June 02, 2009

ஒளிமயமான இலங்கை - 2025இல் இலங்கை.. படங்களுடன்


வாசிக்க ஆரம்பிக்கு முன்னே சொல்லுகிறேன்.. இது நகைச்சுவை,நக்கல் பதிவல்ல.

அபிவிருத்தி தகவல் தரும் ஒரு பதிவு மட்டுமே..

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பிறகு இப்போது அரசாங்கத் தகவல்களின்படி, துரித அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன..

யுத்தத்துக்கு செலவிடப்பட்ட பாரியளவு நிதியை அபிவிருத்திப் பக்கம் திருப்புவதால் எதிர்காலத்தில் ஆசியாவில் மிக அபிவிருத்தி அடைந்த நாடக இலங்கை மாறும் என்கின்றனர் அவதானிகள் (இவங்க யாருன்னு கேட்காதீங்க)

ஒரு காலத்தில் சிங்கப்பூர் இலங்கையைப் போல் வரமாட்டோமா என்று ஆதங்கப்பட்டது போல இன்னும் இருபது வருடங்களில் மீண்டும் இலங்கையைப் பார்த்து அதே சிங்கப்பூர் ஆசைப்படும் என்று நம்பியிருக்கலாமாம்...

(இந்தியா,பாகிஸ்தான்,சீனா, ரஷ்யா,அமெரிக்கா என்று எல்லோரும் பகை மறந்து வரிந்து கட்டிக்கொண்டு உதவி செய்யும்போது இதெல்லாம் சாத்தியமாகாதா?)

ராஜா மாதிரி ஒரு ஜனாதிபதி இருக்கும்போது இதெல்லாம் சிம்பிளா முடிக்கலாமே...

மாதிரிக்கு ஒரு சில திட்டங்கள்.. இவை இதோ அடுத்த வாரமே ஆரம்பிக்கப்பட இருக்கின்றன.. (நாளைய தினம் நடைபெறவிருக்கும் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டத்துக்குப் பிறகு)

கொழும்பிலே நிலத்தடி ரயில் போக்குவரத்து

நாடு பூராகவும் 250 மேம்பாலங்கள்

இந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட மிகின் எயார் (Mihin Air) உலக தர விமான சேவையாகத் தரம் உயர்த்தப்படும்.

உலகின் மிக உயரமான நினைவுத் தூபியொன்று நாட்டின் வட பகுதியிலே அமைக்கப்பட உள்ளது. (யாருக்காக?)

வீதிகளை துரிதமாக சுத்தப்படுத்தக் கூடிய துப்புரவு செய்யும் இயந்திரங்கள் (Road cleaning machines by MICRO) இலங்கையிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளன.
தெற்காசியாவின் மிக உயரமான கட்டடம் நிறுவப்படும். (இனித் தான் விமான,குண்டு பயம் இல்லையே)

தடங்கலற்ற மின்சாரம்,நீர்,தொலைபேசி குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். (தமிழ்நாட்டின் ஆற்காட்டார் ஐடியா கொடுத்திருப்பாரோ?)

வெளிநாட்டு பணத்தை உள்வாங்குவதற்காக சர்வதேச பல்கலைக் கழகங்கள் இலங்கையில் உருவாக்கப்படும்.

மிகப்பெரிய 'யுத்த நூதனசாலை' - War museum யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படும்.

எல்லா நதிகளுக்கு குறுக்கேயும் அணைக்கட்டுகள்.

இன்னும் பல பல பல..

பாருங்களேன் இலங்கை எப்படி பள பளக்கப் போகிறது என்று...

மனதுக்குள்ளே கற்பனை செய்யாமல், 2025இல் இலங்கையை உங்கள் கண்முன்னே கொண்டு தருகிறேன்....


கொழும்பு - 2025இல்

2025இல் ஹம்பாந்தோட்டை (ஜனாதிபதியின் சொந்த ஊர்)


கம்பஹா - 2025இல்
கண்டி - 2025இல்


அனுராதபுரம் - 2025இல்


மட்டக்களப்பு (கிழக்கிலங்கை) - 2025இல்


2025இல்
இலங்கையின் உயரமான குளு குளு நுவர எலியவுக்கான வீதி

கட்டுகஸ்தோட்டை - 2025இல்


குருநாகலை - 2025இல்

திருகோணமலை - 2025இல்


அது சரி யாழ்ப்பாணம்,வவுனியா,முல்லைத்தீவு எங்கே?

நானும் தேடுகிறேன்..
அதெல்லாம் முன்பிருந்த நிலைக்கே மீண்டும் திரும்ப இன்னொரு ஐம்பது வருடம் எடுக்குமாம்.. விபரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்...


நலன்புரி நிலையங்களில் அவதியுறும் நம்மவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்பவே இன்னும் எத்தனை ஆண்டுகள் எடுக்குமோ என்ற ஏக்கம் எங்களுக்கு இருக்கையில் வடக்குப் பக்க நகரங்களில் அபிவிருத்தி எப்போது என்ற கேள்விக்கு என்ன பதில் யார் தருவார்?

38 comments:

Media 1st said...

முடியலக
ஐயோ ஐயோ
அஹ அஹ.... வாவ்! wow !

மயாதி said...

வல் வல் வல் ...
வல் வல் வல்...

உங்களுக்கே ரொம்ப ஓவரா இல்லையா அண்ணா?
யுத்தம் நிண்டது சரி அரசியல் வாதிகளிண்ட பச்கட்டுல போடுறதுக்கு யார் கணக்கு காட்டுறது....

Anonymous said...

//யாழ்ப்பாணம்,வவுனியா,முல்லைத்தீவு
முன்பிருந்த நிலைக்கே மீண்டும் திரும்ப இன்னொரு ஐம்பது வருடம் எடுக்குமாம்.. //

புலம் பெயர்ந்து நல்ல நிலையில் உள்ளவர்களால் வழங்கப்பட்ட உபயம் இது. புலம் பெயர்ந்தோர் போன்று இலங்கையரும் முன்னேற வாழ்த்துக்கள்.

Subankan said...

//அது சரி யாழ்ப்பாணம்,வவுனியா,முல்லைத்தீவு எங்கே?

நானும் தேடுகிறேன்..
அதெல்லாம் முன்பிருந்த நிலைக்கே மீண்டும் திரும்ப இன்னொரு ஐம்பது வருடம் எடுக்குமாம்.. விபரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்...
//

:-(

புல்லட் said...

அண்ணே இப்பவே சால்லையளில நிறைய பொக்கட் வைச்சு தைக்கத் தொடங்கி விட்டிருப்பாங்கள்... மாறி மாறி அடிச்சு சிலவேளை 2005 இல உலகின் முதலாவது பணக்காரர்களா வேணுமெண்டா வரலாம்... நானும் இப்ப பொலிடிக்சில இறங்கினால் என்ன எண்டு யோசிக்கிறன்... 12 இளைஞ்ஞர்கள போடோணுமாம் ஒவ்வொரு கட்சியிலயும்... இறங்கினா நிறைய அள்ளலாம்... வாங்களன் ஒரு ட்ரைய போட்டு பாப்பம்? ஆனாலும் இளைஞர் எண்ட கட்கரியில சேருறது கஸ்டம்தான் உங்களுக்கு.. பட் பரவால்ல கொஞ்சம் கதைச்சுப்பாப்பம்... என்ன சொல்றியள்?

Dilshan said...

Hi Loshan, I just got ur blog from one of my frnd, I am a big fan of u dude...tnx for making it and could share our views and thoughts with you...
but I can not simply accept ur political views, for an exmple...I hav few questions regarding this article...
1)Dont you happy if our country develop like Singapore??!
2)I suppose its your own article and carefully avoided the development in Jaffna and Vavuniya, but I hope if the country is free of voilence, then probably Jaffna go beyond the expectation...for sure..
3)Even though if Rajapakshes rule the country for the moment and if we think the that his regime is not good, we have all right (democracy?1) change the regime (I am not supporter for Mahinda either), perhaps he cant go for 2025...

4) you tru that innocent tamil civilians who are in IDP camps must be rehabilitate as quick as possible above all these so called development but we as Sri Lankan must make the path for both the development as well as the rehabilitation..not just be away and critised...

isnt it?

SShathiesh-சதீஷ். said...

எப்பிடி அண்ணா உங்களால இப்பிடி கனவு காண முடியிது.

ILA (a) இளா said...

எப்படிங்க இப்படி எல்லாம்?

benza said...

Dilu Sir, from where did you learn to write like this in English ?

['Dilu said :
June 2, 2009 4:07 PM
Hi Loshan, I just got ur blog from one of my frnd, I am a big fan of u dude...tnx for making it and could share our views and thoughts with you...]

I just have to send my grandson to your night school.

இர்ஷாத் said...

I agree with Dilu..
எப்படியோ நடக்கும் என்று தான் நம்புகிறேன். யார் வந்தாலும்.. ஜனாதிபதிக்கு தெரியும் யுத்த வெற்றிகளை மட்டும் நம்பி நெடு நாள் அரசியல் பண்ண முடியாதென்று.. ஏன் என்றால் அவர் யதார்த்தவாதி (அப்படி ஒருவர் சொன்னவர்தானே?)

என்ன கொடும சார் said...

//நாடு பூராகவும் 250 மேம்பாலங்கள்//
திட்டம் ஏற்கெனவே நடைமுறையில். இத்திட்டத்தின் கீழே தான் உலகில் விரைவாக கட்டப்பட்ட களனி பாலம் கூட வந்தது


// நாட்டின் வட பகுதியிலே அமைக்கப்பட உள்ளது. (யாருக்காக?)//
வாஸ்த்துப்படி இலங்கையை நாசம் செய்ய காரணமான எம் ஜி ஆர் இன் ராஜ கோபுரத்தின் கெட்ட பலனை இல்லாதொழிக்க

//தெற்காசியாவின் மிக உயரமான கட்டடம் நிறுவப்படும்.//
அத்திவாரம் நாட்டபட்டுவிட்டது

//தொலைபேசி குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்.//
இலங்கையில் விலை குறையும் ஒரே பொருள்.

//வெளிநாட்டு பணத்தை உள்வாங்குவதற்காக சர்வதேச பல்கலைக் கழகங்கள் இலங்கையில் உருவாக்கப்படும்.//
மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு விட்டது.

Unknown said...

Mudiyilayada saami...

Unknown said...

i have seen these 4to b4 1 year dude....
nw only u hv got.. too latema....
o.k...
there were some 4to subsequently . i knw...
good, u didnt those

Unknown said...

(இந்தியா,பாகிஸ்தான்,சீனா, ரஷ்யா,அமெரிக்கா என்று எல்லோரும் பகை மறந்து வரிந்து கட்டிக்கொண்டு உதவி செய்யும்போது இதெல்லாம் சாத்தியமாகாதா?)வரிஞ்சு கட்டிகொண்டு உதவி ........... (என்னத்துக்கு????????? செய்தவை.. எனியும் செய்வினமாமோ?
அது தான் அவேண்ட விசயம் எல்லாம் முடிஞ்சுது தானே...
எனியும் என்ன?
சில நேரம் திருகோணமலையில அமெரிக்காவின் துறைமுகம்.. கருனையில்லா நிதியின் சேது சமுத்திரத்திட்டம் எல்லாம் நடக்காமல் விட்டாலே சரி...

அதெல்லாம் சரி அண்ணை நம்ம வெள்ளவத்தையை பற்றி குறிப்பாக கதைஸ்சு இருக்கனும் நீங்க....

உங்கள் தோழி said...

நானும் தேடுகிறேன்..
அதெல்லாம் முன்பிருந்த நிலைக்கே மீண்டும் திரும்ப இன்னொரு ஐம்பது வருடம் எடுக்குமாம்.. விபரமறிந்தவர்கள்


அது வரை தமிழ் இனம் இருக்குமா?நாங்கள் என்ன கேட்டோம்?அடுக்கு மாடி கட்டிடத்தில் சொகுசு வாழ்க்கைய?இல்லையே குடிசை வீடா இருந்தாலும் நிம்மதியா ஒரு வேளை உண்டு உறங்கும் சாதரண வாழ்க்கை தானே கேட்டோம்...அதையே தர முடில இதில கட்டிடம் கட்டினமாம் கட்டிடம்.எவ்ளோ பெரிய கட்டிடம் கட்டினாலும் அது நம் தமிழ் உறவுகளின் கல்லறை தானே??!!..

Hamshi said...

மிகப்பெரிய 'யுத்த நூதனசாலை' - War museum யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படும்.anna great idea.why?ethai Ampanthoddai gila kaddina robma perumajai erukkum."One nation One country"roma sute agum.Anna great idea.Ethai SLpresident ekku anuppiduga.Sometime he'll give some award.

இரா.வி.விஷ்ணு (ராஜ் ) said...

என்னவோ சொல்லுறிங்கள். புரியுது ஆனா புரியல்ல! எங்கண்ணா இந்தப்படங்களை தேடி எடுத்திங்கள்? பாடல் தெரிவு நிகழ்ச்சித்தொரிவில் நீங்கள் கிங் என்னு தொரியும் புகைப்பட தெரிவிலும் நீங்கள் பலே....!

ஆதிரை said...

//அது சரி யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு எங்கே?

ஐ.நா. விடம் கேளுங்கள். செய்மதிப்படமெடுத்து காட்டுவார்கள்

Tech Shankar said...

Oh. God.

Anonymous said...

enakku oru santhekam anna, neenka saalvai kaararin minister aakura idea irukku pola. unmaiya?

Feros said...

எப்படி எல்லாம் யோசிக்ரங்க!!

உங்கள் கனவு நினைவாகினால் யாவரும் நலன்தான்...

Joyce Nirajasekaran said...

loosan anna sorry loshan anna ithi ellam pakka mahintha irukka mattar la ha ha ha lol

Dilshan said...

Bena (Sir/Madam!??), Thanx for concerning on my language improvement(?) and dare to send your grandson to Night school...I still very confident on my writing and dont see any thing wrong, in the mean time my intension is just to make a comment for an article posted here but not to prove either my talent or giving english lecture to some body(like you)..

M. Senthil Kumar said...

எல்லாம் சரிங்கோ ....2025 ல இலங்கைல தமிழன் இருப்பனா. அப்படி இருப்பின் எத்தனை பேர் னு சொல்ல முடியுமா உங்களால 100, 200, 300... அதுவும் முகாமில் புலி என்ற பெயரில் கைதியாகா ...

வழிப்போக்கன் said...

இப்பிடி இருந்தால் சந்தோஷம் தான்....
படங்கள் அருமை....

Unknown said...

ஆசியாவிலேயே பெரிய நூலகமான எங்கள் யாழ் பொது நூலகத்தை சிதைத்து கொண்டாடியவர்கள் எப்படி இந்த பெரிய அடுக்குமாடி கட்டடங்களை கட்டுவார்கள்...ஆ? அந்த மகாபாரதம் வேணுமெண்டால் அதை மட்டும் கொழுத்துறது தானே...
அப்பிடி அந்த மகாபாரதம் என்னத்தை சொல்லிவிட்டது? உண்மையை சொல்லீருக்கும் போல...

Sinthu said...

Jaffna, Mullaithevu and Vavuniya are cities of another country anna, so it cannot be there..........

Anonymous said...

நல்ல திட்டங்கள் வரவேற்கபடவேண்டியவை....
ஆனால் இது என்னவோ தற்காலிக அரசியல் இலாபத்திற்கான ஒருவகை மூளைசலவை போல தெரிகிறது....
இவற்றில் ஒன்றாவது காலத்திற்க்கு நிறைவேறுமா?

Anonymous said...

ஆசியாவிலேயே பெரிய நூலகமான யாழ் பொது நூலகத்தை கொடியவர் எரித்தனர் என்று எங்களுக்கு கதை சொல்லப்பட்டது. ஆனால் அவர்களைவிட கொடியவர்கள் அவர்களை சொல்லியே லாபம் அடைந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதை இப்போ அறிந்து கொண்டோம்.

benza said...

[[[ Bena (Sir/Madam!??), Thanx for concerning on my language improvement(?) and dare to send your grandson to Night school...I still very confident on my writing and dont see any thing wrong, in the mean time my intension is just to make a comment for an article posted here but not to prove either my talent or giving english lecture to some body(like you).]]]
Thank you Dillu Sir, please do not be offended. I am sorry and I do apologise for my thoughless and hasty comment.
It is my fault.
ben aloysius

benza said...

[[[ தமிழினி said...எனவே தமிழ்10 தளம் தன் வெற்றியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விதமாக எடுத்து வைத்திருக்கும் முதல் முயற்சியே இது .மேலும் படிக்க ]]]

தங்களது ''manachaadchi'' படித்தேன் --- நன்றாக உள்ளது.
தமிழ் 10 சென்று பார்ப்பேன் --- நன்றி

benza said...

[[[ Anonymous Anonymous said...
ஆசியாவிலேயே பெரிய நூலகமான யாழ் பொது நூலகத்தை கொடியவர் எரித்தனர் என்று எங்களுக்கு கதை சொல்லப்பட்டது. ஆனால் அவர்களைவிட கொடியவர்கள் அவர்களை சொல்லியே லாபம் அடைந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதை இப்போ அறிந்து கொண்டோம். ]]]

Anon அண்ணா லோஷன் அவர்களின் மூல பதிவில் இருந்து தங்களது கடைசியான பதிவு வரை படித்தேன்.
எதிலுமே தன் நம்பிக்கையை காணவில்லை ---
பழம் பெருமை நிறையவே இருக்கு - ஆசியாவின் மிக பெரிய நூலகமாம் - யார் ஒப்பிட்டார் ?
உலகின் மிக திறமான (கப்பல்) துறைமுகமாம்
திருகோணாமலை - அப்போ Vladivostok இரெண்டாவது போலும் !
ஏன் எமது தமிழ் சமுதாயம் இப்படி வக்கிர புத்தியில் ஊசாடுகின்றது
சற்று வெளியில் பார்த்தால் கொசோவோ அங்கோலா என அழிவின் அடியில் இருந்து எழும்பிய நாடுகள் தென்படும் உதாரணத்துக்கு !
எதிர்மறை சிந்தனை அழிவையே தரும் - தெரிந்ததே !
எமது பேரபிள்ளைகளுக்கு நல்லதையே விரும்புகின்றோம் !!
துவேஷம் வேண்டாம் - பிரிவினை வேண்டாம் !!!
சொந்த சமுதாய அம்மைப்பு என்னை அடிமையாகுமானால் நூலகம் என்ன துறைமுகம் என்ன வாழ்கையே வேண்டாம்
அய்யா !

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

லோஷன் அண்ணா,
எங்கட நாட்டை இப்படிப் பாக்க இன்னும் பதினாறு வருசம் காத்திருக்கோணும் எண்டு நினைக்க கவலையா இருக்கு. அஞ்சாறு வருசத்தில இப்பிடி வாறேக்கு ஏதாவது ஆவன செய்யமாட்டீங்களா..

benza said...

லோஷன் கட்டுரையை இவ்வாறு தொடங்கியதால் -

[[[ வாசிக்க ஆரம்பிக்கு முன்னே சொல்லுகிறேன்.. இது நகைச்சுவை,நக்கல் பதிவல்ல.
அபிவிருத்தி தகவல் தரும் ஒரு பதிவு மட்டுமே ]]]

அவரது படங்களையும் நாம் நம்பத்தானே வேண்டும் -
அவர் உயர் பதவி வகிப்பதால் நான் இந்த முடிவுக்கு வரவில்லை -
எமக்கு தெரியாத பிரயோசனமான விஷயத்தை வாழ்கையின் முன்னேற்றத்துக்கு முக்கியமான செய்தியை இன்னொருவர் கூறினால் அதனை நாம் நம்பாது போனால் எமது பிறப்பையும் நாம் நம்ப முடியாதல்லவா ?
சமயம் கடவுள் எல்லாமே சூனியம் ஆகிவிடுமே ?

லோஷன் அண்ணா பொறுப்பானவர் என்ற படியால் அவர் இங்கு பொய் அல்லது புளுகு அல்லது வெடி செயமாட்டார் -

அவருக்கு கிடைத்த பிரத்தியேக விஷயத்தை எம்முடன் பகிர்ந்த குற்றத்திற்காக அவரை நக்கல் அடிகாதீங்கப்பா !

Unknown said...

ok ok anna thanks unkada katpanaikku but neenka kadasijil question onru keddinka jaffna , mullaithivu ,vavuniya enka enru.. enna loshan anna unkalukkume theriyala intha countriesa not srilanka countries ithu ........... tami........lam countries but enna kavalai neenka trincovaium srilankavoda inaiththiddinka

unka theevira rasikanil oruvan (t.v.s) said...

ok ok anna thanks unkada katpanaikku but neenka kadasijil question onru keddinka jaffna , mullaithivu ,vavuniya enka enru.. enna loshan anna unkalukkume theriyala intha countriesa not srilanka countries ithu ........... tami........lam countries but enna kavalai neenka trincovaium srilankavoda inaiththiddinka

Anonymous said...

ok ok anna thanks unkada katpanaikku but neenka kadasijil question onru keddinka jaffna , mullaithivu ,vavuniya enka enru.. enna loshan anna unkalukkume theriyala intha countriesa not srilanka countries ithu ........... tami........lam countries but enna kavalai neenka trincovaium srilankavoda inaiththiddinka

Anonymous said...

wht made u to think abt batti and trinco will be lik this in 2025, u knw there also we are tamils so i dnt think so tht ur dream will be applicable there... if so we are really happy abt it.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner