May 06, 2010

ஐந்தாம் வகுப்பும் அமெரிக்காவும்



இது நேற்று இரவு கஞ்சிபாய் எனக்கு தொலைபேசியில் சொன்ன கதை..
நாட்டு நடப்புடன் சம்பந்தப்பட்டது என்றார்..


சரி எனக்குத் தான் புரியல.. உங்களுக்காவது புரியுதா என்று பார்த்து எனக்கு சொல்லுங்களேன்..




ஒரு கிராமத்துப் பாடசாலை ஆசிரியர்.. அவரது பாடசாலையில் பல தரப்பட்ட மாணவர்கள். வருங்காலப் பட்டதாரிகள் முதல்,மாடு மேய்க்கத் தான் தகுதி எனப்படும் மக்குகள் வரை பல தரம்..


ஒரு நாள் ஆசிரியருக்கு நகர்ப்புற உயர் பாடசாலை ஒன்றில் மாற்றல் வாய்ப்புக் கிடைத்தது..
அவர் மாற்றலாகி செல்லும் போது தன்னுடன் சில மாணவர்களையும் அழைத்து சென்று அவர்களுக்கான கல்வி வாய்ப்புக்களை அதிகரிக்கலாம் என்று நினைத்தார்.


கெட்டிக்கார மாணவர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்த அவர், இவர்களுடன் மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த கொஞ்சம் துறு துறு துடிப்பான பையனையும் கூட்டிக் கொண்டு போனார்.


பையன் கொஞ்சம் துடிப்பாக இருந்ததால் வகுப்பு உயர்வு (promotion) கொடுத்து ஐந்தாம் வகுப்பில் அவனை சேர்த்து விட்டார்.


நகர்ப்புற நல்ல பாடசாலையில் மற்ற மாணவர்களும் அந்த ஆசிரியரும் வசதிகளுடன் தங்கள் தகுதி,திறமையையும் பெருக்கிக் கொள்ள இவனோ ஐந்தாம் வகுப்பிலும் மூன்றாம் வகுப்பு மாணவன் போலவே நடந்துகொண்டான்;குழப்படி வேறு; மற்றவர்களுக்கும் பல தொல்லைகள்.. இன்னும் நிறையப் பிரச்சினைகள்&விவகாரங்கள் இவனால்..


பல தடவை சொல்லிப் பார்த்தும்,அறிவுரை கூறியும்,எச்சரித்தும் இந்த மாணவன் திருந்தாததால் ஒன்றும் இனி செய்ய முடியாத நிலையில் ஆசிரியர் அதிபருடன் பேசி இவனைப் பாடசாலையிலிருந்து நீக்கி வெளியே அனுப்பி விட்டார்.


இனி என்ன செய்வது என்று யோசித்த மாணவன், மீண்டும் கிராமத்திலிருந்த பாடசாலைக்குப் போனான்.அங்குள்ள அதிபரிடம் கெஞ்சிக் கூத்தாடி மூன்றாம் வகுப்பாவது தருமாறு கேட்டு மீண்டும் மூன்றாம் வகுப்பிலிருந்து படிக்க ஆரம்பித்தான்.


யாராவது ஏன் அந்த நல்ல பாடசாலையிலிருந்து வந்தாய் எனக் கேட்டால் "பாடசாலையா அது.. ஒரு வசதி இல்லை..சிறை மாதிரி.. ஒழுங்காக கற்பிப்பதும் இல்லை..அந்த ஐந்தாம் வகுப்பை விட இங்கே மூன்றாம் வகுப்பே பெட்டர்"
என்று சொல்கிறானாம் அந்த மூன்றாம் வகுப்புக்காரன்.




கலி காலம் லோஷன்.. என்று பெருமூச்செறிந்தார் கஞ்சிபாய்..
எல்லாமே சுத்த சூனியமாக இருந்தாலும்.. ம்ம் சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்தேன்..


இன்று அலுவலகத்தில் இந்தக் கதையை சொன்னவுடன், ஹிஷாம்(முன்பு பதிவராக இருந்தவர் - மறுபடி எப்ப தொரே எழுதப் போறீங்க) இந்தக் கதையை தான் கற்றது கையளவு நிகழ்ச்சியில் இன்று சொல்லப் போவதாக உரிமையைப் பெற்றுக் கொண்டார்.. 


ஒரு நான்கு மணியளவில் இதை அமெரிக்காவில் நடந்த கதையாக சொல்வார் அல்லது சொல்லியிருப்பார்...

ஹிஷாம் சொல்வது போலவே கந்தசாமி அண்ணே கதையைத் தவற விடாதேங்கோ..



21 comments:

கன்கொன் || Kangon said...

ம்ஹ்ம்....

இரவு விட்டத்தைப் பார்த்து யோசித்து ஏதாவது விளங்குகிறதா என்று பார்க்கிறேன்... :(

ஆதிரை said...

இனி என்ன செய்வது என்று யோசித்த மாணவன், மீண்டும் கிராமத்திலிருந்த பாடசாலைக்கு சைக்கிளில் போனான்.அங்குள்ள அதிபரிடம் கெஞ்சிக் கூத்தாடி மூன்றாம் வகுப்பாவது தருமாறு கேட்டு மீண்டும் மூன்றாம் வகுப்பிலிருந்து படிக்க ஆரம்பித்தான்.

Subankan said...

//சரி எனக்குத் தான் புரியல.. உங்களுக்காவது புரியுதா என்று பார்த்து எனக்கு சொல்லுங்களேன்..
//

அதுசரி, எங்களுக்கு தெளிவாச் சொன்னாலே புரியாது

கன்கொன் || Kangon said...

// அதுசரி, எங்களுக்கு தெளிவாச் சொன்னாலே புரியாது //

சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சுபா அண்ணே...

இந்தக் கதையின் உள்குத்து விளங்காதவர்கள் இங்கு குறிப்பிட்டு மின்னஞ்சல் மூலம் விளக்கம் கேட்போம்... ;)

Subankan said...

//கன்கொன் || Kangon said...

சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சுபா அண்ணே...

இந்தக் கதையின் உள்குத்து விளங்காதவர்கள் இங்கு குறிப்பிட்டு மின்னஞ்சல் மூலம் விளக்கம் கேட்போம்... ;)//

கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன். லோஷன் அண்ணே, மெயில் ப்ளீஸ்

இல்லாவிட்டால் சைக்கிள் ஆதிரை அண்ணாவாவது மெயில் ப்ளீஸ்

PORTFOLIO GROUP 11 said...

எனக்கு தெரிந்த ஒருவர் கனடா போயிற்று திரும்ப இங்க வந்து சொன்னது போல இருக்கு.....(அந்த ஐந்தாம் வகுப்பை விட இங்கே மூன்றாம் வகுப்பே பெட்டர்")

Sivakanth said...

ஒரு பழமொழி கூறுவார்கள் "சருகாமையை மெத்தையில தூக்கி வச்சாலும் அது சருகுக்கதான் போகும்" எண்டு அப்பிடியா இது?

Vijayakanth said...

ganji baay michcha kathaiya naalaikku solluwaar wait pannungo anna.... appidi illayendaa awarkittaye wilakkam ketu engalukkum konjam theriyappaduththungo....

இலங்கன் said...

ஆகா.. ஓகோ...

எங்கோயோ பஞ்ச் இருப்பதாக தோன்றுகிறது....

இருப்பினும் ஒளவையின் "எமனேறும் பரியே..." என தொடங்கும் பாடலை விட சற்று விளக்கம் குறைவாகவிருக்கிறது கதை..
ஹி..ஹி..

KANA VARO said...

No coments...ம்ம் எல்லாம் காலம்..

வாலி said...

நான் நினைக்கிறேன்... பிழை ஆசிரியை மீதுதான்... காரணம் அவன் மூன்றாம் வகுப்பிலேயே படிக்க வேண்டியன். ஐந்தாமாண்டில் சென்று திடீரென்று படிக்குமளவுக்கு பக்குமில்லாத ஒருவனை இப்படி ஆசிரியை....

பனித்துளி சங்கர் said...

ஆஹா !
கதையை முழுசா
சொன்னாலே எனக்குப்புரியாது இதுல இதுவேரையா !
ஆளவிடுங்க சாமியோ ...............

பனித்துளி சங்கர் said...

பனித்துளி ஓடிடு பின்னால வெறட்டி வாராணுவ ..........................

வந்தியத்தேவன் said...

ஏதோ ஒரு மருத்துவர் சம்பந்தப்பட்ட கதைபோல் கிடக்கின்றது ஹிஹிஹி

guru said...

hello !
this is reminding the old proverbs like
naya kulipatti nadu veetil vaithalum,

karaiulu potta meenu and uyar uyar paranthaloom oor kurvi parunthakuma etc.

-Vishnu- said...

ஆகா!!! ஆகா!!!, காலம ரொம்பவே முன்நேரிருச்சு o.O

KANA VARO said...

Subankan said...
//சைக்கிள் ஆதிரை அண்ணா!!??//

Wt is this??

Kiruthigan said...

//துறு துறு துடிப்பான பையனை//
சந்தேகம் துறு துறு'ங்கிறதுல குளப்பமா இருக்குண்ணா..
எப்புடியோ அந்த பையன் 3ம் வகுப்புல படிச்சாவது நல்லா வரட்டும்..
5ம் வகுப்பு தானே பட்டய கிளப்புது...
வாழ்த்துக்கள் அண்ணா..

ஆதிரை said...

கிருத்திகன்...

நீ எங்கேயோ போயிட்டாய். :-)

கன்கொன் || Kangon said...

இந்தக் கதைக்கு யாழ்ப்பாணத்தில் வைத்து விளக்கம் தந்த வைத்தியர் பாலாவுக்கு நன்றிகள்... ;)

இப்போது கிருத்திகனும் நன்றாகவே விளக்கம் கொடுத்திருக்கிறார்... :)

ஆரம்பத்தில் சைக்கிளில் தப்பியோடியது அது இதுவென்று பிழையாக விளக்கம் கொடுத்த ஆதிரை அண்ணாவுக்கு கண்டனங்கள்.... :@

Kiruthigan said...

//கிருத்திகன்...
நீ எங்கேயோ போயிட்டாய். :-)//
நன்றி நன்றி ஆதிரை அண்ணா...
கன்கொன் || Kangon said நீங்க சைக்கிள் பிளான் ஸாரி ஈருருளி சிந்தனை பற்றி கூறியுள்ளீர்களாம்...
உதுக்குத்தான் வைத்தியர் பாலாண்ணா மாதிரி கடும் எக்ஸ்பேர்ட் பக்கத்தில இருக்கோணும் கண்டியளே!
:@
ஜனா அண்ணா ஐயப்பாட்டை தெளிவித்தமையும் நினைவுகூரப்படவேண்டியதே!!!

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner