December 19, 2009

இலங்கை வெற்றி.. கலக்கும் டில்ஷான்



ராஜ்கோட்டில் அன்று மூன்று ஓட்டங்களால் கை நழுவவிட்ட வெற்றியை இன்று அதே போன்ற ஒரு விறுவிறுப்பான போட்டியில் கடைசி ஓவரில் அடைந்துள்ளது இலங்கை அணி..

மீண்டும் ஒரு 300 +ஓட்டங்கள் பெற்ற போட்டி.. மீண்டும் கடைசி ஓவர் முடிவு..

இந்திய ரசிகர்கள் இந்தத் தோல்விக்கு கடைசி நேரத்தில் தனது கவயீனத்தால் களத்தடுப்பில் தவறுவிட்ட சாகீர் கானை வசைபாடலாம்..

இலங்கை ரசிகர்களோ இலங்கை வென்ற உற்சாகத்தில் (இந்தியாவை சொந்தமண்ணில் வைத்து எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் வீழ்த்துவதென்பது அவ்வளவு இலகுவான காரியமா?) சதங்களாகவும் சாதனைகளாகவும் குவித்துவரும் டில்ஷானையும், அணியைக் காப்பாற்றிக் கரைசேர்க்கும் பணியை ஆஸ்திரேலியாவின் முன்னைய பெவான் போல் பொறுபேற்றுள்ள மத்தியூசுக்கு பாராட்டு,நன்றிகளைக் கூறலாம்..

ஆனால் நாக்பூரின் கிரிக்கெட் அமைப்பு, அதன் மைதானப் பராமரிப்பாளர்கள் என்று இன்றைய போட்டியை மூன்று நாட்களுக்குள் திட்டமிட்டு,சீராக நடத்திய அத்தனை பேருக்கும் முதலில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நாம் சொல்லியே ஆகவேண்டும்.

தெலுங்கானாப் பிரச்சினை காரணமாக விசாகப் பட்டினத்திலிருந்து அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்ட இந்தப் போட்டியை எந்தவித குறைகள், அவசர ஏற்பாடுகள் தெரியாமல் நடத்தியது உண்மையில் மிகப்பெரும் சாதனை.

இந்த மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி இதுதான்.
இதற்கு முதல் இந்தியா ஆஸ்திரேலியாவை அண்மையில் 99 ஓட்டங்களால் தோற்கடித்தது.(இந்தியா 354 , ஆஸ்திரேலியா 245 )
இன்று மீண்டும் ஒரு தட்டையான துடுப்பாட்ட சாதக ஆடுகளம்.. ஆனால் ராஜ்கோட்டை விட எவ்வளவோ மேல்..
பந்துவீச்சாளர்களுக்கு ஏதோ கொஞ்சமாவது இருந்தது.

வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் ச்விங்கும், சுழல்பந்துவீச்சாளர்களுக்கு சுழலும் இருந்தன.

எனினும் ஓட்டங்கள் மலையாகவும், சிக்சர் பவுண்டரிகள் மழையாகவும் பொழிந்த வழமையான இந்திய ஒருநாள் போட்டி.. (மீண்டும் பரிதாபப் பந்துவீச்சாளர்கள்)

இந்தியாவுக்கு மீண்டும் யுவராஜ் இல்லாமல் ஒரு போட்டி..
ஆனால் அந்தக் குறை தெரியாமல், சேவாகும், கம்பீரும் குறைந்த ஓட்டங்களோடு ஆட்டமிழந்தது குறையாக அமையாமல், முதலில் சச்சின், கோளி.. பின்னர் தோனி, ரெய்னா என்று அதிரடி ஆட்டம் ஆடி இந்தியாவை 300 ஓட்டங்கள் தாண்ட செய்தார்கள்.

அதிலும் சச்சின்,கோளி இட்டுக்கொடுத்த அடித்தளத்திலே தோனியும் ரெய்னாவும் கடைசிப் பத்து ஓவர்கள் ஆடிய பேயாட்டம் இருக்கிறதே..
கடைசி பத்து ஓவர்களில் நூறு ஓட்டங்கள்.. தோனி சதம்.. அவரது ஆறாவது ஒருநாள் சதம் இது..
ரெய்னாவும் மூன்று சிக்ஸர்களோடு கிடைத்த வாய்ப்பில் சந்தில் சிந்து பாடினார்.

இலங்கை அணி இந்தப் போட்டிக்கு முன்னர் ராஜ்கோட்டில் கண்ட மூன்று ஓட்ட மயிரிழைத் தோல்வியினாலும், முரளி, மாலிங்க, டில்கார பெர்னாண்டோ ஆகியோரின் காயங்களினாலும் கலங்கிப் போயிருந்தது.
அதிலும் முரளி,டில்ஹார ஆகியோர் இந்தத் தொடரில் தொடர்ந்தும் பங்குபற்ற முடியாமல் இலங்கை வந்துவிட்டார்கள்.

போட்டியில் கடந்த போட்டியில் கற்றுக் கொண்ட பாடத்தின் மூலம் அதிரடியாக மூன்று மாற்றங்களை இலங்கை அணி மேற்கொண்டது. டில்ஹாரவின் காயம் காரணமாக நான்காவது மாற்றமும் நிகழ்ந்தது.

அதிரடி மன்னன் (முன்னாள் என்று சொல்வது தான் பொருத்தமோ??) சனத் ஜெயசூரிய, ஒருநாள் தரப்படுத்தலில் முதல் நிலை பெற்ற நுவான் குலசேகர, திலான் சமரவீர ஆகிய மூவரையும் வெளியேற்றி, சாமர கபுகெடர மற்றும் அஜந்தா மென்டிஸ் ஆகியோரோடு இரு அறிமுக வீரர்களையும் இன்றைய போட்டிக்கான அணிக்குள் கொண்டுவந்தது.
சுழல் பந்துவீச்சாளர் சுராஜ் ரண்டிவ் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் சுரங்க லக்மால்.

எதிர்வரும் 26 ஆம் திகதியுடன் சர்வதேசக் கிரிக்கெட் அரங்கில் கால்பதித்து இருபது ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் சனத் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக் காலகட்டத்தில் இருக்கிறார் என்பது மிகத் தெளிவாக உணர்த்தப்படுகிறது.

சுராஜ் மொகமத் என்றும் அழைக்கப்படும் சுராஜ் ரண்டிவ், அண்மைக்காலமாகவே உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பாகப் பந்துவீசி வரும் இளம்வீரர்.
இலங்கையின் 19 வயத்டுக்குட்பட்ட அணிக்காக விளையாடி தற்போது ப்லூம்பீல்ட்(Bloomfield) கழகத்துக்காக தன ஓப்ப் ஸ்பின் மூலமாக வெற்றிகள் பலவற்றைப் பெற்றுக் கொடுத்தும் வருபவர்.ஓரளவு துடுப்பெடுத்தடவும் கூடியவர்.

அண்மையில் தான் இவர் எதிர்கால இலங்கை அணியில் விளையாடுவார் என 'அவதாரம்' விளையாட்டு நிகழ்ச்சியில் எதிர்வு கூறியிருந்தேன்.

நேற்றுமுன்தினம் அவசரமாக அழைக்கப்பட்டு இன்று விளையாடிய சுராஜ் முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
அதுவும் அவரது பந்து திரும்பும் கோணமும், சுழற்சியும் இந்தியவீரர்களை இன்று கொஞ்சமாவது தொல்லைப்படுத்தியது.
(மென்டிசும் இப்படித் தான் இதே மாதிரி இந்திய அணியுடன் பிரகாசித்து ஆரம்பித்தார்.. இப்போது??)

302 என்ற இலக்கு எந்த ஆடுகளத்திலுமே அவ்வளவு இலகுவான ஒன்றல்ல..(ராஜ்கோட் தவிர)


இலங்கையின் ஆரம்பமே அதிரடி+அசத்தல்..

டில்ஷான் இருக்க கவலை ஏன்?
டில்ஷானின் அசுர,அதிரடி போர்ம் தொடர்கிறது.
அடுத்தடுத்து அபாரசதங்கள்..
இந்த வருடத்தில் நான்காவது சதம்..

தரங்கவுடன் 14 ஓவர்களுக்குள் சத இணைப்பாட்டம்.

உபுல் தரன்கவைத் தொடர்ந்து சங்கக்கார, மகெல ஜெயவர்த்தன, கண்டம்பி ஆகியோரின் சராசரிப் பங்களிப்பு இருந்தபோதும் டில்ஷான் இருக்கும்வரை இலங்கை அணிப்பக்கமே வெற்றி வாய்ப்பு சாய்ந்திருந்தது.

டில்ஷான் ஆட்டமிழக்க இலங்கை அணி வழமையான எமக்குப் பழகிப்போன பதற்றம், தடுமாற்றத்துக்கு உள்ளாகியது.

இலங்கை,இந்திய அணிகள் விளையாடும்போது மட்டும் அடிக்கடி இப்படியாக இறுதிவரை வந்து எங்களை நகம் கடிக்கவைத்து, இதயங்களை வாய் வரை வந்து துடிக்க வைத்து, மாரடைப்பு வந்திடுமோ எனப் பயப்பட வைக்கும்படியாக போட்டிகளை விளிம்புவரை கொண்டுவருவார்கள்.

இரண்டு அணிகளுமே தத்தம் ரசிகர்களைப் பதறவைத்துவிடுகின்றன..
கொஞ்சம் பார்த்து விளையாடுன்கப்பா.. எத்தனை பேர் மாரடைப்பில் போகப்போறாங்களோ?

அண்மைக்கால இலங்கை அணியின் finisherஆக மாறியுள்ள மத்தியூஸ் இன்றும் கடைநிலை துடுப்பாட்டவீரர்களோடு இணைந்து இலங்கை அணியை வெற்றியை நோக்கி அழைத்து செல்லவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானார்.

அனால் இந்த 21 வயது இளைஞனுக்கு தான் எத்தனை பக்குவம்?
கால் தசைப் பிடிப்பு வந்தபோதும் துடுப்பை சரியாகப் பிடிக்கவே தடுமாறும் மென்டிசையும் வழிநடத்தி கடைசி ஓவரில் வெற்றியை அடையவைத்தர்.
அபாரம்..

ஆனால் தோனி பந்துவீச்சாளர்களை சரியாகக் கணிக்காமல் நல்ல பந்துவீச்சாளர்களை அவசரமாக முதலிலேயே முடித்ததும், இந்திய வீரர்களின் அண்மைக்காலமாக இருந்துவரும் மோசமான களத்தடுப்பும் இந்திய அணிக்கு வில்லன்களாக மாறியது.
கைக்குள்ளேயே சென்ற பந்தைக் கோட்டைவிட்டு நான்காக மாற்றிய சாகீர் கான், அடுத்தடுத்த பந்தில் கொஞ்சம் சிரமமான பிடியையும் நழுவவிட்டார்.
போட்டி ஆரம்பிக்குமுன் தோனி கவலைப்பட்ட களத்தடுப்பு பலவீனம் மீண்டும் காலை வாரிவிட்டது.
றொபின் சிங்கை மீண்டும் பயிற்சி வழங்க அழைக்குமா இந்தியா?

இலங்கை வீரர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல.. தம் பங்குக்கு பிடிகள்,பந்துகளைக் கடைசி நேரம் தானம் வழங்கினார்கள்.. வழிகாட்டி தலைவர் சங்கக்கார.. ஸ்டம்பிங் வாய்ப்பு, பிடிஎடுப்பு என்று தாரளமாக விட்டார்.(பஞ்சாப் ராணி ப்ரீத்தி சிந்தா கனவிலே வந்தாரோ???)

இந்த வெற்றியின் மூலம் தொடர் சமப்பட்டுள்ளது.. இன்னும் மூன்று போட்டிகள் எஞ்சியுள்ளன..

டில்ஷானின் போர்ம் கலக்கலாக உள்ளது..இவ்வளவு காலமும் இதை எங்கே வைத்திருந்தாய்?
ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்தபின் தான் அத்தனையும் வருகிறதா?

அடுத்தபோட்டியிலும் சதம் அடித்து சாதனை படைப்பாரா பார்க்கலாம்..

பிந்திக் கிடைத்த தகவல் ஒன்று.. ஸ்ரீசாந்த் போலவே யுவராஜ் சிங்குக்கும் பன்றிக் காய்ச்சல் தோற்றி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறதாம்..
உறுதியாகத் தெரியவில்லை..


இன்னொரு மகிழ்ச்சியான செய்தி..
என் வலைத்தளத்தைத் தொடர்வோர்(Followers) தற்போது 300 ஆக மாறியுள்ளார்கள்.. நன்றி நண்பர்களே.. உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறேன் என நம்புகிறேன்..



பி.கு - என்னிடமிருந்து வேட்டைக்காரன் விமர்சனம் எதிர்பார்க்கும் அன்புள்ளங்களே, இன்னும் பார்க்கவில்லை.. பார்க்காமலே எழுதலாம் என்றாலும், பார்த்தபின் எழுதுவதே பழக்கம் என்பதால், இலவச டிக்கெட் கிடைக்கும் திங்கள் வரை காத்துள்ளேன்..
சனி,ஞாயிறு வெளிவேலை இல்லாமல் கொஞ்சம் ப்ரீயாக குடும்பத்தினரோடு இருக்க விரும்புகிறேன்.. :)





24 comments:

அஸ்பர் said...

நல்ல match..

//இந்திய ரசிகர்கள் இந்தத் தோல்விக்கு கடைசி நேரத்தில் தனது கவலையீனத்தால் களத்தடுப்பில் தவறுவிட்ட சாகீர் கானை வசைபாடலாம்..//

பாவம் சஹீர் கான்.நெஹ்ராக்கு advice பண்ணிய களைப்பாக இருக்கலாம்.


NIMBUS ஏன் அடிக்கடி பெண்களையே காட்டினாங்க??

Admin said...

இந்த நேரத்திலும் பதிவா? நான் கிரிக்கெட் பக்கம் போவது குறைவு அதனால் வாசித்தேன் இதனைப் பற்றி கருத்து சொல்லவில்லை

Unknown said...

மத்தியூசிடம் வயதுக்கு மீறிய பக்குவம் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் உடம்பைத் தேற்றினால் 130-140களில் பந்தும் வீசி அருமையான சகலதுறை வீரராகலாம். (அவரின் களத்தடுப்பைப் பற்றிக் கதைக்கவும் வேண்டுமா? அசுரத்தனம்). டில்ஷானின் மறுபிறவி அருமையாக இருக்கிறது. இந்தியா முதல் மூன்று அணிகளுக்குள் இருக்கவே தகுதியில்லை. துடுப்பாட்டம் தவிர வேறு எதுக்குமே லாயக்கில்லை

Elanthi said...

நல்ல போட்டி. தில்ஷானுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. இந்தியாவின் துடுப்பாட்டத்தை பார்க்க முடியல. இலங்கையின் துடுப்பம் அருமை. அதை விட உங்கள் விமர்சனம் தூக்கல். நீங்க பேசாமல் வானொலி வேலையை விட்டிட்டு சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளரா ஆக முயற்சிக்கலாமே?

Elanthi said...

நல்ல போட்டி. தில்ஷானுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. இந்தியாவின் துடுப்பாட்டத்தை பார்க்க முடியல. இலங்கையின் துடுப்பம் அருமை. அதை விட உங்கள் விமர்சனம் தூக்கல். நீங்க பேசாமல் வானொலி வேலையை விட்டிட்டு சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளரா ஆக முயற்சிக்கலாமே?

KANA VARO said...

டில்ஷான் அசத்தல் அண்ணா! தொலைக்காட்சி இல்லாவிட்டாலும் இணையத்தில் ரொம்ப கஷ்டப்பட்டுப் பார்த்தேன்.

//என்னிடமிருந்து வேட்டைக்காரன் விமர்சனம் எதிர்பார்க்கும் அன்புள்ளங்களே, இன்னும் பார்க்கவில்லை.. பார்க்காமலே எழுதலாம் என்றாலும், பார்த்தபின் எழுதுவதே பழக்கம் என்பதால், இலவச டிக்கெட் கிடைக்கும் திங்கள் வரை காத்துள்ளேன்..//

அண்மையில் நம்ம நண்பர் ஒருவர் சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கிறார். அவர் சொன்னார் அங்கு சி.சீலனைக் கண்டதாக, அவர் சொன்னாராம் லோஷன் அண்ணா விஜய் பற்றி எழுதும் போது அதை வாசிக்காமலே என்ன இருக்கு எண்டு சொல்லலாம் எண்டு. ஆனாலும் நான் வாசித்திட்டு தான் சொல்லுவன். விரைவாக எழுதுங்கள் அண்ணா!.

balavasakan said...

டில்சான் எல்லோரையும் வாயைப்பிளக்க வைக்கிறார் சனத்தின் இடத்தை நிரப்பி விட்டார் தொடர்ந்து இரண்டு 100 ஓட்ட இணைப்பாட்டம் இந்த ஜோடி ஒரு கொஞ்ச காலம் நிலைக்கும் இனி சனத் இலங்கை அணிக்கு தேவைப்படமாட்டார் ...
டாட்டா பாய் பாய் சொல்ல வேண்டியதுதான்

Unknown said...

என்னாது முன்னூறு பின்தொடர்பவர்களா?
சபா................

இப்ப 301 ஆகிற்றுதே....

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....

என்னுடைய கவலையும் அதுதான் அண்ணா... இலங்கையின் முன்வரிசை டில்ஷான், தரங்க, சங்கா, மஹேல என்று அனுபவஸ்தர்களாக (தரங்கவும் கொஞ்சம் விளையாடி அனுபவம் இருக்கு) இருக்கு பின்னர் தொடர்ந்து வரும் வீரர்கள் அனைவரும் புதியவர்கள்...

மஹேலவை கொஞ்சம் பின்னுக்கு அடிச்சுக் கலைச்சுப் போட்டு ஒரு புதுப் பெடியன 4 ஆவதா களமிறக்கினா ஒரு சமநிலை இருக்கும்...
நாளைக்கு ட்ரெவர் பெய்லிஸ் அழைப்பு எழுக்கேக்க சொல்லுறன்... :P


மத்தியூஸ் கலக்கினார்... அந்த பொறுமை, அமைதி வியக்க வைத்தது...
டில்ஷான் கலக்கல்...

அண்ணா!
ஒரே ஒரு சந்தேகம்...

டில்ஷானும், தரங்கவும் நல்ல இணைப்பாட்டம் போடுறாங்களே எப்பிடி?
சிலவேளை நான்கு ஓட்டங்கள் அடிச்சாலும் ஆடுகளத்துக்கு நடுவில வந்து கதைக்காம ஒருபுறத்தில இருந்து வெற்றிக்காக காட்டப்படும் அந்த பெருவிரல் அடையாளத்தைக் காடட்டுறாங்க... சிலவேளை பாத்தா நடுவில வந்து கதைக்கிறாங்க.... என்ன தான் நடக்குது உலகத்தில???

சங்காவின்ர குசும்புக்கு அளவே இல்ல....இரண்டு பேரையும் ஒண்டா ஆடவிட்டு விளையாட்டுப் பாக்கிறார்...

ஆனா தரங்க வியக்க வைக்கிறார் உண்மையாவே...
முந்தி மாதிரி classy ஆ இருக்க விரும்பாம கொஞ்சம் அடித்து ஆடவும் முயற்சிக்கிறார். தட்டையான ஆடுகளங்களுக்கு இந்த முறை தான் சிறந்தது...

அடுத்த போட்டியிலாவது பந்துவீச்சாளர்களுக்கு ஏதாவது கிடைக்குதா பாப்பம்...

Unknown said...

அண்ணா சொல்ல மறந்திற்றன்....

அர்யுன ரணதுங்கவின்ர 1996 உலகக்கிண்ண கருதுகோள் தெரியும் தானே? 'whatever you score, we'll chase it'... இப்ப இருக்கிற இலங்கை அணியும் அதே மாதிரி இருக்கிறதா ஒரு உணர்வு. அண்டைக்கு 400 க்கு மேல அடிச்ச விதமும், நேற்று 300 க்கு மேல அடிச்சு துரத்தி வென்ற விதமும் பாக்க நல்லாயிருந்தது...

உபகண்டப் போட்டிகளில் whatever you score, we'll chase it என்பது சிறந்த முறை தான்...
சங்கா என்ன செய்கிறார் பார்ப்போம்.....

என்.கே.அஷோக்பரன் said...

இலங்கை அணி இன்னும் இளைய வீரர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இணைத்து வந்தால் உலகக்கிண்ணம் வெற்றிகரமாக அமையும்.

இலங்கையின் அடுத்த தலைமுறை நாயகர்களில் நான் கண்டு பெரிதும் சந்தோஷப்பட்ட வீரர் பானுக ராஜபக்ஷ - அடுத்த சனத் ஜயசூரியவாக ஆகும் திறன் உள்ளவர் - தற்போது 19 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடுகிறார் - விளாசல் மன்னன். பானுக இலங்கை அணியில் விளையாடும் நாள் வெகுதொலைவிலில்லை. அது போலவே குஸல் பெரேரா - விக்கட் காப்பாளர் மற்றும் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர் - சச்சினின் நேர்த்தியை இவரிடம் காணலாம் இவர் 21 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடுகிறார் - யோசித்துப் பாருங்கள் சனத்-சச்சின் போன்ற ஜோடி இலங்கையணிக்கு அமைந்தால் எப்படி இருக்குமென்று???

தர்ஷன் said...

ம்ம் நேற்றுத்தான் match பார்த்து விட்டு திருப்தியாய் தூங்கப் போனேன்.

//சனி,ஞாயிறு வெளிவேலை இல்லாமல் கொஞ்சம் ப்ரீயாக குடும்பத்தினரோடு இருக்க விரும்புகிறேன்.. :)//

வேட்டைக்காரன் பார்ப்பது வெளி வேலையா குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியாக பார்த்து ரசிக்கலாமே கொஞ்சம் ரிஸ்க்கோ?

Ashwin-WIN said...

//டில்ஷானின் போர்ம் கலக்கலாக உள்ளது..இவ்வளவு காலமும் இதை எங்கே வைத்திருந்தாய்?//
இவ்வளவுகாலமும் டில்ஷான பிடிச்சிருந்த ஏதோ ஒன்னு இப்போ விட்டுடுது. அதுக்குபதிலா புதிய அதிர்ஷ்ட தேவதை வந்திட்டு.(ஆனா அது தரன்கவ பிடிச்சுடுத்து என்னு சொன்னாங்க. அதாலதான் கொஞ்சகாலம் தரங்க கஷ்டப்பட்டாரு. இப் அவரும் விளாசுரத பாத்தா அவரையும் விட்டுடுது போல )

இலங்கன் said...

//தோனி சதம்.. அவரது மூன்றாவது ஒருநாள் சதம் இது..//

அண்ணா இலங்கையில் டோனியை மாதிரி ஒரு அதிஸ்டக்காரர் இருந்தால் எப்புடி இருக்கும். டோனியின் எத்தனை பிடிகள் தவறவிட பட்டிருந்தன. இலங்கையின் களத்தடுப்பில் பிழை சொல்வதை விட டோனியின் அதிஸ்டத்தை தான் சொல்ல வேணும்.

அண்ணா டில்சான், கப்புகெதர கிசு கிசு சொல்கிறார்கள். சற்று அடுத்த பதிவில் தெளிவுபடுத்த முடியுமா? உண்மையா?

Subankan said...

போட்டி பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை அண்ணா, ஆனால் இந்தப்பதிவே போட்டியைப் பார்த்ததுபோல இருக்கிறது. இன்னுமொரு விடயம் தெரியுமா? இப்போதெல்லாம் உங்கள் கிரிக்கெட் பதிவுகளும் பிடிக்கின்றன ;)

முச்சதத்திற்கு வாழ்த்துகள் அண்ணா!

Unknown said...

/இலங்கையின் அடுத்த தலைமுறை நாயகர்களில் நான் கண்டு பெரிதும் சந்தோஷப்பட்ட வீரர் பானுக ராஜபக்ஷ - அடுத்த சனத் ஜயசூரியவாக ஆகும் திறன் உள்ளவர் - தற்போது 19 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடுகிறார் - விளாசல் மன்னன். பானுக இலங்கை அணியில் விளையாடும் நாள் வெகுதொலைவிலில்லை. //

absolutely true mate...
But I think he'll play after thae 2011 world cup...
He is a stunning talent.. Hope that he will do something....

(He is from Royal college nah?)

Ashwin-WIN said...

//டில்ஷானின் போர்ம் கலக்கலாக உள்ளது..இவ்வளவு காலமும் இதை எங்கே வைத்திருந்தாய்?//
இவ்வளவுகாலமும் டில்ஷான பிடிச்சிருந்த ஏதோ ஒன்னு இப்போ விட்டுடுது. அதுக்குபதிலா புதிய அதிர்ஷ்ட தேவதை வந்திட்டு.(ஆனா அது தரன்கவ பிடிச்சுடுத்து என்னு சொன்னாங்க. அதாலதான் கொஞ்சகாலம் தரங்க கஷ்டப்பட்டாரு. இப் அவரும் விளாசுரத பாத்தா அவரையும் விட்டுடுது போல )

வாவி மகள் said...

அசத்தலோ அசத்தல் டில்சானின் சேவை இலங்கைக்கு தேவை !
சொந்த மண் கவ்வினார்கள் இந்திய மன்னர்கள் !
www.vaavimagal.com

thirudan said...

Dhoni make his 6th centuary, please check it, coz loshan good sports commentrator,

ஜெகதீபன் said...

அருமையான ஆட்டம்....
தரங்கவும் மகேலவும் இன்னும் கொஞ்சம் நிதானமாய் ஆடவேண்டும்.....

டில்ஷானின் அதிரடியும், சங்காவின் நிதானமும் சாதுர்யமும், மத்யுசின் பக்குவமும் இப்படியே தொடர்ந்து... மற்றைய வீரர்களும் அதற்கேற்றால் போல் ஆடினால்... அடுத்த உலகக்கிண்ணம் நிச்சயமாய் நமக்குத்தான்....
இலங்கை அணியும் அப்பப்ப பாகிஸ்தான் போல காலை வாரிவிடுவது தான் கொஞ்சம் கலங்க வைக்குது.....

Ashwin-WIN said...

cricket+Life=????
http://ashwin-win.blogspot.com/2009/12/blog-post_19.html

மனோரஞ்சன் said...

//அதிரடி மன்னன் (முன்னாள் என்று சொல்வது தான் பொருத்தமோ??) சனத் ஜெயசூரிய...//
உண்மை தான் அண்ணா, ஜெயசூரியவின் பங்களிப்பு இல்லாமலே 300,400 அடிப்பது பலரை வாய்மூட வைத்திருக்கும். ஆனால் என்ன, அரவிந்த, சமிந்த வாஸ் என‌ கழட்டிவிடப்பட்டோர் வரிசையில் சனத் போன்றொரு Veteran இணைந்துக் கொள்ளப்போகும் அபாயத்தை தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
சனத், போட்டுத்தாக்கி விட்டு ஒதுங்கி கொள்ளுங்கள், நீங்களாகவே pls...!

Anonymous said...

மத்தியூசிடம் வயதுக்கு மீறிய பக்குவம் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் உடம்பைத் தேற்றினால் 130-140களில் பந்தும் வீசி அருமையான சகலதுறை வீரராகலாம். (அவரின் களத்தடுப்பைப் பற்றிக் கதைக்கவும் வேண்டுமா? அசுரத்தனம்). டில்ஷானின் மறுபிறவி அருமையாக இருக்கிறது. இந்தியா முதல் மூன்று அணிகளுக்குள் இருக்கவே தகுதியில்லை. துடுப்பாட்டம் தவிர வேறு எதுக்குமே லாயக்கில்லை

Anonymous said...

ஸ்ரீலங்கா ஜெயுக்கும் பொது மட்டும் பதிவு எழுதினால் மட்டும் பத்தாது
கட்டாக்கில் மூன்றாவது ஆட்டத்தில் தோற்ற பின்பும் எழுத வேண்டும் லோஷன்

யோ வொய்ஸ் (யோகா) said...

congrats for 300 followers

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner