April 09, 2010

சனத் ஜெயசூரிய&நாமல் ராஜபக்ச அபார வெற்றி - இலங்கைத் தேர்தல் நிலவரம்

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.

எதிர்பார்த்ததைப் போலவே ஆளும் தரப்பு முன்னணி பெற்றுள்ளது. இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி கிடைத்துள்ள வாக்குகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் ஆளும் தரப்பான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே கிடைத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ள அதேவேளை ஜே.வீ.பீயும் சரத் பொன்சேகாவும் இணைந்த ஜனநாயகக் கூட்டமைப்பும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதுவரை வெளிவந்துள்ள யாழ்ப்பாண மாவட்ட முடிவுகளில் ஊர்காவற்றுறை தொகுதி தவிர ஏனைய தொகுதிகளிலெல்லாம் தமிழரசுக் கட்சி(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) வெற்றி பெற்றுள்ளது.
ஊர்காவற்றுறையில் ஆளும் தரப்பு (ஈ.பீ.டீ.பியின் உபகாரம்) வெற்றியீட்டியது.

மாத்தறை,ஹம்பாந்தோட்ட, மொனராகலை, பதுள்ளை  ஆகிய மாவட்டங்களின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நான்குமே அரசு வசம்..


இப்போதைக்கு நான்கு மாவட்டங்களில் ஆளும் தரப்பு 21 ஆசனங்கள், ஐக்கிய தேசியக் கட்சி 7  ஆசனங்கள்


போகிறபோக்கில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மிக அருகில் அரசு வந்துவிடும் போலத் தெரிகிறது..

ஹம்பாந்தோட்டையில் விருப்பு வாக்குகளின் பிரகாரம் ஜனாதிபதியின் புதல்வர் முதலிடம் பெற்றுள்ளார்.. நாமல் ராஜபக்ச பெற்றுள்ள வாக்குகள் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் அதிகம்.. பெரியப்பா சமல் ராஜபக்ச இந்தப் புதிய,இளைய அரசியல்வாதியின் முன்னால் பின் தள்ளப்பட்டுள்ளார்.ஜனாதிபதியின் அண்ணர் சமல் ராஜபக்ச பெற்ற வாக்குகள் பாதியளவு தான்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சியில் முதலிடம்.. 74 ஆயிரம் வாக்குகள்..
ஐவரும் வாரிசு தானே..காலம்சென்ற முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் புதல்வர்.

மாத்தறையில் பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய விஷயம் இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரிய போட்டியிட்டது..
ஆச்சரியம் அவரே அந்த மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
அந்த மாவட்டத்தின் சக்திவாய்ந்த அரசியல்வாதிகள்,அமைச்சர்களை எல்லாம் பின் தள்ளி சனத் 74352 விருப்புவாக்குகளைக் குவித்துள்ளார்.
அமைச்சர்கள் மகிந்த யாப்பா அபேவர்தன,லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன(நமது சிறை வாழ்வில் எனக்கு புதிய பட்டம் தந்தவர்) ஆகியோர் எல்லாம் பின்னுக்குத் தான்.

இவ்வளவுக்கும் சனத் ஜெயசூரிய ஒரே ஒரு பிரசாரக் கூட்டத்தினை மட்டுமே நடத்தி இருந்தார்.. எல்லாம் கிரிக்கெட் செய்யும் மாயம்..

இனி சனத் சும்மா சனத் இல்லை.. மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சனத் ஜெயசூரிய..

இன்றாவது மும்பை இந்தியன்ஸ் அணி எங்கள் புதிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு விளையாட வாய்ப்பைக் கொடுக்குமா?
சச்சின் கொடுத்தாலும் கொடுப்பார்..இனிக் காயம்,உபாதை ஏற்பட்டால் இலங்கைக்கு சிகிச்சைக்காக வரவேண்டும் இல்லையா? ;)

21 comments:

Nimalesh said...

wat happen mervin????? lol

SShathiesh-சதீஷ். said...

// மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சனத் ஜெயசூரிய..//

தான் அடித்த ஒவ்வொரு ஓட்டம் மூலமும் வாக்கையும் பெற்று விட்டார். நான் தான் முதலாவது...

ஆதிரை said...

சந்தேகம்: அர்ஜூன ரணதுங்க எந்தத் தேசத்திலே உள்ளார்?

//இனி சனத் சும்மா சனத் இல்லை.. மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சனத் ஜெயசூரிய..//
உவருக்கு மட்டும் ஏன் அமைச்சுப்பதவி கிடைக்காது என்று நினைக்கிறீங்கள்?

SShathiesh-சதீஷ். said...

ஆதிரை said...

//இனி சனத் சும்மா சனத் இல்லை.. மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சனத் ஜெயசூரிய..//
உவருக்கு மட்டும் ஏன் அமைச்சுப்பதவி கிடைக்காது என்று நினைக்கிறீங்கள்

விளையாட்டுத்துறை மைச்சரே கிரிக்கெட் விளையாடினாலும் ஆச்சரியமில்லை.

Nimalesh said...

எதிர்பார்த்த முடிவுகள்...........pesa onnum illai....

nadpudan kathal said...

எதிர்பார்த்த அனைத்தும் தவறாது நடந்து இருக்கிறது

வாழ்த்துக்கள்

Anonymous said...

டேய் டேய் அண்ணன் எப்பிடி பல அடிகள குடுத்திட்டு steady யா romance look ல நிக்கிறன் பாரு....

Anonymous said...

டேய் டேய் அண்ணன் எப்பிடி பல அடிகள குடுத்திட்டு steady யா romance look ல நிக்கிறன் பாரு....

food_for_life said...

hmmmmm...... எதிர்பார்த்த முடிவுகள் தான்..... ஆனால் மாண்புமிகு சனத் அவர்கள் ( பல்டி ) இத்தனை வாக்குகள் பெறுவார் என்று எதிர்பார்க்கவில்லை...... கிண்ணம் கிணத்துல விழுந்திடும் போல.......

Nimalesh said...

Karu out.. mervin in.......

வந்தியத்தேவன் said...

Fisrt and Fast results and reviews.

தமிழ்போராளி said...

cricket la nalla vilaiyadinaalthaan teamla erukka mudium. ella vittaal water joice kondu poy vilaiyadum playerskku kodukkanum..MP aana team vaikkanum entru avasiyam ellai. india periya naadu srilanga oru pichaikara nadu naangal ethukku anga varanum. engalidam Dr. ellaiyaa? ethu ellaam oovaraa ellai ungalukku?? eppavum Individam thaan enakku pichai edukkanum.... athai teriunthu kollu muthalil...

by veeraa

ஆதிரை said...

விடுதலை வீரா,

நான் இலங்கையினதோ அல்லது இந்தியாவினதோ பக்தன் அல்ல... ஆனாலும், உங்களின் அறிவீனத்துக்காக இதனைப் பகிர்கின்றேன்.

http://www.lankanewspapers.com/news%5C2010%5C3%5C55102_image_headline.html

நிரூஜா said...

//வந்தியத்தேவன்
Fisrt and Fast results and reviews.

:P

Subankan said...

// ஆதிரை said...

//இனி சனத் சும்மா சனத் இல்லை.. மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சனத் ஜெயசூரிய..//
உவருக்கு மட்டும் ஏன் அமைச்சுப்பதவி கிடைக்காது என்று நினைக்கிறீங்கள்?
//

றிப்பீட்டு.....

Unknown said...

அவன் நிலாவுக்கு மனிதனை அனுப்பி அவன் ஜாலியாக நடந்து பார்த்து ... அதற்கு மேலாக நிலாவில் மனிதன் வீடு கட்டி அங்கேயே குடி அமர வேண்டும் என்று ஆசைப்படுகிறது வாழ நினைக்கிறான் இன்னும் தேசியம் பேசி இன்னும் பிரபாகரனின் பிழைத்துப்போன ராஜதந்திர நகர்வுகளைப்? புற்றி பேசி தமிழ் தேசியம் அடிவாங்கி விட்டது இனி தேசியம் எல்லாம் பேசி ஏமாற்ற வேண்டாம் என்பதுதான் இந்த முடிவு தமிழ் தேசியத்தை உறுதியாக வலியுறுத்தியதற்காக? ஊரையும் உலகத்தையும் உங்கள் கண்ணை மூடி ஏமாற்ற வேண்டாம் முடிவு கசப்பானதுதான் mullaimukaam.blogspot.com

balavasakan said...

ம்..ம்.. சனத் நல்லதொரு எதிர் காலம் வர்ணரையாளரோ பயிற்றுவிப்பாளரோ ஆவதை விட இது சுகமான வேலை..?

யோ வொய்ஸ் (யோகா) said...

தேர்தல் முடிந்து விட்டதா? சொல்லவேயில்லை

Anonymous said...

//தேர்தல் முடிந்து விட்டதா? சொல்லவேயில்லை//
மே 2 தேர்தல் பற்றி கனவில் இருக்கிறீர்களோ?இனியாவது நிஜத்துக்கு வாங்கோ.

அஜுவத் said...

அண்ணா அரசு குறைந்த பட்சம் 143 ஆசணங்கள் கிடைப்பது உறுதி. மூண்ரில் இரண்டிற்கு இன்னும் 7 தான். இப்போதே பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட ஏர்ள் குணசேகரவும் மொனராகலை மாவட்டத்திலிருந்து வெற்றிபெற்ற றஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் இணையப்போவதா தகவல். இன்னும் 5. Counting start 1.. 2.........

Anonymous said...

tamilar piradinigal kuraiwu. Parpom nadappathai poruthirundhu

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner