September 30, 2009

இலங்கையின் இன்றைய பரபரப்பு.. யாழ்தேவி தெற்கின் நண்பன்?

இன்று பகல் வேளையிலிருந்து இலங்கை முழுவதும் ஒரு திடீர் பரபரப்பு தொற்றி இருந்தது..

செல்பேசிகளின் வழியாக வரும் செய்தி சரங்கள் (sms news alerts)மூலமாக "இன்று இரவு சரியாக 8.05க்கு இலங்கையின் எல்லா தொலைகாட்சி அலைவரிசைகளையும் பாருங்கள்.. இலங்கையின் மிகப்பெரும் புதிய மாற்றத்துக்கான வழி காத்திருக்கிறது" என்ற செய்தியே இத்தனை பரபரப்புக்கும் காரணம்.

எங்களிடமும் இப்போது ஒரு தொலைக்காட்சிஇருப்பதனால் எனக்கு ஏதாவது தெரிந்திருக்கும் என்று ஏராளமான நண்பர்கள்,தெரிந்தவர்கள்,நேயர்கள் என்று எனக்கு மாறி மாறி அழைப்பும் கேள்விகளடங்கிய எஸ்.எம்.எஸ் களும் ..

எனக்கென்றால் ஒன்றுமே தெரியாது.. செய்தி,தொலைக்காட்சி பக்கமும் விஷயம் யாருக்கும் தெரியவில்லை.. புதிதாய் ஆரம்பித்தது தானே .. சின்னப் பெடியங்கள் என்று சொல்லவில்லைப் போலும்..

வந்த எல்லா எஸ்.எம்.எஸ்.களுக்கும் இரவு வரை காத்திருங்கள் பதிலை அனுப்பிவிட்டு, இரவு மனைவி,மகனோடு வெளியே போயிருந்த ரவுண்ட்சையும் அவசர அவசரமாக சுருக்கிக் கொண்டு வீடு வந்து, விறு விருப்பாக போய்க் கொண்டிருந்த அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் போட்டியையும் விட்டு விட்டு உள்ளூர் தொலைக்காட்சிகளில் அகப்பட்ட எதோ ஒரு அலைவரிசையைப் போட்டால்,

ஒரு தொடரூந்து(புகையிரதம்/ட்ரெயின்) அதற்குள் எல்லா இனத்தவரும்..(குறியீடுகள் மூலமாக..குல்லா அணிந்த இஸ்லாமியர்,குறி போட்ட தமிழர்,, கிறிஸ்தவ தமிழர் இல்லையோ???) இரண்டு வேறு வேறு கொம்பார்ட்மேன்ட்களில் இரு சிறுவர்கள் நட்புப் பார்வையோடு..

பார்த்தவுடனேயே விளம்பரம்..அதுவும் இன ஒற்றுமை பற்றி அரசின் விளம்பரம் என்று புரிந்துவிட்டது..ஆனாலும் ஏதாவது புதுசா சொல்லப் போகிறார்கள் என்று பார்த்தால்...

எல்லா உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ஒரே நேரத்தில் இந்த அரச விளம்பரம்..

அந்த தொடரூந்து இரு துண்டுகளாகப் பிரிகிறது.. பயணம் செய்த எல்லா இனத்தவரும் சேர்ந்து பிரிந்த கொம்பார்ட் மென்ட்களை சேர்த்து நண்பர்களை இணைக்கிறார்கள்..


யாழ்தேவிக்கான (இலங்கைத் திரட்டியல்ல.. உலகப் புகழ் பெற்ற கொழும்பு -யாழ்ப்பாணம் இடையிலான புகையிரதம்) விளம்பரமாம் இது.. அட சாமிகளா..

இதுக்குத் தான் இத்தனை பில்ட் அப்பும் பரபரப்புமா?

இத்தோடு முடிந்தால் பரவாயில்லை..

யாழ்தேவிக்கான பாதை சமைக்க பணம் கொடுக்கப் போவது இலங்கையின் அப்பாவிப் பொதுமக்களாகிய நாமாம்..
உத்துறு மித்துரு என்ற லொத்தர் சீட்டை வாங்கட்டாம்..

கொடுமையிலும் பெருங் கொடுமை உத்துறு மித்துருவுக்கு செய்த தமிழாக்கம்..
உத்துறு என்றால் சிங்கள மொழியில் வடக்கு.. மித்துரு என்றால் நண்பன்..

தமிழில் போடப்பட்ட தொலைக்காட்சி விளம்பர அட்டையில் தெற்கின் நண்பன் என்று காணப்பட்டது..
குரல் கொடுத்த பிரபல தமிழ் அறிவிப்பாளரும் உத்துறு மித்துரு - தெற்கின் நண்பன் என்றே கூறுகிறார்..

எங்கே போய் நாம் முட்டிக் கொள்வோம்?

எத்தனை விஷயங்களுக்காக முட்டிக் கொள்வோம்?

எல்லாவற்றிலும் கொடுமை..
இதற்காகவா அவசரப்பட்டு எம்மையும் இழுத்துக் கொண்டு வீடு வந்தாய் என மனைவி நக்கலாய் என்னைப் பார்த்த பார்வை..
தேவையா எனக்கு?



36 comments:

ஆதிரை said...

அப்போ 8.05 க்கு வந்த செய்தி என்ன?
அதைச் சொல்லிட்டு போங்கோவன்

ஆதிரை said...

தமிழில் தெற்கின் தோழன்...
சிங்களத்தில் வடக்கின் தோழன்...
அரசியல் புரியோணும்

ஆதிரை said...

ஆங்கில மொழியில் என்னென்று சொன்னார்கள்???
ஒருக்கால் கேட்டுச் சொல்லுங்கோவன்

ARV Loshan said...

ஆதிரை said...
அப்போ 8.05 க்கு வந்த செய்தி என்ன?
அதைச் சொல்லிட்டு போங்கோவன்
//

ஆகா. இதுக்கு மேலயும் அந்தக் கொடுமையை சொல்லனுமா?


ஆதிரை said...
தமிழில் தெற்கின் தோழன்...
சிங்களத்தில் வடக்கின் தோழன்...
அரசியல் புரியோணும்
//

ஓகோ.. இது தான் விஷயமா? அப்போ நான் தான் விளங்காமப் போய்ட்டேனா?


ஆதிரை said...
ஆங்கில மொழியில் என்னென்று சொன்னார்கள்???
ஒருக்கால் கேட்டுச் சொல்லுங்கோவன்
//

ஆங்கிலத்தில் இனித் தான் சொல்வார்களாம்.. ;)

வந்தியத்தேவன் said...

//உத்துறு என்றால் சிங்கள மொழியில் வடக்கு.. மித்துரு என்றால் நண்பன்..

தமிழில் போடப்பட்ட தொலைக்காட்சி விளம்பர அட்டையில் தெற்கின் நண்பன் என்று காணப்பட்டது..
குரல் கொடுத்த பிரபல தமிழ் அறிவிப்பாளரும் உத்துறு மித்துரு - தெற்கின் நண்பன் என்றே கூறுகிறார்..//

எனக்கும் இந்த மொழிபெயர்ப்பில் சந்தேகம் சிலவேளைகளில் தமிழருக்கு தெற்கின் நண்பன் என தமிழிலும் சிங்களவருக்கு சிங்களத்தில் உத்துறு மித்துரு எனவும் போட்டிருக்கின்றார்களோ தெரியாது.

Ramanc said...

பார்த்ததும் காதுக்காலை புகைபோகத குறைதன். மற்றும் படி வேதாளம் முருங்கைமரத்தில் எறின கதைதான்.

ஆதிரை said...

@Loshan
// அப்போ நான் தான் விளங்காமப் போய்ட்டேனா?

உங்களுக்கு உதெல்லாம் எங்கே விளங்கப்போகுது...
சும்மா ஹிட்ஸ் இற்காக இப்படியும் பதிவு போடுற ஆள் தானே நீங்கள்.

பாருங்கோ... வேட்டைக்காரன் சீச்சீ... வடக்கின் தோழன் வந்ததுக்குப் பிறகு முதலாவதாக முந்திக் கொண்டு தரப்போறது நீங்கள் தானே.....

Ramanc said...

ஆனால் ஒண்டும் மட்டும் தெரிஞ்சுது. லோசன் அண்ணாவுக்கு பதிவு எழுதுறதுக்கு நல்ல விசயம் ஒன்று கிடைச்சிட்டுது.

ஜனகன் said...

லோஷன் அண்ணா,
நீங்க மே மாசத்தில இருந்து trainல போகேல்லையா?
ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனிலும் இதைத்தானே பப்பரபேன்னு பெரிய பெரிய போஸ்டரா ஒட்டியிருக்கிறான்களே?

Admin said...

இங்கே வேறு பரபரப்பு அண்ணா என்று இரவு 7 மணியளவில் சுனாமி வரக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன அவதானமாக இருங்கள் என்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்யப்பட்டது. மக்கள் பதட்டமடைந்துவிட்டனர்.

பொலிசாரின் அறிவிப்பு என்றுதான் அறிவிக்கப்பட்டது...

என்.கே.அஷோக்பரன் said...

ஆதிரை சொன்னது மிகச்சரி.

சிங்களவருக்கு
வடக்கின் நண்பன் அதாவது உத்துறு மித்துறு

தமிழருக்கு
தெற்கின் நண்பன்

அதாவது அந்தப் பெயரேஇரண்டும் இணைந்தது தான். “உத்துறு மித்துறு - தெற்கின் நண்பன்.”

எப்பிடியெல்லாமோ யோசிச்சு அரசியல் நடத்துறாங்கள்... முந்தியெல்லாம் படங்களுக்குத்தான் விளம்பரம் இண்டைக்குத்தான் விளம்பரத்துக்கே குறுஞ்செய்தி மூலம் விளம்பரப்படுத்துவதைப் பார்த்தேன். ஆஹா இவர்களின் அரசியல் சாணித்தனத்தை... மன்னிக்கவும் சாணக்கியத்தனத்தைப் பார்த்தா எனக்கு புல்-அரிக்குது.

லோஷன் அண்ணா - அந்த அரசியல் நிகழ்ச்சி தொடங்கிறன் என்டனியள்... எப்ப தொடங்கப் போகிறீங்க???!!!???

Admin said...

இதெல்லாம் இலங்கையில் சகஜமப்பா என்று சொல்லிட்டு போகலாம். இப்படியான விடயங்கள் அடிக்கடி நடப்பதுதானே அண்ணா.

Ramesh said...

நாங்க இத கண்டுகிறதே இல்லப்பா ..... வலிக்கும் எண்டு தெரியும்

Vijayakanth said...

காலி மாத்தறை பக்கம் தேர்தல் நடக்கபோகுது போல. அதுதான் இந்த விளம்பரம்......

Anonymous said...

Hi anna,

I thing i am lucky than you. I got that information around 4 Pm. So no tension no worries. You all are poor guys.

Anonymous said...

But very sooooonnnnn you all will get a shock and surprise news. Better prepare for that now it seems

Buஸூly said...

நானும் கொஞ்சம் பயந்து போயிட்டன் எங்க நம்ம மாண்பிமிகு ஜனாதிபதி சார் இடிஞ்சி இருக்க நாட்ட கட்டி எலுப்பனும் ஆகையால பொருட்கள் சேவைகள்ட விலைய லைட்டா கூட்ரண்டு சொல்ல போறார் என்று............! வடக்கு தெற்கு குழப்பத்திற்கு ஏற்கனவே பதில் சொல்லி இருக்கினம்.அதான் தமிழில குடும்பி மலையாம், சிங்களத்தில தொப்பிகலயாம் என்ன ஒரு அரசியலப்பா நடத்துங்கோ நடத்துங்கோ........

கஜீவன் said...

எல்லாரும் ஓவர் பில்டப் தானே அண்ணா.... :P

Prapa said...

இதெல்லாம் பரவாயில்ல சாமி,,
இதுக்கு அலாரம் வச்சு வேற காத்திருந்தோம்,
வந்தது என்னவோ ............ சீ எண்டு போயிட்டது.
இதுக்கு பிறகும் இப்படி ஏதாவது வந்தால் பார்ப்போம் என்கிறீங்க

Unknown said...

அட அநியாயமே...
இதுவா விஷயம்?
எனக்கு இண்டைக்கு வரைக்கும் அந்த விளம்பரத்துக்கு தான் அந்த பில்ட்-அப் எண்டு தெரியாது...
நானும் '8.05 க்கு ஏதோ போடுறதெண்டு சொன்னாங்கள். ஒண்டையும் காணேல' எண்டு மண்டைய சொறிஞ்சு கொண்டிருந்தன்...

என்ன கொடுமை சேர் இது...

சுபானு said...

@ஆதிரை

//தமிழில் தெற்கின் தோழன்...
சிங்களத்தில் வடக்கின் தோழன்...
அரசியல் புரியோணும்
//

ஓகோ.. இது தான் விஷயமா? அப்போ நான் தான் விளங்காமப் போய்ட்டேனா?


எனக்கும் இப்பத்தான் விடயம் புரிஞ்சுது...

இறக்குவானை நிர்ஷன் said...

அன்பின் லோஷன் அண்ணா,

நானும் பரபரப்புடன் காத்திருந்து பார்த்தேன்.
நான் விளம்பரத் துறையில் இருப்பதால் இலேசாக விஷயம் கசிந்திருந்தது. எனினும் முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை.

தமிழ் மொழிமாற்றம் கண்டு நானும் வியந்துபோனேன்.
நேரடி மொழிமாற்றம் மிகத் தவறானது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

(நேற்று சர்வதேச மொழிபெயர்ப்பு தினமாகும். அடடா இந்தநாளில் இப்படியொரு தவறா என நினைத்தேன்)

எனது துறைசார்ந்த விடயம் என்பதால் இந்த விடயத்தை சரியாக தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

சிங்கள மக்களைப் பொருத்தவரையில் அவர்கள் தெற்கைச் சேர்ந்தவர்கள் வடக்குக்கு சிநேகம் தேடுகிறார்கள்.
ஆதலால் உத்துறு மித்துறு (வடக்கின் நண்பன்) என்று சிங்களத்தில் வருகிறது.

அதுவே வடக்குத் தமிழ் மக்களுக்கு யாழ்தேவியானது தெற்கை இணைக்கும் தோழனாக இருக்கிறது. அந்தப் பக்கத்திலிருந்து நோக்குமிடத்து தெற்கின் நண்பன் என்பது சரியானதே.

யாழ் மக்களுக்கு தெற்கின் தோழன் தான் யாழ்தேவி.

நாம் தெற்கிலிருந்து பார்ப்பதால் அது பிழையெனத் தோன்றுகிறது.

இந்த விளம்பரத்தை செய்தது பிரபல விளம்பர நிறுவனங்களில் ஒன்றான ட்ரை எட் நிறுவனமாகும்.

தெற்கின் நண்பன் இணையத்தளம் - http://www.uthurumithuru.org/

சுபானு said...

பில்டப் குடுத்துக் குடுத்தே வாழ்க்கையை ஓட்டுறாங்கப்பா... முடியல..

யோ வொய்ஸ் (யோகா) said...

மொழிபெயர்ப்பு பிழையல்ல லோஷன். வடக்கிலுள்ள தமிழருக்கு தெற்கின் தோழனாகவும் தெற்கிலுள்ள சிங்களவருக்கு உத்துரு மித்துரு (வடக்கின் தோழனாகவும்) தான் யாழ்தேவியை உருவகப்படுத்தியுள்ளனர். இரண்டும் இணைந்ததுதான் இப்பெயர்.

யோ வொய்ஸ் (யோகா) said...

நாங்களும் சாப்பாட்டுக்கு வெளியே போய் 8 மணிக்குள்ளாக ஓடி வந்து டீவியை போட்டு பார்த்து கடுப்பாகிட்டோம்

Anonymous said...

பில்டப் குடுத்துக் குடுத்தே வாழ்க்கையை ஓட்டுறாங்கப்பா... முடியல.

2nd in :D

சுபானு said...

அதையும் செய்வாங்க இதையும் செய்வாங்க..
Probe over state SMS yesterday asking viewers to watch TV

Unknown said...

ஆதிரை சொன்னது சரி!!!!!!!!!!!!!!

KANA VARO said...

ஆக்கக் கொடுமையான விஷயம் என்ன எண்டால் நேற்று போன்ல வந்த எஸ் .எம் .எஸ் சை இன்று காலைல தானே வாசிச்சன். பிறகு திரு திரு எண்டு என்ன நடந்திருக்கு எண்டு முழிச்சன். உங்க பதிவை வாசிச்ச பிறகு தானே புரிந்திது. நல்ல வேளை நான் தப்பிட்டன்...

Sinthu said...

sms ஊடாகக் கூட இப்படி விளம்பரப் படுத்தலாமோ?

புல்லட் said...

நல்ல காலம் ! ஏதாவது இத்துறு சத்துரு எண்டு மிஞ்சி இருக்கிற மனுசரையும் போட்டுத்தள்ளாம விட்டாங்களெண்டு சந்தோசப்படுவீங்களா, அதைவிட்டுட்டு பெரிசா சீனைப்போடுறியள்..?

இப்ப இத்துறு மித்துறுக்களும் குறைஞ்சிட்டு வருவதா நேற்று பொறியியலாளர் கூட்டத்தில புலம்பித்தள்ளியாச்சு...

ஏதோதோ நடக்குது...
கடைசியா வத்துறுக்கு கூட வழியில்லாம நிக்கவேண்டிவருதோ தெரியேல்ல எல்லாரும்...

வந்தியத்தேவன் said...

ஆஹா புல்லட்டின் சிங்களமொழிப் புலமை பூரிக்கவைக்கிறது. பயப்படவேண்டாம் எப்படியும் வத்துறு கிடைக்கும் நாங்கள் யார் க்யூவில் நிண்டு அடிபட்டு 1 இறாத்தல் பாணை வாங்குபவர்கள் அல்லவா?

ஒருதரை ஒருதர் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதைவிட்டால் எல்லோரும் மித்துறுகள் தான். நத்தம் வெடக் நா

என்ன கொடும சார் said...

யாழ் ரயில் பாதை மீள் கட்டுமான விளம்பரத்துக்கு ரூபா. 10 மில்லியன் செலவு!
http://eksaar.blogspot.com/2009/08/10.html

உள்ளே வெளியே - In and Out
http://eksaar.blogspot.com/2009/08/in-and-out.html

எப்பவோ சொல்லிட்டமில்ல..

Anonymous said...

//இதற்காகவா அவசரப்பட்டு எம்மையும் இழுத்துக் கொண்டு வீடு வந்தாய் என மனைவி நக்கலாய் என்னைப் பார்த்த பார்வை..
தேவையா எனக்கு?///

தேவையா?

கிகிகிகிகி

Anonymous said...

ha! ha! ha!

Anonymous said...

//யாழ்தேவிக்கான பாதை சமைக்க பணம் கொடுக்கப் போவது இலங்கையின் அப்பாவிப் பொதுமக்களாகிய நாமாம்..//

ஏன் விமானத்தில் பறக்க தான் உங்களுக்கு வசதியோ?
உங்களுக்கு இருக்கும் அந்த வசதி இல்லாதவர்கள் எப்படி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் போவது?
இலங்கையின் பொதுமக்க பணம் கொடுக்கப் போவது போக்குவரத்து பாதை அமைக்க தான்.
அழிவுக்கல்ல.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner