June 03, 2009

இலங்கை..ஈழம்..தமிழர்..எதிர்காலம்.. அடுத்தது என்ன?



ஈழத்துக்கான ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்துள்ள (யுத்தம் முடிந்தால் அதுதானே அர்த்தம்) இந்நிலையில் இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் தமிழ் சமூக மத்தியிலும் பிறர் மத்தியிலும் முளைவிட்டுள்ள, சில சந்தேகங்கள் கேள்விகளையும் அரசியல் நோக்கர்கள் சிலரின் அல்லது பலரின் எதிர்வு கூறல்கள், எண்ணப்பாங்குகளையும் பகிர்ந்துகொள்வதற்கே இந்தப்பதிவு.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பே கடந்த இருதசாப்தங்களுக்கு மேலாக இலங்கையிலுள்ள தமிழரின் ஏகப்பிரதிநிதிகளாக இருந்து வந்துள்ள நிலையில் (விமர்சித்தவர்கள், அதிருப்தியாளர்கள், எதிரான கட்சிகள் ஏன் அப்போதைய இலங்கை அரசு உள்ளிட்ட பல நாடுகளே இதை ஏற்றிருந்தன) இன்று விடுதலைப்புலிகளோ, தலைவரோ இல்லாமல் போயுள்ள நிலையில் (கேள்விக்குறிகள், சந்தேகங்கள் ஒரு புறம் இருக்கட்டும்) அடுத்த கட்டத் தமிழர் தரப்புத் தலைமை யாரிடம் சொல்லும்?

புற தேசத்திலிருந்து வரும் தலைமைக் கட்டளையையோ. கருத்துக்களையோ கூட ஏற்கும் பக்குவத்தில் இங்கே யாருமில்லை என்பது தெளிவு!

அது பத்மநாதனாகவும் இருக்கலாம் இல்லை தமிழக முதல்வராகவும் இருக்கலாம்!

இதற்குள்ளே இலங்கையின் டெய்லி மிரர் (Daily Mirror) நாளேட்டில் 27ம் திகதி உபுல் ஜோசப் பெர்னான்டோ என்ற பத்திரிகை எழுத்தாளர் பிரபாகரனின் இறப்பினால் ஏற்பட்ட வெற்றிடத்தைக் கருணாநிதி நிரப்புவாரா என்று கேள்வியெழுப்பியுள்ளார். ( Prabhakaran’s death; Will Karunanidhi fill the void)


சிங்கள மக்கள் மத்தியில் எழுத்துக்களால் பெரிதும் மதிக்கப்படும் உபுலின் இந்தக் கேள்வியினதும், அந்தக் கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருக்கும் பல கருத்துக்களினதும் அடிப்படையில் பெரும்பான்மை சிங்களவரின் எண்ணவோட்டங்களை விளங்கக் கூடியதாக உள்ளது.

தமிழகத்திடமும், இந்தியாவிடமும் இயற்கையிலேயே சிங்களவர் கொண்டுள்ள அச்சமும்,சந்தேகமும், கலைஞர் வடிவில் (இன்று ஐயாவுக்கு பிறந்தநாள் என்பதால் வாழ்த்துக்களையும் இதனூடு சொல்லும்போது கலைஞரும்,அவரது ஆதரவாளரும் மனம் குளிரக் கூடும்) தமக்கு எதிரான தலைமையாக மாறிவிடும் என்று நினைக்கிறார்கள் போலும்.

அதிலும் அண்மையில் அமைச்சர் முரளீதரன் (கருணா அம்மான்) அண்மையில் கலைஞரின் ஆலோசனைகளை கேட்பேன் என்று கூறியதும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலைஞர்களுக்கு வாழ்த்து சொல்லி உதவி கேட்டதும் அதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமிழக முதல்வரை சந்தித்ததும் கலைஞரின் எதிர்கால வகிபாகம் பற்றிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது உண்மை தான்.

யுத்தம் நடை பெற்ற கடந்தகாலங்களில் குரல் (மட்டும்) எழுப்பி வந்த கலைஞர் இனி நடவடிக்கைகள் மூலமாக செய்யப் போவதென்ன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
(இல்லாவிட்டால் துணை முதல்வரைத் தான் இனி நம்ப வேண்டுமோ?)

இலங்கையைப் பொறுத்தவரை அடுத்து யார் அதிக தமிழர்களின் ஆதரவைப் பெறப் போகும் தமிழ் தலைவர் என்ற கேள்விக்கு, எதிர்வரும் யாழ்ப்பாண மாநகரசபை,வவுனியா நகரசபை தேர்தல்கள் சிலவேளை விடை தரலாம். பெரும்பான்மைத் தமிழர்கள் வாக்களித்தால்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சம்பந்தன், டக்லஸ் தேவானந்தா, விநாயகமூர்த்தி முரளீதரன் ... இம்மூவரில் யார் என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.. (இதிலெல்லாம் அக்கறையில்லாதோரும் உண்டு)

ஜனநாயக நீரோட்டம் இனி எந்தத் திசையில் எம்மக்களை இழுக்கும் என்று இருந்து பார்க்கலாம்..

இன்னொரு பக்கம் பல கட்சிகளின் பெயர்கள் மாற்றப்பட வேண்டிய நிர்பந்தத்தை அரசு ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுவதை இங்கே நான் சொல்லியே ஆகவேண்டும்.

காரணம்..

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேகர அண்மையில் நாடாளுமன்றத்தில் ஒரு பரபரப்புக் கருத்தை முன்வைத்திருக்கிறார்.

"யுத்தத்தில் ஈழம் என்ற கொள்கையை நாம் (இவ்வளவு காலமும் அரசாங்கம் என்ன செய்தாலும் எதிர்த்தவர்கள் இவர்கள்) தொர்கடித்திருக்கிறோம்.. இப்போது அரசியல் ரீதியிலும் தோற்கடிக்கவேண்டும்.

கட்சிப் பெயர்களில் ஈழம் என்பதைக் கொண்டுள்ள கட்சிகள் அனைத்தும் தடை செய்யப் படவேண்டும். இல்லாவிட்டால் என்றோ ஒருநாள் மீண்டும் தனிநாடு என்ற பிரிவினை எண்ணம் தோற்றுவிக்கப்படக் கூடும்"

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - EPDP
ஈழமக்கள் புரட்சிகர அமைப்பு - EROS
தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் - PLOTE
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் - TELO
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி - EPRLF

ஆகியனவே அவர் குறிப்பிட்டுள்ள "ஈழ" கட்சிகள்.

ஜனநாயக நீரோட்டத்தில் நீண்டகாலமாக கலந்திருந்தும் இலங்கை இல்லாமல்,ஈழமாகவே அவர்கள் கட்சிப் பெயர்கள் இருப்பது முர்ணபாடா அல்லது முடிந்த முடிபா?

ஈழம் பற்றிய அச்சமும், கரவும் இன்னமும் இருப்பதையும் அவை முற்றாகக் களையப்படவேண்டும் என்பதில் கட்சி வேறுபாடு கடந்து காட்டப்படும் அக்கறையும் தெரிவது உறுதி.

இன்னொரு பக்கம் ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்ற மனித உரிமைகள் சம்பந்தமான பிறேஅரனை மீதான வாக்கெடுப்பில் இலங்கை வென்றது அரசுக்குக் கிடைத்த மற்றொரு வெற்றி.

அத்தனை ஆதரவு குறிப்பாக ஆசிய நாடுகளை ஒன்றாக சேர்த்தமை இலங்கையின் ராஜதந்திர வெற்றியாகக் கருதினாலும், சீனா, இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகள் தமது பிராந்தியங்கள் மீது ஐரோப்பிய நாடுகள் செலுத்தும் ஆதிக்கத்தை எதிர்ப்பதாகவே அந்த வாக்கெடுப்பை பயன்படுத்தின என்ற கருத்தும் நிலவுகிறது.

எனினும் பரம வைரிகளை இணைத்து தன் பக்கம் சேர்த்து மேலைத்தேயம் முழுவதையும் வெற்றிகொண்டதன் மூலம் ஆசிய பிராந்தியத்தில் இலங்கை, பரப்பிலே தான் சிறிய நாடாக இருந்தாலும் ராஜதந்திர ரீதியாக தன் பலத்தைக் காட்டியுள்ளது.

இதன் விளைவுகள் உலகம் முழுவதிலும் இன்னும் சிறிது காலத்தில் அலைகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

ஐ.நா சபையை பல்லுக் கழட்டிய பாம்பாக மாற்றி, தன் பக்கம் கொண்டு வரப்பட்ட குற்றச் சாட்டுக்களை அப்படியே மேலைத்தேய ஏகாதிபத்திய எதிர்ப்பாக மாற்றி, பின்னர் ஐ.நா செயலாரையும் இலங்கைக்கே அழைத்து 'பெப்பே' காட்டிய திறமை வேறு யாருக்கு தான் வரும்.

புலிகளுக்கு மட்டுமல்லாமல் இதன் மூலம் எதிர்க்கட்சிக்கும்,அதன் தலைவர் ரணிலின் ஜனாதிபதியாகும் கனவுக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த தன் மீதான விமர்சனங்களுக்கும் ஜாதிபதி ஆப்படித்த பெருமை சிங்கள நாளேடுகளில் மட்டுமன்றி, ஆங்கில நாளேடுகளிலும், ஊடகங்களிலும் தெரிகிறது.

இன்று மிகப்பெரிய உச்சக் கட்ட யுத்த வெற்றிக் கொண்டாட்டம் கொழும்பில் கலை கட்ட நடைபெற்று, யுத்தத்தின் முடிவு இராணுவப் பாரம்பரியப் படி ஜனாதிபதிக்கு இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டது. (இன்றைய நாள் கொண்டாட்டத்தினால் கொழும்பு நகர போக்குவரத்து மட்டுமன்றி, முழு நகருமே ஸ்தம்பித்தது வேறு கதை)

அடுத்தது என்ன?

ஜனாதிபதி அண்மைக்காலமாக எல்லா இடங்களிலும் தமிழில் தன்னால் முடியுமானளவு உரையாற்றி வருகிறார்.நம்பிக்கை தொனிக்க பேசுகிறார்.

அபிவிருத்தி, மக்களுக்கு நன்மை,மீளக் குடியமர்த்தல் பற்றியெல்லாம் உறுதி தருகிறார். வடக்கு,வன்னிக்கான நாள் திட்டம் வேறு முன்னேடுக்கப்படவுள்ளதாம்.

சொன்னபடி செய்வதும், சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து முகாம்களில் அவதியுறும் அப்பாவி மக்களுக்கு நிரந்தரத் தீர்வு (அவர்களுக்காவது) ஒன்று கூடுமானவரை விரைவாகப் பெற்றுத் தரப்படுவதே முன்னுரிமை வழங்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

அந்த மக்கள் எங்களை விட செல்வச் செழிப்போடும்,மகிழ்ச்சியோடும் வாழ்ந்தவர்கள்.. இப்போது அவர்களின் நிலை பற்றி வெளியாகும் படங்கள்,காணொளிகள்,கட்டுரைகள்,செய்திகள் பற்றி அறியும் பொது மனதில் தாங்கமுடியா சோக அலைகள். என்ன பாவம் செய்தார்கள் அவர்கள்? நம்பிக்கை எல்லாம் தளர்ந்து போய், நம்பியிருந்த எல்லாம் இழந்து போய் இன்னமும் விடிவு என்பதே இல்லாமல்..

ஒரு சில இடங்களில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களின் போது இடம் பெற்ற அசம்பாவிதங்கள் தவிர பெரிதாக துவேஷ விதைகளோ, துன்ப நிகழ்வுகளோ இடம்பெறவில்லை என்பது ஆறுதலான விஷயம்.


இந்த தெளிவும், துன்பப்பட்ட மக்கள் மீதான பரிதாபமும் 90 சதவீதமான சிங்கள மக்களிடம் இருப்பதை உணர முடிகிறது. யுத்த வெற்றிகளின் மகிழ்ச்சி இன்னும் ஓரிரு தினங்களில் அடங்க,தம் பக்க இழப்புக்களும் உண்மையாக வெளிவர ஆரம்பிக்க - யுத்தத்தால் இடம்பெயர்ந்து முகாம்களில் குற்றுயிரும்,குலையுயிருமாக வதை பட்டுக் கொண்டு எதிர்காலம் புரியாமல் உள்ள மக்களுக்கு விரைவுத் தீர்வொன்றுக்கு வழிவகுக்கும் எண்ணப் பாங்கை அவர்களுக்கு மனதில் மேலும் அகலாமல் இருக்கச் செய்யவேண்டும்.

ஊடகங்கள்,அரசியல்வாதிகள் ஆகியோருக்கும் இதில் பெரும் பங்கு உள்ளது.

வழமை போல கேள்விக்குறியாகவே (தமிழ் மக்களைப் பற்றிய பதிவு அதுவும் எதிர்காலம் பற்றி என்றாலே இது தானோ?) இந்தப் பதிவின் முடிவையும் விட்டு செல்லவேண்டி உள்ளது..


32 comments:

நிரூஜா said...

mh...

Dilshan said...

A superb analysis..but there wont be another "sole representation" theory again, which made vacuum in the leadership...collaborative leadership(committee) would be a possible option which should be included all political representation and intelligentsia in the country and abroad..this(committee)should initiate "actions", beyond the political expediency, have to be paid adequate local & international attention

Anonymous said...

லோஷன் அண்ணை தயாசிறி மட்டுமல்ல ரணிலும் ஈழம் என்ற பெயரில் எந்தக் கட்சிகளும் இருக்ககூடாது என அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசியதாக பத்திரிகைகளில் செய்திவந்தது.

தற்போது மக்களுக்குத் தேவை நிம்மதியான வாழ்க்கையே அதனை நாம் தான் தேடிக்கொள்ளவேண்டும் மீண்டும் மீண்டும் கருணாநிதியை கேட்பது ஏதோ நாம் வலுவில்லாதவர்கள் போல் தெரியும். டக்ளஸ் தேவனாந்தாவோ, விநாயகமூர்த்தி முரளிதரனோ சித்தார்த்தனோ யாரென்றாலும் மக்களுக்கு நல்லது செய்தால் சரி ஆனால் ஆனந்தசங்கரி என்ற கிழம் வேண்டாம் காரணம் சங்கரி சொந்தமக்கள் பற்றி என்றைக்குமே சிந்தித்தவரில்லை.

கருணாநிதியை ரொம்பத்தூக்கவேண்டாம் ஈழத்தமிழர்கள் மனங்களிலிருந்து அவன் செத்துப்பலகாலமாகிவிட்டது.

Anonymous said...

//வழமை போல கேள்விக்குறியாகவே (தமிழ் மக்களைப் பற்றிய பதிவு அதுவும் எதிர்காலம் பற்றி என்றாலே இது தானோ?) இந்தப் பதிவின் முடிவையும் விட்டு செல்லவேண்டி உள்ளது...//

எங்களை ஏமாற்றிவிடுவீர்களோ எண்ணி, பதிவைப் படிக்கத் தொடங்கினேன். நல்ல வேளை ஏமாற்றவில்லை!

தர்ஷன் said...

யதார்த்தப்பூர்வமான பதிவு லோஷன் அண்ணா
கசப்பாக இருப்பினும் சில உண்மைகளை நாம் ஜீரணித்து கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இலங்கையில் பெரும்பான்மை சிங்களவர் மத்தியில் வாழ்பவர்களிடையே ஆரம்ப கால அச்சங்கள் நீங்கியுள்ளமையும் அவதானிக்கத்தக்க ஒன்று. படித்த சிங்களவர் மத்தியில் ஒரு புரிந்துணர்வும் காணப்படுகின்றது.
ஆன்னாலும் அப்பட்டமான இனவாதத்தைக் கக்கும் வீராவேச பதிவுகளும் குரலும் காங்கிரசை வெல்ல வைத்த தமிழகத்திலுருந்து காலங்கடந்து வருவதைப் பார்க்கும் போதுதான் விரக்தி கலந்த சிரிப்பு வருகிறது.

புதுமைகள் said...

உங்கள் கவலையே எனது {எமது } கவலையும்.உங்கள் காலத்துக்கு ஏற்ற கட்டுரைக்கும் , தகவல்களுக்கும் நன்றிகள். அனைத்து இலங்கை மக்களும் உண்மையில் எதிர்காலம் குறித்து ஒரு பெரிய கனவை அல்லது கற்பனையை தங்களுக்குள் வளர்த்துக்கொண்டிருப்பதாகவே தொரிகிறது. நானும் இப்படித்தான் இலங்கை பிரச்சனையை தீக்க வருவாரா ஒரு குட்டி ஒபாமா? :இறுதி பாகம் (02) என எதிர்பார்ப்பை எனது தளத்தில் கட்டுரையாக்கி ஒபாமாக்களை தேடுகிறேன். பார்க்கலாம் வரும்காலந்தான் பதில் சொல்ல வேண்டும்.முதலில் பாதிக்கப்பட்டுள்ள வன்னி மக்களை எப்போது இயல்பு நிலைக்கு மீட்கப்போகிறார்கள்?.உத்தேச தீர்வுத் திட்டம் 13 ஆவது திருத்தத்திலும் பார்க்க கூடுதலானதாக அமையும் - ஜனாதிபதி ராஜபக்ஷ என தலைப்பு போட்டும் சில கட்டுரைகள் வந்திருக்கின்றன. எப்படியோ வாக்குறுதிகள் { கருத்துக்கள்} மட்டும் இடைவிடாமல் வந்துகொண்டுதான் இருக்கின்றன எப்பவாம் நடைமுறைப்படுத்தப் போறாங்கள்???

ILA (a) இளா said...

நல்லதொரு கருத்து லோஷன். ஆறுதல் அளிக்கிறது.

Unknown said...

ஈழத்தை பற்றிக்கதைதுள்ளீரப்பா....
இடங்கள் நிரப்புறதை பற்றி கதைத்தீர்... உளவியல் ரீதியில் என்னை பொறுத்தவர அது இரண்டு தசாப்த்தங்களிற்க்கு சாத்தியம் இல்லை.. அப்பிடி எண்டால் இல்லை தானே..
சிங்கள மக்கள் வெற்றியை கொண்டாடியது சற்றே பொறாமையாக இருந்தாலும் அவர்கள் நாகரீகமாக நடந்து கொண்ட விதம் மகிழ்ச்சி அழிக்கிறது தான்..
எப்பிடியோ... வடக்கு மாணவர்களின் கல்வி இனியும் தொடந்து பாதிக்கப்படுவதை யாரவது தடுத்தல் விரும்பத்தக்கது..
ஊரடங்குச்சட்டம் காரணமாக மாணவர்களின் கல்வியின் சுதந்திரத்தன்மை இழக்கப்பட்டது வெளிப்படை..;; science Hall ஐ மட்டும் நம்பி படித்த யாழ் மாணவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்ப்டு உள்ளனர்.. இப்படி பலவிதமாக கல்வித்தரதில் 3வதாக இருந்த யாழ்ப்பாணம் 21 வது இடத்துக்கு வந்தமை கசப்பாண ஒரு விடயம்...
யாழ் மாணவர்களின் கல்வி தான் எத்தனை வழிகளால் சிதைக்கப்பட்டுள்ளது...

கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும்... முகாம்களில் உள்ள மக்கள் இருப்பதை விட இறப்பதே மேல்..
இறந்தால் 10 நாள் கவலை... இருந்தால் வாழ்க்கை முழுக்க கவலை..

நாட்டுப்பிரச்சனையை தீர்க்க என்னிடம் மட்டுமே தீர்வு உண்டு.. ஒரு இரசாயன குண்டு கொண்டு வந்து இலங்கையை முழுக்க அழிச்சு திருப்பி செய்தால் தான் உண்டு.. இல்லை.. பதிவர்கள் பதிவிட்டுகொண்டு இருப்பார்கள்.. அரசியல் விசமிகள் இலாபம் ஈட்டிக்கொண்டிருப்பார்கள்.. நாடு எதியோப்பியாவுடன் கைகோர்க்கும்

paris said...

வணக்கம் லோஷன் அண்ணா!!

உங்கள் அலசல் நன்றாக உள்ளது. உண்மையாகவும் உள்ளது.

இவ் பதிவினை எமது தளத்திலும் பிரசுரித்துள்ளேன்.

நன்றி

Anonymous said...

மிக அருமையான பதிவு. புலம்பெயர்ந்த தமிழர்கள் பெரும் பாலோரின் நிலையோ வேறு. இன்னும் கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்றும் தமிழ்நாட்டில் சீமான் 5ஆம் கட்டப் போர் தொடங்கும் என்று ரீல் விடுகிறார். இப்படியானவை தான் எங்கள் புலம்பெயர்ந்தவரை கவரும் விடயங்கள்.

Hamshi said...

Our problem is so defficult that cant solve.We want to need our rights,but yet didnt give.What a life?We would rather die than live as tamils.

sathiri said...

சிங்களவர்கள் ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான் தேவையில்லாமல் இந்தியா ஈழத்தமிழரிற்கு உதவுமென்றும் தமிழக அரசியல் வாதிகள் தமிழீழத்தை வாங்கிக் கொடுக்கப்போகினம் அங்காலை 6 கோடி தமிழர் என்றும் பயந்துகொண்டிருந்தவங்கள்.. இனியாவது பயப்பிடவேண்டாம் அப்பிடி எதுவுமே நடக்காது அதற்கான சாத்தியங்களும் இல்லை..என்று தெளிவாக சிங்கள மக்களிடம் சொல்லிவிடுங்கள்.. அதே நேரம்.. சிங்கள மக்களிடம் அவர்களாகப் பார்த்து தமிழ்மக்களிற்கு ஏதாவது முடிந்ததை செய்யச்சொல்லி விடுங்கள்...

Eelamahan said...

நாம் தாங்கொணா துயரத்தை இதயத்தில் தாங்கிக் கொண்டிருக்கிறோம். எமது நெஞ்சம் வெடிக்கின்றது.

இருந்தாலும் எமது உறவுகளுக்காக நம்பிக்கையுடன் இருக்கின்றோம். புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் அந்த கடைமையை செய்ய வேண்டும். அனைவரும் ஒன்றாக வாருங்கள்.

ஒவ்வொரு நாட்டிலும் வசிக்கும் எமது உறவுகள் ஒன்றுசேர வேண்டும். உங்களுடைய கடைமை பாரியது.

முதற்கட்டமாக அனைவரும் ஒன்றுகூடி எங்கள் உறவுகளைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் இருக்கின்றோம் என்ற நம்பிக்கையை கொடுங்கள். அந்த நம்பிக்கை அவர்களை வாழ வைக்கும்.

எனவே அதனைச் செய்யுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கண்டும் காணான் said...

தன லட்சியத்தில் கோட்டைவிட்ட ஒருவனின் மனசாட்சி எவ்வாறு சிந்திகுமோ ( என்ன தான் அவன் வெளியில் காட்டாவிட்டாலும் கூட) அதை அவ்வாறே படம் பிடித்துக் காட்டி உள்ளீர்கள்.
யுத்தத்தால் அனைத்தையும் தன்னம்பிக்கை உட்பட இழந்த , இலங்கை வாழ் தமிழரில் ௯௦ % மற்றும் புலம் பெயர்ந்த தமிழரில் கூட பெரும்பான்மையினரின் சிந்தை இது தான். ஆனால் அரசாங்கத்தின் முன்னெடுப்புகளை பார்க்கும் போது, தீர்வு திட்டமானது , அடிப்படை வசதிகளை மட்டும் தமிழருக்கு ஏற்படுத்தி , அவர்களது உரிமைகளை முற்றாக மறுத்து விடுமோ என்று என்னவே தோன்றுகின்றது.

Anonymous said...

//இல்லாவிட்டால் துணை முதல்வரைத் தான் இனி நம்ப வேண்டுமோ?//

Again and again why you guys (Srilankans) relying on TamilNadu politicians...

Can't Sri Lankan Tamil Politicians able to lead the community? If you getting support from other countries, it would create a confusion and you won't go nowhere...

Anonymous said...

// டக்ளஸ் தேவனாந்தாவோ, விநாயகமூர்த்தி முரளிதரனோ சித்தார்த்தனோ யாரென்றாலும் மக்களுக்கு நல்லது செய்தால் சரி ஆனால் ஆனந்தசங்கரி என்ற கிழம் வேண்டாம் காரணம் சங்கரி சொந்தமக்கள் பற்றி என்றைக்குமே சிந்தித்தவரில்லை. //

//கருணாநிதியை ரொம்பத்தூக்கவேண்டாம் ஈழத்தமிழர்கள் மனங்களிலிருந்து அவன் செத்துப்பலகாலமாகிவிட்டது. //

அப்படிப் போடுங்க....

Abiman said...

your arguments are right.mmm..what to do?? By the way Advance Birth day wiishes anna.. Am I right? I do remember it is june 5th. Many more happy returns of the day..

Anonymous said...

So according to a correspondent being "Kilam" is enough to be disqualified,so this applies to Anandasangary.I wonder what this person thinks of his/her parents and their parents.Some of us as tamils not only lost our senses we have lost our humanity as well.But i have not all hope!tamil people are clever than this!

Anonymous said...

இலங்கை தமிழர்கள் தங்கள் தலைவரை பிரதிநிதிகளை தாங்களே தேர்ந்து எடுக்க வேண்டும். அவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது Tamil National Allianceஇடம் தான். இவர்கள் இலங்கை தமிழருக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை.

Ramanan said...

ஹாய் லோஷன்,

படித்தேன், பல விடயங்கள் யோசிக்க வேண்டி உள்ளது. நாம் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. அப்படி நிறைய இடங்களில் செய்ததால்தான் நாம் இன்று இந்த நிலைமை. இது எல்லாவற்றுக்கும் பொருந்தும். சிங்கள ராணுவமாக இருக்கட்டும், கருணாவின் திறமையாக இருக்காட்டும், டக்ளசின் ஆழுமையாக இருக்கட்டும், சிங்கள அரசாங்கத்தின் காய் நகர்த்தல்களாக இருக்கட்டும், ஏன் கருணாநிதியின் அரசியல் சாணக்கியமாக இருக்கட்டும். எல்லாம் நாம் நினைத்ததை விட மிகவும் மிரட்டலாகவே இருந்து வருகிறது.

நமக்கு ஒரு தலைவன் ஒருவன் தான் என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் தப்பு என்றே தோன்றுகிறது, நாம் மற்றவர்களே புறக்கணித்து ஒருசாராரை மட்டும் அனுகியதால்தான் இந்த தமிழனின் ஒற்றுமை இன்று கேள்விக்குறியானது. நாம் மக்களுக்கு நன்மை செய்யும் அனைவரையும் ஆதரிப்போம். சில விசமிகளை இனம் காண்போம். அவர்களை மட்டும் வன்முறை இல்லாமல் புறக்கணிப்போம். வருகின்ற சமுதயத்தையாவது ஒரு நிம்மதி சுவாசம் பெற சம்மதிப்போம்.

நாங்கள் ஒரு சாராரை மட்டும் ஆமொதிப்பதால் அவர்கள் செய்யும் தவறுகளும் நம்மை சிந்திக்க வைப்பதில்லை. மாறாக தவறை சுட்டிக்காட்டுபவர்களை நம் இனத்தின் துரோகியாக பார்க்கும் நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம். இது நம் முன்னோர்களின் ராஜ தந்திரம். நாம் சிந்திப்போம் செயல்படுவோம்.

Sanga said...

Many more happy returns of da day... godbles u...

பூச்சரம் said...

பிறந்த நாள் கொண்டாடும் பதிவர் லோஷனுக்கு பூச்சரம் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது..

Anonymous said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லோஷன்

karunakaran,chennai

Anonymous said...

http://www.facebook.com/group.php?gid=100007245906&ref=nf

Please see this facebook group.

சவுக்கடி said...

***பரம வைரிகளை இணைத்து தன் பக்கம் சேர்த்து மேலைத்தேயம் முழுவதையும் வெற்றிகொண்டதன் மூலம் ஆசிய பிராந்தியத்தில் இலங்கை, பரப்பிலே தான் சிறிய நாடாக இருந்தாலும் ராஜதந்திர ரீதியாக தன் பலத்தைக் காட்டியுள்ளது.***

இவை எல்லாம் இந்தியாவின் திருவிளையாடல்கள் எனபதை நீங்கள் புரிந்து கொள்ளாதது அல்லது புரிந்தும் வெளிப்படுத்த விரும்பாதது வியப்பே!

இரா.வி.விஷ்ணு (ராஜ் ) said...

உலகிலேயே இனிய - ஆண்
குரல் ஒன்றுக்கு
பிறந்தநாளாமே - இன்று
பரிசுதான் கொடுக்க முடியவில்லை.

சக்தியோடு பிறந்து - பின்
சூரியனை கடைந்து - இன்றோ
வெற்றி அடைந்திருக்கிறீர்கள்.

சக்தியை பிரயோகித்து
சூரியனாய் உழைத்தீர்கள்
வெற்றியடைந்த பின்னும்
சும்மாவா இருக்கிறீர்கள்.

பதிவில் பார்த்தோம்
நாட்டை நோட்டம் பார்த்து - ஊட்டம்
போடவும் நேரம் இல்லை - வீட்டில்
ஆட்டம் போடவும் நேரமில்லை
மகனுடன் பட்டம் விடவும் நேரமில்லை
உங்கள் திட்டங்கள்தான் என்ன?

வானொலி ஒலிக்க சமூகம் விழிக்க
பதிவில் எம்மை நீங்கள் மயக்க நாங்கள் வியக்க
என்றும் தேகம் சிறக்க - உங்கள்
வெற்றிக்கொடி பறக்க
எதையும் மறக்காமல் சிறத்திடுங்கள்
புதிய அகவையில்.


புதுமைகளின் மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா!

மனோஷியா (manoshiya,K.) said...

vaazhthukkaL loshan anna

Komalan said...

வணக்கம் அண்ணா உங்களுடைய எழுத்து பாங்கு நன்றாய் உள்ளது,மேலும் மீண்டும் மீண்டும் இந்திய தொடர்பாக நாம் சிந்திப்பது எம்மை நாமே முட்டாளாக்குவதட்கு சமன், மேலும் தமிழ்நாடு தொடர்பாக சிந்திப்பதை முற்றிலும் தவிர்ப்பது எம்மிடம் தற்போது உள்ளதை காபதட்கு உகந்தது,தொடர்ந்தும் உங்களிடம் இது போன்ற ஆக்கங்களை எதிர்பாகின்ரோம்.

ஆ.ஞானசேகரன் said...

நண்பரெ! மிக தெளிவாக தற்போது நடக்கும், நடக்கவிறுக்கும், நடக்கவேண்டியவைகள் அனைத்தும் விளக்கியுள்ளீர்கள்.. எல்லாம் நல்லவையாகவும், மீதம் உள்ள தமிழ் மக்கள் இன்னல் போகவும் அன்புடன் எதிர்ப்பார்க்கும்
ஆ.ஞானசேகரன்

Suba said...

great compilation loshan, Karunanidhi has personal motives behind each and every action he makes, I dont think eelam is over loshan,the fight is not just yet over..

kicha said...

I have written my opinion that is related to your post. Please read it.
http://yaazhumvaazhum.blogspot.com/2009/06/blog-post_08.html

Anonymous said...

அன்புள்ள நண்பர்களே

இவ்வார தமிழர் பட்டையை இணைத்தற்க்கு மிக்க நன்றி

உங்களது பிளாக் பெயரையை இவ்வார பட்டையை இணைத்தவர்கள் பட்டியலில் சேர்த்து விட்டோம்

உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்.காம்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner