எழுத வந்த ஒருவன்
comment on Loshan
எனக்கு பிடித்த தங்கள் பதிவுகளில் இதுவும் ஒன்று
மதங்களைப் பற்றி எழுதுகையில் நாம் சார்ந்திராத மதங்களைப் பற்றி கவனமாக பேசுதல் வேண்டும். பெரியார் கூட அம்பேத்கர் புத்த மதத்துக்கு அழைத்த போது அங்கு வந்து நான் ஹிந்து மதத்தை விமர்சித்தால் அது வேறு மாதிரி கருதப்படும் என்றாராம்.
இங்கு கூட உங்களின் மத சார்பின்மையும் மதங்களின் மீதான வெறுப்பும் ஏதோ இஸ்லாமியத்துக்கு மாத்திரம் எதிரானது என கருதப்பட வாய்ப்புண்டு.
ஆமாம் ஏன் இப்போதெல்லாம் தினமும் எழுதுவதில்லை
+++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++

மேலே தர்ஷன் மற்றும் வாகீசன் இருவரும் கூறியதை ஆமோதிகின்றேன் ---
உலகில் அரசியல் சார்ந்த குழுக்களை தவிர்த்து சமயங்களை மட்டும் நாம்
எடுத்துகொண்டால் தற்கொலை தாக்குதல்களும் கல்லால் எறிந்து கொல்லுவதும்
போன்ற கொடுமைகளை ஆமோதிக்கும் உங்களுக்கு தாழ்மையுடன் ---

மீண்டும் ஒரு முறை லோஷன் அவர்களின் ஆதி பதிவை எமோஷன் இல்லாது
படியுங்கள் ப்ளீஸ் - - - அவர் எந்த மதத்தையும் குறிப்பாக தாக்கவே இல்லை ---

சகல மதங்களையுமே சாடியுள்ளார் --- அது அவரது சொந்த அபிப்ராயம் ---

மதம் மாறுவதை தன் மனதுள் வைத்திராது பகிரங்கமாக்கினது ப்ரியன் லாரா வினது
சொந்த விஷயம் ---

பலருக்கும் செய்தி எடுத்து கொடுக்கும் ஸ்தானத்தில் இருக்கும் லோஷன் ---
அவரது கவர்ச்சியான எழுத்து வன்மையை அவரே கூறுவது போன்று
மதங்களை மத வெறியர்களுக்கு விட்டு --- உலகின் வறியர்களுக்கு பயன்
பட பாவிக்கலாமே !

லோஷன் அண்ணா மரணத்தின் பின்னர் நடப்பதை பற்றி எதுவுமே தெரியாது
ஆனால் இரண்டு விஷயம் சொந்த அனுபவத்தால் நன்றாக உணர்ந்துள்ளேன் ---

முற்பகல் விதைப்பது - - - என்பதும் - - - தந்தை தாய் செயல் பிள்ளைகளை
சந்திக்கும் [ Actions of Parents Visit the Children] ---

Loshan Sir, do we know there are millions of one-meal-a-day children in Lanka and elsewhere ?

தாங்கள் இதில் சற்று கவனம் செலுத்தினால் பெரும் புண்ணியமாகும் !

benza said...

கோவி கண்ணன் '' எந்த மதத்தையும் இறைவன் தோற்றுவிக்கவில்லை'' என
சொன்னது மிகவும் பொருத்தமானதே ---

மனிதன் தனது சமுதாயம் ஒழுங்க்கானதாயும் ஒழுக்கமுள்ளதாயும் இருக்கவென
கண்டுபிடித்ததே ''கடவுள்'' ---
''மரணத்தின் பின்னர் மட்டுமே அவரை அடையலாம்'' எனப்படுகின்றது --

இவ்வுலகில் மதத்தை பரப்புகின்றவருக்கு வளங்கியிருக்கும் ESCAPE VENT !

benza said...

ரஇபான் சார் இந்த தமிழை இங்கிலிஸ் தரீங்களே --- இது உங்களுக்கே புரியுதா ?
உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை நாம் எல்லோரும் ஒத்துகொள்கின்றோம் ---

தயை செய்து தமிழை தமிழில் எழுதுமையா ---

பின்னாடி -- மறுமலை அடிகளார் வந்துடபோறார் அய்யா !

benza said...

'' சகோதரரே, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் நிச்சயமாக இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் தீவிரவாதத்தை தட்டி கேட்கத்தான் செய்கிறார்கள். மீடியாக்கள் அதை மூடி மறைப்பதால் உங்கள் காதுகளுக்கு அது எட்டவில்லை.

எத்தனை பேருக்கு தெரியும், மும்பையில் அநியாயம் செய்த தீவிரவாதிகளின் பிணங்களை அங்குள்ள மையவாடியில் புதைக்க இஸ்லாமிய தலைவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை? ''

மேல் கண்டதை Triumph அம்மா சொன்னார்களா அல்லது Indian Muslimah சொன்னவைகளா ?

சரி ஒத்துக்கொள்ளலாம் --- மீடியாக்களும் பக்க சார்பு உடைய மனித உணர்வு
கொண்டவை தான் --- நீங்கள் அந்த மறைக்கப்பட்ட செய்திகளை இவ்வாறான
இடங்களில் முன்கூட்டியே பதிவிட்டிருகலாமே அக்கறையிருந்தால் ---

மற்றவரது அறிவீனம் தெரியமுன்னர் அறிவூட்டுவது தூய முஸ்லிம் ஆகிய
உங்களது கடைமை அல்லவா அம்மணி ?

தயங்காது தாருங்கள் --- அறிவிலிகள் நாம் பயன் படுவோம் உங்களையும்
தெளிவாக புரிந்துகொள்வோம் !

benza said...

அமெரிக்கா வில் முஸ்லிம் மதத்தை கருப்பினத்தோர் தழுவியது ஒரு காலம் ---
அது அவர்களது அரசியல் யுக்தி ---
உலகின் முன்னணி 4 x 100 Athletic Relay Team American Tommy Smith and company
ஒலிம்பிக்ஸ் ஓட்டம் முடிவில் ப்ளாக் முஸ்லிம் சலுட் அடித்து அணியில்
இருந்து விரட்டபட்டார்கள் ---
Casius Clay என்னும் உலக ஹெவி வெயிட் Boxing சாம்பியன் முஹமட் அலி
ஆனார் ---
Malcolm X அவருடன் வேறு பல பயங்கரவாத தீவிரவாதிகளும் அன்று
முஸ்லிம்களாக மாறினார்கள் ---
இம் மத மாற்றங்கள் மன மாற்றங்களாகவும் இருந்திருக்கலாம் ---
ஆனால் அம் மாற்றங்கள் அரசியல் சம்பந்தமானவையே என்ற பொது
அபிபிராயம் இன்றும் திடமாக நிலவுகின்றது ---
அதே மாதிரி எமது அபிமான கிரிகட் Brian Lara முஸ்லிம் சமயத்துக்கு
மாறும் பொது எமக்கு ஏன் அலுப்பு ?

Indian Muslimah said...

\\'' சகோதரரே, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் நிச்சயமாக இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் தீவிரவாதத்தை தட்டி கேட்கத்தான் செய்கிறார்கள். மீடியாக்கள் அதை மூடி மறைப்பதால் உங்கள் காதுகளுக்கு அது எட்டவில்லை.

எத்தனை பேருக்கு தெரியும், மும்பையில் அநியாயம் செய்த தீவிரவாதிகளின் பிணங்களை அங்குள்ள மையவாடியில் புதைக்க இஸ்லாமிய தலைவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை? ''

மேல் கண்டதை Triumph அம்மா சொன்னார்களா அல்லது Indian Muslimah சொன்னவைகளா ?\\

நான் தான் சொன்னேன்.

\\மற்றவரது அறிவீனம் தெரியமுன்னர் அறிவூட்டுவது தூய முஸ்லிம் ஆகிய
உங்களது கடைமை அல்லவா அம்மணி ?

தயங்காது தாருங்கள் --- அறிவிலிகள் நாம் பயன் படுவோம் உங்களையும்
தெளிவாக புரிந்துகொள்வோம் ! \\

உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி. என்னால் இயன்ற அளவில் அதை நான் செய்கிறேன்.

ARV Loshan said...

பின்னூட்டங்களே போர்க்களம் போலாகிவிட்டது.

எனது பதிவை விட இங்கு பின்னூட்டங்களே அதிகமான பேசுபொருளாகவும் விவாதப் பொருளாகவும் மாறியிருப்பதால் இடப்பட்ட பின்னூட்டங்களுக்குத் தனித்தனியாகப் பதிலிடப்போவதில்லை.

எனினும் பொதுப்படையான சில கருத்துக்கள், சந்தேகங்கள், சர்ச்சைகளுக்கு பதிவை எழுதியவன் என்ற முறையில் பதில் தருவது பொருத்தமானது என்று கருதுகிறேன்.

முழுவதும் புரிந்துகொள்ளாமல் பதிவை மேலோட்டமாக வாசித்தவர்கள் தான் இந்த அவசர கோபக்கார பின்னூட்டர்கள் என்று சொல்லித் தெரியும்.

இவர்களுக்கு சில விஷயம் தெளிவு படுத்தியும் பயனில்லை என்றும் எனக்குத் தெரியும்.

எனினும் என்ன தான் நான் சொன்னாலும் கொண்டதை இவர்கள் விடப் போவதில்லை.. இன்று காலையிலும் ஒருவரின் பின்னூடத்தை அப்படியே பிரசுரித்திருக்கிறேன்.. கயான் என்ற பொய்ப் பெயரில் மனதில் உள்ளத்தைக் கொட்டி இருக்கிறார்..

சிரிப்பு வந்தது..

எனது நெருங்கிய இஸ்லாமிய நண்பர்கள் பலபேரே தொலைபேசி,மின்னஞ்சல் மூலமாக தங்கள் நண்பர்களின் ஆவேசத்துக்கு மன்னிப்புக் கோரியுள்ளார்கள்.. அவர்கள் மனிதர்கள்.

எனினும் மத ரீதியாக இரு தரப்பு அல்லது முத்தரப்பு மோதலாக எனது பின்னூட்டக்களம் மாறி விட்டதனால் ஒரு விளக்கத்தைப் பதிவாகவே போடலாம் என்று எண்ணியிருக்கிறேன்..

வருகை தந்து கருத்தைப் பதிந்தவர்கள், கோபப் பட்டவர்கள், பதில் அளித்தவர்கள் என்று அனைவருக்குமே நன்றிகள்.

எனது இன்றைய பதிவு பலருக்கும் பலத்துக்கும் பதில் தரும்.

இர்ஷாத் said...

bena said...
//ஒரு கடவுளிலும் பார்க்க மற்றய கடவுள் ஏதோ விதத்தில் மேன்பட்டவர் என்று அந்த மதமாற்றவாதி நம்புவது சரி என்று யாரேனும் கூறமுடியுமா? //

கடவுள் ஒருவர் தான். அவர் யார் என்ற தேடலிலேயே மதம் மாறுகிறார்கள்.. பல கடவுள் எவ்வாறு இருக்க முடியும்?

//அவர் எந்த மதத்தையும் குறிப்பாக தாக்கவே இல்லை ---

சகல மதங்களையுமே சாடியுள்ளார் --- அது அவரது சொந்த அபிப்ராயம் --- //

ஆம்.. ஆனால் பல பின்னூட்ட பிதாமகர்களுக்கு அது தெரியவில்லை.. அதை தான் நானும் உங்களின் பதிவு ஒரு நாத்திக வாதியின் கோணத்தில் இருக்கிறது.. என்று கூறினேன்.. அதனால் தான் அவர்கள் லோஷன் இஸ்லாத்தை தாக்கி எழுதிவிட்டார் என்ற புரிதலில் மகிழ்ந்து பின்னூட்டம் இட்டு போர்களம் ஆக்கிவிட்டார்கள்

இர்ஷாத் said...

bena said...
//ஒரு கடவுளிலும் பார்க்க மற்றய கடவுள் ஏதோ விதத்தில் மேன்பட்டவர் என்று அந்த மதமாற்றவாதி நம்புவது சரி என்று யாரேனும் கூறமுடியுமா? //

கடவுள் ஒருவர் தான். அவர் யார் என்ற தேடலிலேயே மதம் மாறுகிறார்கள்.. பல கடவுள் எவ்வாறு இருக்க முடியும்?

//அவர் எந்த மதத்தையும் குறிப்பாக தாக்கவே இல்லை ---

சகல மதங்களையுமே சாடியுள்ளார் --- அது அவரது சொந்த அபிப்ராயம் --- //

ஆம்.. ஆனால் பல பின்னூட்ட பிதாமகர்களுக்கு அது தெரியவில்லை.. அதை தான் நானும் உங்களின் பதிவு ஒரு நாத்திக வாதியின் கோணத்தில் இருக்கிறது.. என்று கூறினேன்.. அதனால் தான் அவர்கள் லோஷன் இஸ்லாத்தை தாக்கி எழுதிவிட்டார் என்ற புரிதலில் மகிழ்ந்து பின்னூட்டம் இட்டு போர்களம் ஆக்கிவிட்டார்கள்

என்ன கொடும சார் said...

TRIUMPH
உங்களின் வாப்பா தாத்தா கதை ரொம்ப சுவாரஸ்யம். தனியாக பதிவிட்டிருந்தால் ஆயிரம் ஹிட்ஸ் பார்த்திருக்கலாம்... அவர் மாதிரி அவர் மகள்களும் நல்லவர்கள்.. வாய்த்த மாமாக்களும் நல்லவர்கள்.. தைப்பொங்கலுக்கு மாவிலை தோரணம் கட்டுவதில் இருந்து பொங்கி சூரியனுக்கு படைப்பது வரை எங்கள் தாத்தாவுடன் வாப்பா தாத்தா செய்வார்.. கிறிஸ்மஸ் மரத்தினை அலங்காரம் செய்யும் போது, வாப்பா தாத்தா மட்டுமல்ல, அவரின் மகன்களும் (மாமாக்கள்) உதவி செய்வார்கள். சாம பூசைக்குப் வாப்பா தாத்தா தான் கூட்டிக்கொண்டு போவது மட்டுமல்ல என்னுடன் கடைசி வரைக்கும் இருப்பர்.. //

அவ்வளவு நல்ல வாப்பா தாத்தா அவரது மகள்கள், மாமாக்கள், அலல்து பரம்பரையில் யாராவது யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்களா? அவ்வளவு நல்ல மனிதர்களை துரத்தி இருக்கமாட்டார்கள்தானே.. அப்படி துரத்த முயற்சித்திருந்தால் நீங்கள் குடும்ப சகிதம் குறுக்கே விழுந்து தடுத்திருப்பீர்கள்தானே.. அந்த கதையையும் எழுதவும்.. இன உறவு வளர பேருதவியாக அமையும்..

தமிழனுக்கு என்டு ஒரு நாடு கிடைக்கும் பட்சத்தில், வாப்பா தாத்தா பரம்பரியில் வந்த ஒரு நல்லவனுக்கு தேச நிர்மாண மத நல்லிணக்க அமைச்சு கொடுக்கலாம்.. அதற்கு நீங்கள் தான் அழுத்தம் கொடுக்க வேண்டும்..

வாப்பா தாத்தா பரம்பரையில் உள்ள ஒரு மூத்தவரின் விலாசம் தொலைபேசி இலக்கம் தரவும்.. அவரது யாழ்ப்பாண வாழ்க்கையின் மலரும் நினைவுகளை பேட்டி கண்டு ஒரு பதிவிட்டு மத நல்லிணக்கம் வளர்க்க ஆசை.. PLEASE

Anonymous said...
This comment has been removed by the author.
benza said...

[[[ Anonymous Indian Muslimah said...May 14, 2009 10:11 AM
தயங்காது தாருங்கள் --- அறிவிலிகள் நாம் பயன் படுவோம் உங்களையும்
தெளிவாக புரிந்துகொள்வோம் ! \\
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி. என்னால் இயன்ற அளவில் அதை நான் செய்கிறேன் ]]]
=======================================
தயை செய்து தாருங்கள் --- பார்க்கவில்லையா லொஷான் தளத்தை
போர்க்களமாக்கி குதப்புகின்றார்கள் ---
சகோதர மதத்தின் தத்துவத்தை தெரிந்திருப்பது சகலருக்கும் நன்மையே !.

இர்ஷாத் said...

//So finally you are agreeing that the religion is made by someone and not by God. ////

இல்லை முஹம்மது நபி (ஸல் ) அவர்கள் இறைவனின் தூதராவார்.. இறைவன் தன கட்டளைகளை மக்களுக்கு எத்திவைத்து நல்வழிப்படுத்த அவரை தேர்ந் தெடுத்தான்.. அவர் கிரிஸ்தவர்கள் நம்பும் யாகூப் jACOB மூஸா MOSES போன்றவர்கள் போல் ஒரு தூதர்.. ஆனால் கடைசி தூதர்

//So are you are you trying to say that Vaapaa thaatha was not real muslim cos he was not bullshitting like others and was an honorable man...//
அவர் முஹம்மது நபி (ஸல் ) அவர்களை சரியாக பின்பற்றியிருந்தால் அவர் சரியான முஸ்லிமே.. ஒருவர் சொல்வது இஸ்லாமா என்று பார்ப்பதற்கான அழவுகோல் பற்றியே குறிப்பிட்டிருந்தேன்.. யாராவது உங்களிடம் இஸ்லாம் என்ற பெயரில் எதையாவது சொன்னால் அவரிடம் கேளுங்கள் அதற்கு முஹம்மது நபி (ஸல் ) அவர்களின் வாழ்கையில் ஆதாரம் இருக்கிறதா என்று.. அவ்வாறு காட்ட முடியாத எதையும் அவர்கள் முஸ்லிம் என்ற பெயர் தாங்கி என்ற காரணத்துக்காக இஸ்லாம் என்று தவறாக எண்ண வேண்டாம்..

//But those ppl using Islam as a reason. Why are not you getting into ur big head.//
மேலே உள்ள விளக்கம் இதற்கும் பொருந்தும்..

//Why dont you stop those idiots from preaching.//
ITS NOT MY BUSINESS.. UNLESS I INTERACT WITH THEM.

//I dont believe in anything than Matha Pitha Guru Theivam. But, if God exists then I strongly oppose these MORONS for bring disgrace to them by their illogical absurdity and stupidity.//
நீங்கள் பிறப்பால் ஒரு ஹிந்து.. ஆனால் கொள்கையால் நீங்கள் அதை விட தூரமாகியிருக்கிறீர்கள்.. இது கூட மத மாற்றமே.. அதாவது கொள்கை மாற்றம்..

I am laughing at ur illogical absurdity why a nation need a country. Will you ask why arabs need a country or why sinhalese need a country..
நீங்கள் மதம் தேவயற்றது என்று வாதிட்டால் அதன் மேல் கட்டப்பட்டுள்ள இனம் கூட தேவயற்றது என்றே நான் சொல்கிறேன்.. அதைத்தான் கேட்கிறேன் . தேவையா இல்லையா என்று வாதிட அல்ல..

//F***. //
அக்காவுக்கு வாய் நிறைய கேட்ட வார்த்தை.. நம்ம இலங்கை பெண்கள் அப்படி பட்டவர்கள் இல்லையே.. கொஞ்சம் கோபத்தை கட்டுப்படுத்தி உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்

benza said...

இர்ஷாத் has left a new comment on the post "மதமும் மண்ணாங்கட்டியும்..
..[[[ அதை தான் நானும் '' உங்களின் பதிவு ஒரு நாத்திக வாதியின் கோணத்தில் இருக்கிறது ''.. என்று கூறினேன் ]]]..

இப்போது நான் ஓரு நாத்திக வாதி என்பதைக் கண்டு கொண்டீர்கள் ! ---
சரி - அதன் பின் என்ன அன்பரே ? -
நீங்கள் மதவாதி -- !

எனது வாதம் மனிதன் தான் தனது வாழ்க்கை சீராக அமைவதற்காக கடவுளைக் கண்டு பிடித்தான் !!! ---
இப்போதென்ன ?

Anonymous said...

there you are.everybody always rember
madha
bidha
guru
god
ok

Think Why Not said...

/*இதே smsஐ ஒரு இந்துவோ, கிறிஸ்துவோ அனுப்பியிருந்தாலும் கூட இதேயளவு எரிச்சல் எனக்கு ஏற்பட்டிருக்கும்.*/

நிச்சயமான உண்மை... முக்கியமாக emails

/*ஒருவரது மனதை மாற்றுவதே கடினமானதே தவிர மதம் மாற்றுவது அல்ல!*/

தற்போதைய தேவை மனமாற்றமே அன்றி மதமாற்றங்கள் அல்ல...

/*யாரோ ஒருவன் என்ன காரணத்துக்காகவோ சமயம் மாறினால் அது அந்த சமயத்தின் வெற்றி என்று வெறியோடு கொண்டாடுவதில் என்ன பயனுள்ளது என்று எனக்கு உண்மையிலேயே புரியவில்லை.. */

இவ்வாறு கொண்டாடுவதன் மூலம் தாங்கள் பெரியவர்கள் என்று காட்ட முயல்கிறார்கள்....இது மனித இனத்துக்கே உரிய superior weakness(தான் பெரியவன் / தான் ஆள வேண்டும்)அன்றி வேறெதுவுமில்லை....

/* உங்க மதம் கூறும் உண்மைகள SMS அனுப்புங்க*/

thats far more better..

ஒரு உண்மையான மதவாதி ஒரு நாளும் இன்னொருவரை தன் மதத்தை பின்பற்றுமாறு வற்புறுத்த மாட்டான்.. ஏனென்றால் கடவுள் ஒருவரே எல்லா மதங்களும் இறைவனை அடையும் வழியே(just like rivers reach oceans at the end) என்ற அடிப்படை உண்மை விளங்கி இருக்கும்...

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...
This comment has been removed by the author.
இர்ஷாத் said...

//Oh man are you guys saying that a man who lived his life without harming anyone was wrong if he says female is equal to man.

யார் சொன்னார் அப்படி.. ஒருவர் முஸ்லிமா என்று கேட்டால் அதற்கு என்று அழவுகோல் உண்டு.. அவர் யாரையும் காயப்படுத்தாவிட்டால் என்று அல்லவே.. ஆணும் பெண்ணும் சமம் இல்லை என்று யார் சொன்னது.. உங்களுக்கு விவாதிக்க ஓன்று இல்லை என்றால் புதிதாக , நான் பேசாத ஒன்றை சேர்த்து விவாதிப்பதா?

I swear as i didnt know that u are so dumb. really dumb..

//No... I am not supporting Hinduism. But, I am telling you the truth that. Hinduism is more like Philosophy. //

ஹிந்துஇசம் பற்றி விளக்கவும்.. எதையும் தெரிந்து கொள்ள விருப்பமுடயவனாகவே இருக்கிறேன்..

இந்திய அரசியல் யாப்பின் படி ஹிந்து என்பதற்கு வரைவிலக்கணம் முஸ்லிம் அல்லாத.. கிறிஸ்தவர் அல்லாத யூதர் அல்லாத இன்னும் பிற அல்லாதவை அற்ற மற்றவர்களே ஹிந்துக்கள்..

//நீங்கள் தானே இனத்தை பாலை உருவத்தை மாற்றமுடியாது என்டு ஒத்துக்கொண்டியள்.. மாற்ற முடியாதவையே தேவையில்லை என்டால், மாற்றக்கூடியது தேவையேயேயேயேயே இல்லை...//

தமிழர் என்பது ஹிந்து என்ற நம்பிஇகையின் மேல் கட்டப்பட்டுள்ளது என்று அறிக

//முதலின் உங்கள் தாய், சகோதரிகளிடம் போய் அவர்களை மனிதராகத் தான் நீங்கள் நடத்தினீயளா என்டு கேளுங்கோ//

இல்லை என்று யார் சொன்னார்? அடக்குமுறை இருக்கும் எதுவும் நிலைக்காது என்று அறிக.. உதாரணம் தான் உங்களுக்கு தெரியுமே

Anonymous said...

few "SCOUNDRELS" who were selling gals for prostitution and didnt stop even when the north grp warned them, the entire community had to be sent away. Cos for those scoundrels the north grp was not their government.

ஆதாரம் காட்டவும்..

//அதுக்கு முதல் காலில ஒன்டு போட்டு இருக்கிறாய் அல்ல.. அதைக் கழட்டி அடி.. பிறகு பாப்பம்...//
உங்களை அடிக்க எங்க தேடி வருவது?

//உன்னை மாதிரி ஆட்களை கழுவில ஏற்ற முடியாத அளவுக்கு இருக்கும் என்னைச் சொல்லோனும்.. கண்டிப்பாக உனக்கு கேடு காலம் தொடங்கிட்டப்பு.. //

வன்முறையின் உச்சம்.. இது எந்த நாட்டு நீதி? உங்கள் அம்மா, அப்பா இப்படிதான் சொல்லி தந்தவயோ?

இர்ஷாத் said...

triumph ,
விவாதிக்க நான் எப்பவும் ரெடி.. ஆனால் தயவு செய்து ஒரு argument க்கு பதில் argument அல்லது அது சம்பந்தப்பட்ட புது argument உடன் மட்டுபடுத்திகொள்ளவும்.. don't beat around the bush. கெட்டவார்த்தை தவிர்ப்பது அதி முக்கியம்

இர்ஷாத் said...

அக்கா ஏன் அடிக்கடி f*** உள்ளிட்ட கெட்ட வார்த்தைகளை கையாளுகிறீர்கள்? அந்த தாத்தா இந்த தாத்தா உங்க தாத்தா யாரும் அது கெட்ட பழக்கம் என்று சொல்லி தரவில்லையா? அல்லது மாதா பிதா குரு சொல்லி தரவில்லையா? இயல்பாகவே நான் அப்பாவைப் பார்த்துத் தான் நிறைய விடயங்கள் படித்தேன்.. என்றும் சொல்கிறீர்கள். இதற்கு விடை கட்டாயம் சொல்லவும்.. அதற்கு பிறகு மற்றவற்றை பார்ப்போம்..

Anonymous said...

பகுத்தறிவாளர்களின் சிந்தனைக்கு! அபூ பாத்திமா

*

இவ்வுலக வாழ்க்கைக்கு பகுத்தறிவு அவசியமா?

தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள் மனிதக் கற்பனையில் குறிப்பாக புரோகிதர்களின் கற்பனையில் படைக்கப்பட்ட எண்ணற்ற கோடிக்கணக்கான பொய்க கடவுள்களை மறுப்பதற்குப் பதிலாக அகில உலகங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனிதளையம் படைத்து ஆட்சி செய்யும் அந்த ஒரேயொரு இறைவனையும் மறுத்து வருகிறார்கள். மனிதனும் மற்ற ஐயறிவு பிராணிகளைப் போன்ற ஒரு பிராணியே! அவற்றைப் போல் பிறந்து வளர்ந்து இணைந்து அனுபவித்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகிறவனே! ஓரிறைவன், மறு உலக வாழ்க்கை என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மதவாதிகளின் கற்பனை என்று கூறி வருகிறார்கள்.

அவர்களின் பிரதான அடிப்படைக் கொள்கை மனிதனும் எண்ணற்ற பிராணிகளைப் போல் ஒரு பிராணி என்பதேயாகும். மனிதப் பிராணி அல்லாத இதர அனைத்துப் பிராணிகளுக்கும் இருப்பது ஐயறிவு மட்டுமே. ஆனால் மனிதனுக்கு மட்டும் விசேஷமாக ஆறாவது அறிவான பகுத்தறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ஓரிறை மறுப்பாளர்களான பகுத்தறிவு நாத்திகர்களும் மறுக்க மாட்டார்கள்.

முதலில் இந்த பகுத்தறிவு என்றால் என்ன? என்பதை ஆய்வு செய்துவிட்டுப் பின்னர் விசயத்திற்கு வருவோம். இதர பிராணிகளுக்க இருப்பது போல் பார்த்து அறிவது, கேட்டு அறிவது, முகர்ந்து அறிவது, ருசித்து அறிவது, தொட்டு அறிவது என இந்த ஐயறிவுகளும் (ஐம்புலன்களும்) மனிதனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஐயறிவு துணையுடன் ஆய்ந்தறியும் திறனான பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இற்த பகுத்தறிவு மேலே குறிப்பிட்டுள்ள ஐயறிவுகளின் உதவி கொண்டு மட்டுமே செயல் படமுடியும். இந்த ஐயறிவுகள் வராத - கட்டுப்படாத பல பேருண்மைகளை மறுக்கும் நிலையில் பகுத்தறிவாளர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர் இருக்கின்றனர். அந்த பேருண்மைகளை பின்னர் ஆய்வுக்கு எடுப்போம்.

இப்போது நாம் எடுத்துக் கொண்ட விஷயம் பகுத்தறிவாளர்கள் சொல்வது போல் மனித வாழ்க்கை அற்பமான இவ்வுலகோடு முற்றுப் பெறுவதாக இருந்தால், அப்படிப்பட்ட மனிதப் பிராணிக்கு பகுத்தறிவு தேவையா? என்பது தான். இன்று உலகில் கோடானுகோடி ஐயறிவு பிராணிகளைப் பார்க்கிறோம். அவை ஆறறிவு மனிதனை விட மிகமிக மகிழ்ச்சியாக, சந்தோசமாக, களிப்புடன் வாழ்ந்து வருகின்றன. விரும்பியதை விரும்பிய அளவு உண்டு மகிழ்கின்றன. குடித்து மகிழ்கின்றன. தங்களின் ஜோடிகளோடு இணைந்து சந்ததிகளை தாராளமாகப் பல்கிப் பெருகச் செய்கின்றன. அவற்றிற்கு ஏதாவது இடையூறுகள் வருவதாக இருந்தால் அவை ஆறறிவு படைத்த மனிதனால் மட்டுமே ஏற்படுவதேயாகும். மற்றபடி அவற்றிற்கு கட்டுப்பாடோ விதிமுறைகளோ எதுவுமே இல்லை.

மானத்தை மறைப்பதற்கென்று அவற்றிற்கு விதவிதமான ஆடைகள் தேவையில்லை. ஒண்ட வீடுகள் தேவையில்லை. இன்ன ஆணுடன் தான் இணைய வேண்டும்; இன்ன பெண்ணுடன் தான் இணைய வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை; அப்படி மாறி மாறி இணைவதால் எய்ட்ஸ் என்ற ஆட்கொல்லி நோயும் அவற்றிற்கு ஏற்படுவதில்லை. இன்னாருடைய மகன் இன்னார் என்ற வாரிசுப் பிரச்சினையும் இல்லை. உண்டு, பழித்து, ஜோடியுடன் கலந்து அனுபவித்து, மாண்டு மண்ணோடு மண்ணாகப் போகும் நிலை. நாளைக்கு நமது நிலை என்ன? சாப்பாட்டு பிரச்சினை என்ன? மனைவிப் பிரச்சினை என்ன? மக்கள் பிரச்சினை என்ன? அந்தப் பிரச்சினை என்ன? இந்தப் பிரச்சினை என்ன? என பல்வேறு பிரச்சினைகளால் அல்லும் பகலும் அவதியுற்று அல்லல்படும் நிலை ஐயறிவு பிராணிகளுக்கு இல்லை. ஆறறிவு மனிதப் பிராணியை விட ஐயறிவு பிராணிகள் மகிழ்ச்சிகரமாக, எவ்வித கெளரவ பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து மடிகின்றன என்பதை பகுத்தறிவாளார்கள் மறுக்க முடியுமா?

சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிராதயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைகள் , குண்டு கலாச்சாரம் இவற்றில் எதனையும் ஐயறிவு பிராணிகளிடையே பார்க்க முடிகிறதா? இல்லையே! நாளை நடப்பதைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து மடிகின்றன. சொத்து, சுகங்களையோ, உணவு வகைகளையோ அவை சேர்த்து வைக்காவிட்டாலும் அதனால் அவை துன்பப்பட்டதுண்டா? உணவில்லாமல் பட்டினியால் மடிந்ததுண்டா?

பகுத்தறிவாளர்களே! சிறிது உங்களின் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்திப் பாருங்கள். இவ்வுலகோடு மனித வாழ்க்கை முற்றுப் பெறுவதாக இருந்தால், மனிதனுக்கும் மற்ற ஐயறிவு பிராணிகள் போல் பகுத்தறிவு கொடுக்கப்படாமல் இருந்தால், மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு சந்தோசமாக, மகிழ்ச்சிகரமாக, கவலையோ, துக்கமோ இல்லாமல், சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைச் செயல்கள், வெடிகுண்டு, அணுகுண்டு கலாச்சாரங்கள், தற்கொலைப்படைத் தாக்குதல்கள் இவை எவையுமே இல்லாமல் மிக, மிக நிம்மதியாக வாழ்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகலாம். அப்படியானால் ஐயறிவு மிருகங்களுக்குக் கொடுக்கப்படாத இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையே இல்லாத பிரத்தியேக பகுத்தறிவு மனிதனுக்கு மட்டும் ஏன் கொடுக்கப்ட்டுள்ளது? முறையாக நடுநிலையோடு உங்களின் பகுத்தறிவை சரியாகப் பயன்படுத்தினால், இவ்வுலக வாழ்க்கை சோதனை வாழ்க்கை - பரீட்சை வாழ்க்கை என்பதை உங்களாலும் புரிந்து கொள்ள முடியும்.

இன்று அனைத்து நாடுகளிலும் நீக்கமறக் காணப்படும் இனவெறி, மதவெறி, மொழி வெறி, ஜாதி வெறி, நிறவெறி என பல்வேறு வெறிகளால் இந்த மனித இனம் கூறு போடப்பட்டு நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வதற்கு இந்த ஆறாவது அறிவான பகுத்தறிவுதான் காரணம் என்பதை பகுத்தறிவாளர்களால் மறுக்க முடியுமா? மதங்களின் பெயரால் கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து மதப்புரோகிதர்கள் செய்து வரும் அட்டூழியங்கள், ஈவிரகமற்ற கொடூர செயல்கள், கொலை பாதகச் செயல்கள், மதப்புரோகிதர்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என மார்தட்டிக் கொண்டு, மதப்புரோகிதர்களின் அனைத்து வகை ஈனச்செயல்கள், அட்டூழியங்கள் , அக்கிரமங்கள், வன்முறைச் செயல்கள் அனைத்தையும் அப்படியே காப்பி அடித்து செய்து வரும் அரசியல்வாதிகள் என்ற அரசியல் புரோகிதர்கள் (தொண்டைத் தொழிலாக்கி தொப்பையை நிரப்புகிறவர்கள் அனைவரும் இடைத்தரகர்களே - புரோகிதர்களே), ஏழைகளின் வயிற்றில் அடித்து, அவர்களின் உரிமைகளைப் பறித்து, மதப்புரோகிதர்களையும், ஆட்சியாளர்களையும், அரசியல் வாதிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு குறுக்கு வழிகளில் பல நூறு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்துக் குவிக்கும் கோடீஸ்வரர்கள், இப்படி அனைவரின் மனச்சாட்சிக்கும் விரோதமான அநியாய, அக்கிரம, அட்டூழிய செயல்களுக்கு இந்தப் பாழும் பகுத்தறிவு தானே காரணம்? இவ்வுலக வாழ்க்கையில் மனிதனுக்கு பகுத்தறிவு மட்டும் இல்லாவிடில், மற்ற பிராணிகளைப் போல், ஐயறிவுடன் மட்டும் வாழ்ந்தால் இந்தப் படுபாதகச் செயல்கள், அட்டூழியங்கள், அநியாயங்கள் இடம் பெறுமா? மனித அமைதி கெடுமா?

கடவுள்களின் பெயரால் மதங்களை கற்பனை செய்து பலவித அநியாயங்கள் நடக்கின்றன என காரணம் கூறி, மனிதப் பகுத்தறிவைக் கொண்டு கற்பனை செய்யப்பட்ட பொய்க் கடவுள்களோடு, அகில உலகையும் மனிதனையும் படைத்து நிர்வகித்து வரும் ஒரே கடவுளை மறுக்கத் துணிந்த பகுத்தறிவாளர்கள், கடவுளின் பெயரால் வெறியூட்டும் மதங்கள், அரசியலின் பெயரால் அட்டூழியங்கள், கோடீஸ்வர குபேரர்களின் தில்லுமுல்லுகள் என அனைத்திற்கும் காரணமான இந்தப் பகுத்தறிவை அழித்தொழிக்க முற்படுவதில்லையே! ஏன்? மனித வாழ்க்கை இவ்வுலகுடன் முடிவுக்கு வருகிறதென்றால் இவ்வுலக வாழ்க்கைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத பகுத்தறிவு ஏன்? ஏன்?? ஏன்??? தாங்களும் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக் கொள்வதாலா? தாங்களும் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருப்பதலா? பகுத்தறிவை நியாயப்படுத்துகிறீர்கள்? விடை தாருங்கள் பகுத்தறிவாளர்களே!

பகுத்தறிவு மனிதனுக்கு இயற்கையிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது; அதனை அழிக்க முடியாது என்பது பகுத்தறிவாளர்களின் பதிலாக இருந்தால், பகுத்தறிவில்லா ஐயறிவு பிராணிகள் போல் மனிதனும் ஒரு பிராணியே! இவ்வுலகில் வாழ்ந்து மடிவதோடு அவனது முடிவு ஏற்பட்டு விடுகிறது என்று எந்தப் பகுத்தறிவின் அடிப்படையில் கூறுகிறீர்கள்? பகுத்தறிவின் மூலம் மனிதப்படைப்பு ஐயறிவு மிருகப் படைப்பிலிருந்து வித்தியாசப்படுகிறது என்பதை உங்களால் பகுத்தறிய முடியவில்லையா?

இவ்வுலக வாழ்ககைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத, அதே சமயம் இவ்வுலக மனித மற்றும் படைப்புகளின் நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கைக்கு பல வகையிலும் இடையூறு விளைவிக்கும் இந்தப் பகுத்தறிவு ஓர் உன்னத நோக்கத்தோடுதான் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உங்களால் உய்த்துணர முடியவில்லையா?

பகுத்தறிவாளர்களே! நீங்கள் பகுத்தறிவு, பகுத்தறிவு என பீற்றிக் கொள்வது உங்களுக்கிருக்கும் ஐயறிவைக் கொண்டு, அவை கொடுக்கும் ஆதாரங்களை மட்டும் வைத்து விளங்கிக் கொள்ளும் அற்ப விஷயங்கள் மட்டுமே. மற்றபடி உங்களது ஐம்புலன்களுக்கு எட்டாத, கட்டுப்படாத நுட்பமான உண்மைகளை கண்டறியும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை; அதாவது மதப்புரோகிதர்கள் கற்பனையில் உருவான கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுக்கும், பகுத்தறிவாளர்களாகிய உங்களையும், என்னையும் அகில உலக மக்களையும், அகிலங்களையும் சோதனைக்காக - பரீட்சைக்காக படைத்து சுதந்திரமாக நம்மை செயல்படவிட்டிருக்கும் ஒரேயொரு உண்மைக் கடவுளுக்குமுள்ள வேறுபாட்டை உங்களால் பகுத்தறிய முடியவில்லை. உண்மைக் கடவுளை உய்த்துணரும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை, சாந்தி மார்க்கத்தின் உறுதி மொழியின் ஆரம்ப பாதியை மட்டும் கூறி, அரைக்கிணறு தாண்டி கிணற்றின் உள்ளே விழும் மிகமிக ஆபத்தான, அபாயகரமான நிலையில் நுண்ணறிவில்லா பகுத்தறிவாளர்களாக நீங்கள் இருக்கிறீர்கள் என குற்றப் படுத்துகிறோம்; முறையாக நுண்ணறிவுடன் பகுத்தறிய வேண்டுகிறோம்.

http://www.readislam.net/atheism7.htm

Anonymous said...

அண்ணலார் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: நீங்கள் தவறான எண்ணங்களை - சந்தேகங்களை விட்டு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் , சந்தேகத்துடன் சொல்லப்படும் விஷயம், அனைத்தையும் விட பொய்யான விஷயமாகும். பிறரைப் பற்றி செய்திகள் சேகரித்துக் கொண்டு திரியாதீர்கள். பிறரைப் பற்றி துருவி துருவி ஆராயாதீர்கள். உங்களுக்குள் தரகு வேலையில் ஈடுபடாதீர்கள். ஒருவர் மீது ஒருவர் வெறுப்புக் கொள்ளாதீர்கள். ஒருவரையொருவர் துண்டிக்க முனையாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களாய் விளங்கி ஒருவருக்கொருவர் சகோதரர்களாக வாழுங்கள்! அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) (புகாரி, முஸ்லிம்)

Anonymous said...

பெற்றோரில் ஒருவர் கோபமடைந்தாலும் அவர்கள் திருப்தி அடையும்வரை அல்லாஹ் திருப்தியடைய மாட்டான் என்று நபி(ஸல்) கூறியதும் அந்தப் பெற்றோர் அநீதம் செய்தாலுமா? என்று கேட்கப்பட்டதற்கு, ஆம்! அவர்கள் அநீதம் செய்தாலும்தான் என்று நபி(ஸல்) பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), முப்ரத் அல் புகாரி

Anonymous said...

எவருக்கு ஒரு மகள் பிறந்து அதை அவமானப்படுத்தாமல் அதைவிட ஆண் மகனுக்கு அதிகச் சலுகை காட்டாமல் வளர்க்கிறாரோ அவரை இறைவன் சுவனத்தில் நுழைவிப்பான். நூல் முஸ்னது அஹமது

Anonymous said...

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ உன் சகோதரனுக்கு உதவிடு, அவன் கொடுமைக்காரனாக இருப்பினும் சரி, கொடுமை இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் சரி! ஒருவர் வினவினார்: அல்லாஹ்வின் தூதரே! கொடுமைக்கு ஆளானவன் என்றால் நான் அவனுக்கு உதவுவேன். ஆனால், கொடுமைக்காரனாக இருக்கும்போது அவனுக்கு எவ்வாறு உதவுவேன்? அண்ணலார் கூறினார்கள்: கொடுமை புரிவதிலிருந்து அவனை நீ தடுத்துவிடு! இதுவே அவனுக்கு உதவுவதாகும். அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) (புகாரி, முஸ்லிம்)

Anonymous said...

உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள். அறிவிப்பாளர்: முஆவியா (ரலி) நூல்: அஹ்மத்

Anonymous said...
This comment has been removed by the author.
சப்ராஸ் அபூ பக்கர் said...

//எனக்குத் தெரிந்த பலரும் வீட்டில் இருக்கும் பெண்களை மனிதனாக மதிப்பதில்லை.. கேட்டால், இஸ்லாத்தில் ஆண்களுக்கு பெண்கள் அடங்கியே இருக்க வேண்டும் என்பது தான் பதில். வாப்பா தாத்தா அப்படு சொல்லவில்லையே என்டு சொன்னால், வாப்பா தாத்தா புனிதமான இஸ்லாம் மதத்தவர் இல்லை.. அவர் அல்லாவுக்கு எதிராகச் செயல்பட்டார் என்டு சொல்லுவினம்.. இவனுகளுக்கு லூசா இல்லை இதுகளை மனிசன் என்டு நினைத்து கேட்ட நான் லூசா என்டு கூட சமயங்களில் இருக்கும்...//

That is true. I think u r........

//நபி சொன்னதைத் தான் 100% கேட்பேன் என்டும் தாத்தா உண்மையான முஸ்லிம் மகன் இல்லை என்டும் சொல்லும் வீணாப்போன பனாதைகளுக்கு கொஞ்சம் அறிவை குடுங்கள் அல்லாஹ்...//

u must visit to here.
www.safrasvfm.blogspot.com
http://safrasvfm.blogspot.com

இர்ஷாத் said...

//Why you are dragging to Indian constitution... //

நான் ஓன்று திசை மாற்றவில்லை. நீங்கள் சொன்னீர்கள்

//But, I am telling you the truth that. Hinduism is more like Philosophy. //

ஹிந்துஇசம் என்று வரைவிலக்கணம் தேடினால் இப்படிதான் வருகிறது.. விளக்குமாறுதான் கேட்டிருந்தேனே?

//Listen, Tamil is a nation Hinduism is a Religion. MIXING BOTH IS ABSURDITY... Moreover, expecting me to understand that is something else.. find a word for urself...//

No
Tamil - language
Hinduism - religion

//Why you have to compare the national issues and f***ing religious issues like this..

Adakkumurai is diff. manitharaga nadathuvathu veera...//

what ever the issue, that is how it will end! மனிதராக நடத்தாமையே அடக்குமறை என்பர்

//எனக்குத் தெரிந்த பலரும் வீட்டில் இருக்கும் பெண்களை மனிதனாக மதிப்பதில்லை.. கேட்டால், இஸ்லாத்தில் ஆண்களுக்கு பெண்கள் அடங்கியே இருக்க வேண்டும் என்பது தான் பதில்//

நபிகள் நாயகம் செய்ததுதான் இஸ்லாம்.. என்று பலமுறை உங்களுக்கு சொல்லவேண்டியிருக்கிறது.. அப்படி செய்யாவிட்டால் அவர் இஸ்லாத்தை விட்டு தூரமாகிவிட்டார்.. அப்படியானவர்களின் செயலுக்கு இஸ்லாம் பொறுப்பில்லை.. அப்படி எத்தனை வீட்டில் நடக்கிறது? நீங்கள் இஸ்லாம் மனைவியுடன் எப்படி நடக்க வேண்டு என்று அறிவுறுத்துகிறது என்று தேடி அறியவும்..

//அது சரி, பெரிய ஆகியூமன்ட்ஸ், Great Debaters என்டு பட்டம் கிடைக்கப் போகுது.... அடச்சீ.....//

beating around bush என்றால் எதுக்கு argument?

//வாப்பாதாத்தா மனிதனாக, ஒரு எடுத்துக்காட்டான நல்ல முஸ்லிம் என்டு விளங்காத //

முஸ்லிம் என்றால் யார் என்ன என்பதற்கு வரைவிலக்கணம் சொன்னபின்னும் விளங்காவிட்டால் விளக்கெண்ணை யாரு எரும மாடு யாரு..

//Who is changing the Topic now? me or you?//

you started it! then you must answer for this..

அக்காவுக்கு கெட்ட வார்த்தையின் இலக்கணம் எல்லாம் தெரியுதே? நீங்க இதுல expert போல?

//Those are normal words. People normally use here but we use when we are irritated or get to talk to retards like few here :D //

இது எல்லாம் உங்களுக்கு நார்மலா? எங்கள் சூழல் அப்படியில்லை..

இர்ஷாத் said...

நான் அடிக்கடி நபிகள் நாயகம் செய்ததுதான் இஸ்லாம் என்று கூறிக்கொண்டிருக்கிறேன்.. ஏன் அப்படி என்று விளக்குவதே இப்போதைய என் நோக்கம்..

உதாரணமாக உங்கள் அயல்வீட்டு பையன் கிரிக்கட் விளையாடுகிறான் என்று வைத்துகொள்வோம்.. அவன் ஒரு BOWLER . ஒரு OVER இல 3 விக்கட் எடுக்கிறான். உங்களுக்கு கிரிக்கட் பற்றி அவ்வளவு தெரியாது என்று வைத்துகொள்வோம்.. நீங்கள் அவன் பந்துவீச்சு பற்றி சிலாகிக்கிறீர்கள்.. அவன் திறமைக்கு உலகில் எந்த அணியிலும் இடம் கிடைக்கும் என்று கூட சொல்கிறீர்கள்..

ஆனால் ஒருவர் அவன் கிரிக்கட் விதிமுறைக்கமைய பந்து வீசவில்லை. BASEBALL மாதிரி வீசுகிறான் என்று சொல்கிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்?

இல்லை நான் AMERICA TV இல எல்லாம் பார்த்திருக்கிறேன்.. அங்கெல்லாம் இப்படிதான் வீசுவார்கள்.. இரண்டும் விளையாட்டு வகையில் தானே சேருகிறது என்று வாதிப்பீர்களா?

இல்லை அவன் விளையாடுவது கிரிக்கட் என்ற படியால் கிரிக்கட் சட்ட நூல் ஒற்றை வாசித்து அவன் அதில் உள்ளவாறு விளையாடுகிறானா என்று பார்ப்பீர்களா?

இல்லை அந்த விதிகளை எழுதியவரை நான் கண்டதில்லை என்று சொல்வீர்களா?

விழக்கம் போதும் என்று நம்புகிறேன்..

Nishan said...

Madham entra solluku innoru artham -

Paithiyam , Veri


Ithu puriyum endru ninaikiran

Anonymous said...

neengal nambuwathuthaan nadakkum.. that is what will be reflected in your life. maarkkam entru nambuworkku athu maarkkam..

வால்பையன் said...

கை தேர்ந்த பேச்சாலனால் ஒருவரை மதம் மாற வைப்பது மிகச்சுலபம்!
ஆனால் துரதரிஷ்டவசமாக நான் நாத்திகன்!
எனக்கு மதமும் கிடையாது, கடவுளும் கிடையாது!

இவர்கள் அடித்து கொள்வதை எட்ட நின்று வேடிக்கைப்பார்ப்பவன்!

benza said...

மதம், சமயம் மாறுவது பொதுவாக தொழில் அல்லது கல்வி சம்பந்தமானது.

இதை தாக்குவது --- இழிவானது.

கீழ்ச் சாதி இழிவானது தான் செய்யும்.

Anonymous said...

சாதியும் மதமும் சமயுமும் காணா
ஆதிய அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.


Utube videos:
(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
www.youtube.com/watch?v=FOF51gv5uCo


Online Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

Anonymous said...

அப்புறம் ஏன் மத்தமொழி படிச்சா மட்டும் புடிங்கி கிட்டு வருது... ஒரு மொழி (hindi) ஒருத்தரு படிச்சா, இன்னொரு மொழியோட (tamil) தோல்வியா?
ஹ்ம்ம் நம்ம பகுத்தறிவு மேதாவிகள் இதை ஏன் எதிர்ப்பது இல்லை?

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner