March 12, 2010

தமிழ்ப்படமும், ஒரு தர்மசங்கடமும்




பார்க்கவேண்டும் என்று நீண்ட எதிர்பார்ப்புடன் காத்திருந்து, இலங்கையில் ஒருவாறாகத் திரையிடப்பட்ட தமிழ்ப்படத்தை இலங்கையில் திரையிட்ட முதல்நாளே பார்த்தேன். பலபேரும் cd களில் பார்த்திருப்பார்கள் போலும். பெரிதாகக் கூட்டமில்லை.

ஆனால் வந்திருந்த அனைவருமே தொடக்கத்திலிருந்து முடிவு வரை பெரிதாக சத்தமிட்டு,வாய்விட்டு ரசித்து சிரித்த ஒரு படம்.

தமிழில் எத்தனையோ நக்கல்,நையாண்டி திரைப்படங்கள் வந்திருந்தாலும் கூட, படம் முழுவதுமே வாளி வாளியாக பலரையும் பல தமிழ்த் திரைப்பட போர்முலாக்களையும் வாரி இருக்கும் ஒரு திரைப்படம் இது.

இந்தப் படத்தை நேரில் பார்க்கும் வரை எந்தவொரு விமர்சனத்தையும் வாசிக்காமல் இருந்தபோதும் ஒவ்வொருவிதமாக வந்துசேர்ந்த தகவல்கள் படம் இப்படித்தான் என்பதை உணரவே வைத்திருந்தன.

முதல் காட்சியில் கருத்தம்மாவுக்கு ஆரம்பிக்கும் கடிக்கு இடியென சிரிக்க ஆரம்பித்தவன், தொடர்ந்து வரிசையாக வந்த spoof வகைக் கடிகளை ரொம்பவே ரசித்தேன்.
ஆனால் ரொம்ப எதிர்பார்த்து விட்டேனோ என்னவோ நான் பார்த்த மிக சிறந்த நகைச்சுவை திரைப்படம் என இதை எண்ண முடியவில்லை.
ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு வசனமுமே கடியாகவும் நக்கலாகவும் அமைந்தது தான் காரணமோ தெரியவில்லை.
இல்லையெனில் ஒவ்வொரு காட்சியும் எந்தெந்தப் படங்களை நக்கல் அடித்துள்ளது என யோசித்துக்கொண்டே சிரித்ததால் அப்படி இருந்ததோ தெரியவில்லை.

சிவா அலட்டலில்லாமல் கலக்கி இருக்கிறார்.
ரொம்ப சீரியசாக முன்னைய (?) ஹீரோக்களை நக்கல் செய்யும்போதும் கூட அவர் கண்களிலும்,உதட்டின் ஓரத்திலும் ஒரு நக்கல் பரவிக்கிடக்கிறது.

இயக்குனர் அமுதனின் கடிக்கும் ஆற்றல் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் நாசூக்காக லொள்ளு சபா பாணியில் நக்கலடிப்பதிலேயே தெரிகிறது.

நான் யோசித்துப் பார்த்தவரை தமிழ்ப் படத்திலே நக்கலால் சிக்கி சின்னாபின்னப்படுத்தப்பட்டோர் -
சிம்பு (பேசாமல் விரல்கள் எல்லாவற்றையும் கடிச்சே துப்பிட்டு சும்மா இருக்கலாம்)
விஜய டி.ஆர்.
ரஜினி
விஜய்
விக்ரம்
பாக்கியராஜ்
இயக்குனர் ஷங்கர்
கமல்
அஜித்


கடிக்கப்பட்ட புண்ணியம் பெற்ற திரைப்படங்கள்
கருத்தம்மா,போய்ஸ்,தளபதி, காகினி,கிழக்கே போகும் ரயில்,பாட்ஷா, கந்தசாமி,அண்ணாமலை,சிவாஜி,அபூர்வ சகோதரர்கள், அந்நியன்,நாயகன்,தூள்,நாட்டாமை, மௌன ராகம்,காக்க காக்க,சின்னத்தம்பி,விருமாண்டி,ரன்,கந்தசாமி,மொழி,தசாவதாரம்,வேட்டையாடு விளையாடு, காதலன்,காதலுக்கு மரியாதை, இவை தான் நான் அவதானித்தவை..
(யாருடா அவன் கை தட்டி நக்கல் பண்றது?)

ஒரு காட்சியா இரு காட்சியா .. எத்தனை காட்சியைத் தான் சொல்வது..

நக்கலோ நக்கல் செம நக்கல்..
தமிழ் சினிமாக்களில் காலாகாலமாக இருந்துவரும் ரிப்பீட்டு அபத்தங்களை சகட்டுமேனிக்கு போட்டுத் தாக்கி கைதட்டல்களை வாங்கிக்கொண்டு சிரிப்பலைகளை திரையரங்கெங்கும் எழுப்புகிறார் இயக்குனர் C.S.அமுதன் .
இவரது அடுத்த திரைப்படம் எப்படி இருக்கும் என ஆவலாக எதிர்பார்த்திருக்கிறேன்.

பத்து வயதிலே சைக்கிள் பெடல் சுத்தி பெரியவனாவது, ஒரே சண்டையில் தளபதியாவது, காப்பி சமையலறையிலிருந்து வரும் முன் ஒரு பாடலிலே பணக்காரனாவது (அதிலும் சிவா சிறைச்சாலை,நீதிமன்றம், காவல் நிலையம்.. எல்லாவற்றிலும் மேலாக பிணக் கிடங்கு என்று சிரித்து சிரித்து வயிறு நொந்தே போனது),அப்பா பெயர் தெரியாதவன் என்ற அவமானம் நீங்க குடும்ப மூலம் தெரியப் புறப்படுவது, நீதிமன்றக் காட்சி என்று முன்னைய ஹீரோக்கள் எல்லோரையும் எங்கள் மனம் முன் கோமாளிகளாக்கி விடுகிறது தமிழ்ப்படம்.

இயக்குனர் சங்கரையும் பல காட்சிகளில் போட்டுப் பின்னி இருக்கிறார்.
ஆனால் ரஜினியோ,சங்கரோ,விஜயோ ஏன் சிம்புவோ கூடப் படம் பார்த்தால் கோபப் படுவதற்குப் பதில் சிரிப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.
அவ்வளவும் ரசனையான கிண்டல்.

இனியும் நம் ஹீரோக்கள் பட்டங்கள் வைத்துக்கொண்டு பாட்டுக்களில் தம்மைத் தாமே புகழ்வார்கள்?
சிரிப்பு வராது எமக்கு?

தமிழ்ப்படம் - ரசித்தேன்;சிரித்தேன்.

=====================


எங்கள் அம்மா தனது நண்பிகள் சிலரின் அழைப்பினால் அடிக்கடி அம்மா பகவானின் பஜனைகளுக்கு வாராந்தம் போய் வருபவர்.எனக்கும் தம்பிமாருக்கும் இது கொஞ்சமும் பிடிக்காவிட்டாலும் (கடவுளிலேயே பெரிதாக நம்பிக்கை இல்லாதவன் நான்.. இதுக்குள்ளே) அவருக்கு எப்படியாவது போழுதுபோகட்டுமே என்று ஒன்றும் சொல்வதில்.அவரது நம்பிக்கை அதுவென நாம் எம்பாட்டில் விட்டுவிட்டோம்.
எப்போதாவது சாடை மாடையாக நக்கல் செய்தாலும், அவர் மனம் புண்பட நான் எதுவும் பேசுவதில்லை.

போலி சாமியார்கள் விவகாரம் ஏதாவது வெளிவந்தால் அதுபற்றி அவருக்கு மின்னஞ்சல்களை முன்னகர்த்திவிடுவேன்.அம்மா பகவான் பற்றிய விஷயங்களையும் தான். எனினும் அம்மாவுடன் கடவுள்,பக்தி போன்ற வாதப் பிரதிவாதங்களுக்கு நான் செல்வது கிடையாது.ஏன் தேவையில்லாமல் குடும்பத்துக்குள் குத்து வெட்டு.

நித்தியானந்தாவின் விவகாரம் சூடு கிளப்பியிருந்த கடந்தவாரத்தில் ஒருநாள் அம்மா வீடு போயிருந்தோம்.

அம்மாவின் நண்பியோருவரும் அவர் கணவரும் (இருவரும் அம்மா பகவான் பக்தர்கள்- கொழும்பின் கிளையொன்றின் அமைப்பாளர்கள்)
ஞாயிறு அம்மா பகவானின் ஜன்ம தின நிகழ்ச்சி இருப்பதாகவும் என்னையும் கலந்துகொள்வதொடு அறிவிப்பு செய்யுமாறும் அல்லது பேசுமாறும் கேட்டார்கள்.

எனினும் நான் அவர்களுக்கு மிகத் தன்மையாக அம்மா பகவானோ இல்லாவிடின் எவருமோ யார் மீதுமோ எனக்கு நம்பிக்கை இல்லை என்பதையும், சும்மா நன் அங்கு வருவதை விரும்பவில்லை எனவும் எடுத்துக் கூறி மறுத்துவிட்டேன்.

எனினும் அவர்களை சிறுவயது முதலே தெரியுமென்பதாலும் வீடு தேடி வந்திருந்தார்கள் என்பதாலும் அன்று வெளியிடப்படவுள்ள இறுவட்டையாவது நான் வந்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர்கள் அழைத்தபோது மறுக்கமுடியவில்லை.
எனக்கு அப்போதிருந்த உடல் நலக்குறைவு வேறு காப்பாற்றி விட்டது.

அப்படியிருந்தும் ஐந்து மணித்தியாலங்கள் இருந்த அந்த நிகழ்ச்சியில் சரியாக இறுவட்டு வெளியிடும் நேரத்துக்கு மண்டபத்துக்குள் போய் கவரைக் கொடுத்து இறுவட்டை வாங்கியவுடன் அம்மாவிடமும், அங்கிருந்த அழைத்தவர்களிடமும் சொல்லிவிட்டு ஓடி வந்துவிட்டேன்.

ஆனால் மரியாதை நிமித்தம் நான் உள்ளே நுழைந்ததைக் கண்ட அன்புத் தம்பியொருவர் இன்னாரும் வந்திருக்கிறார் என்று 'பெருமை'யுடன் அறிவிக்க நானும் 'சாரு'வாகிப் போனேனே.. ;)

அடுத்த நாள் வேறு சும்மா இருக்க முடியாமல் ட்விட்டரில் TBCD யின் ட்விட்டை (அதன் ஒரிஜினல் சொந்தக்காரர் கமல்) எடுத்து நான் ட்விட்ட,சும்மா கிடந்த சங்குக் கதையாகிக் கந்தலானது..

" சாமி இருக்குங்கிறவனை நம்பு.., சாமி இல்லைங்கிறவனையும் நம்பு.., ஆனா.. நான் தான் சாமின்னு சொல்லுறவனை மட்டும் நம்பாதே"

யாரோ ஒரு புண்ணியவதி அம்மா பகவான் நிகழ்விலே நான் இறுவட்டு வாங்குவதைப் படம் பிடித்து அதை மூஞ்சிப் புத்தகத்தில் ஏற்றி எனக்கு மூஞ்சியில் கரி பூசி இருந்தார்..
என்ன கொடுமை இது பகவானே..

எனவே இத்தால் சொல்லுவது யாதெனில்.. நான் பக்தனில்லை.. பகவானுமில்லை.. இறுவட்டு வாங்கச் சென்ற ஒரு ஜஸ்ட் விசிட்டர் மட்டுமே..
எனவே என்னைப் பின்பற்றி யாரும் பின்னர் என்னைத் திட்டவேண்டாம்..

அப்பாடா.. ஐந்து நாளாக இருந்த மன சங்கடத்தை இங்கே கொட்டிப் பாரம் இறக்கியாச்சு.. :)



இன்று IPL திருவிழா ஆரம்பிக்குது.. நேரத்தைப் பொறுத்து சிறப்புப் பதிவு வரும்.

17 comments:

sellamma said...

அண்ணா, நானும் நேற்று தான் தமிழ் படம் பார்த்தேன்,,, ரசிக்கமுடியவில்லை ஏனெனில் சிரித்துக்கொண்டேயிருந்தேன்,,,,
தமிழ் படம் என்ற பெயர் கூட ரொம்ப நல்லாகவே பொருந்தியிருக்கிறது,,,
நம்ம ஹீரோக்களை போட்டு வறுத்து எடுத்திருக்காங்க,,,,

///எனவே இத்தால் சொல்லுவது யாதெனில்.. நான் பக்தனில்லை.. பகவானுமில்லை.. இறுவட்டு வாங்கச் சென்ற ஒரு ஜஸ்ட் விசிட்டர் மட்டுமே..
எனவே என்னைப் பின்பற்றி யாரும் பின்னர் என்னைத் திட்டவேண்டாம்..///

என்ன தல,, நீதான்யா வானொலிகளின் கடவுளையா,,,, உன்குரலுக்கும் உன் கருத்துகளுக்கும் நாங்க எல்லாம் ஆண்டாண்டாய் அடிமையையா,,,,

வந்தியத்தேவன் said...

அண்ணே 3 பவுண்ட் கொடுத்து சிடி வாங்கி தமிழ்ப்படம் பார்த்தேன்( கொழும்பிலை என்றால் 80 ரூபாக்கு 5 படங்களுடன் வாங்கியிருக்கலாம்) எது எந்தப் படம் என நினைத்துப் பார்க்கையில் படத்தில் புளோ விடுபட்டுப்போகின்றது ஆனால் கிளைமாக்ஸ் படு சொதப்பல். தசா எந்தக் கட்டத்தில் வருகின்றது.

சொந்தச் செலவில் சூனியம் மூஞ்சிப் புத்தகத்தில் பார்த்தேன் ஹீஹீ. உங்கள் ரசிகர்கள் உங்களுக்குத் தெரியாமலே போட்டோ எடுக்கின்றார்கள்(பாப்பராசிகள்)

ப்ரியா பக்கங்கள் said...

நம்புறம் பகவானே :)

கண்ணியமாக இருக்கும் 10 சுவாமிகளை தாருங்கள் அப்பாவாக்கி காட்டுகிறேன் - நடிகை ரஞ்சிதா

Sayanolipavan said...

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு . .. சிவா தனது அப்பா வை தேடி போகும் போது ஒரு குடும்ப பாட்டு வருமே . அதை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க ...
oomaka siya song la varum scene pattium solunka.. plzz



எல்லாத்தையும் பிளான் பண்ணி செய்றாங்கலோ அந்த படம் பிடித்த புண்ணியவதி .. ..

" -- - - - இறுவெட்டு நிகழ்வில் லோஷன் ""
(நாளை பேப்பர் தம்பி da சொல்லவேணும் இதுதான் பத்திரிகைகளின் தலைப்பு செய்தி

நிரூஜா said...

:)

இரா பிரஜீவ் said...

"தமிழ் சினிமாக்களில் காலாகாலமாக இருந்துவரும் ரிப்பீட்டு அபத்தங்களை சகட்டுமேனிக்கு போட்டுத் தாக்கி கைதட்டல்களை வாங்கிக்கொண்டு சிரிப்பலைகளை திரையரங்கெங்கும் எழுப்புகிறார் இயக்குனர் கண்ணன்."

தலைவா! இயக்குனர் C.S அமுதன் அல்லவா?

"எனவே இத்தால் சொல்லுவது யாதெனில்.. நான் பக்தனில்லை.. பகவானுமில்லை.. "

நாம உங்கட கட்சிதான்!!!

EKSAAR said...

இலங்கை சாரு அவர்களை பின்பற்றி
இதே அறிக்கையை இனி இந்திய பிரபலங்கள் சின்ன சின்ன மாற்றங்களுடன் வெளியிடலாம்..

கன்கொன் || Kangon said...

தமிழ்ப்படம் இன்னும் திரையரங்கில் பார்க்கவில்லை...
ஏன்கனவே 3 முறை பார்த்துவிட்டதால் ஒரு பஞ்சி...
படம் அருமை... :)

எல்லாத்திலயும் கொடுமை எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் அந்த 3 பேரும் சிவாவின் நண்பர்களாக வருவது தான்.. :)


அந்தப் படம் எனக்கு கிடைக்கவே இல்ல?
அத வச்சு ஒரு பதிவு போட்டிருப்பனே? :P :P :P

ஐ.பி.எல் தொடங்குது...
பாப்பம் பாப்பம்...

//என்ன தல,, நீதான்யா வானொலிகளின் கடவுளையா,,,, உன்குரலுக்கும் உன் கருத்துகளுக்கும் நாங்க எல்லாம் ஆண்டாண்டாய் அடிமையையா,,,//

ஐயோ.... இதுக்கு யாரும் ஒரு spoof நிகழ்ச்சி செய்ய மாட்டியளா?
முடியல... :)

புல்லட் said...

தமிழ்ப்படம் அருமை.. ஆனால் விமர்சனம் சற்று பிந்தி விட்டது..

அம்மா பகவான் விடயம் சற்று சாருத்தனமாகவே இருக்கிறது.. பிடிபட்ட கள்ளன் கொள்கை விளக்கம் கொடுத்தது போல...:D

தெரிந்தவர்கள் கேட்டார்கள் என்பதற்காக உங்கள் கொள்கைக்கு தலைகீழான ஒரு பிராடு அமைப்புக்கு சென்று வந்திருக்கிறீர்கள்.. இலங்கையில் பிரபலமான நீங்கள் அங்கு சென்றது அவர்களுக்கு மிகவும் உத்தேவகத்தை அளிக்கக்கூடியது.. :P

சரி விடுங்கள் இனி என்ன செய்வது? நான் எதிர்பார்க்கவில்லை.. :)

யோ வொய்ஸ் (யோகா) said...

நல்லாதானே இருந்தீங்க ஏன் திடீரென அந்த அம்மா பகவான் கிட்ட மாட்டுனீங்க.

தமிழ் படம் போன்று பல ஆங்கில படங்கள் வந்துள்ளன...

Vathees Varunan said...

தமிழ் சினிமா இயக்குனர்கள் நடிகர்கள் இப்படத்தை பார்த்தவிட்டாவது திருந்தினால் நல்லது. அந்தளவுக்கு ஓர் அருமையான படம். இயக்குனருக்கும் துணிந்து இப்படத்தினை தயாரித்த தயாரிப்பாளருக்கும் ஒரு சல்யூட் அடிக்கலாம்.

ஓகோ அம்மாபகவான் கதை இதுதானா?
உங்களுக்கு அது ஜஸ்ட் விசிட் ஆக இருக்கலாம். ஆனால் பார்ப்பவர்களுக்கு அது வேறுமாதிரியாகத்தனே இருக்கும்.

//
இன்று IPL திருவிழா ஆரம்பிக்குது.. நேரத்தைப் பொறுத்து சிறப்புப் பதிவு வரும். //
ஓமோம் தீபிகாவின்ட ஆட்டத்தோட ஐபிஎல் ஆட்டமும் ஆரம்பிக்குதாம்....பார்ப்போம்

Anonymous said...

Pls read the article on the following link.
http://www.enlightened-spirituality.org/deeksha_oneness.html

Kalki Bhagavan is very famous than Nithyanantha in Sri Lanka. Why journalists are not writing about his scams. Are they biased? You can watch videos on youtube (Abormal behaviour observed ib TV 9 Telugu).

I am expecting you to take the first step. Please write a full detailed article in tamil so that ppl can be aware of him.

I personally know some ppl so called "Amma Bhagavan devotees" went to his place (Varadhapalayam, Chitoor district, AP). I saw some video taken by these ppl which were similar to the video brodcasted by Tv9 Telugu channel.

My point is not to blame on devotees but to be aware of these culprits. After watching this they should stop these bajanas and money making business.(Next time pls ask your mom not to give money(kaanikkai)).

I am looking forward for your favourable reply.

Thank you

ஆதிரை said...

சீரியசான சந்தேகம் ஒன்று பக்தரே...

தமிழ்ப்படம் சீரியசான படமா? அல்லது நகைச்சுவைப் படமா? :P

சூர்யகதிர் said...

>>எனவே இத்தால் சொல்லுவது யாதெனில்.. நான் பக்தனில்லை.. பகவானுமில்லை.. இறுவட்டு வாங்கச் சென்ற ஒரு ஜஸ்ட் விசிட்டர் மட்டுமே..

இப்படிதான் நண்பரே இது ஆரம்பிக்கும், பின்பு நீங்களே அம்மா பகவான் புகழ் சொல்ல ஆரமித்து விடுவீர்கள். கேவலமான விசயம் என்று தெரிந்தால் அதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிவது தான் புத்திசாலிதனம்.

எப்படி நாங்கள் சிறுவயதில் தப்பு செய்யும் பொது எங்களுக்கு வலிக்கும் என்று தெரிந்தும் எங்கள் நன்மைக்காக பெற்றோர் கண்டிபார்களோ. அதே போல் பெற்றோர்கள் செய்யும் பிழையையும் நாங்கள் வளர்ந்த பின் கண்டிகாவிடினும் சுட்டி காட்டுவது மேல்.

என் தந்தை ஒரு கடவுள் பக்தர், ஆனால் நான் கடவுளை நம்புவது கிடையாது. ஆனாலும் என் தந்தை கோவிலுக்கு அழைத்த போதெல்லாம் நான் அவருடன் செல்வது வழக்கம், ஒரே கரணம் நீங்கள் கூறியது போல வீட்டுக்குள் எதற்கு குத்து வெட்டு !! ஆனால் இந்தியாவில் ஒரு கோவிலுக்கு சென்ற போது ஒரு சாமியாரின் காலில் விழும்படி என்னை கேட்டார், முதலில் நான் நல்ல பிள்ளையாக மறுத்தேன். மீண்டுன் என் தந்தை கேட்கவே, சாமியார் முன்பாகவே, எத்தனை தடவை என்றாலும் உங்கள் காலிலோ அம்மாவின் காலிலோ விழுகிறேன் ஆனால் கண்ட கண்ட சாமியார் காலில் எல்லம் விழ மாட்டேன் என்று சத்தமாக கூறிவிட்டேன் இதை கூறிய போது எனக்கு வயது 15. என் தந்தை மிகவும் கண்டிப்பானவர், வீட்டில் வந்து அடி கூட விழும் என்று தெரிந்தும் இதை நான் கூறியதற்கு காரணம், தந்தையாக இருந்தாலும் என்னை பொறுத்த வரையிலும் சாமியாரின் காலில் விழுவது மிகவும் கேவலமான விஷயம் என்பதால் மறுத்தேன். என்னை பொறுத்த மட்டில் சாமியார்கள் (கடவுள் Agent கள்) எல்லோருமே கள்ளர்கள் தான். ஒரு பேச்சுக்கு கூட இந்த சாமியாரை விட அவர் பரவாய் இல்லை என்று கூற மாட்டேன்.

அகவே நண்பரே, உங்களை போன்று உடகங்களில் உள்ளவர்கள், ஒரு சம்பவம் நடந்த பின்பு நான் முதலிலேயே நினைத்தேன் அவன் கண்ணை பார்த்த போது என்று ஊருடன் ஒத்து ஊதுவதை விட்டு, முன்னமே உலகிக்கு சொல்வது தான் நன்று.

யோசித்து பாருங்கள், இதே அம்மா பகவான்கள் இன்னும் சற்று நாளில் கம்பி எண்ணும் போது அவருக்கு பாத பூசை செய்தவர்கள் எவ்வளவு அவமானத்துக்கு ஆளாவார்கள் என்று, அதில் உங்கள் தாயாரும் ஒருவராக இருப்பார் !!

உலகில் உள்ள சாமியார்கள் அனைவரும் கள்ளர்களே, அதில் No1 கள்ளன் No2 கள்ளன் என்று வேண்டுமானால் பிரித்து கொள்ளலாம்.
எனக்கு தெரிந்து No1 கள்ளன் சாய் பாபா No2 நீங்கள் CD வெளியிட்ட அம்மாவோ ஆத்தா பகவான்.

தப்பாக எதுவும் எழுதி இருந்தால் மன்னிக்கவும். உங்கள் அம்மா 26 என்ற பதிவை பார்த்து உங்கள் அம்மா மேல் ஒரு மரியாதை வைத்திருக்கிறேன், அவர் இந்த கள்ள சாமிகளிடம் எல்லாம் ஏமாந்து விடகூடாது என்ற நினைப்பே இந்த பின்னூட்டம்

sellamma said...

//என்ன தல,, நீதான்யா வானொலிகளின் கடவுளையா,,,, உன்குரலுக்கும் உன் கருத்துகளுக்கும் நாங்க எல்லாம் ஆண்டாண்டாய் அடிமையையா,,,//

ஐயோ.... இதுக்கு யாரும் ஒரு spoof நிகழ்ச்சி செய்ய மாட்டியளா?
முடியல... :)////

என்ன கன்கொன் || Kangon நக்கலா,,,,???
நானும் பாத்திட்டே இருக்கேன் நீங்க நம்ம தல யை ரொம்ப ஓவரா கலாய்க்கிறீங்க,,,
இது நல்ல இல்லை ஆமா,,,
அகில உலக " செந்தமிழ் செல்வன்,, சிங்கக்குரலோன்,, லொள்ளு மன்னன் லோஷனின் ரசிகர்கள் சங்கம்" சார்பாக உங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மேட்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்,,

நாங்க சொல்லுறதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம்,,,
எப்பிடி இருக்கு இந்த பஞ்ச்,,,,

Subankan said...

தமிழ்ப்படம் - :)))

சும்மா பகவான் - :(((

nadpudan kathal said...

அண்ணா தமிழ் படம் ரசிக்க விடாமல் உங்களை சிரிக்க வைத்ததுதான் இந்த விமர்சனத்துக்கு காரணம் என்று நினைக்கிறேன் !!!!

புல்லட் அண்ணா சொன்னது போல! நீங்கள் அங்கு போனது அவர்களுக்கு சாதகமாக இருந்து இருக்கலாம்! ஆனாலும் நீங்கள் சிக்கி சின்னாபினமாகாமல் இருப்பதே மேல் !

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner