March 05, 2010

தடுமாறும் தமிழர் தரப்பு - தேர்தல் பார்வை



இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாள் குறித்து,வேட்புமனுக்கள் தாக்கல் செய்து, வேட்பாளர்களுக்கான இலக்கங்களும் வழங்கப்பட்டு விட்டன.
இப்போது இலக்கங்களுடன் தங்களுக்கு என் வாக்களிக்க வேண்டும் என ஏட்டிக்குப் போட்டியாக எல்லா வேட்பாளர்களும் கூவி,கோரி வருகின்றனர்.

வீட்டைக் கட்டிப்பார். கல்யாணம் செய்துபார் என்று சொல்வார்கள். ஆனால் அரசியலில் இருந்துபாருங்கள்..
கூட்டணி,கட்சி அமைத்துப்பார் தேர்தலில் வாக்குக் கேட்டுப்பார் என்று சொல்வீர்கள்.

அப்படியொரு அவசரம்,தடுமாற்றம்,கூட்டல் கழித்தல் லாபக் கணக்கு..

தேசிய, ஜனநாயக,மக்கள்,பொது,ஐக்கிய,தமிழ். இப்படி ஏதாவது சொற்களை தேடி எடுத்து இட்டுக்கட்டிய ஏராளமான கட்சிகள் இம்முறை தேர்தலில்.சாதாரண வாக்காளன் ஒருவனுக்கு யார் எந்தக் கட்சியில் என்று மகா குழப்பம்.

ஒப்பீட்டளவில் தமிழர் பிரதேசங்களில் தான் வேட்பாளர்களும்,கட்சிகளும்,சுயேச்சைக் குழுக்களும் இம்முறை அதிகம் போட்டியிடுகின்றார்கள்/போட்டியிடுகின்றன.
கிடைக்கும் அற்ப சொற்ப வாக்குகளுக்காகவா இத்தனை முட்டல்,மோதல் என்று கேட்டால், இதற்குள்ளே பல மாயாஜாலங்கள் புதைந்து கிடப்பது தெளிவு.

கடந்த முறை தமிழர்களின் பூரண ஆதரவோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிடைக்கக்கூடிய அத்தனை ஆசனங்களையும் அள்ளிக் கொண்டு போனவிதம் கண்டு அன்றே அனைவருக்கும் ஒரு அரசியல் கனவு இருந்திருக்கும்.தகுந்த வேளைக்காக காத்திருந்தவர்களுக்கு இப்போது புலிகளும் இல்லை. யார்வேண்டுமானாலும் எதையாவது கொள்கை எனச் சொல்லி வாக்குக் கொள்ளை இடலாம் எனும்நிலையில் அனைவருமே குதித்துள்ளார்கள்.

எனக்குத் தெரிந்தவரை நான் அறிந்த பத்துப் பேராவது வெளிநாடுகளிலிருந்து வந்து இம்முறை பல்வேறு கட்சிகளின் பெயரிலும் சுயேச்சைக் குழுக்களிலும் யாழ்ப்பாணம்,வவுனியா,திருகோணமலை ஆகிய இடங்களில் தேர்தலில் நிற்கின்றனர்.
ஏன் எனக் கேட்டபோது இது தான் தருணமாம். குறுக்கு வழியில் சுலபமாகப் பணம் உழைத்துக்கொள்ள தேர்தலைப் பயன்படுத்துகிறார்கள்.

இவர்கள் எல்லாம் யார் என்றே தெரியாமல் எத்தனை வாக்குகளை மக்கள் வழங்கப் போகிறார்கள்?

சின்னங்கள் போதாமல் பழங்கள்,மிருகங்கள் எல்லாம் இம்முறை தேர்தல் ஆணையகத்தால் வழங்கப்பட்டுள்ளன.
அம்பாறையில் நான்கு அடி வாக்கு சீட்டாம்.
மக்களின் வாக்குகள் சிதறி,பிரதிநிதித்துவம் குறைவதைப் பற்றியெல்லாம் இவர்கள் யாரும் கவலைப்படப் போவதில்லை. தப்பித் தவறிக் குருட்டு அதிர்ஷ்டத்தில் தமக்கு ஒரு ஆசனம் கிடைத்தால் போதும் என்பதே இந்த 'திடீர்' வேட்பாளர்களின் நோக்கமெல்லாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஐந்து வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பலருக்கு இம்முறை தேர்தலில் அந்தக் கூட்டமைப்பு சார்பாக தேர்தல் வாய்ப்புக் கிடைக்காததால் இன்று அவர்கள் தனி வழி கண்டு இறங்குகிறார்கள்.
ஆசன ஆசை தான் கரணம் என்று யாராவது சொல்லிவிடுவார்களோ என்று அதற்கு ஏராளமான கொள்கை விளக்க சப்பைக்கட்டுகள் வேறு.

இவ்வளவு காலமும் மக்களுக்காக என்று இவர்கள் செய்தவற்றைப் பட்டியல்போட சொல்லுங்கள்.ஒரு மண்ணும் இல்லை.வெளிநாட்டில் வாழும் இவர்கள் வால்கள் தவிர இலங்கையில் ஒருவரும் இவர்கள் பற்றி அக்கறைப்படப் போவதில்லை. யார்க்கு வாக்களிக்கிறார்களோ இல்லையோ மக்கள் பத்மினி,கஜேந்திரன்,கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற இந்த நாற்காலி நோக்கர்களை புறக்கணிக்க வேண்டும்.

அடுத்து இவ்வளவு காலமும் மக்கள் மீது எள்ளளவும் அக்கறையில்லாமல் இப்போது மக்கள் துயரம் கண்டு பொறுக்கமுடியாமல் களம் குதித்திருப்போர்.

இதில் பலர் வாரிசுகள்,இன்னும் சிலர் ஊதுகுழல்கள், சிலர் வாக்குப் பிரிக்கவென்றே களம் குதித்திருப்போர்.
இவர்களை வாக்களர் இனம் கண்டு பிரதிநிதித்துவம் சிதறிப் போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.இது வரலாற்றுக் கடமை அப்படி இப்படியென்று நானும் கூறவரவில்லை.

எனினும் கள்ளர்களில் நல்ல கள்ளர் யாரென்பதே இப்போது எம்மக்கள் முன்னுள்ள கேள்வி.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது களம் இறக்கியுள்ளவர்களில் இதுவரை கறைபடாதவர்கள்,மக்களிடம் நற்பெயர் பெற்றவர்கள் பலர் உள்ளார்கள்.
தண்ணீரை ஒதுக்கி பால் பருகுவதே எம் கடமை.
இறுதியாக த.தே.கூ வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் (இதை இவ்வாறு சொல்லமுடியுமா தெரியவில்லை) தேர்தலின் பின்னரான தமது அரசியல் தீர்வுத் திட்டமாக 2002 ஆம் ஆண்டு அரசும் புலிகளும் இணங்கிய ஒஸ்லோ பிரகடனத்தை முன்னிறுத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கும் ஒஸ்லோ பிரகடனத்துக்குமிடையில் எவ்வளவு தூரம் என யாராவது கேட்டல் அவர்களும் விழிப்பார்கள்.ஆனாலும் முப்பது வருடகாலத் தழும்புகள் சொல்லும் பாடம்,இப்போதைக்கு இது போதும் என்பதே.

எனினும் பொறுப்பை நேரடியாகத் தலையில் சுமக்காமல் தேர்தலில் வெற்றிபெற்ற தம் கூட்டமைப்பினர் மீதி விடயங்களைத் தீர்மானிப்பர் என தலைவர் சம்பந்தன் மேலும் சொல்லியுள்ளார்.

இவ்வளவாவது தெளிவாக வந்தார்களே என நாம் கொஞ்சம் ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்.

இவர்கள் இணைந்த கட்சி அல்லது அவசரமாகப் பெயர் சூட்டப்பட்ட தேர்தல் கூட்டுக்கு தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணி எனப் பெயர் சூடிக் களம் இறங்குகிறார்கள்.இவர்கள் என் தனியாகப் போட்டியிடுகின்றார்கள் என்ற காரணம் எம் எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்தாலும் இவர்கள் சொல்வது த.தே.கூ அடிப்படிக் கொள்கை,தமிழ்த் தேசியம் போன்றவற்றில் இருந்து தடம் புரண்டுவிட்டது. இதனாலேயே வட்டுக்கோட்டை தீர்மானத்தினை முன்வைத்து தாம் களம் இறங்குகிறோம்.

இவ்வளவுகாலமும் இந்த ஞானம் எங்கே போனது?
மக்களுக்காக இவர்கள் செய்தது என்ன? த.தே.கூ விலிருந்து இவர்கள் விலகியது அல்லது விலக்கப்பட்ட பிறகே இது தோன்றியதா?

இவ்வளவு காலமும் தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டை தீர்மானம், மக்கள் தந்த ஆணை என்று எம்மவரை உசுப்பேற்றி வாங்கித் தந்தவை காணாதா?

மேலும் சிலர் அரசுடன் ஐக்கியமாகி இம்முறை தேர்தல் களம் காண்கின்றனர்.
இவர்களைக் கடந்த முறை தேர்தலில் போட்டியிட வைத்தவர்கள் நல்ல காலம் இல்லை.மக்களே எமக்குத் தேவை.கொள்கைகள் கொடி கட்டிப் பறக்கின்றன.

ஜனாதிபதியாகும் கனவில் தனியாக நின்ற சிவாஜிலிங்கமோ இடதுசாரிகளுடன் ஐக்கியமாகி இம்முறை விட்டேனா பார் என நிற்கிறார்.
ஆனால் அவர் இடது சாரிகளுக்கும் ஆப்பு வைப்பார் போலத் தெரிகிறது.

அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் இலங்கையில் இருநாடுகள் இருக்கின்றன. அதில் ஒன்று தமிழருக்கு சொந்தமானது என வீர கோஷம் எழுப்பியிருக்கிறார்.எல்லாம் நடந்து கடந்து போன பிறகுமா?
யாவரை இலங்கையில் சுப்பிரமணிய சுவாமி என நாம் கருதுவதில் சந்தேகமில்லையே..

மந்தைகள் போல ஆகிவிட்டது தமிழர் தம் பிரதிநிதிகளின் நிலை. இதனால் தான் புலிகள் தாம் இருக்கும்வரை ஜனநாயகம் என்பதை முழுமையாகத் திறந்துவிடாமல் இறுக்கி வைத்தார்களோ?

தேர்தல் முடிந்த பிறகு தமிழருக்கான அரசியல் தீர்வுத் திட்டம் பற்றி வெற்றி பெறும்(அதிக உறுப்பினர்களைப் பெறும்) தமிழ் தரப்போடு பேசுவதாக ஜனாதிபதி கூறியிருக்கும் நிலையில் ஒரு பலமான தரப்பாக தமிழ்த் தரப்பு நாடாளுமன்றம் செல்ல வேண்டியது அவசியமாகிறது. கடந்த முறை 22 பேரோடேயே ஒன்றும் செய்ய முடியாத நிலை மாறி, இம்முறை சிதறிக்கிடக்கும் தமிழ்க் கட்சிகள் எவ்வாறு ஒன்றாகக் கோரிப் பெறப்போகின்றன என்ற கேள்வி அச்சத்தையும் எமது எதிர்காலம் குறித்த பெரியதொரு இருள் பாதையையும் காட்டி நிற்கிறது.

மக்கள் சரியாக யோசித்து தீர்மானிப்பார்களா?

முன்பு பரவலாகப் பேசப்பட்டது போல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் த.தே.கூ சேர்ந்து போட்டியிடும் என்பதை நான் எப்போதும் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை.
காரணம் தர்க்க ரீதியாக நிறைய சிக்கல்கள் ஆசனப் பங்கீட்டில் இருந்திருக்கும்.

அதைவிட ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ.ல.மு.கா வுக்கு முஸ்லிம் மக்கள் வழங்கிய ஆணை இங்கே குறிப்பிடத்தக்க ஒன்று.

அதற்குப் போட்டியாகவும்,அதிலிருந்தே பிரித்தெடுக்கப்பட்டதாகவும் கிளம்பிய அநேகமான முஸ்லிம் கட்சிகளை முஸ்லிம் வாக்காளர்கள் நிராகரித்து விட்டார்கள்.

இப்போது அரசாங்கமும் ஜனாதிபதியும் வாக்குகளைப் பிரித்தாளும் சூழ்ச்சியென்ற ஆயுதத்தைக் கையில் எடுத்திருப்பதன் முழு வெளிப்பாடே
அம்பாறையில் 66 கட்சிகள்&குழுக்கள், மட்டக்களப்பில் மொத்தமாக 45 ..
இன்னொரு வழியும் உண்டு.. அதுதான் கடந்த தேர்தலின் பின் செய்தது போல அமைச்சுப் பதவி காட்டி ஆட்கள் ஒவ்வொருவராகப் பறித்தெடுத்தது..

இந்த சூழ்ச்சியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இருவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க.. அடுத்தவர் ஸ்ரீ.ல.மு.கா தலைவர் ரவுப் ஹக்கீம்.

இதனால் தான் இம்முறை தேர்தலுக்குப் பின் யாரும் கட்சி மாறிவிடக் கூடாதென ஐ.தே.க தலைவர் ரணில் தம் கட்சிக்காரரிடம் முற்கூட்டியே கடிதங்களைப் பெற்றுள்ளார். பட்டறிவல்லவோ..

எனினும் அண்மயில் வீடியோவினால் பிரபலமாகியிருக்கும் நித்தியானந்தம் போல இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 'கதவைத் திற காற்று வரட்டும்' என்கிறார்.

அதாவது யார் வேண்டுமானாலும் தம்முடன் வந்து சேரலாம்..அதுபோல தேர்தலுக்குப் பிறகு யார் வேண்டுமானாலும் பிரிந்து,விலகி செல்லலாம்..
அருமையான கொள்கையல்லவோ?

கட்சி,கொள்கை பார்த்து வாக்களித்தவர்கள் எல்லாம் இளிச்சவாயர்களா?

இன்னும் நிறைய எழுத வேண்டி இருந்தாலும் பதிவின் நீளம் கருதிப் பிறிதொரு பகுதியாகத் தருகிறேன்.

அந்தப் பகுதியில் கொழும்பில் உள்ள தேர்தல் குழப்பங்கள், மலையக மயக்கங்கள் பற்றியும் பார்க்கலாம்.


28 comments:

Nimalesh said...

This is gonna be waste ever election to be seem likes coz lot's nominations???? wonder hoe many tamil MP'S will be elected??????? dat's the million doller question???????????

யோ வொய்ஸ் (யோகா) said...

கடைசியில் எமக்கு கிடைக்க போவது எதுவுமில்லை

King Viswa said...

இந்த மாதிரி தேர்தல் வேளைகளில் எங்கள் தமிழகத்தில் நடப்பதை பார்த்து பல உலக அரசியல்வாதிகள் கற்றுகொல்லம் - வோட்டுகளை எப்படி "வாங்குவது" என்று.

Anonymous said...

oru aayutham epawum pin mandaiya kuri vecha than tamilargal ondrupaduwanga. apdi illati tamilar pradhinithithuwam kastam than

நிரூஜா said...

ம்...! யதார்த்ததின் ஆழம் புரிகிறது அண்ணா. எப்போது தான் நமக்கென்று ஒரு காலம் வருமோ? தற்போதைய சூழ்நிலையில் மக்கள் எவ்வாறான முடிவுகளை எடுக்க போகின்றார்களோ?

Pilot said...

sry for typing in eng. but while agreeing most of ur comments, i feel kajendrakumar ponnambalam is somewhat genuine but he doesnt have enough plans to major win-over. jaffna ppl hav a soft view on him ref - history. arguments vetween tna and congress wil lead to a good spectrum of tamil politics i presume. having said that imbuttu payaluhalayum amukki wachirunthawar naa VP enthaa periya aalu da saamiyov....

Anonymous said...

அண்ணா,நல்ல பதிவு,இனியும் தமிழ் தேசியம்,சுயஉரிமை என கதைகிறதை விட்டுத்து தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு வென்ற பிறகு அரசாங்கத்துடன் சேர்ந்து அமைச்சு பதிவிகளை கட்டாயம் பெற வேணும் அப்பதான் பாதிக்கபட்ட எங்களின் மக்களுக்கு ஒரு சில உதவியை ஆவது செய்ய முடியும்.வெளிநாடுகளில் இருந்து கொண்டு தனி நாடு தனி உரிமை என கத்துவது சுலபம் ஆனா இஞ்ச நாங்கள் சின்ன விடையங்களுக்கு கூட வேற்று இன,மொழி அமைச்சர்களிடம் கையேந்த வேண்டி இருக்கு.தமிழ் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் சேர்ந்தால் மக்களிடம் அன்னியப்பட்டு உள்ள பல ஓட்டுநிகளையும் வெளியேற்றவோ அல்லது பலமிலக்கவோ செய்யலாம்

வான்நிலவன் said...

annna,kadasi comment naan than adichan,bt name poda muthal publish agidduthu,sry 4 tht

வான்நிலவன் said...

annna,kadasi comment naan than adichan,bt name poda muthal publish agidduthu,sry 4 tht

Anonymous said...

//தேர்தல் முடிந்த பிறகு தம்ழருக்கான அரசியல் தீர்வுத் திட்டம் பற்றி வெற்றிபெற்ற தமிழ் தரப்போடு பேசுவதாக ஜனாதிபதி கூறியிருக்கும்//

.........?????????????????????????????????????????????????

ARV Loshan said...

Nimalesh said...
This is gonna be waste ever election to be seem likes coz lot's nominations???? wonder hoe many tamil MP'S will be elected??????? dat's the million doller question???????????//

exactly .

==================

யோ வொய்ஸ் (யோகா) said...
கடைசியில் எமக்கு கிடைக்க போவது எதுவுமில்லை//

ஏன்? அல்வா?? காத்து நிறையப் பூ???

ARV Loshan said...

King Viswa said...
இந்த மாதிரி தேர்தல் வேளைகளில் எங்கள் தமிழகத்தில் நடப்பதை பார்த்து பல உலக அரசியல்வாதிகள் கற்றுகொல்லம் - வோட்டுகளை எப்படி "வாங்குவது" என்று.//

அதென்றால் சரி தான்.. தமிழகம் தானே எல்லா விதத்திலும் எங்களுக்கு கற்று தருவது..

ஆனால் இப்போது எங்களிடமும் பல மலை முழுங்கிகள் இருக்கிறார்கள்.
============

Anonymous said...
oru aayutham epawum pin mandaiya kuri vecha than tamilargal ondrupaduwanga. apdi illati tamilar pradhinithithuwam kastam தன//



எந்தப் புண்ணியவானோ.. சரியாச் சொன்னீங்க.. நம்மவங்களுக்கு ஒரு விதமான சர்வாதிகாரம் தான் சரி. திறந்துவிட்டால் ஆளுக்கொருபக்கம் நாறடிச்சிடுவோம்

ARV Loshan said...

நிரூஜா said...
ம்...! யதார்த்ததின் ஆழம் புரிகிறது அண்ணா. எப்போது தான் நமக்கென்று ஒரு காலம் வருமோ? தற்போதைய சூழ்நிலையில் மக்கள் எவ்வாறான முடிவுகளை எடுக்க போகின்றார்களோ?//

அது தான் எல்லோருடைய கவலையும்.. நன்,நீங்கள் என்று ஒவ்வொருவராகத் திருந்துவோம்.. சமூகம் தானைத் திருந்தும்.



===================



Pilot said...
sry for typing in eng. but while agreeing most of ur comments, i feel kajendrakumar ponnambalam is somewhat genuine but he doesnt have enough plans to major win-over. jaffna ppl hav a soft view on him ref - history. arguments vetween tna and congress wil lead to a good spectrum of tamil politics i presume. having said that imbuttu payaluhalayum amukki wachirunthawar naa VP enthaa periya aalu da saamiyov....//

ம்ம்.. உண்மை.. ஆனால் அந்த ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியும் ஒன்றையும் செய்து கிழிக்கவில்லையே..என்ன வாதம் நடந்து என்ன.. மக்கள் சரியாகப் புரிந்துகொள்வார்களா என்பதும் என்ன தெளிவு கிடைக்கும் என்பதுமே கேள்வி.

இப்போது அவர் பற்றி அவர் வெற்றிடம் பற்றி எல்லோருக்கும் புரியும்.

ARV Loshan said...

Anonymous said...
அண்ணா,நல்ல பதிவு,இனியும் தமிழ் தேசியம்,சுயஉரிமை என கதைகிறதை விட்டுத்து தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு வென்ற பிறகு அரசாங்கத்துடன் சேர்ந்து அமைச்சு பதிவிகளை கட்டாயம் பெற வேணும் அப்பதான் பாதிக்கபட்ட எங்களின் மக்களுக்கு ஒரு சில உதவியை ஆவது செய்ய முடியும்.வெளிநாடுகளில் இருந்து கொண்டு தனி நாடு தனி உரிமை என கத்துவது சுலபம் ஆனா இஞ்ச நாங்கள் சின்ன விடையங்களுக்கு கூட வேற்று இன,மொழி அமைச்சர்களிடம் கையேந்த வேண்டி இருக்கு.தமிழ் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் சேர்ந்தால் மக்களிடம் அன்னியப்பட்டு உள்ள பல ஓட்டுநிகளையும் வெளியேற்றவோ அல்லது பலமிலக்கவோ செய்யலாம்

March 5, 2010 3:03 PM


வான்நிலவன் said...
annna,kadasi comment naan than adichan,bt name poda muthal publish agidduthu,sry 4 தட//

இது எல்லோருக்கும் விளங்கனுமே..ஆனால் எதிர்ப்பரசையலும் இப்போது பயனில்லை.அரசோடு முழுக்க இணங்கிச் செல்வதும் பயனில்லை.எனவே தந்திரோபாய யுக்தி ஒன்று தேவை.

ARV Loshan said...

Anonymous said...
//தேர்தல் முடிந்த பிறகு தம்ழருக்கான அரசியல் தீர்வுத் திட்டம் பற்றி வெற்றிபெற்ற தமிழ் தரப்போடு பேசுவதாக ஜனாதிபதி கூறியிருக்கும்//

.........?????????????????????????????????????????????????//

கருத்து மயக்கம் தந்த வசனம் தான்,. இப்போது சரியாக மாற்றி விட்டேன்.. நன்றி சுட்டிக் காட்டியமைக்கு

EKSAAR said...

நாடாளுமன்றம் என்ற சொற்பிரயோகம் இங்கு பாவிக்கப்பட்டது தவறு என கருதுகிறேன். இந்தியாவில் லோக்சபா போல் இங்கு பாராளுமன்றம். பெயர்களுக்கு அர்த்தம் தேடவேண்டிய அவசியமில்லையே. (இன்னும் சூரியன் பாதிப்பு போகலையா? )

அடுத்து பொன்சேக்கா ஜனாதிபதிதேர்தலில் யாழ்ப்பாணத்தில் பெற்ற வாக்குகள் ததேகூ இன் வாக்குகள் என கருதுவதும் தவறு. அது மஹிந்தவுக்கு எதிரான வாக்குகள். பொன்சேக்காவுக்கு ஆதரவான வாக்குகள் அல்ல. ஆயினும் அவ்வாக்குகளில் பெரும்பகுதியை ததேகூ, அரசுக்கு ஆதரவானதல்ல என்ற காரணத்திற்காக பெறக்கூடும்.

//மந்தைகள் போல ஆகிவிட்டது தமிழர் தம் பிரதிநிதிகளின் நிலை.//
அதுவும் ஜனநாயக மரபுதான். காலப்போக்கில் சரிவரும். இந்த வாக்கு பிரிப்பின் மூலம் ஆயிரம் வாக்குகளை பெற்றவர்களும் பிரதிநிதித்துவத்தை வெல்லலாம். வடக்கை பொறுத்தவரை வாக்கு பிரிப்பு பிரச்சினை அல்ல. கிழ்ழக்கில் பிரியும்போதுதான் தமிழ் பேசும் மக்கலின் பிரதிநிதித்துவம் குறைந்து பெரும்பான்மை பிரதிநிதிகளுக்கு வாய்ப்பாக மாறும்.

//தமிழ் தரப்போடு பேசுவதாக ஜனாதிபதி கூறியிருக்கும் நிலையில் //
இதே வாக்குறுதி அடுத்த தேர்தலிலும் வரும் பாருங்கள்.

மலையகத்திற்கு என்ன பிரச்சினை - ரங்கா வந்துட்டாரே? இனி மலையகம் ஆகும்.

தர்ஷன் said...

//ஜனாதிபதியாகும் கனவில் தனியாக நின்ற சிவாஜிலிங்கமோ //

இதுக்கு பேர்தான் குசும்போ

//அந்தப் பகுதியில் கொழும்பில் உள்ள தேர்தல் குழப்பங்கள், மலையக மயக்கங்கள் பற்றியும் பார்க்கலாம்.//

எதிர் பார்க்கிறேன்.

புல்லட் said...

அருமையான அரசியல் ஆய்வு .. அம்பாறையில நாலடி எண்டால் யாழ்ப்பாணத்தில அடுத்தமுறை பத்துக்கட்டு லிப்கோ டிக்சனறி மாதிரி அடிப்பாங்கள் பாருங்களன்..

ஆதிரை said...

எதிர்பார்க்கப்பட்ட பதிவு. நல்லதொரு ஆய்வு.

//Pilot said...
sry for typing in eng. but while agreeing most of ur comments, i feel kajendrakumar ponnambalam is somewhat genuine but he doesnt have enough plans to major win-over. jaffna ppl hav a soft view on him ref - history. arguments vetween tna and congress wil lead to a good spectrum of tamil politics i presume. having said that imbuttu payaluhalayum amukki wachirunthawar naa VP enthaa periya aalu da saamiyov....//


லோஷன் அண்ணா தெரிவித்த கருத்துடன் ஒத்துப் போகின்றேன். கஜேந்திரகுமாருக்கான வாக்குகள் அவருக்கானதாக இருந்தது என்று சொல்வதை விட, அவர் தந்தை மீதானதாகவும், இலங்கைத் தமிழ்க் காங்கிரஸுக்கானதாகவும் இருந்தது என்பதே உண்மை.

யாழ்ப்பாணத்திலிருந்து ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராகிய இவரின் தாயகமக்கள் சார்ந்த நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இருப்பின், இத்தடவையும் ஆசனத்தைப் பெறுவதில் சிக்கலிருக்காது. ஆனால்..?

மற்றும்படி, இவர் த.தே.கூ. இலிருந்து பிரிந்து சென்றமைக்கு கூறப்படும் காரணங்கள் அபத்தமானவை - சுயநலமிக்கவை. இவருக்கும் த.தே.கூ. இற்குமான விவாதம் கூட ஒரு வகையில் இரு தரப்பும் எதிர்க்காற்றை எதிர்த்து எச்சில் துப்புவதைப் போன்றது.

கன்கொன் || Kangon said...

ஓ! அரசியல் பதிவா?
நல்ல பதிவு... ;)

என்ன செய்ய அண்ணா...
எங்கட சனம் உந்தக் கள்ளச் சாமியார்களிற்ற மாட்டிக் கிடக்கிறதப் போல உந்த நாடாளுமன்ற/பாராளுமன்ற உறுப்பினர்களிற்றயும் மாட்டிக் கிடக்குது...

சனமும் உந்தப் போட்டியிடுற எல்லாருக்கும் குறை வைக்காம தங்கட வாக்குகள பிரிச்சுப் போடப்போகுது, எல்லாம் கோவிந்தா தான்.....

உந்தக் கொடுமைக்காககத்தான் நான் இன்னும் வாக்களிக்கப் போகவே இல்ல... :D :D :D

ஸ்ரீகாந்தா என்ன செய்யிறார்? சிவாஜிலங்கத்தோட அவரும் செர்ந்து நிண்டுதானே வாங்கப் பாத்தவ? அதாவது மக்களிற்ற ஜனாதிபதித் தேர்தலில வாக்கு வாங்கப் பாத்தவ?

கன்கொன் || Kangon said...

//நாடாளுமன்றம் என்ற சொற்பிரயோகம் இங்கு பாவிக்கப்பட்டது தவறு என கருதுகிறேன். இந்தியாவில் லோக்சபா போல் இங்கு பாராளுமன்றம். //

அதுக்குப் பெயர் பாராளுமன்றம் என்று யார் வைத்தது?
தமிழ்பேசுபவர்களிடம் சர்வசன வாக்கெடுப்பு நடாத்தி அது பாராளமன்றம் என்று முடிவெடுத்தார்களா?

என்ன கொடுமை சேர் இது... இப்பிடித்தான் நீங்களும் கேக்கிறனியள் அர்த்தமே இல்லாம கேள்வியள்...

அதுசரி,
லோஷன் அண்ணா! பாராளுமன்றமா நாடாளுமன்றமா சரி?
பார்+ஆளும்+மன்றம் என்றால் பூமியை ஆளும் மன்றம் என்பது தானே?
இது நாட்டை மட்டுமே ஆளுகிறது என்பதால் எப்படி பாராளுமன்றம் என்ற சொல் பாவனையில் வந்தது?

Anonymous said...

பெயர்களுக்கு கருத்து தேடும் அறிவுஜீவியே, அப்படியாயின் இனி யாருக்கும் சந்திரன் என்று பெயர் வைக்க முடியாதோ? (சந்திரன் = நிலவு) இன்னும் உதாரணம் சொல்லி எனத் நேரத்தை வீணாக்க எனக்கு அவசியமில்லை. grow up men

ARV Loshan said...

என்ன கொடும சார் said...
நாடாளுமன்றம் என்ற சொற்பிரயோகம் இங்கு பாவிக்கப்பட்டது தவறு என கருதுகிறேன். இந்தியாவில் லோக்சபா போல் இங்கு பாராளுமன்றம். பெயர்களுக்கு அர்த்தம் தேடவேண்டிய அவசியமில்லையே. (இன்னும் சூரியன் பாதிப்பு போகலையா? )//

தமிழில் நாடாளுமன்றம் என்ற சொற்பதமே சரியானது.. நாட்டை ஆளும் மன்றம். parliament என்பதன் தமிழாக்கமாக பாராளுமன்றத்தை நாம் இலங்கையில் பாவிப்பது தவறு எனப் பலர் பல இடங்களில் எடுத்துக் காட்டியும் எம்மவரில் பலர் இன்னும் திருத்தவில்லை.
லோக்சபா என்பது வேறு.. அவர்கள் தமக்கே உரியதைப் பயன்படுத்துவதை இங்கே உதாரணமாகக் கொள்வது தவறு.

சூரியன் பாதிப்பென்றில்லை. வெற்றியிலும் நாடாளுமன்றமே சரி.

அடுத்து பொன்சேக்கா ஜனாதிபதிதேர்தலில் யாழ்ப்பாணத்தில் பெற்ற வாக்குகள் ததேகூ இன் வாக்குகள் என கருதுவதும் தவறு. அது மஹிந்தவுக்கு எதிரான வாக்குகள். பொன்சேக்காவுக்கு ஆதரவான வாக்குகள் அல்ல. ஆயினும் அவ்வாக்குகளில் பெரும்பகுதியை ததேகூ, அரசுக்கு ஆதரவானதல்ல என்ற காரணத்திற்காக பெறக்கூடும்.//

இது முட்டாள் தனமான வாதம்.அதாவது த.தே.கூ வுக்கு வாக்குகள் இல்லை என்கிறீர்களா? நீங்கள் பிடிப்பதால் எல்லாக் கால்களும் மூன்றாகிவிடாது. ;)



//மந்தைகள் போல ஆகிவிட்டது தமிழர் தம் பிரதிநிதிகளின் நிலை.//
அதுவும் ஜனநாயக மரபுதான். காலப்போக்கில் சரிவரும். இந்த வாக்கு பிரிப்பின் மூலம் ஆயிரம் வாக்குகளை பெற்றவர்களும் பிரதிநிதித்துவத்தை வெல்லலாம். வடக்கை பொறுத்தவரை வாக்கு பிரிப்பு பிரச்சினை அல்ல. கிழ்ழக்கில் பிரியும்போதுதான் தமிழ் பேசும் மக்கலின் பிரதிநிதித்துவம் குறைந்து பெரும்பான்மை பிரதிநிதிகளுக்கு வாய்ப்பாக மாறும்.//



ஆமாம்.. நல்ல ஜனநாயகம். பணம் எங்கே எப்படி விளையாடுகிறது என்பது பிரசாரம் நடக்கும்போது தெரியும்.அம்பாறையிலும் அப்படித் தானா?

வடக்கில் வாக்குப் பிரிப்பு ஒற்றுமையான குரலைக் குன்றவைக்கும்.உங்களுக்கு விளக்கம் சொல்லி என்னாவது? விளங்கினாலும் விளங்கவில்லை என்று தானே சொல்வீர்கள்.

நேற்று நிருபமா ராவ் அடித்த நகைச்சுவைக்கு (வடக்கு,கிழக்கில் ஆயிரக்கணக்கானோர் போட்டியிடுவது ஜனநாயகத்தின் மீதான ஆர்வத்தைக் காட்டுகிறது) நீங்கள் தான் அடியெடுத்துக் கொடுத்தவரோ?

//தமிழ் தரப்போடு பேசுவதாக ஜனாதிபதி கூறியிருக்கும் நிலையில் //
இதே வாக்குறுதி அடுத்த தேர்தலிலும் வரும் பாருங்கள்.//

பரவாயில்லையே.. உங்களுக்கும் புரிந்திருக்கிறது.. ;)



மலையகத்திற்கு என்ன பிரச்சினை - ரங்கா வந்துட்டாரே? இனி மலையகம் ஆகும்.//

அவரும் வரட்டுமே. ;) ஜனநாயகம் தானே.. ;)

ARV Loshan said...

தர்ஷன் said...
//ஜனாதிபதியாகும் கனவில் தனியாக நின்ற சிவாஜிலிங்கமோ //

இதுக்கு பேர்தான் குசும்போ //

உண்மையைத் தானே சொன்னேன்.. ஜனாதிபதித் தேர்தலில் நின்றால் ஜனாதிபதியாவது தானே நோக்கம்.. ;)

நான் அப்பாவிங்கோ..



//அந்தப் பகுதியில் கொழும்பில் உள்ள தேர்தல் குழப்பங்கள், மலையக மயக்கங்கள் பற்றியும் பார்க்கலாம்.//

எதிர் பார்க்கிறேன்.//

தருகிறேன்..

=========================

புல்லட் said...
அருமையான அரசியல் ஆய்வு .. அம்பாறையில நாலடி எண்டால் யாழ்ப்பாணத்தில அடுத்தமுறை பத்துக்கட்டு லிப்கோ டிக்சனறி மாதிரி அடிப்பாங்கள் பாருங்களன்..//

ஆகா.. விலகிச்சு.. வருங்கால யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் புல்லட் வாழ்க.. ;)

ARV Loshan said...

ஆதிரை said...
எதிர்பார்க்கப்பட்ட பதிவு. நல்லதொரு ஆய்வு.

//Pilot said...
sry for typing in eng. but while agreeing most of ur comments, i feel kajendrakumar ponnambalam is somewhat genuine but he doesnt have enough plans to major win-over. jaffna ppl hav a soft view on him ref - history. arguments vetween tna and congress wil lead to a good spectrum of tamil politics i presume. having said that imbuttu payaluhalayum amukki wachirunthawar naa VP enthaa periya aalu da saamiyov....//

லோஷன் அண்ணா தெரிவித்த கருத்துடன் ஒத்துப் போகின்றேன். கஜேந்திரகுமாருக்கான வாக்குகள் அவருக்கானதாக இருந்தது என்று சொல்வதை விட, அவர் தந்தை மீதானதாகவும், இலங்கைத் தமிழ்க் காங்கிரஸுக்கானதாகவும் இருந்தது என்பதே உண்மை. //

ஆமாம்.. பாரம்பரிய வாக்கு வங்கி.. முந்தைய தலைமுறை வாக்குகள்.

யாழ்ப்பாணத்திலிருந்து ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராகிய இவரின் தாயகமக்கள் சார்ந்த நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இருப்பின், இத்தடவையும் ஆசனத்தைப் பெறுவதில் சிக்கலிருக்காது. ஆனால்..?//

அதே அதே..

மற்றும்படி, இவர் த.தே.கூ. இலிருந்து பிரிந்து சென்றமைக்கு கூறப்படும் காரணங்கள் அபத்தமானவை - சுயநலமிக்கவை. இவருக்கும் த.தே.கூ. இற்குமான விவாதம் கூட ஒரு வகையில் இரு தரப்பும் எதிர்க்காற்றை எதிர்த்து எச்சில் துப்புவதைப் போன்றது.//

நாறுகிறது


====================

கன்கொன் || Kangon said...
ஓ! அரசியல் பதிவா?
நல்ல பதிவு... ;)//

நன்றி



என்ன செய்ய அண்ணா...
எங்கட சனம் உந்தக் கள்ளச் சாமியார்களிற்ற மாட்டிக் கிடக்கிறதப் போல உந்த நாடாளுமன்ற/பாராளுமன்ற உறுப்பினர்களிற்றயும் மாட்டிக் கிடக்குது...//

இல்லை தம்பி.. இவங்கள் பெட்டர் ;) இன்னும் வீடியோ வரவில்லை/



சனமும் உந்தப் போட்டியிடுற எல்லாருக்கும் குறை வைக்காம தங்கட வாக்குகள பிரிச்சுப் போடப்போகுது, எல்லாம் கோவிந்தா தான்.....

உந்தக் கொடுமைக்காககத்தான் நான் இன்னும் வாக்களிக்கப் போகவே இல்ல... :D :D :த//

அதுக்கு வயசு காணாதெண்டு அர்த்தமில்லை. பதியவில்லை என்று அர்த்தமாம்.. ;)



ஸ்ரீகாந்தா என்ன செய்யிறார்? சிவாஜிலங்கத்தோட அவரும் செர்ந்து நிண்டுதானே வாங்கப் பாத்தவ? அதாவது மக்களிற்ற ஜனாதிபதித் தேர்தலில வாக்கு வாங்கப் பாத்தவ?//



வாக்குகளை பெட்டியிலை அதவாது வாக்குப் பெட்டியில் தானே வாங்கப் பார்த்தவை. இதுக்குள் வேறு அர்த்தம் ஒன்றும் இல்லையே.. ;)

ARV Loshan said...

கன்கொன் || Kangon said...
//நாடாளுமன்றம் என்ற சொற்பிரயோகம் இங்கு பாவிக்கப்பட்டது தவறு என கருதுகிறேன். இந்தியாவில் லோக்சபா போல் இங்கு பாராளுமன்றம். //

அதுக்குப் பெயர் பாராளுமன்றம் என்று யார் வைத்தது?
தமிழ்பேசுபவர்களிடம் சர்வசன வாக்கெடுப்பு நடாத்தி அது பாராளமன்றம் என்று முடிவெடுத்தார்களா?

என்ன கொடுமை சேர் இது... இப்பிடித்தான் நீங்களும் கேக்கிறனியள் அர்த்தமே இல்லாம கேள்வியள்...

அதுசரி,
லோஷன் அண்ணா! பாராளுமன்றமா நாடாளுமன்றமா சரி?
பார்+ஆளும்+மன்றம் என்றால் பூமியை ஆளும் மன்றம் என்பது தானே?
இது நாட்டை மட்டுமே ஆளுகிறது என்பதால் எப்படி பாராளுமன்றம் என்ற சொல் பாவனையில் வந்தது?//



அது தான் நானும் சொன்ன எனக்கு சொல்லப்பட்ட தகுந்த,சரியான விளக்கம்.

தவறை தவறென்று தெரிந்தால் தவிர்க்க வேண்டும்.


====================

Anonymous said...
பெயர்களுக்கு கருத்து தேடும் அறிவுஜீவியே, அப்படியாயின் இனி யாருக்கும் சந்திரன் என்று பெயர் வைக்க முடியாதோ? (சந்திரன் = நிலவு) இன்னும் உதாரணம் சொல்லி எனத் நேரத்தை வீணாக்க எனக்கு அவசியமில்லை. grow up மென்//



என்ன கொடுமை அனானி இது.. ;)

தமிழில் படிக்கவில்லையா நீங்கள்?

காரண,இடுகுறி பெயர்கள் விளக்கம் தெரியுமோ?உண்மைப் பெயரோடு வந்து தர்க்கிக்கலாம்..

என்ன கொடுமை இது மக்கள்ஸ்.. ;)

EKSAAR said...

பாராளுமன்றம் என்பது பெயர். வெற்றி, சூரியன் மாதிரி. அர்த்தம் வேறுதான்.

http://www.parliament.lk/languages/ListContent.do?language=T
என்ற சுட்டியை பார்க்கவும். பாராளுமன்றம் என்றே உத்தியோகபூர்வமாக கூறப்பட்டுள்ளது.

//லோக்சபா என்பது வேறு.. அவர்கள் தமக்கே உரியதைப் பயன்படுத்துவதை இங்கே உதாரணமாகக் கொள்வது தவறு.//

ஏன் வேறு? விளக்கவில்லையே.. சில இடங்களில் அர்த்தத்தை கவனிக்காமல், இங்கு மாத்திரம் அர்த்தம் கவனத்தில் கொள்ளும் மர்மம் என்னவோ?

//அதாவது த.தே.கூ வுக்கு
வாக்குகள் இல்லை என்கிறீர்களா? ;)//

எது சரி என்பது தேர்தல் முடிந்த பின் தெரியும்.

//வடக்கு,கிழக்கில் ஆயிரக்கணக்கானோர் போட்டியிடுவது ஜனநாயகத்தின் மீதான ஆர்வத்தைக் காட்டுகிறது//

ஆம். தேர்தலில் போட்டியிட்டால் மண்டையில் போடும் மரபு இல்லாமல் போனதே பெரிய ஜனநாயகம். :D :D

//வடக்கில் வாக்குப் பிரிப்பு ஒற்றுமையான குரலைக் குன்றவைக்கும்//

ஒற்றுமை இருக்கிறது என்கிறீகளா? what a comedy.. what a comedy :D :D :D

Think Why Not said...

அனபுடன் என்ன கொடும சாருக்கு....

நாடாளுமன்றம் என்பதே சரி....
http://ta.wiktionary.org/wiki/parliament

தமிழ் விக்சனரி என்ற இந்த அகராதியானது, எந்தவொரு நாடு, மதம் சாராத தமிழ் மொழிக்கான குழுமம் ஆகும்...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner