June 22, 2010

இர்ஷாத் aka என்ன கொடும சாரின் இழி செயலும், இன்னொரு கண்டனமும்

இன்று காலை எனது காலை நிகழ்ச்சி விடியலில் (வெற்றி FM) இடம்பெறும் பேப்பர் தம்பி நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்ட ஒரு பத்திரிகைத் தலைப்பு...

யாழ்.நூலக எரிப்புச் சம்பவத்துக்கு மன்னிப்பு கோரினார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க

அது பற்றிய விரிவான செய்தியையும் வாசித்துப் பாருங்கள்.

http://thinakkural.com/publication_west/content.php?contid=3667&catid=1

அடுத்த நிமிடமே ஒரு SMS. பதிவுலகில் என்ன கொடும சார் என்று அறியப்படும் இர்ஷாத் என்பவரிடம் இருந்து.

is Jaffna Library a museum? May be the books which were there old and not usable. ;)


இந்த பார்த்ததுமே பகிரங்கமாக அவரது பெயரை சொல்லிக் கண்டித்தேன்.
பல தமிழ்,முஸ்லிம் நேயர்களும் கொதித்துப் போய்க் கண்டனம் தெரிவித்தனர்.

ஒரு Sensitive விஷயத்தை கிண்டல் செய்கின்றார் என்றால் இவர் மனதில் எவ்வளவு வஞ்ச உணர்ச்சி இருக்கவேண்டும்.
யுத்தம் நடந்துகொண்டிருந்த காலத்திலும் இவரது கிண்டல் smsகள் வந்திருக்கின்றன.


இவரது பதிவுகளைப் பார்த்தாலே அடிக்கடி தொனிக்கும் விஷம,காழ்ப்பு உணர்வுகளையும், வித்தியாசப்படுகிறேன் என்ற தொனியில் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காத ஒரு கேவலமான கிண்டல் தொனியில் இருக்கும்.

இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுதும் வாழும் தமிழரால் மட்டுமல்ல வேறு மொழிபெசுவோராலும் கண்டிக்கப்பட்ட அந்தக் கருப்பு நிகழ்வான யாழ்ப்பாண நூலக எரிப்பை நியாயப்படுத்துவது போலல்லவா இருக்கிறது இர்ஷாத் சொல்லி இருக்கும் விஷயம்.

இதற்கு மேலே அதை நியாயப்படுத்தி என்ன கொடும சார் என்ற தன் தளத்தில் தனது வழமையான காழ்ப்புணர்ச்சிப் பதிவொன்றையும் இட்டுள்ளார்.

http://eksaar.blogspot.com/2010/06/blog-post_22.html

யாழ் நூலக எரிப்பு கண்டிப்பிற்குரியது. ஆனால் அதில் பழைய புத்தகம் இருந்தது, ஓலைச்சுவடி இருந்தது என்பதெல்லாம் ரொம்பவே ஓவர். அவை இருந்திருந்தால் யாழ்ப்பாணத்தின் சாமானியனுக்கு என்ன பயன் கிடைத்திருக்கும்? பழைய ஓலைச்சுவடிகளை வாசித்து விளங்க முடியுமா? அல்லது அது இன்று பாவிக்க கூடிய நிலையில் தான் இருந்திருக்குமா?


ஆனால் அது வேண்டுமானால் தொல்பொருள் ஆக மதிப்பு மிக்கதே. ஒரு நூதன சாலையில் வைக்கப்பட்டிருக்கவேண்டிய விடயங்கள் அவை.


இன்று இவ்வாறாக யாழ் நூலகத்திற்கு புனித தன்மை கொடுப்பதன்மூலம் அதுவும் ஒரு காட்சிப்பொருளாக மாற்றப்பட்டுள்ளது. சுற்றுலா தலமாக வேண்டுமானால் அபிவிருத்தியடையலாம்.


இவரெல்லாம் ஒரு படித்த மனிதர்? தூ..

ஒரு சமூகத்தின் கல்விக்கான அடையாளம்..பல அறிய நோல்ல்களைப் பேணிப் பாதுகாத்த அந்த நூலகத்தின் அருமை தெரியாத இந்த ஜென்மம் தான் நவீன கலாசாரம்,கல்வி,நாகரிகம்,முன்னேற்றம்.. என் சமயம்,சமூகம் பற்றியும் மற்றவருக்கு உபதேசம் செய்கிறது..

இப்போது நாங்கள் சொல்ல வேண்டியிருக்கிறது..
என்ன கொடும சார்..

அந்த எரிக்கப்பட்டு அழிக்கப்பட்ட அரிய நூல்களின் பெறுமதியும் அந்த அருமை பெருமையும் இவர்களைப் போன்றோருக்கு தெரிந்தால் தானே?

அந்த நூலகம் யாழ்ப்பாண மக்களுக்கு மட்டுமன்றி இலங்கையில் வாழ்ந்த எத்தனையோ இடங்களை சேர்ந்தோருக்கும் ஒரு ஆவணத் தொகுப்பகமாக, ஆராய்ச்சிக் கூடமாக விளங்கியிருக்கிறது.

யாழ் நூலக எரிப்பு இடம்பெற்ற பொது இவரெல்லாம் பிறந்திருப்பாரோ என்னவோ?

இதைக் கொஞ்சம் வாசிச்சுப் பாருங்க தம்பி..

யாழ் பொது நூலகம் எரிப்பு, 1981


தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.. இல்லை தேடிப் பாருங்கள்.. அப்படியில்லாவிட்டால் அதுபற்றிப் பேசி மற்றவரைப் புண்படுத்தி பின் உங்கள் முதுகைப் புண்ணாக்கிக் கொள்ளாமல் வாயை மூடிக் கொண்டு உங்கள் வேலைகளைப் பாருங்கள்.

என்ன கொடும சார் எனப்படும் இர்ஷாத் இதற்கு மன்னிப்புக் கோரவேண்டும்.

# # # # #

இந்த இடத்தில் நீண்ட நாட்களாக என் மனதை அரித்துக் கொண்டிருக்கும் இன்னொரு விஷயம் பற்றியும் சொல்லவேண்டும்.


தமிழிலும் சமயத்திலும் தான் சார்ந்த சமூகத்திலும் தீராப் பற்றுக் கொண்ட ஒருவர் பதிவர் சந்ரு..
இவர் அண்மைக் காலமாக ஈழத் தமிழர் போராட்டம் பற்றி தொடர் பதிவுகள் இட்டு வருகிறார்.
தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் 

அந்தப் பதிவுகள் ஆரம்ப முதலே யாழ்ப்பாணத் தமிழ்த் தலைமைகளும்,தமிழரும், கிழக்கிலங்கைத் தமிழரை அடிமைப்படுத்தி வருவது போலவும் ஏமாற்றி வருவது போலவும் உருவகப்படுத்தியே காட்டுகின்றன.
அதுவும் கையாளப்பட்டுள்ள வார்த்தைகள்.. மிக மிக வன்மையான,விஷம் தடவப்பட்டவை..

http://shanthru.blogspot.com/

நயவஞ்சகம்,துரோகம்,ஏமாற்று, இப்படி.. இவையெல்லாம் வெகு சிலவே.

இலங்கைத் தமிழ் அரசியல் பற்றி ஓரளவு தெரியும் என்பதாலும் அவை பற்றி தொடர்ந்து வாசிப்பவன் என்பதாலும் தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவருக்கு தனி மடல் ஒன்றை அனுப்பி இருந்தேன்.

இவரது தொடர் பதிவுகளுக்கான ஆதாரங்களையும் பிரசுரிக்குமாறு (இருந்தால்) கேட்டிருந்தேன்.

இதற்கான பதிலைப் பதிவாகப் போடுகிறேன் என்று சில நாள் கழித்துப் பதில் அனுப்பியவர் ஏதோ ஒரு இணையத்தளத்தில் இருந்து எடுத்து மீள்பிரசுரம் செய்வதாக தன் பதிவிலே சொல்லி இருந்தார். ஆனால் இன்று வரை
எந்த இணையத்தள என ஆதாரம் காட்டவில்லை.

இறுதியாக இலங்கையிலுள்ள அத்தனை தமிழ் பேசுவோராலும் மதிக்கப்படும் தந்தை செல்வாவையும் வம்புக்கு இழுத்துள்ளார்.

ஆதாரம் இல்லாமல் இரு சமூகங்களுக்கிடையில் கருத்துப் பிளவுகளையும் தவறான பரப்புரைகளை மேற்கொள்வதற்கும் இவ்வாறான பதிவுகள் துணை போய்விடும்.

சமூக அக்கறை கொண்ட சந்ருவுக்கு இது தெரியாததல்ல.
இனியாவது கையாளப்படும் வார்த்தைகளை அவர் சரியாக பயன்படுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சந்ருவின் அரசியல் கொள்கைகள் எவ்வாறு இருந்தாலும் பொது இடமொன்றில் கருத்துப் பகிரும்போது கொஞ்சம் நிதானமும் ஆதாரம் காட்டும் அவசியமும் பொறுப்புணர்வும் தேவை என்பதை சந்ரு புரிந்துகொள்ளவேண்டும்.

ஆதாரம் காட்டுவார் காட்டுவார் என்று பார்த்துக் காத்திருந்து தனிமடலில் கூட சந்ரு எதுவும் அனுப்பாததாலேயே பகிரங்கமாக இதை சுட்டிக் காட்டுகிறேன்.
இவ்வளவுக்கும் சந்ரு என்னுடன் நெருக்கமாகப் பழகும் ஒரு நல்ல நேயர்.பதிவர்.அடிக்கடி மடல் அனுப்புபவர்.

உடனே இது யாழ்ப்பாணத்தான் குரல் என்று மடத்தனமாக அல்லது குதர்க்கமாகப் பேசவேண்டாம்.
இது ஒரு தமிழனின் ஆதங்கம்.
காரணம் நான் யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தை விடக் கொழும்பில் வாழ்ந்த வாழும் காலமே அதிகம்.
எல்லா சமூகத்திலும் எனக்கு நண்பர்களும் இருக்கிறார்கள்.
எங்கள் நட்புக்குள் சந்தேகமோ கருத்து வேறுபாடுகளோ இது போன்ற சில்லறைத் தனங்களால் வந்துவிடக் கூடாது என விரும்பிகிறேன்.
தமிழராய், தமிழால் ஒன்று படுவோரை இருப்போமே.. எதற்கு தேவையில்லாமல் பிளவுபட்டு வலிமைகளைக் குறுக்கிக் கொள்கிறோம்??

இன்னும் சில பதிவுலகப் பச்சோந்திகளையும் முகத்துக்கு முன்னால் 'வாழ்த்தி' நடிக்கும் குறுக்கு வழி நடிகர்களைப் பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை..I just ignore them.

இதெல்லாம் எங்கும் சகஜமப்பா.. ;)

85 comments:

என்.கே.அஷோக்பரன் said...

ஏன் இவ்வளவு கொதிப்பு?!
நான் இதையெல்லாம் சீரியஸாக எடுப்பதேயில்லை... இதை சீரியஸாக எடுத்து அதற்கு விளம்பரம் கொடுக்க எனக்கு இஷ்டமில்லை. இர்ஷாத்-இன் எழுத்துமுறை, கருத்துமுறை என்பன எனக்கு ஞானி, சாரு போன்றோரை ஞாபகப்படுத்துகிறது (அவர் என்னைச் சாரு என்று சொன்னவர்)... சமுதாய ஓட்டத்திற்கு மாறாகக் கருத்துக்கூறி பரபரப்பு செய்யும் பதிவர் - அது அவர் தனிப்பாணி. மியுஸியம் என்றார் - சரி மியுஸியமாகவே அவருக்கு இருந்துவிட்டுப் போகட்டும்... கழுதைக்கு தெரியுமா.....(..).

சந்ரு எழுதுவதை அவ்வப்போது படிப்பதுண்டு. அது தமிழர் வரலாறு சொல்லும் கதை என்பதை என்னால் ஏற்க முடியாது... அது ஒரு perspective அவ்வளவுதான்.. அதை ஏற்பதற்கும் அல்லது மறுப்பதற்கும் இல்லை. வரலாறு என்பது எழுதியவனின் பார்வை - அவ்வளவே.

உங்கள் கருத்தை வரவேற்கிறேன். நானும் கண்டனங்கள் தெரிவிக்கலாம்... ஆனால் தெரிவித்து இவற்றுக்குப் பிரபல்யம் கொடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை...

Subankan said...

இவர்களின் தனிப்ப‍ட்ட‍ கொள்கைகள் பற்றி எனக்கு அக்க‍றையில்லை, ஆனால் அவற்றை அடுத்த‍வர்களுக்குத் திணிக்க‍ முற்படுவதுதான் ஏற்றுக்கொள்ள‍முடியாதது.

ஈழச்சோழன் said...

லோசன்! இணையத்தால் ஏற்படுத்தப்பட்ட கெட்ட விடயங்களில் ஒன்று எழுத்துலகு மற்றும் எழுத்தாளர்களுக்கு இருந்த அந்த உயர் மரியாதை இல்லாமல் போனதும் அடங்கும். காரணம் இணையத்தொடர்பு இருந்தால் யாரும் என்னவும் எழுதலாம் என்ற ஒரு கேவலமான நிலை. இப்போதெல்லாம் இணையத்தளங்களில் வெளியிடப்படும் செய்திகளைக்கூட நம்ப முடிவதில்லை. யார் எழுதுகிறார்கள் அவர்களில் தகுதிநிலை எதுவும் தெரிவதில்லை.

என்னைப்பொறுத்தவரை நான் எல்லா வலைப்பதிவுகளையும் படிப்பதில்லை. எழுதுபவரின் தகுதிநிலையறிந்தே நான் வாசிப்பதுண்டு. நீங்கள் குறிப்பிட்டுருக்கும் நபரின் வலைப்பதிவை உங்கள் இணைப்பின் மூலம் பார்த்தேன். அப்போது சாரு நிவேதிதா ஒரு வாசகருக்கு சொன்ன பதில் தான் நினைவுக்கு வருகிறது. அவர் சொன்னதை இங்கே எழுதமுடியாது. இருந்தாலும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வலையில் கிறுக்கிறவர்கள் போன்றோருக்கு அந்தாள் சொன்னத தான் பதிலாக இருக்கும்.

ரவி said...

லோசன் அண்ணா! நான் உங்கள் தீவிர ரசிகன், ஆனாஸ்ரலும் ஓர் ரசிகனாக அல்லாமல் தழிழனாக உங்கள் கருத்தை வழுடுத்த வேண்டும், ஒரு அரிய, மதியாதைக்குரிய அனைவரும் அறிய வேண்டிய தொல்பொருள் யாழ் நூலகத்தை கேவலமாக பேசுவது கடுமையாக தண்டிக்க வேண்டிய விடயமாகும்.

ரவி said...

லோசன் அண்ணா! நான் உங்கள் தீவிர ரசிகன், ஆனாலும் ஓர் ரசிகனாக அல்லாமல் தழிழனாக உங்கள் கருத்தை வழுடுத்த வேண்டும், ஒரு அரிய, மதியாதைக்குரிய அனைவரும் அறிய வேண்டிய தொல்பொருள் யாழ் நூலகத்தை கேவலமாக பேசுவது கடுமையாக தண்டிக்க வேண்டிய விடயமாகும்.

ஈழச்சோழன் said...

லோசன்! சாரு நிவேதிதாவிடம் கேட்ட கேள்வியையும் பதிலையும் இதிலே குறிப்பிட்டேயாகவேண்டும் என விரும்புகிறேன். நாகரிகம் கருதி இதை பிரசுரிக்காவிடின் அல்லது சொற்களை மாற்றுதல் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

வாசகர் ஒருவர் சாருவிடம் "நான் அதிகம் வாசிப்பதில்லை. உங்கள் எழுத்தக்களை அப்ப அப்ப வாசிப்பதுண்டு. ஆனால் எனக்கு எழுதவேண்டும் என்ற ஆசை நெடுநாளாக உண்டு. அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?"

இதற்கு சாருவின் பதில் கீழ்கண்டவாறு அமைந்திருந்தது. "உங்களை போன்றுதான் பலர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சிறுவர்களின் ஆண்குறி விறைப்படைகிறது என்பதற்காக அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க சொல்வதற்கு இது சமனானது" என்றார். இது தான் இங்கு சரியானதாக எனக்கு படுகிறது. லோசன் இங்கு குறிப்பிடப்பட்டிருப்பவர்கள் வெறும் உதாரணங்கள்தான். இப்படி பலர் இருக்கிறார்கள். அவர்களிடம்் நான் கேட்டுக்கொள்வது தயவு செய்து எழுத்தாளர்களுக்குரிய பெறுமதியை குறைக்காதீர்கள். எழுத முன் அதற்கான தகுதியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

குறிப்பு : சாருவின் கேள்வி பதில் அப்படியே தரப்படவில்லை. அதன் சாரம் தான் தரப்பட்டது.

கன்கொன் || Kangon said...

ம்...
இப்போதும் சிந்திக்கிறேன் இந்த விளம்பரங்கள் தேவைதானா... :-/

எனக்குப் பொறுத்தவரை உங்களுக்கென்று வலையுலகில் ஒரு விம்பம் உண்டு அண்ணா, நகைச்சுவைகளை, விசமங்களை எதிர்த்து உங்கள் விம்பத்தின் மூலம் விசமிகளுக்கு விளம்பரம் தேடிக் கொடுக்கிறீர்களோ என்று யோசிக்கிறேன்.

அந்தப் நூலகம் பற்றிய பதிவு வாசித்தவுடன் எனக்கு எரிச்சல் நிறையவே வந்தது, ஆனால் இர்ஷாத்திடமிருந்து அந்த மாதிரியான பதிவை நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்று சொல்ல முடியமா?
எனக்கு அந்தப் பதிவில் ஆச்சரியங்கள் எதுவும் இல்லை.
அவரது வழமையான பாணிதான், வழமையாக தமிழ் மக்களுக்கு எதிராகக் கருத்துச் சொல்பவர், இன்று முதன்முறையாக பொதுவான கல்வி, சமூகம் சார்ந்த ஒன்றிற்கு எதிராக நடந்ததை நியாயப்படுத்தியிருக்கிறார், அவ்வளவு தான் வித்தியாசம்.

அதற்கு பின்னூட்டத்தான் வேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன் நிறைய நேரமாக, எனினும் பின்பு போய் ஒரு பின்னூட்டம் இட்டேன்.

தமிழர் வரலாறு -
அந்தத் தொடர்பதிவு மட்டக்களப்பான் என்ற பிரதேசப் பெயரைக் கொண்டு http://muthalvarone.blogspot.com என்ற தளத்தில் மறைக்கப்பட்ட துரோகங்கள் என்ற பெயரில் தொடராக வந்ததென்று நம்புகிறேன்.
குறிந்த அரசியற் கட்சியொன்றின் பிரசாரத் தளமாக இருந்த தளத்தில் இருந்து பெறப்பட்ட தொடர்பதிவே அது.
(அதற்கு முன் எங்கும் வெளிவந்ததா நானறியேன்)
அதற்குப் பின்பும் அந்தத் தொடரில் நியாயம் போன்றவற்றை எதிர்பார்த்தால் உங்களைப் போல் யதார்த்தம் புரியாதவர்கள் யாருமில்லை.

விட்டுவிடுங்கள்.
அரசியல்வாதிகள் தேர்தலின் போது பொய் சொல்லிக் கொண்டு வருவதைச் சகிப்பதில்லையா?

ஒரு குறி்ப்பிட்ட வட்டத்திலுள்ள இணையத்தளங்களும், வலைப்பதிவுகளும் வெளியிட்டால் போல் அதுவே வரலாறாகிவிடுமா?

வாழ்த்துக்கள் - :)))
கணக்கெடுக்கத்தான் வேண்டுமா?

கன்கொன் || Kangon said...

இதில் சிரிப்பான விடயமென்னவென்றால் நான் என்னை யாழ்ப்பாணத்தவன் என்றால் நான் பிரதேசவாதி, ஆனால் அவர்கள் தங்களை 'மட்டக்களப்பான்' என்றழைத்துக் கொண்டு வரலாறுகளை 'எழுதினால்' அது நியாயம் கதைப்பதாம். :(
வரலாறு எழுதப்படத் தேவையில்லாதது, அது ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது, அது இணையத்தளங்களால் பகிரகப்பட மட்டுமே முடியும்.

சக்(ங்)கடத்தார் said...

வணக்கம் ராசாக்கள்! எல்லோரும் எப்பிடிச் சுகமாய் இருக்கிறீங்களே? கன நாளைக்குப் பிறகு கிழவன் காலடி எடுத்து வைத்திருக்கிறன் என்று முறைக்கிறியள் போல இருக்கு. எழுதுறவன் யாரோ பெயரெடுப்பவன் யாரோ என்பது போல சக்கடத்தார் யார் என்று தெரியாதவர்கள் எல்லோரும் என்ரை வம்சப் பதிவர்கள் மீது நான் தான் சக்கடத்தாரையும் அவர் தான் எழுதுவது என்றவகையிலை கருத்தைத் திணிக்க முற்பட்டமையால நான் ஓடி ஒளிச்சிட்டன் என்றெல்லாம் நினைக்கக் கூடாது ராசாக்கள்.


சக்கடத்தார் ஒரு தனிமனிதன் இல்லை ராசாக்கள். முதன்மைச் சக்கடத்தார் பிரித்தானியாவிலை இருக்கிறார். ஏனைய என்ரை வம்சங்கள் எல்லோரும் கனடா, ஒஸ்ரேலியா, சுவிஸ், இந்தியா, நியூசிலாந்து, பிரான்ஸ் இப்பிடிக் கொஞ்ச நாடுகளிலை உள்ள என்னோடை வம்சங்களும் நானும் சேர்ந்து தான் ராசாக்கள் சக்கடத்தார் என்று நீட்டி முழக்க வெளிக்கிட்டனாங்கள்.


ஆனாலும் என்ன பாருங்கோ! ஒரு சில அரசியல் பிடிக்காத ஆட்கள், என்னுடைய கருத்துக்கு எதிர்க்கருத்துச் சொல்லத் தெரியாத ஆட்கள் சக்கடத்தாரை எழுதுறது ஒரு தம்பி தான் என்றும் அவரையும், அவரின்ரை குடும்பத்தாரையும் இலங்கையிலை தூக்குவம் என்றுமெல்லோ மிரட்டுகீனம் ராசாக்கள். சக்கடத்தாரும் உந்தமாதிரியான சங்கடங்களை விளக்க வேண்டும் என்று தான் வெளிக்கிட்டவர். என்னாலை பதிவுலகிலை எழுதுற ஒரு பதிவரின் மீது பழி விழுந்து அவரின்ரை குடும்பத்தவர்கள் இலங்கையிலை கொல்லப்படலாம் என்ற அச்சம் காரணமாகவும், முகமூடி, அனானியின் பெயர் தெரியாத மிரட்டல் காரணமாகவும் தான் ராசாக்கள் நான் கொஞ்ச நாள் உந்த அரசியல் வெட்டல், வெருட்டல், பொய்களைக் கண்டு கொள்ளாமல் இருந்தனான் ராசாக்கள்.


என்னைப் பற்றியே நிறைய அலட்டக் கூடாது தானே. அதாலை பிள்ளையள் நான் இனி இந்தப் பதிவு சம்பந்தமாக என்னுடைய விசயங்களை எழுதலாம் என்று நினைக்கிறேன்.


இன்னொரு விசயம் சொல்லுறன் ராசாக்கள்- இந்தச் சக்கடத்தாரோடை சம்பந்தப்படுத்தி ஒஸ்ரேலியாவிலை இருக்கிற தம்பியின்ரை குடும்பத்திற்கு இலங்கையிலை ஆபத்து விளைவிக்கலாம் என்று கதைக்கிறது முழு முட்டாள் தனம் ராசாக்கள். என்னாலை அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத் தான் நானும் உந்தமாதிரியான விதண்டாவாதிகள் ஏதாவது எழுதட்டுமே என்று பேசாமல் இருந்தனான்.


ஆனாலும் கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதையாகவெல்லே இது இருக்குது. எழுதலாம் என்பதற்காக, என்னத்தை வேண்டுமானலும் வரன்முறை இல்லாமல் எழுதலாமே தம்பியவை?
கொஞ்சம் பொறுங்கோ ராசாக்கள். முதன்மைச் சக்கடத்தாருக்கு குளிர் எண்டதாலை விறைக்குது. கீற்றரைப் போட்டிட்டு வாறன்.

சக்(ங்)கடத்தார் said...

இந்தப் பதிவினைப் பிள்ளையள் நான் பாராட்டினால் கிழவன் வஞ்சப் புகழ்ச்சி புகழ்ந்து பப்பாவிலை ஏத்தப்பாடு படுறான் என்று நினைப்பியள். ஆனால் ஒரு வயசான கிழவன் எண்ட ரீதியிலை என்ரை கருத்தையும் சொல்லத் தானே வேணும் ராசாக்கள்.


என்னண்டாப் பாருங்கோ. கிணற்ற்குக்கை இருக்கிற தவளையகள் கத்துவது போல ஊரிலை மாரி காலத்திலை மழைக்கும் தவளையள் கத்தும் பாருங்கோ. மாரித்தவக்கை கத்துறதாலை ஏதாவது பலன் இருக்கே? இந்த மாதிரி முள்ளந்தண்டற்ற, பச்சோந்திகளை ராசாக்கள் திரும்பிக் கூடப் பார்க்கக் கூடாது. உதுகளைத் திரும்பிப் பார்த்து, அதுகளின்ரை செயல்களை வைச்சு தனிப் பதிவு எழுதினால் அவையளுக்கும் கொஞ்சம் சுதி ஏறும் பாருங்கோ. தங்களை யாரோ உசுப்பேத்தீனம், தங்கடை பதிவுகளை யாரோ பாக்கீனம் என்ற ரீதியிலை உதுகள் மேலும் மேலும் புரளிகளை அவிழ்க்கத் தொடங்கிடும் ராசாக்கள். என்ன செய்கிறது மோனையள். கேட்க ஆளில்லா ஊரிலை தம்பிமார் சண்டைப் பிரச்சாரமாம். நடக்கட்டும் நடக்கட்டும்.

சக்(ங்)கடத்தார் said...

is Jaffna Library a museum? May be the books which were there old and not usable. ;)//


தம்பி இர்ஷாத்!அப்பு ராசா உமக்கு என்ன ஞானம் வெளிச்சிருக்கே, ஒரு நூலகம் பற்றி வரைவிலக்கணம் தெரியாத நீர் எல்லாம் பதிவெழுதி என்னத்தைக் காணப் போறீர்? சும்மா சுய புலம்பலே ராசா செய்கிறீர்? தம்பி மியூசியம் என்றால் என்னவென்று தெரியுமோ? கொஞ்சமெண்டாலும் உம்மடை ஞானக் கண்ணைத் திறவும் ராசா! ஆசியாவிலையே ஒரு பெரிய, தமிழ் நூலகமாக அந்தக் காலத்திலை இந்த நூலகம் இருந்தது ராசா.


கொஞ்சமெண்டாலும் உம்மடை அறிவுக் கண்ணைத் திறந்து பாரும்.


இவரது பதிவுகளைப் பார்த்தாலே அடிக்கடி தொனிக்கும் விஷம,காழ்ப்பு உணர்வுகளையும், வித்தியாசப்படுகிறேன் என்ற தொனியில் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காத ஒரு கேவலமான கிண்டல் தொனியில் இருக்கும்.//



உம்மடை பதிவுகளிலை இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை உருவாக்கிற கருத்துக்களையும் நான் கண்டிருக்கிறேன் ராசா! அதுக்காண்டி நான் பிரதேச வாதம் பேசுறேன் எண்டெல்லாம் புலம்பக் கூடாது சரியோ.
உண்ணானைச் சொல்லுறன் ராசா! தம்பி இர்ஷாத்! உம்மடை கருத்தை நீர் மீளப் பெற வேணும். ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களிடமும் நீர் மன்னிப்புக் கேட்க வேணும. யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட துன்ப நிகழ்வு பற்றி எம்.ஏ நுகுமான் கூட தன்ரை அனுதாபத்தை வரிக்கு வரி கண்ணீர் சொரியும் நினைவுகளோடை செதுக்கியிருக்கிறார் ராசா. புனிதம் பற்றியும், மறை நூல்கள் பற்றியும் மகத்துவம் பேசுற நீர் ஒரு இனத்தின்ரை கல்வியின் அத்திவாரமாக இருந்த நூலகம் அழிக்கப்ப்ட்டதையும், அங்கை இருந்த நூல்களைப் பற்றியும் கீழ்த்தரமாகக் கதைக்கலாமோ?


இதுக்கெல்லாம் மன்னிப் கேட்பதை விட ‘’ஓட்டைச் சிரட்டையிக்கை தண்ணியை விட்டுப் போட்டு குதிச்சு உயிரை விடலாம் ராசா!

முதன்மைச் சக்கடத்தார்!

B.Karthik said...

நானும் காலை வானொலி நிகழ்ச்சியைக் கேட்டேன். உங்கள் பதில் அவ்வேளையில் மட்டுமல்ல இப்பொழுதும் சரியாகவே படுகிறது.

சக்(ங்)கடத்தார் said...

அப்பு ராசா இர்ஷாத்! உம்மடை மூடியிருக்கிற அறிவுக் கண்ணைத் திறந்து இதையும் கொஞ்சம் பாருமன்:


புத்தரின் படுகொலை!


நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.

இரவில் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?'
என்று சினந்தனர்.

'இல்லை ஐயா,
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று எம்மால்
ஆகையினால்......
என்றனர் அவர்கள்.

'சரி சரி
உடனே மறையுங்கள் பிணத்தை'
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.

சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்
*சிகாலோவாத சூத்திரத்தினைக்
கொழுத்தி எரித்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது
*தம்ம பதமும்தான் சாம்பரானது.

-கவிஞர் எம்.ஏ.நுஃமான்

இருபத்தி எட்டு வருடங்களுக்கு முன்னர் இதே சூன் முதலாம் திகதி காலைப் பொழுது, நன்றாகப் பேசிக்கொண்டிருந்த பாதிரியார் தவீது அடிகள் அவரைத்தேடி வந்த ஒரு சேதி கேட்டு மாரடைப்பால் மரணமடைகிறார்.அவருக்கு கிடைத்த அதே செய்தியை
யாழ்ப்பாணத்தில் கேள்விப்பட்ட ஒவ்வொருவரும் ஒப்பாரி வைத்தபடியே யாழ்ப்பாணத்தின் மையப் பகுதி நோக்கி ஓடுகிறார்கள்.ஒரு பெருங் கூட்டம் அந்த இடத்தில் கூடிவிட்டது.அந்த இடம் முழுவதும் அழுகையும் ஒப்பாரியும் நிறைந்திருந்தது. எரிந்து கொண்டிருக்கும் தணல் மேட்டில் இருந்து புகை கிளம்பிக்கொண்டிருந்தது.அத்தனை பேர்களின் கண்ணீராலும் அந்த தீயை அணைக்க முடியவில்லை.ஈழத்தமிழர்களின் தேசிய நூலகமான யாழ் நூலகத்தில் இருந்த 97,000 புத்தகங்களும் ஓலைச்சுவடிகளும் ,ஒலி ஒளி நாடக்களும் எரிந்து சம்பலாகிக் கொண்டிருந்தன.

யாழ்ப்பணத்தைப் பொறுத்தவரையில் முதல் நூலகம் 1842 இல் ஆரம்பிக்கப்பட்டதாக தகவல் உள்ளது. ஆனலும் அது பெரு வளர்ச்சி பெற்றதாக இல்லை. 1933 இலேயே இன்றைய நூலகத்திற்கான முதல் விதை போடப்பட்டது..சிறிய அளவில் யழ்ப்பாணத்தில் இயங்கிய நூலகத்திற்கான நிரந்தரக் கட்டடத்தின் தேவை உணரப்பட்டது. யாழ் நகரபிதா,வண. லோங் அடிகள்,இந்திய தூதுவராலய செயலர்,அமெரிக்கதூதுவர்,பிரித்தானியத் தூதுவர் ஆகியோரால் புதிய நூலகத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.

யாழ்ப்பாணம் கண்டிராத பெரும் களியாட்ட விழாக்கள்,பரிசு சீட்டு விற்பனை போன்ற பலவற்றின் மூலம் மக்களிடமிருந்து நூலகம் கட்டுவதற்கான பணம் சிறிது சிறிதாக திரட்டப் பட்டது.இந்திய கட்டடக் கலைஞர் நரசிம்மன் என்பவரின் வழிகாட்டுதலில்
யாழ் நூலகக் கட்டடம் உருப் பெறத் தொடங்கியது.பல பேரின் கூட்டுழைபினாலும் யாழ்ப்பாண மக்களின் பங்களிபினாலும் உருபெற்ற நூலகம் கம்பிரமாக தலை நிமிர்ந்து நின்றது

யாழ் நூலகம் ஆசியாவின் மிகப் பெரும் நூலகம்.தமிழர்களின் கல்வி வளத்தின் ஆதரமாகவும் தமிழரின் அடையாளமாகவும் உருபெற்று நின்றது.11.10.1959 இல் பொதுமக்கள் பாவனைக்காக யாழ் மேயர் அல்பிரட் துரையப்பவினால் நூலகம் திறந்துவைக்கப்பட்டது.அன்று தொடக்கம் யாழ்ப்பாணத்தவரின் வாழ்வியலோடு நூலகம் ஒன்றிக்க தொடங்கியது.யாழ்ப்பணத்தில் ஊருக்கு ஊர் இயங்கிய வாசிப்புமையங்கள்,சனசமூக நிலையங்கள் வாசிக சாலைகள் என்பவற்றின் மையப் புள்ளியாக யாழ் பொதுசன நூலகம் உருப்பெறலாயிற்று..

ஏறாத்தாழ 98 வீதம் எழுத்தறிவு உள்ளதான யாழ்ப்பாணச் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு இந்த வாசிகசாலைகளும் நூலகங்களும் உந்து சக்தியாக இருந்தன. யாழ்ப்பணத்தின் பெரும்பாலான வீடுகளில் பத்திரிகை வாங்கும் பழக்கம் இருந்தது.இளைஞர்கள்
கூடும் இடங்களாக வாசிப்பு நிலையங்களும் ,நூலகங்களும் மாறியிருந்தது.சிங்கள இனவாதிகள் தமிழருகெதிரான வன்முறையினைக் கட்டவிழ்த்த பொழுதுகளில் சிங்களவர் கண்களில் தமிழரின் அறிவு வளர்ச்சி உறுத்திக் கொண்டிருந்தது.



இன்னும் இருக்குப் பிள்ளையள்!

சக்(ங்)கடத்தார் said...
This comment has been removed by the author.
Hisham Mohamed - هشام said...

@ கன்கொன் // வரலாறு எழுதப்படத் தேவையில்லாதது, அது ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது.. பகிரகப்பட மட்டுமே முடியும் //

இதுக்கு மேல நான் என்ன சொல்றது......

maruthamooran said...

யாழ் பொது நூலகம் தொடர்பில் பொறுப்பற்ற கருத்தை வெளியிட்டிருக்கும் 'என்ன கொடுமை சாரை' வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஓரு சமூகத்தின் கல்வியைச் சிதைப்பதன் மூலம் அந்த சமூகத்தின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் தோற்றுவாய்கள் அழிக்கப்படுகின்றன. அப்படியானதொரு நிகழ்வே, யாழ் பொது நூலகம் எரிப்பு.

தென் ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் என்ற பெருமையைப் பெற்றிருந்த யாழ் பொது நூலகம் திட்டமிட்டே அழிக்கப்பட்டது. அதற்குள் இலட்சக்கணக்கான விலைமதிப்பற்ற புத்தகங்கள் எரிந்து சாம்பலாகிப் போனது.

இதனை உரிய முறையில் விளங்கிக்கொள்ளாமல் (அல்லது விளங்கிக்கொள்வதிலிருந்து விலகியிருந்து கொண்டு) போகிற போக்கில் கருத்துக்களை கூறிவிட்டு செல்வது அழகல்ல. தனி மனித மற்றும் சமூக குரோதங்களின் வெளிப்பாடாகவே இதனைக் கொள்ள வேண்டும்.

'என்ன கொடுமை சார்' என்கிற பெயரினைத் தாங்கியிருக்கிற உறவே, நீ (உரிமையுடன் அமைப்பதனால் ஏக வசனத்தில்) மாற்றுக்கருத்துக்களை உண்மையான மனதுடன் முன்வைக்க வேண்டும். அதுவே, சீண்டல்களையும், குரோதங்களையும் தோற்றுவிப்பதாய் அமையக்கூடாது.

மன வருத்தங்களுடன்,

'மருதமூரான்' என்கிற புருஜோத்தமன் தங்கமயில்.

சக்(ங்)கடத்தார் said...
This comment has been removed by the author.
EKSAAR said...

கருத்துக்களுக்கு நன்றி..

நான் பதிவில் சொல்லியிருக்கிற விஷயம் என்ன என்று உங்களுக்கெல்லாம் விளங்கவில்லை போல இருக்கு..

உருவகப்படுத்தல் ஏன்?

அதேவேளை யாழ்ப்பாண நூலக எரிப்பு தொடர்ந்து அரசியல் காரணங்களுக்காக பிழையான கற்பிதங்கள் / வியாக்கியானங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றமையும் கவலைக்குரிய விடயமாகும்.

என்பதை தெளிவாகவே சொல்லியிருக்கிறேன்.

இன்னும்

யாழ் நூலக எரிப்பு கண்டிப்பிற்குரியது.

என்றும்

தொல்பொருள் ஆக மதிப்பு மிக்கதே. ஒரு நூதன சாலையில் வைக்கப்பட்டிருக்கவேண்டிய விடயங்கள் அவை.

என்றும் சொல்லியிருக்கிறேன்.

அதை எரித்தது சரிதான் என்று எங்காவது சொல்லியிருக்கிறேனா?

அதேவேளை பதில் சொன்ன யாரும்

ஓலைச்சுவடிகளுக்காக 81ஆம் ஆண்டிலிருந்து பேசிக்கொண்டிருக்கும் சனம் அதன்பின் இடம்பெற்ற பல கொலைகளை பற்றி பேசாமல் இருப்பது ஏன்? இந்த உயிர்களில்லாம் ஓலைச்சுவடிகளை விட பெறுமதியற்றவையா இவர்கள் பார்வையில்?

என்றும் கேட்டிருக்கிறேன். அந்த உயிர் என்பது இன மத மொழி வேறுபாடுகளை கடந்தது இல்லையா?

சொல்லுங்க மக்கா சொல்லுங்க..

வந்தியத்தேவன் said...

செம்மொழி மாநாடு நடக்கும் காலம் என்பதால் தமிழில் உள்ள ஒரு பழமொழி
"கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை"

Paheerathan said...

நானும் எத்தனையூ தடவை இவரின் கருத்துக்களைப்பார்த்து ஆத்திரப்பட்டதுண்டு, முதலாவதாக புனைபெயரில் ஒளிந்துகொண்டு இப்படியான கருத்துக்களை கூறும் இவர் யாரென்று அறிந்து கொள்ளவேண்டும் என்றிருந்தேன் இன்றுதான் தெரிந்தது. அண்மையில் கூட வவுனியாவில் இடம்பெற்ற திருமனங்களைபற்றி காழ்ப்புணர்வுடன் ஒரு கருத்தை கூறியிருந்தார். எதிலுமே நொட்டை கண்டுபிடிக்கும் ஒரு பேர்வழிதான் இவர். பதிவுகளை பார்த்தாலே தெரியும்.
கருத்துக்களில் எபோதும் ஒரு சமய, இன வெறி இருக்கும் . இப்பிடியானவர்களை கணக்கிலெடுக்காமல் விடுவதே நல்லம் என்று நினைக்கிறேன்.

நானும் மட்டக்களப்புத்தான், சந்த்ருவின் ஒரு சில பதிவுகளை பார்த்திருக்கிறேன், இண்டைக்கும் அந்த செல்வநாயகம் பதிவின் தலைப்பை பார்த்துவிட்டு அப்பால் சென்று விட்டேன். என்ன காரணத்திற்க்காக அந்த தொடர் என்று விளங்கவில்லை, சரி தமிழர்களின் வரலாறு என்றால் வரலாறு எழுதுபவர்களின் மூலம் பல இடங்களில் இருக்கும் ஆனால் இது யாரோ எங்கேயோ ஒரு இணையத்தில் எழுதியதை மட்டும் வைத்துக்கொண்டு அதை அப்படியே மீள் பிரசுரம் செய்ய வேண்டிய தேவை இப்போது என்னவோ தெரியாது. மாகாண சபை தனியே தந்துவிட்டார்கள், இனி எல்லாம் கிடைக்கும் என்று நினைக்கிறார்களோ தெரியவில்லை. இரு தரப்புக்கிடையில் பிளவுகளை ஏற்ப்படுத்த நினைக்கும் சதிகாரர்களுக்கு துணை போகாமல் இருந்தால் சரி

ஆதிரை said...

அவர்களின் முகம் எனக்குப் பழகியதொன்று.

சந்ருவிடமிருந்து இப்படியான பதிவுகள் வருமென்று நான் கனவிலும் நினைக்காவிட்டாலும், இப்போது அதுவும் சகஜம்.

இதெல்லாம் எங்கும் சகஜமப்பா.. ;)

sellamma said...

லோசன் அண்ணா மற்றும் மதிப்பிற்குரிய பதிவர்களுக்கு,,,
வரலாறு தெரியாத மடையர்களின் கருத்துக்கு செவிசாய்க்க வேண்டாம்,,
அவர்களை மன்னித்தால் அது அவர்களுக்கு இன்னும் சாதகமாக போய்விடும்,, அவர்கள் மனிதர்களாய் இருந்தால் தானே மன்னிப்பு கொடுப்பதற்கு,,
எவனாவது எம் இனத்தை கேவலப்படுத்தி எழுதினால் அவன் கைகள் வெட்டப்பட வேண்டும்,, எம் தமிழை தூற்றினால் அவன் நாக்கு துண்டாக்கப்பட வேண்டும்,,,

எனக்கு பதிவர்களின் மேல் ஒரு கோபம் இருந்துகொண்டிருந்தது,, ஒரு சிலரைத்தவிர வேறொருவரும் எம் பிரச்சனைகளை பற்றி பேசவில்லையே என்று,, ஆனால் இன்று உங்கள் ஒவ்வருவரின் பின்னூட்டத்தில் உங்களின் தமிழின உணர்வு என்னை நெகிழ செய்கிறது,,,,
உங்களின் தமிழின உணர்வுக்கு தலை வணங்குகிறேன்,,,,

தம்பி said...

ஓலைச்சுவடிகளுக்காக 81ஆம் ஆண்டிலிருந்து பேசிக்கொண்டிருக்கும் சனம் அதன்பின் இடம்பெற்ற பல கொலைகளை பற்றி பேசாமல் இருப்பது ஏன்? //

81 க்கு பிறகு எரிந்த எல்லா உயிர்களுக்கும் ஓலைச் சுவடி எரிந்த அதே நெருப்புத்தான் காரணம். ஆகவே அதை பேச வேண்டியுள்ளது.

மற்றும்படி வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உங்கள் தனித்துவ குணத்தை பாராட்டுகிறேன்.

ஷா \ Shah said...

லோஷன், இர்ஷாத்தின் பதிவுகளிலேயே தெரிகிறது அவரின் "சாருத்தனம்".தயவுசெய்து உங்கள் பதிவிலிருந்து இர்ஷாத்தின் தொடுப்பை அக்ற்றுங்கள்.அவருக்கு இலவச விளம்பரம் இது.

AkashSankar said...

தமிழர்களை பிரிப்பதற்கு வேறு ஆட்கள் தேவையில்லை, தமிழர்களே போதும்...

யோ வொய்ஸ் (யோகா) said...

யாழ்பாண நூலக எரிப்பை தவறென சிங்கள சகோதரர்களே ஏற்று கொண்டுள்ளனர். சிங்கள நண்பர்களுடன் பரஸ்பரம் பழகும் எனக்கு இது நன்றாக தெரியும், இப்படியான சூழ்நிலையில் என்ன கொடுமை சாரின் இக் கருத்து கண்டிக்கத்தக்கதே.

சந்ருவின் பதிவு ஆரம்பத்தில் வாசித்தேன், அரசியல் பதிவுகள் வாசிக்க விருப்பின்மை காரணமாக இப்போது வாசிப்பதில்லை

உமர் | Umar said...

அவருடைய ஒரு பதிவில் உரையாடியபோதே அவருடைய சமயச் சார்பு நன்றாக தெரிந்தது. 'வணக்கம்' என்னும் வார்த்தையையே மதரீதியாக பார்க்கும் ஒருவரிடமிருந்து இது போன்ற காழ்ப்புணர்வு பதிவுகளும், பதில்களுமே வெளிவரும்.

ஆதித்தன் said...

ஆசியாவிலேயே உன்னதமான நூற்களஞ்சியமாக இருந்த யாழ் நூலகம் எரிந்த செய்தி கேட்ட உடனேயே அந்த இடத்தில் நெஞ்சுடைந்து மரணித்தவர் தாவீது அடிகளார். நூலகப் பொறுப்பாளர்/அலுவலர் மனநோயாளியானார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் நூலகத்தை செங்கற்களாலான கட்டிடமாகவோ, காகித சேகரிப்புக் கிடங்காகவோ, தொல்பொருட்காட்சிச்சாலையாகவோ அதைப் பார்க்கவில்லை. தம் உயிரினும் மேலாய் அதை நேசித்தார்கள்.

உண்மையாய் தத்தமக்குப் பட்ட மாற்றுக்கருத்துக்களை நாகரிகமாய் முன்வைக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள். எப்போதும் எதற்கும் எதிர்க்கருத்துக்களைச் சொல்லி தம்மை பிரபல்ய வெளிச்சத்தில் நிலைநிறுத்திக் கொள்ள ஏங்குபவர்களும் இருக்கிறார்கள்.
இந்த நபர் இரண்டாம்வகை. தன் கருத்துக்களால் தன்னைத் தானே சிறுமைப்படுத்திக்கொண்ட அவரின் கருத்துக்களை நாம் கணக்கெடுக்கத் தேவையில்லை.

எழில் said...

//அந்தப் பதிவுகள் ஆரம்ப முதலே யாழ்ப்பாணத் தமிழ்த் தலைமைகளும்,தமிழரும், கிழக்கிலங்கைத் தமிழரை அடிமைப்படுத்தி வருவது போலவும் ஏமாற்றி வருவது போலவும் உருவகப்படுத்தியே காட்டுகின்றன.//

யாழ்ப்பாணத்தவர்களும் சிங்களர்களும் வரலாற்றைத்திரிபு படுத்த கிழக்கு மாகாணத்தான் தொடர்ந்தும் நீங்கள் சொல்வதெற்கெல்லாம் ஆமாம் போடவேண்டும் என்பதற்காகவே சந்ருவின் பதிவை எதிர்க்கிறீர்கள். நீங்கள் யாழ்ப்பாணத்தில் வாழாவிட்டாலும் அந்த யாழ்ப்பாணத்து புத்தி போகவில்லை. யாழ்ப்பாணத்தானின் சுய நல பிரச்சினைகளையெல்லாம் தமிழன் பிரச்சினை என்று உருவகப்படுத்தி நீங்கள் எல்லாம் குளிர்காய்ந்தது போதும். போதும் இந்த பார்ப்பான் மனப்பான்மை.

//எதற்கு தேவையில்லாமல் பிளவுபட்டு வலிமைகளைக் குறுக்கிக் கொள்கிறோம்??//

உண்மைகளை உலகுக்கு சொல்வது உன்களுக்கு தேவையற்றதாக இருக்கலாம்.

நீங்கள் கிழக்கு மாகாணத்து மக்கள் யுத்தத்தில் கஷ்ட்டப்பட்டபோது என்ன செய்தீர்கள்? ஒரு தடவையாவது வந்து போனதுண்டா? உங்களுக்கு வன்னி மக்கள் முகாமுக்குள் இருக்கும்வரை எதுவும் தெரியவில்லையே

பிரசுரிப்பது விடுவதும் உங்கள் விருப்பம். உங்கள் மனச்சாட்சியை கேட்டுப்பாருங்கள்.. உங்களுக்கே உண்மை தெரியும்

ம.தி.சுதா said...

என்ன மனுசங்கப்பா. antivirus மாதிரி இவங்களை களைய softwere இல்லையா

Unknown said...

இப்படி ஒரு கருத்தை முஸ்லிம் ஒருவர் சொல்லியிருப்பது முஸ்லீமாகிய எனக்கு அவமானமாக உள்ளது..
”கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை”..

முஸ்லிம் என்ற சார்பில் அவர் சார்பாக மன்னிப்புக் கேட்கிறேன்.

archchana said...

சந்துரு வின் இந்த வரலாறுகள் தொடர்பான பதிவை வாசிக்கும்போது நானும் நினைத்தேன்.ஏன் இதனை எழுதுகிறார் என்று.எல்லோரும் மனதில் வைத்திருந்ததை நீங்கள் வெளியில் சொல்லியிருக்கிறீர்கள். அவ்வளவே. அதற்கு நன்றிகள். மேலும் தங்கள் பதிவில் எதனையும் எழுதலாம் என்ற நினைவு பல பதிவர்களிடம் உள்ளது. அண்மையில் தருகசினி இன் பதிவும் இவ்வாறான ஒன்றே. ஆனால் அவர் விமர்சனங்களின் பின்னர் தனது பதிவினை நீக்கியிருந்தார் .சந்துருவும் தனது வரலாறு எழுதுவதை நிறுத்திவிட்டு வேறு எவ்வளவு இருக்கு எழுத ,பகிர ........முயற்சிக்கலாமே.....

Admin said...

நண்பர் லோசஷனின் வருத்தம் அனைத்து சமூக அக்கறை உள்ளவர்களுக்கும் வருகின்ற ஒன்றுதான். அதுவும் தொடர்பூடகத்துறையில் இருக்கும் நண்பருக்கு இச்சமூகம் சார் அக்கறையும் கோபமும் நியாயமானது, ஆனாலும் இணைய உலகில் அதும் இப்பதிவுலகில், காணப்படுகின்ற கட்டற்ற சுதந்திரம் எதையும் யாரும் எழுதலாம் என்பதை எல்லோருக்கும் வழங்கியுள்ளதால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

எனவே, நண்பரே இவ்வாறான பதிவுகளினையோ, பதிவர்களையோ புறக்கணிப்பது, நாம் அவர்களுக்க்கு எதிராக பதிவிடுவதினை விட வலுவானது என்பது எனது திண்ணம்.

இன்னொரு விடயம்,

//அஸ்பர் said...
இப்படி ஒரு கருத்தை முஸ்லிம் ஒருவர் சொல்லியிருப்பது முஸ்லீமாகிய எனக்கு அவமானமாக உள்ளது..
”கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை”..

முஸ்லிம் என்ற சார்பில் அவர் சார்பாக மன்னிப்புக் கேட்கிறேன்// என்ற நண்பரின் பின்னூட்டத்திற்கு எனது எதிர்ப்பினை இங்கு பதிக்கின்றேன்.

நண்பர் அஸ்பரே நீங்கள் இங்குள்ள விடயத்தினை இன்னொரு பக்கத்திற்கு நகர்த்தும் அபாயத்தினை ஏற்படுத்தியுள்ளீர்கள். இது ஒரு தனி நபரின் கருத்து. அதற்கு எந்த ஒரு இனத்தினதும் சாயத்தினை நீங்கள் பூச வேண்டாம் நண்பரே..

Vijayakanth said...

சிங்களம் பௌத்தம் பற்றி மட்டுமே முன்னிறுத்தி பேசும் சம்பிக்க அவர்களே மன்னிப்பு கேட்டிருக்கும்போதே விளங்கியிருக்கவேண்டும் அந்த நூலகத்தின் பெருமை.....

தமிழ் பேசும் சமூகம் நலிவடைய சில களைகள் காரணமாயிருப்பது வேதனைக்குரியது.....

ஒருவேளை அழிந்துபோன அரிய வரலாற்று நூல்களை வாசிக்கும் பேறு பெற்றிருந்தாலாவது இவரது எதிர்ப்பு கொள்கை மாறியிருக்குமோ!

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே :)

எழில் said...

வன்னியிலே யுத்த நடவடிக்கை ஆரம்பிக்க முன்னர் கிழக்கிலே பாரிய யுத்தம் இடம் பெற்றது. அப்போது பல்லாயிரக் கணக்கான மக்கள் அனாதைகளாக அகதி முகாம்களிலே பல மாதங்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தனர். அப்போது ஒரு பதிவராவது அவர்களுக்காக எழுதியிருக்கின்றீர்களா?

Anonymous said...

ஐயா எழில் ஐயா

இந்த இறுதிக்கட்ட யுத்தத்துக்கு கோடரிக்காம்பாக இருந்த உங்கள் கிழக்கு மாகாணத்தளபதி கருணா, பிள்ளையான்களின் அடாவடித்தனங்கள் (யாழ்ப்பாணத்தாரை விரட்டல், துணைவேந்தரை வேட்டியாடியது) இவை பற்றியெல்லாம் உங்கள் பகுதியில் இருந்து ஏதாவது கண்டனப்பதிவுகள் வந்ததா என்று ஆவல். இப்படி பிரதேசவாதத்தை கிளப்பும் உங்களைப் போன்றவர்கள் இனவாதிகளை விட மோசமானவர்கள்

அகிலன் சொன்னது said...

எங்களிட்ட இருக்கிறது ஒரு ஒடுக்கப்படும் இனத்தின்ர வலி மாத்திரமல்ல. அதைவிடவும் மேலால எங்களிட்ட தமிழ் இனவாதம் இருக்கு அது சிங்கள இனவாதத்திற்குக் கிஞ்சித்தும் குறைஞ்சதில்ல. அதைப்போலவே கருணையற்றதும் கொடுரமானதும் மன்னிக்கமுடியாததுமான தமிழ் இனவாதம்.

Prapa said...

இர்ஷாத் உங்க பிரச்னை என்ன 'சார்'?..................................
என்ன கொடுமை சார் என்று நாங்கதான் உங்கள பார்ஹ்து கேட்க வேண்டி இருக்கிறது., உங்களை பிரபல படுத்த வேறு ஏதாவது நல்ல விடயங்களை பகிரலாமே...................!

Prapa said...

அத்தோடு இந்த பதிவுலகில் இருக்கின்ற நண்பர்களே நாம் நிறைய இழந்து விட்டோம், அதிலிருந்து மீண்டேலா ஏதாவது செய்ய முடியுமா பாருங்கள் அதை விடுத்து நம் சமூகத்துக்குள் இன்னும் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் .............................தயவு செய்து ஆரோக்கியமாக சிந்திப்போம், .

Admin said...

என்னுடைய பதிவுகளிலே எந்த இடத்திலே தவறு, பொய்யான விடயங்கள் இருக்கின்றன என்று சுட்டிக்காட்டுங்கள் என்றுதான் கேட்கின்றேன் நான் திருத்துகின்றேன். அல்லது உண்மையான வரலாறை சொல்லுங்கள். அதை விடுத்து பொய்களை எழுதுகிறேன் பிரதேசவாதம் பேசுகின்றேன் என்று சொல்ல வேண்டாம்.

எந்த இடத்திலே பொய்யான தகவல் என்று சொல்லுங்கள் ஆதாரத்தை சொல்கிறேன்.

பல உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன அவற்றை வெளியிடுகின்றேன்.

கருத்துரையிடும் நண்பர்களுக்கு....

என்னுடைய பதிவுகளை பாருங்கள். சமுக அக்கறையற்ற பதிவுகள் எழுதி இருக்கின்றேனா என்பதை. வெறுமனே மொக்கைப் பதிவுகளை எழுதுபவன் நானல்ல.


வன்னி மக்கள் படுகின்ற இன்னல்களையும் ஏனைய பதிவர்களை விட அதிகமாக எழுதி இருக்கின்றேன். . எதையாவது எழுத வேண்டும் என்பதற்காக பொய்களை எழுதுபவன் நானல்ல.

எனது இந்த தொடரிலே ஒவ்வொரு பகுதியாக வாசியுங்கள் அதன் பின்னர் கருத்துக்களை பகிருங்கள். தமிழர்களை ஏமாற்றிய, தமிழர்களுக்கு துரோகமிழைத்த அரசியல்வாதிகளையும், தமிழ் தலைவர்களை பற்றியுமே எழுதுகின்றேன். மாறாக யாழ்ப்பான மக்களை தவறாக எழுதவில்லை.

Admin said...

//கன்கொன் || Kangon

இதில் சிரிப்பான விடயமென்னவென்றால் நான் என்னை யாழ்ப்பாணத்தவன் என்றால் நான் பிரதேசவாதி, ஆனால் அவர்கள் தங்களை 'மட்டக்களப்பான்' என்றழைத்துக் கொண்டு வரலாறுகளை 'எழுதினால்' அது நியாயம் கதைப்பதாம். :(//


இந்தப் பதிவிலே ''மட்டக்களப்பான்'' பற்றி எங்காவது குரப்பட்டிருக்கின்றதா? அல்லது கருத்துரை இட்டிருக்கின்றாரா? இந்த பதிவுக்கு சம்மந்தமில்லாமல் எதட்கால மட்டக்களப்பான் பற்றி பேசவேண்டும்.

பதிவர்கள் பலர் தமது சொந்த ஊரை, பிரதேசத்தை சார்ந்த புனை பெயர்களை வைத்திருக்கின்றனர். அது அவரவர் விருப்பமும், பிரதேச பற்றும். இவர் புனை பெயரிலே ''மட்டக்களப்பான்'' என்று எழுதுகின்றார்.

வீணாக பதிவுக்கு சம்மந்தமில்லாத விடயத்தை புகுத்தி இருப்பதன் நோக்கம் என்ன? யார் பிரதேச வாதம் பேசுகின்றார்.

கன்கொன் || Kangon said...

// இந்தப் பதிவிலே ''மட்டக்களப்பான்'' பற்றி எங்காவது குரப்பட்டிருக்கின்றதா? அல்லது கருத்துரை இட்டிருக்கின்றாரா? இந்த பதிவுக்கு சம்மந்தமில்லாமல் எதட்கால மட்டக்களப்பான் பற்றி பேசவேண்டும். //

இந்தத் தொடர்பதிவு எங்கே பெறப்பட்டது?
அந்தத் தளத்தில் தானே?
பிறகென்ன?
ஒருவரின் தளத்திலிருந்து பெறப்பட்ட பதிவென்றால் அவர் சம்பந்தப்பட்டிருக்கிறார் தானே?


// பதிவர்கள் பலர் தமது சொந்த ஊரை, பிரதேசத்தை சார்ந்த புனை பெயர்களை வைத்திருக்கின்றனர். அது அவரவர் விருப்பமும், பிரதேச பற்றும். இவர் புனை பெயரிலே ''மட்டக்களப்பான்'' என்று எழுதுகின்றார். //

அது அவர் விருப்பம்.
அதைப்பற்றி யாருமே கணக்கெடுக்கவில்லை.

நான் என்ன சொன்னேன் என்பதை திரும்ப வாசிக்கவும்.

கன்கொன் || Kangon said...

@ சந்ரு

திரும்பத் திரும்ப அந்தப் பதிவில் என்ன பிழை இருக்கிறத என்று கெட்பதன் மூலம் சரியென்று நிரூபிக்க முயற்சிக்க வெண்டாம்.
அந்தப் பதிவு ஒரு பிரதேசவாத நோக்கோடு முற்றுமுழுதாக எழுதப்பட்டதால் இதுதான் பிழை என்று சுட்டிக் காட்டவே தேவையில்லை.

வேண்டுமானால் இதைப் பாருங்கள்.
http://shanthru.blogspot.com/2010/05/3.html

தமிழர் வரலாறு சொல்லும் கதைகள் என்று சொல்லி்விட்டு கிழக்கு மாகாணம் மட்டுமே இதில் நிறப்படுத்தப்பட்டிருக்கிறதே?

அப்படியானால் தமிழர்கள் வாழும் வவுனியா, வன்னி. யாழ்ப்பாணம் எங்கே?
அவை பற்றி எங்கே?


ஓ!
இங்கு இருக்கிறதல்லவா?

// யாழ்பாணமென்றொரு ராச்சியம் அக்காலை இருந்திருக்கவில்லை. அப்பிரதேசம் மானிடமில்லா வெறும் மணற்றிடராயிருந்தது.
“மணற்றி என்பது அதன் ப10ர்வ நாமம் பின்னாளில் அது மணற்றிடல் எனவும் வழங்கிற்று” என்று யாழ்ப்பாண சரித்திரத்தை 1915இல் எழுதிய ஆ.முத்துதம்பிபிள்ளை என்பார் குறிப்பிடுகிறார் (பக்-01).
யாருமில்லா வெறும்தரையாய் உப்பு கரித்துகிடந்தமையாற்றான் யாழ்பாடிய பாணனுக்கு அது பரிசாக கொடுக்கப்பட்டிருக்கிறது போலும் இந்த பரிசளித்தவன் தான் மேற்கூறிய எல்லாளன்.இதனை முத்துதம்பிபிள்ளை இப்படிக்கூறுகிறார். ‘யாழில் வல்ல ஒரு பாணனுக்கு பரிசாக கொடுக்கப்பட்டமையின் யாழ்பாணமாயிற்று’ //

Admin said...

///கன்கொன் || Kangon said...
// இந்தப் பதிவிலே ''மட்டக்களப்பான்'' பற்றி எங்காவது குரப்பட்டிருக்கின்றதா? அல்லது கருத்துரை இட்டிருக்கின்றாரா? இந்த பதிவுக்கு சம்மந்தமில்லாமல் எதட்கால மட்டக்களப்பான் பற்றி பேசவேண்டும். //

இந்தத் தொடர்பதிவு எங்கே பெறப்பட்டது?
அந்தத் தளத்தில் தானே?
பிறகென்ன?
ஒருவரின் தளத்திலிருந்து பெறப்பட்ட பதிவென்றால் அவர் சம்பந்தப்பட்டிருக்கிறார் தானே?//

மட்டக்களப்பான் எனும் புனை பெயருடைய தளத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. நான் அங்கிருந்து பெறவில்லை. வலைப்பதிவிலிருந்து பெறவில்லை. இணையத் தளத்திலிருந்து பெற்றே பதிவிடுகிறேன்.


நீங்கள் குறிப்பிடும் வலைப்பதிவு தேர்தல் காலத்திலேயே ௧௪ பகுதிகளை மட்டுமே வெளியிட்டது. ஆனால் நான் ௧௭ வது பகுதியிலே இருக்கின்றேன்.


தொடர் பதிவின் இறுதியிலே அந்த இணையத் தளத்தை வெளியிடுவேன்.

Anonymous said...

சந்ரு,
இது தானே நீங்கள் ஆதாரம் காட்டுகின்ற தளம்

http://meenmagal.net/?p=11034

இதை இப்போது சொன்னால் என்னவாம்?

நெஞ்சு குறுகுறுக்கின்றதா?

Admin said...

//கன்கொன் || Kangon said...
@ சந்ரு

// யாழ்பாணமென்றொரு ராச்சியம் அக்காலை இருந்திருக்கவில்லை. அப்பிரதேசம் மானிடமில்லா வெறும் மணற்றிடராயிருந்தது.
“மணற்றி என்பது அதன் ப10ர்வ நாமம் பின்னாளில் அது மணற்றிடல் எனவும் வழங்கிற்று” என்று யாழ்ப்பாண சரித்திரத்தை 1915இல் எழுதிய ஆ.முத்துதம்பிபிள்ளை என்பார் குறிப்பிடுகிறார் (பக்-01).
யாருமில்லா வெறும்தரையாய் உப்பு கரித்துகிடந்தமையாற்றான் யாழ்பாடிய பாணனுக்கு அது பரிசாக கொடுக்கப்பட்டிருக்கிறது போலும் இந்த பரிசளித்தவன் தான் மேற்கூறிய எல்லாளன்.இதனை முத்துதம்பிபிள்ளை இப்படிக்கூறுகிறார். ‘யாழில் வல்ல ஒரு பாணனுக்கு பரிசாக கொடுக்கப்பட்டமையின் யாழ்பாணமாயிற்று’ ////

நீங்கள் சுட்டிக்காட்டும் விடயத்திலேயே ஆதாரம் இருக்கிறதே. திரும்பவும் என்னிடம் என் கேட்கின்றீர்கள் 1915 லே எழுதப்பட்ட யாழ்ப்பான சரித்திரத்திலே பக்கம் 1 ல் குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்று சொல்லி இருக்கின்றேன்.

பதிவுகளிலே அவ்வப்போது ஆதாரங்களை குறிப்பிட்டிருக்கின்றேன் பாருங்கள்.

கன்கொன் || Kangon said...

//
மட்டக்களப்பான் எனும் புனை பெயருடைய தளத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. நான் அங்கிருந்து பெறவில்லை. வலைப்பதிவிலிருந்து பெறவில்லை. இணையத் தளத்திலிருந்து பெற்றே பதிவிடுகிறேன். //

உங்களுக்கம் அந்தத் தளத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது என்று நான் கூறவில்லை.
மற்றும்படி இந்தத் தொடர் எதிரொலி என்ற பெயரில் muthalvarone.blogspot.com இல் மட்டக்களப்பான் என்ற பெயரிலே பதிவிடப்பட்டமை யதார்த்தம், உண்மை, ஆதாரங்கள் உண்டு.


மீன்மகள் என்ற தளத்தில் வெளியாகியிருப்பதாக மட்டகளப்பான தளம் சொல்கிறது.

கன்கொன் || Kangon said...

சில விடயங்கள் அமைதியாக இருக்க சிலர் அதை நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

திரு சந்ரு அவர்கள் எழுதிய சில பந்திகளை இங்கே மேற்கோளிட விரும்புகிறேன்.
அவரின் தளத்திற் சென்று அங்கே கருத்திட எனக்கு சிறிதும் உடன்பாடு கிடையாது.


// கடந்த மூன்று வருடகாலமாக சிறிலங்கா அரசுக்கும் தமிழ் தீவீரவாத தரப்பினரான தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையே போர் தணிக்கப்பட்ட நிலையில் கூட தமிழ் பேசும் மாகாணங்களுக்கிடையே ஒரு புதுவித போர் மேகம் களைகட்டி வருகின்றது. //

விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்றால் அதில் அங்கம் வகித்த தீவிரவாதிகள் இன்று எதுவித தண்டனைகளுமற்று அலைந்து திரிகிறார்களே?
தீவிரவாத அமைப்பொன்றிற்று தளபதியாக இருந்தவர் எவ்வாறு தண்டனைகளற்று திரிய சாதாரண போராளிகள் மட்டும் மாத, வருடக் கணக்கில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்?

வடக்கு கிழக்கு மக்களிடையே ஏதாவது பிரச்சினை இருந்ததாக யாராவது கேள்விப்பட்டுள்ளீர்களா?

யாழ்ப்பாணத்தை நோக்கி மட்டுமே தனது செயற்பாட்டைச் செலுத்தும் என்று 'மட்டகளப்பான்' (தளம்) சொல்லும் அரசியற்கட்சியான தமிழரசுக் கட்சியின் தலைவராக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக இருக்கிறார் என்று யாழ்ப்பாணியத்தைக் கடைப்பிடிக்கும் கடுமையான பிரதேசவாதிகளான நீங்கள் நாங்களெல்லாம் கவலைப்பட்டிருக்கிறோமா?


// தமிழீழ விடுதலைப்புலிகளால் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி நிகழ்த்தப்பட்ட படையெடுப்பும்இ ஆக்கிரமிப்பும் கொலைவெறித்தாண்டவமும் நிலைமைகளை மென்மேலும் சிக்கலாக்கி வருகின்றது. //

விடுதலைப்புலிகள் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடினார்கள் என்று தான் நினைத்திருந்தேன்.
இப்படியான அருமையாக தகவலைத் தந்து, வரலாற்றைப் படிப்பித்துவிட்டமைக்கு நன்றிகள்.
(எனினும் கிழக்கு மாகாணத்தில் அப்படி ஏதும் நடந்திருந்தால் கிழக்கு மாகாணத்தைக் காக்க வந்த திரு கருணா அம்மான் அவர்கள் தளபதியாக இருந்த காலகட்டங்களிலேயே அவை நடந்திருக்க வேண்டும். ஆகவே குறித்த கேள்வியை அவரையும், அவரின் நெருங்கிய சகாவான திரு.சந்திரகாந்தன் அவர்களையும் நோக்கி எழுப்புங்கள் )

Admin said...

//கன்கொன் || Kangon said...

உங்களுக்கம் அந்தத் தளத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது என்று நான் கூறவில்லை.
மற்றும்படி இந்தத் தொடர் எதிரொலி என்ற பெயரில் muthalvarone.blogspot.com இல் மட்டக்களப்பான் என்ற பெயரிலே பதிவிடப்பட்டமை யதார்த்தம், உண்மை, ஆதாரங்கள் உண்டு.


மீன்மகள் என்ற தளத்தில் வெளியாகியிருப்பதாக மட்டகளப்பான தளம் சொல்கிறது.//

மட்டக்களப்பான் தளம் சொல்லலாம் மீன்மகளில் இருந்து பெற்றேன் என்று ஆனால் நான் மட்டக்களப்பான் தளத்திலிருந்து பெறவில்லை என்று சொல்கின்றேன்.

Admin said...

//•கன்கொன் || Kangon

விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்றால் அதில் அங்கம் வகித்த தீவிரவாதிகள் இன்று எதுவித தண்டனைகளுமற்று அலைந்து திரிகிறார்களே?
தீவிரவாத அமைப்பொன்றிற்று தளபதியாக இருந்தவர் எவ்வாறு தண்டனைகளற்று திரிய சாதாரண போராளிகள் மட்டும் மாத, வருடக் கணக்கில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்?
//

இது என்னிடமல்ல அரசிடம் கேட்கவேண்டிய கேள்வி. உலக வரலாறுகளை புரட்டிப் பாருங்கள் போராளிக் குழுக்கள் ஜனநாயக வழிக்கு வருகின்ற போது என்ன நடக்கின்றதென்பதை.


//// தமிழீழ விடுதலைப்புலிகளால் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி நிகழ்த்தப்பட்ட படையெடுப்பும்இ ஆக்கிரமிப்பும் கொலைவெறித்தாண்டவமும் நிலைமைகளை மென்மேலும் சிக்கலாக்கி வருகின்றது. //

விடுதலைப்புலிகள் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடினார்கள் என்று தான் நினைத்திருந்தேன்.
இப்படியான அருமையாக தகவலைத் தந்து, வரலாற்றைப் படிப்பித்துவிட்டமைக்கு நன்றிகள்.
(எனினும் கிழக்கு மாகாணத்தில் அப்படி ஏதும் நடந்திருந்தால் கிழக்கு மாகாணத்தைக் காக்க வந்த திரு கருணா அம்மான் அவர்கள் தளபதியாக இருந்த காலகட்டங்களிலேயே அவை நடந்திருக்க வேண்டும். ஆகவே குறித்த கேள்வியை அவரையும், அவரின் நெருங்கிய சகாவான திரு.சந்திரகாந்தன் அவர்களையும் நோக்கி எழுப்புங்கள் )////

நீங்கள் எந்த உலகத்தில் இருந்தீர்கள். கருணா அம்மான் புலிகள் இயக்கத்தை விட்டு பிரிந்து வந்து கிழக்கு மாகாண போராளிகளை தன்னோடு இணைத்துக்கொண்டபோது. என்ன நடந்தது?


வன்னியிலே இருந்து கிழக்கு மாகாணத்துக்கு படையெடுத்து வந்து கிழக்கு போராளிகளுக்கு எதிரான ஒரு பாரிய படை நகர்வை வெருகலில் மேட்கொண்டதையும். 200௦௦ க்கும் மேற்பட்ட கிழக்கு மாகாண போராளிகள் படுகொலை செய்யப்பட்டதையும் நீங்கள் அறியவில்லையா?

கன்கொன் || Kangon said...

// மணற்றி என்பது அதன் ப10ர்வ நாமம் பின்னாளில் அது மணற்றிடல் எனவும் வழங்கிற்று //

என்று இருக்கிறது சரி,
அதற்கும்,
// யாருமில்லா வெறும்தரையாய் உப்பு கரித்துகிடந்தமையாற்றான் யாழ்பாடிய பாணனுக்கு அது பரிசாக கொடுக்கப்பட்டிருக்கிறது போலும் //

இதற்கும் என்ன சம்பந்தம்?
ஒரு இடம் மணற்றி என்று அழைக்கப்பட்டால் அந்தப் பிரதேசம் வளமே இல்லாததா?

மலைநாட்டைப் பற்றிச் சொல்கையில் மலைகள் சூழ்ந்ததால் மலையகம் என்று வழங்கிற்று என்று சொன்னால் அதற்குரிய விளக்கம், அங்கு மலைகள் மட்டுமே இருந்தன, அங்கு மனிதர்கள் இல்லை என்பதா?

அப்படியானால் இன்று யாழ்ப்பாணத்தில் இருக்கும் வளங்கள் கிழக்கு மாகாணத்திலிருந்து யாழ்ப்பாணிகளால் திருடப்பட்டு அங்கே கொண்டுபோய் வைக்கப்பட்டன என்கிறீர்களா?
அதை மீன்மகள் தளமும், உங்கள் தளமும் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

(யாழ்ப்பாண சரித்திரத்திலே ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை முதற்பக்கத்திலேயே "மணற்றி என்பது 'மாந்தையோடு மணற்றிகொண்ட வல்விசயன் றனக்குமனை வகுத்தலாலே' என்று சாதிமாலைப் பாட்டாலும் வருகிறது" என்று குறிப்பிடுகிறார்.
அதிலுள்ள மாந்தை என்பதற்கு என்ன அர்த்தம் என்று யாராவது தமிழறிஞர்கள் விளக்கவும்.)

கன்கொன் || Kangon said...

// இது என்னிடமல்ல அரசிடம் கேட்கவேண்டிய கேள்வி. உலக வரலாறுகளை புரட்டிப் பாருங்கள் போராளிக் குழுக்கள் ஜனநாயக வழிக்கு வருகின்ற போது என்ன நடக்கின்றதென்பதை. //

இங்கு போராளிக்குழு என்கிறீர்கள்?
ஆனால் பதிவில் தீவிரவாதக்குழு என்கிறீர்கள்?
தீவிரவாதத்திற்கும், போராட்டத்திற்கும் வித்தியாசம் உண்டென நம்புகிறேன்.

போராளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படலாம், ஆனால் தீவிரவாதிகளுக்கு?

அப்போது விடுதலைப்புலிகளை போராளிக்குழு என்றே விளித்திருக்கலாமே?


//
நீங்கள் எந்த உலகத்தில் இருந்தீர்கள். கருணா அம்மான் புலிகள் இயக்கத்தை விட்டு பிரிந்து வந்து கிழக்கு மாகாண போராளிகளை தன்னோடு இணைத்துக்கொண்டபோது. என்ன நடந்தது? //

என்ன கொடுமை இது...
கிழக்கு மாகாணத்தில் இரு குழுக்களிடையே சண்டை நடந்தால் அதற்குப் பெயர் 'கிழக்கு நோக்கிய ஆக்கிரமிப்பு, படையெடுப்பு, கோரத் தாண்டவம்'...
அது கிழக்கை நோக்கிய சண்டையா?
அது குறிப்பிட்ட குழுவினரை மட்டுமே நோக்கி சண்டை.

அதுசரி,
அந்த பிரிப்பை கிழக்கு மக்கள் ஏற்றுக் கொண்டார்களா?
அப்படியானால் ஏன் தேர்தலில் அந்தப் பிரிப்பிற்கு எதிராக கருத்துத் தெரிவிக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றது?

பிரிந்து வந்து கிழக்கு மக்களுக்கு விமொசனம் தேடித்தந்த ஒருவர் தேர்தலில் போட்டியிடவில்லை?
மற்றவர் ஏன் தோல்வியடைந்தார்?

தமிழன் said...

ஐயா சந்ரு,
நீ உண்மை சொன்னால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ பொய் சொன்னால், நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.

Anonymous said...

தம்பி லோஷன்,

இந்த நேர்மை,துணிச்சல் தான் உங்கள் மீது மேலும் மதிப்பு வர செய்கிறது.

இர்சாத்தோ என்ன கொடுமை சாரோ? அவன் பற்றிக் கதைப்பதில் பயனில்லை.
அவனுடைய பதிவுகளிலேயே அவனது மனநிலையும் ஏனைய சமூகங்களிலும் சமயங்களிலும் அவன் கொண்டுள்ள துவேசமும் தெரிகிறது.

ஆனால் சந்த்ரு??

முன்பு இவருடைய பதிவுகள் வாசித்து தமிழ் மீதும் கலாசாரம் மீதும் கொண்ட பற்றிப் பார்த்து பெருமிதமடைந்தேன்.

இப்போது இவரது நிலைப்பாடு மிகக் கேவலம்.
வடக்கு-கிழக்கு பிரிவினை என்பது தமிழரை மேலும் கேவலப்படுத்தும்.
இவர் சார்ந்துள்ள அரசியல் கட்சியின் நிலைப்பாடுகளை வரலாறு என சப்பைக்கட்டுக் கட்டி ஏமாற்றப் பார்க்கிறார்.

இவரது தலைவர் பிள்ளையான் பரவாயில்லைப் போல கிடக்கு.
யாழ்ப்பாணத் தமிழர் ஒருநாளும் கிழக்கு மக்களைத் தனியாகப் பார்த்தது கேவலப்படுத்தியது கிடையாது.அப்படியிருக்க இவர் போன்றோர் இப்படியான மாய உணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தக் கூடாது.

முக்கியமாக வரலாறுகளைத் திரிபு படுத்தக் கூடாது.

இன்னும் ஆதாரம் எதுவென இவர் கூறாமல் மறைப்பதில் இருந்து இவர் செய்யும் அப்பட்டப் பிரசாரம் தெரிகிறது.

கிழக்கு மக்களைத் தனியாகப் பிரித்து சூழ்ச்சி செய்ய நினைத்த கருணா,பிள்ளையான் மற்றும் அரசு ஆடும் சூழ்ச்சிகள் கடந்த தேர்தலில் கிழக்கு மக்களாலேயே தொர்கடிக்கப்பட்டமை கண்ட பிறகும் இவர் இப்படிக் கேவலமாக பரப்புரை செய்வது முட்டாள் தனம்.

சந்த்ரு இனியாவது தான் தவறை உணர்ந்து அந்தத் தொடரை நிறுத்தட்டும்.

நான் இந்த அரசியல்,வரலாறு எல்லாம் நன்கு அறிந்த ஒரு ஆசிரியர்/ஆய்வாளர் என்பதால் இது பற்றி மேலும் தகவல்களைத் தரத் தயாராக உள்ளேன்.

அன்புடன் செ.கார்த்திகேயன்
(தற்போது மணிலாவிலிருந்து)

அருண்மொழி said...

// தமிழீழ விடுதலைப்புலிகளால் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி நிகழ்த்தப்பட்ட படையெடுப்பும்இ ஆக்கிரமிப்பும் கொலைவெறித்தாண்டவமும் நிலைமைகளை மென்மேலும் சிக்கலாக்கி வருகின்றது//
பிள்ளையானின் கட்சியில் சேர்ந்த பிறகு தான் இது பற்றியெல்லாம் உமக்கு தெரியுதோ?
அதுக்கு முதலில் இதைப் பற்றி ஒன்றுமே எழுதலையே.

//மட்டக்களப்பான் எனும் புனை பெயருடைய தளத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. நான் அங்கிருந்து பெறவில்லை. வலைப்பதிவிலிருந்து பெறவில்லை. இணையத் தளத்திலிருந்து பெற்றே பதிவிடுகிறேன். //

உம்மடை ஆதாரங்களைக் கொண்டு போய்க் களப்பில் போடும்.

//வன்னி மக்கள் படுகின்ற இன்னல்களையும் ஏனைய பதிவர்களை விட அதிகமாக எழுதி இருக்கின்றேன். . எதையாவது எழுத வேண்டும் என்பதற்காக பொய்களை எழுதுபவன் நானல்ல. //
வன்னி மக்கள் பற்றி எழுத வேண்டியது ஒவ்வொரு தமிழனினதும் ஒவ்வொரு தமிழ் பேசுபவனினதும் கடப்பாடு.
அதுபோல இலங்கைப் பதிவர்கள் மட்டுமல்ல, இந்தியப் பதிவர்களுமே மட்டக்களப்பில் நடந்த அனர்த்தங்கள்,யுத்தம் பற்றியும் தெளிவாகவே விளக்கமாகவே எழுதியுள்ளார்கள்.
உம கண்ணை நன்றாகத் திறந்து பதிவுகளைத் தேடி வாசியும்.

தயவு செய்து உம் கோணல் புத்தியாலும் குறுகிய எண்ணத்தினாலும் விஷ விதைகளை ஊன்றாதீர்.

தமிழன் said...

ஓமோம்.. உம்மடை இந்தப் பதிவுகளெல்லாம் மொக்கை இல்லைத் தானே?
தமிழின் முதுசங்கள் தானே?
http://shanthru.blogspot.com/2009/12/blog-post_15.html
http://shanthru.blogspot.com/search/label/மொக்கை
http://shanthru.blogspot.com/search/label/நகைச்சுவை

திருமணத்தின் பின்னும் பெண்களை கவர சில வழிகள்.


இதுக்குள்ளே ஒரு கேவலமான தலைப்பு வேறு.

பெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி..

இதுக்குள்ளே மொக்கை எழுதவே மாட்டாராம். என்ன கதை இது?

காந்தன் வவுனியா said...

என்னாது 20000 போராளிகளா? சிப்பு சிப்ப்பா வருகின்றது. பல போராளிகள் மீண்டும் புலிகளுடன் இணைந்தார்கள். அங்கே பெரிதாக எவரும் கொல்லப்படவில்லை. கருணாவின் சகோதரர் மட்டும் கொல்லப்பட்டார்.

சந்ரு முழுக்க நனைந்தபின்னர் முக்காடு எதற்க்கு? நீங்கள் எங்கிருந்து எடுத்தாலும் அந்த இணையத்தின் அல்லது புத்தகத்தின் பகுதிகளை ஆதாரம் காட்டலாமே? இதனைத்தான் பலர் செய்வார்கள் தமிழில் இதனை உசாத்துணை என்பார்கள். உங்களின் பெயரில் நீங்கள் எழுதியது போல் எழுதிவிட்டு இப்போ இப்படி மல்லுக்கட்டவேண்டாம். அட்லீஸ்ட் அந்த இணையத்திற்க்க்கு நன்றியாவது தெரிவித்திருக்க்கலாம்.

இன்னொருவருடைய ஆக்கத்தை திருடுபவனை என்னவென்று அழைப்பது?


காந்தன்
வவுனியா

Anonymous said...

சந்ரு,

வரலாற்றை காலம் தான் எழுதுகின்றது. உங்கள் பேனா அல்ல!

வாசகர்கள் ஆறறிவு படைத்தவர்கள் என்று ஏன் மறந்து போகின்றீர்கள்?

Admin said...

//காந்தன் வவுனியா said...
என்னாது 20000 போராளிகளா? சிப்பு சிப்ப்பா வருகின்றது. பல போராளிகள் மீண்டும் புலிகளுடன் இணைந்தார்கள். அங்கே பெரிதாக எவரும் கொல்லப்படவில்லை. கருணாவின் சகோதரர் மட்டும் கொல்லப்பட்டார். //

இதைக்குட நீங்கள் மூடி மறைக்க நினைக்க வேண்டாம். கொல்லப்பட்ட ௨௦௦ க்கு மேற்பட்ட போராளிகளின் விபரங்களையும் என்னால் தர முடியும்.


//சந்ரு முழுக்க நனைந்தபின்னர் முக்காடு எதற்க்கு? நீங்கள் எங்கிருந்து எடுத்தாலும் அந்த இணையத்தின் அல்லது புத்தகத்தின் பகுதிகளை ஆதாரம் காட்டலாமே? இதனைத்தான் பலர் செய்வார்கள் தமிழில் இதனை உசாத்துணை என்பார்கள். உங்களின் பெயரில் நீங்கள் எழுதியது போல் எழுதிவிட்டு இப்போ இப்படி மல்லுக்கட்டவேண்டாம். அட்லீஸ்ட் அந்த இணையத்திற்க்க்கு நன்றியாவது தெரிவித்திருக்க்கலாம்.

இன்னொருவருடைய ஆக்கத்தை திருடுபவனை என்னவென்று அழைப்பது?

காந்தன்
வவுனியா//

மீண்டும் சொல்கின்றேன். என் தொடர் பதிவுகளை வாசித்துப் பாருங்கள் ஆதாரங்களை பல இடங்களிலே புத்தகங்களையும் பக்கங்களையும் குறிப்பிட்டிருக்கிறேன்.


ஒரு இணையத்திலிருந்து திருடும் அளவுக்கு நான் நாகரிகமற்றவன் அல்ல. அந்த இணையத்தின் 100 % அனுமதியோடும் உரிமையோடுமே பதிவிடுகின்றேன்.


நான் பல இடங்களிலே குறிப்பிட்டிருக்கின்றேன் இது நான் எழுதும் தொடர் அல்ல என்று. கருத்து தெரிவிக்க முன்னர் பதிவுகளை பாருங்கள். வெறுமனே குருடன்போல் கண்ணை மூடிக்கொண்டு கருத்து சொல்லாதீர்கள்.

Anonymous said...

இப்பொழுது அத்தொடரின் மீள் பிரசுரத்துக்கு என்ன காரணம்?

அமலன்
கொழும்பு

தமிழன் said...

என்னது 100% அனுமதியோடும் உரிமையோடுமா?
100% அனுமதி சரி. ஆனா 100% உரிமை?
அடடா!
அது உங்கட ஆக்களின்ர தளமா?
அப்பப் பிரசாரமா செய்யிறீங்கள்?
அப்ப ஏன் அதுக்கு தமிழர் வரலாறு எண்டு தலைப்பு?
TMVP பிரசாரம் எண்டு வைக்கலாமே?

Admin said...

//இப்பொழுது அத்தொடரின் மீள் பிரசுரத்துக்கு என்ன காரணம்?

அமலன்
கொழும்பு//

இந்த மறைக்கப்பட்ட துரோகங்களை அறியாதவர்களும் அறிய வேண்டும் என்பதற்காகவுமே.

Admin said...

//என்னது 100% அனுமதியோடும் உரிமையோடுமா?
100% அனுமதி சரி. ஆனா 100% உரிமை?
அடடா!
அது உங்கட ஆக்களின்ர தளமா?
அப்பப் பிரசாரமா செய்யிறீங்கள்?
அப்ப ஏன் அதுக்கு தமிழர் வரலாறு எண்டு தலைப்பு?
TMVP பிரசாரம் எண்டு வைக்கலாமே? //

இது ஒரு பிரச்சாரமேதான் மறைக்கப்பட்ட, மக்கள் அறியாத விடயங்களை பிரச்சாரம் செய்கின்றோம்.

Anonymous said...

//இந்த மறைக்கப்பட்ட துரோகங்களை அறியாதவர்களும் அறிய வேண்டும் என்பதற்காகவுமே. //

நல்ல முயற்சி.
ஆனால், ஆதாரங்களை வழங்க ஏன் பின் நிற்கின்றீர்கள்.

அமலன்
கொழும்பு

கன்கொன் || Kangon said...

//Anonymous said...

சந்ரு,

வரலாற்றை காலம் தான் எழுதுகின்றது. உங்கள் பேனா அல்ல!

வாசகர்கள் ஆறறிவு படைத்தவர்கள் என்று ஏன் மறந்து போகின்றீர்கள்? //

அப்படியே வழிமொழிகிறேன்.

இதைப் போன்று நானும் சொல்லியிருந்தேன்.

இன்று பலருக்கு அது விளங்குவதில்லை.
4 புத்தகங்களில் வெளிவந்தாலும், 3 இணையத்தளங்களில் வெளிவந்தாலும் வரலாறு மாறிவிடும் என்று பலர் நம்புகிறார்கள்.

Admin said...

//தமிழன்
ஓமோம்.. உம்மடை இந்தப் பதிவுகளெல்லாம் மொக்கை இல்லைத் தானே?
தமிழின் முதுசங்கள் தானே?
http://shanthru.blogspot.com/2009/12/blog-post_15.html
http://shanthru.blogspot.com/search/label/மொக்கை
http://shanthru.blogspot.com/search/label/நகைச்சுவை//

ஒரு சில பதிவுகள், மொக்கையாகவோ அல்லது நகைச்சுவையாகவோ இட்டிருக்கின்றேன். ஆனால் அவை என்ன சொல்கின்றன என்று ஆழமாகப் பாருங்கள் ஏதோ ஒரு விதத்தில் சமுக கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கும்.

//திருமணத்தின் பின்னும் பெண்களை கவர சில வழிகள்.

இதுக்குள்ளே ஒரு கேவலமான தலைப்பு வேறு.//



இது கேவலமான தலைப்ப்பா? திருமணத்தின் பின்னும் ஆண்கள் கவர்ச்சியாக இருக்க விரும்புவதில்லையா? என்னதான் சொல்ல வருகின்றார்கள் என்று புரிய முடியாத தலைப்புக்களைவிட இது கேவலமான தலைப்பா?


//பெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி..

இதுக்குள்ளே மொக்கை எழுதவே மாட்டாராம். என்ன கதை இது?//

இது நகைச்சுவையாக சில உண்மையாகவே நடக்கின்ற சில விடயங்களை சொல்லி இருக்கின்றேன். புரிபவர்களுக்கு புரியும்.

archchana said...

சந்துரு 20000 பேர் கொல்லப்பட உம்மிடம் 200 பேரின் விபரம் மட்டும்தான் உள்ளதா........ஏன் கருணா குழுவால் பணயக்கைதிபோல் பிடித்துவைக்கப்பட்டு நாக்கிலிருந்து உடல் உறுப்புக்கள் அனைத்தையும் துண்டு துண்டு ஆக வெட்டி கொலை செய்யப்பட்ட யாழ் வன்னி மற்றும் மட்டகளப்பு அம்பாறை யை சேர்ந்தவர்களின் விபரம் நீர் அறியவில்லையா.......வேண்டுமானால் சொல்லும்உமது வரலாற்றில் பதிந்து வைக்க தருகிறோம்...

காந்தன் வவுனியா said...

இதைக்குட நீங்கள் மூடி மறைக்க நினைக்க வேண்டாம். கொல்லப்பட்ட ௨௦௦ க்கு மேற்பட்ட போராளிகளின் விபரங்களையும் என்னால் தர முடியும்.

நன்றிகள் சந்ரு, நீங்கள் 20000 போராளிகள் என சொன்னதன் மர்மம் என்னவோ? 200 போராளிகள் என்பது சரியானது. இப்படி எண்ணிக்கையை அன்றைய லங்காபுவத் போல் கூட்டவேண்டாம்? நீங்களும் ஒரு ஊடகவியளாரா?

photos said...

//காந்தன் வவுனியா said...
இதைக்குட நீங்கள் மூடி மறைக்க நினைக்க வேண்டாம். கொல்லப்பட்ட ௨௦௦ க்கு மேற்பட்ட போராளிகளின் விபரங்களையும் என்னால் தர முடியும்.

நன்றிகள் சந்ரு, நீங்கள் 20000 போராளிகள் என சொன்னதன் மர்மம் என்னவோ? 200 போராளிகள் என்பது சரியானது. இப்படி எண்ணிக்கையை அன்றைய லங்காபுவத் போல் கூட்டவேண்டாம்? நீங்களும் ஒரு ஊடகவியளாரா?//

நான் 200௦௦௦ போராளிகள் என்று சொல்லவில்லையே ௨௦௦ போராளிகள் என்றுதானே சொல்லி இருக்கின்றேன்.


/////•சந்ரு


//•கன்கொன் || Kangon

விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்றால் அதில் அங்கம் வகித்த தீவிரவாதிகள் இன்று எதுவித தண்டனைகளுமற்று அலைந்து திரிகிறார்களே?
தீவிரவாத அமைப்பொன்றிற்று தளபதியாக இருந்தவர் எவ்வாறு தண்டனைகளற்று திரிய சாதாரண போராளிகள் மட்டும் மாத, வருடக் கணக்கில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்?
//

இது என்னிடமல்ல அரசிடம் கேட்கவேண்டிய கேள்வி. உலக வரலாறுகளை புரட்டிப் பாருங்கள் போராளிக் குழுக்கள் ஜனநாயக வழிக்கு வருகின்ற போது என்ன நடக்கின்றதென்பதை.


//// தமிழீழ விடுதலைப்புலிகளால் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி நிகழ்த்தப்பட்ட படையெடுப்பும்இ ஆக்கிரமிப்பும் கொலைவெறித்தாண்டவமும் நிலைமைகளை மென்மேலும் சிக்கலாக்கி வருகின்றது. //

விடுதலைப்புலிகள் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடினார்கள் என்று தான் நினைத்திருந்தேன்.
இப்படியான அருமையாக தகவலைத் தந்து, வரலாற்றைப் படிப்பித்துவிட்டமைக்கு நன்றிகள்.
(எனினும் கிழக்கு மாகாணத்தில் அப்படி ஏதும் நடந்திருந்தால் கிழக்கு மாகாணத்தைக் காக்க வந்த திரு கருணா அம்மான் அவர்கள் தளபதியாக இருந்த காலகட்டங்களிலேயே அவை நடந்திருக்க வேண்டும். ஆகவே குறித்த கேள்வியை அவரையும், அவரின் நெருங்கிய சகாவான திரு.சந்திரகாந்தன் அவர்களையும் நோக்கி எழுப்புங்கள் )////

நீங்கள் எந்த உலகத்தில் இருந்தீர்கள். கருணா அம்மான் புலிகள் இயக்கத்தை விட்டு பிரிந்து வந்து கிழக்கு மாகாண போராளிகளை தன்னோடு இணைத்துக்கொண்டபோது. என்ன நடந்தது?


வன்னியிலே இருந்து கிழக்கு மாகாணத்துக்கு படையெடுத்து வந்து கிழக்கு போராளிகளுக்கு எதிரான ஒரு பாரிய படை நகர்வை வெருகலில் மேட்கொண்டதையும். 200௦௦ க்கும் மேற்பட்ட கிழக்கு மாகாண போராளிகள் படுகொலை செய்யப்பட்டதையும் நீங்கள் அறியவில்லையா?///////

archchana said...

சந்துரு உமது பதிவில் எதிர்பதிவு போட்டால் மட்டும் காணாது விரிவாக சிந்தியும். பிரபலம் வேண்டாம் என்கிறீர் பிறகேன் யாழ்தேவியில் உமது புகைப்படம் வரவில்லை என்று புலம்புகிறீர். அதைவிட இத்தனை கதைக்கிறீரே இந்தபோராட்டம் தோற்று போனதன் பிரதான காரணமே மட்டக்களப்பை சேர்ந்தவரை தளபதியாக்கி அதிகளவு நம்பிக்கை வைக்க அவர் பணத்திற்கு அடிமையாகிஅனைத்து இரகசியங்களையும் காட்டிகொடுத்த பின்னர் தான் என்பதனையும் புரிந்து கொள்ளும். அத்துடன் எத்தனை படித்த மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் கருணாவிற்கு பின்னால் சென்றார்கள் என்றும் தெரிந்து கொள்ளும். அவரவரை வைக்கும் இடத்தில் வைக்காதது யாழ்ப்பாணத்தவர்களின் பிழை தான்.
அடுத்து மட்டக்களப்பு மக்கள் கொல்லப்பட்டபோது எத்தனை பதிவர் எழுதினார்கள் என்று கேட்கிறீர் உமது காலத்தில் நடப்பவை கூட உமக்கு புரியாதா...... தற்போது பிரபலமாகி இருக்கும் பதிவர்கள் ஓரிருவரை தவிர எத்தனை பேர் 2007 இற்கு முன்னர்(2005 ,2006 ) எழுதியிருக்கிறார் என தகவல் எடுத்து பாரும். இந்த சின்ன விடயமே புரிந்து கொள்ள முடியாமல் பெரிய வரலாறை ................................

Admin said...

//photospecial


//காந்தன் வவுனியா said...
இதைக்குட நீங்கள் மூடி மறைக்க நினைக்க வேண்டாம். கொல்லப்பட்ட ௨௦௦ க்கு மேற்பட்ட போராளிகளின் விபரங்களையும் என்னால் தர முடியும்.

நன்றிகள் சந்ரு, நீங்கள் 20000 போராளிகள் என சொன்னதன் மர்மம் என்னவோ? 200 போராளிகள் என்பது சரியானது. இப்படி எண்ணிக்கையை அன்றைய லங்காபுவத் போல் கூட்டவேண்டாம்? நீங்களும் ஒரு ஊடகவியளாரா?//

நான் 200௦௦௦ போராளிகள் என்று சொல்லவில்லையே ௨௦௦ போராளிகள் என்றுதானே சொல்லி இருக்கின்றேன்.


/////•சந்ரு .............////

இது என்னால் இடப்பட்ட
கருத்துரை அல்ல

photos said...

///நன்றிகள் சந்ரு, நீங்கள் 20000 போராளிகள் என சொன்னதன் மர்மம் என்னவோ? 200 போராளிகள் என்பது சரியானது. இப்படி எண்ணிக்கையை அன்றைய லங்காபுவத் போல் கூட்டவேண்டாம்? நீங்களும் ஒரு ஊடகவியளாரா?///

நான் 200 போராளிகள் இறந்தார்கள் என்றுதான் சொல்லி இருக்கின்றேன் எங்கே 2000 ௦௦௦ போராளிகள் என்று சொல்லி இருக்கின்றேன். எனது கருத்துரைகளை பாருங்கள்.

காந்தன் வவுனியா said...

//சந்ரு said...


வன்னியிலே இருந்து கிழக்கு மாகாணத்துக்கு படையெடுத்து வந்து கிழக்கு போராளிகளுக்கு எதிரான ஒரு பாரிய படை நகர்வை வெருகலில் மேட்கொண்டதையும். 200௦௦ க்கும் மேற்பட்ட கிழக்கு மாகாண போராளிகள் படுகொலை செய்யப்பட்டதையும் நீங்கள் அறியவில்லையா?//

இதில் 20000 என இருப்பதை துணைவேந்தரின் ஆவியா எழுதியது?

Anonymous said...

திருவாளர் சந்த்ரு, இனியும் என்ன இருக்கு? பேசாமல் உண்மையைச் சொல்லுங்கோவன். உங்கட கட்சி போன தேர்தலில பெற்ற பெரு வெற்றிக்குப் பிறகு உங்களுக்கு அரசியல் நடத்த பிரதேசவாதம் எண்ட ஆயுதம் தேவைப்படுது. அதுதானே? பிறகு எதுக்கு சும்மா கஸ்டப்பட்டுக்கொண்டு?

Admin said...

//காந்தன் வவுனியா said...
//சந்ரு said...

வன்னியிலே இருந்து கிழக்கு மாகாணத்துக்கு படையெடுத்து வந்து கிழக்கு போராளிகளுக்கு எதிரான ஒரு பாரிய படை நகர்வை வெருகலில் மேட்கொண்டதையும். 200௦௦ க்கும் மேற்பட்ட கிழக்கு மாகாண போராளிகள் படுகொலை செய்யப்பட்டதையும் நீங்கள் அறியவில்லையா?//

இதில் 20000 என இருப்பதை துணைவேந்தரின் ஆவியா எழுதியது?//


நீங்கள்தான் கண்ணை கசக்கிக் கொண்டு பாருங்கள் 200 என்று இருக்கிறதா 2000 என்று இருக்கிறதா என்று

கன்கொன் || Kangon said...

// கிழக்கு மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து அனாதைகளாக அகதி முகாம்களிலே இருந்தபோது எந்த பதிவரும் அது பற்றி பதிவிட்டவில்லை என்று நான் நான் குறிப்பிடும் காலம் 2005 , 2006 , காலப்பகுதியல்ல அண்மையிலே வன்னி படை நடவடிக்கைக்கு முன்னர் கிழக்கிலேதான் படை நடவடிக்கை ஆரம்பமானது. அப்போது அகதிகளான கிழக்கு மாகாண மக்கள் பட்ட இன்னல்களையும், அவலங்களையும் யாராவது பதிவிட்டிருக்கின்றார்களா என்றுதான் கேட்கிறேன். //

என்று பதிவர் சந்ரு தனது பதிவின் பின்னூட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு நான் பதிலளித்திருந்த பின்னூட்டத்தை அவர் வெளியிட மறுத்திருக்கிறார்.
எனக்குப் பின் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.

அதற்கு நான் இட்ட பின்னூட்டம்.


கிழக்கு நோக்கிய படைநடவடிக்கை மாவிலாறில் நடந்த தாக்குதல் மூலமே ஆரம்பித்தது.
மாவிலாறு தாக்குதல் ஆரம்பித்தது ஜூலை 21, 2006.
கிழக்கை முழுமையாகக் கைப்பற்றியதாக அரசு அறிவித்தது ஜூலை 11, 2007.

http://www.reuters.com/article/idUSCOL15933520070711


(சொற்கள் மாறுபடலாம். இட்ட பின்னூட்டம் அச்சொட்டாக ஞாபகமில்லை)

இதில் என்ன பிரச்சினை கண்டு என் பின்னூட்டத்தை அனுமதிக்காது விட்டார் என்று தெரியவில்லை.

கிழக்கு நோக்கிய தாக்குதல் எப்போது நடந்தது என்று தெரியாதவர்களெல்லாம் 1800 களில் தமிழர்களின் வரலாறுகளை எழுதுகிறார்கள். ம்... :(

Anonymous said...

சந்ருவிடம் ஒரு கேள்வி: செம்மொழி மாநாட்டிற்க்கு ஏன் உங்கள் தலைவர் கருணாவோ அல்லது பிள்ளையானோ அழைக்கப்படவில்லை? யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேராசிரியர் சிவத்தம்பி அழைத்துக் கெளரவிக்கப்பட்டுள்ளார். உங்களின் அடுத்த பதிவு சிவத்தம்பிக்கு எதிரானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Vijayakanth said...

லோஷன் அண்ணாவோட பின்னூட்டக்களம் இப்போ கருத்துக்களமாக மாறியிருக்கிறது....அண்ணாவுக்கு நேரமிருப்பின் பின்னூட்டங்களை தொகுத்து பதிவாக இடும்படி கேட்டுக்கொள்கிறேன்....!

காந்தன் வவுணியா said...

///////வன்னியிலே இருந்து கிழக்கு மாகாணத்துக்கு படையெடுத்து வந்து கிழக்கு போராளிகளுக்கு எதிரான ஒரு பாரிய படை நகர்வை வெருகலில் மேட்கொண்டதையும். 200௦௦ க்கும் மேற்பட்ட கிழக்கு மாகாண போராளிகள் படுகொலை செய்யப்பட்டதையும் நீங்கள் அறியவில்லையா?/////////

சந்ரு 2க்குப்பின்னால் 4 சைபர்கள் வந்தால் இருநூறா இது என்ன உங்களின் புதிய கணக்கா? முதலில் கணிதம் ஒழுங்காகப் படிக்கவும்.

tharshan said...

//Anonymous said...
திருவாளர் சந்த்ரு, இனியும் என்ன இருக்கு? பேசாமல் உண்மையைச் சொல்லுங்கோவன். உங்கட கட்சி போன தேர்தலில பெற்ற பெரு வெற்றிக்குப் பிறகு உங்களுக்கு அரசியல் நடத்த பிரதேசவாதம் எண்ட ஆயுதம் தேவைப்படுது. அதுதானே? பிறகு எதுக்கு சும்மா கஸ்டப்பட்டுக்கொண்டு?//


இந்தப் பதிவிலே முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கும் T .M .V .P கட்சிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா? முதலமைச்சர் சந்திரகாந்தனையும் T .M .V .P கட்சியையும் வேண்டுமென்றே சிலர் தவறான முறையில் குறிப்பிட்டிருப்பதை கண்டிக்கின்றேன்.


பொதுத் தேர்தலிலே T .M .V .P கட்சியானது தோல்வி அடைந்ததாக நாம் கருதவில்லை. வெற்றியாகவே கருதுகின்றோம். 20000 மேற்பட்ட வாக்காளர்கள் T .M .V .P கட்சிக்கு வாக்களித்திருக்கின்றனர்.

பல தசாப்தங்களாக மக்கள் மத்தியிலே பரப்பப் பட்ட தமிழீழம் என்ற விசமப் பிரசாரங்களை இரண்டு, முன்று ஆண்டுகளில் மக்கள் மனதை விட்டு அகற்றிவிட முடியாது. அந்த அளவுக்கு பல தசாப்தங்களாக வீர வசனங்களைப் பேசி மக்களை உணர்ச்சிவசப் படுத்தி இருக்கின்றார்கள்.

கடந்த தேர்தலிலே நான்கு ஆசனங்களை பெற்ற தமிழரசு கட்சி மூன்று ஆசனங்களை இந்த தேர்தலிலே பெற்றது என் மக்கள் உணர்கின்றார்கள். கடந்த தேர்தலோடு ஒப்பிடும்போது எந்த தேர்தலிலே தமிழரசு கட்சி பல ஆயிரக் கணக்கான வாக்குகளை இழந்திருக்கின்றது.


தமிழ் ஊடகங்களினதும் அரசியல்வாதிகளினதும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மிதான பொய்ப் பிரச்சாரமுமே முக்கிய காரணமாகும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆசனங்களை பெற முடியாமல் போனமைக்கான காரணமாகும்.


யார் இந்த தேர்தலிலே தோல்வி அடைந்தார்கள் என்று சொல்லுங்கள்.

கோவிந்தன் - மாவடிவேம்பு said...

தர்சன் said...//

தவறு செய்தவர்கள் தங்கள் தவறுகளை ஒத்துக் கொள்வார்களா. சந்துரு, தர்சன் மழைக்கெண்டாலும் பள்ளிக் கூடத்துக்கை ஒதுங்கவேணும் தோழர்களே.


பல தசாப்தங்களாக மக்கள் மத்தியிலே பரப்பப் பட்ட தமிழீழம் என்ற விசமப் பிரசாரங்களை இரண்டு, முன்று ஆண்டுகளில் மக்கள் மனதை விட்டு அகற்றிவிட முடியாது. அந்த அளவுக்கு பல தசாப்தங்களாக வீர வசனங்களைப் பேசி மக்களை உணர்ச்சிவசப் படுத்தி இருக்கின்றார்கள்.//



தோல்வியின் விளிம்பில் உள்ளவர்கள் எல்லோரும், தங்கள் மனதைத் தேறிக் கொள்ள கூறும் வாக்கியம் இது தான். யாருக்கு மக்கள் ஆதரவு உள்ளது எனும் உண்மை உங்கள் உள் மனதிற்கு நன்றாகத் தெரியும். இனியும் துரோகிகளுடன் துணையிருப்பதை விட ஏதாவது புனர்வாழ்வு அமைப்புடன் இணைந்த்து மக்களுக்குச் சேவை செய்ய முனையுங்கள் தம்பிகளா. பிரதேசவாதம், மட்டக்களப்பு அரசியல் எல்லாம் வேண்டாம். தமிழர்கள் என்ற ஒரே உணர்வு இருந்தால் போதும். பிள்ளையானே கட்சியைக் கலைக்க உள் வீட்டிற்குள் ஆலோசனை நடத்த முற்படும் தருணத்தில் நீங்கள் எதிர்காலத்தில் வெல்லுவீர்கள் என்பது நிறைவேறாத ஆசை.

S Thinesh said...

Hai anna, did u watch the match between Isner and Mahut....

Vathees Varunan said...

முதலில் என்ன கொடுமை சாரரின் பதிவிற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கின்றேன். அவருடைய அந்தப்பதிவு தற்போது அங்கிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. (கண்கெட்டபின்பு சூரிய நமஸ்காரம் செய்து பலனில்லை)
இரண்டாவது சகபதிவர் சந்ருவின் பல பதிவுகளை நானும் வாசித்து கோபமடைந்ததுண்டு ஆனாலும் பின்னூட்டம் இடுவதற்கு விருப்பமில்லாமயினால்தான் உங்களது தளத்திற்கு பின்னூட்டம் இடுவதில்லை. ஆனாலும் உங்கள் மீது இங்கு சுட்டிக்காட்டப்படும் குற்றச்சாட்டுகள் நியாயமானவையே. உங்களது பதிவுகளை வாசிக்கும்போது எனக்கும் பல சந்தேகங்கள் இயல்பாக எழுவதுண்டுதான். நீங்கள் ஒரு ஊடகவியலாளர் ஆகவே வரலாறுகள் சம்பந்தமாக எழுதும்போது மிகுந்த அவதானம் தேவை(ஊடகப்பணியைபற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் என்பதால் சொல்வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்). எனக்கென்னவோ உங்களது பதிவுகளை பார்க்கும்போது நீங்கள் அரசியிலில் உங்களது நிலையை உறுதிசெய்வதற்கு கையில் எடுத்திருக்கும் வழிமுறைதான் இப்படியான பதிவுகள்போல இருக்கிறது. நீங்கள் அரசியிலில் உறுதியாக வருவதற்கு மக்களின் மனங்களை வெல்லவேண்டும் அதைவிட்டுவிட்டு வரலாற்றையும் துரோகமிழைத்தவர்களை பற்றி கூறுகிறேன் என்று சொல்லி இப்படி அநாகரிகமான முறையில் எழுதவோ அல்லது Copy Past பண்ண வேண்டியதில்லை. ஏனென்றால் தற்போதையகால வாசகர்கள் முட்டாள்களா என்ன? பதிவுகளில் எழுதியவர்களின் பெயர்களையும் பக்கங்களையும் போட்டால் அது பலவேளைகளிலில் உண்மையாகிவிடாது. முதலில் எழுதப்பட்டிருக்கும் அந்த கூற்றுக்கள் சரியானதா பிழையானதா என்றும் பார்க்கவேண்டும் சந்ரு.

-வதீஸ்-

Anonymous said...

I am Tamil Muslim myself. How can you know for sure that he/she is muslim? just by his name?

Lots of sinhalese are on the net and trying to harm the relationship these two communities.

Author said...

இந்த பதிவை இவ்வளவு காலமும் பார்க்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.

//என்.கே.அஷோக்பரன் - சந்ரு விஷயத்தில் நீங்கள் இட்டிருக்கும் பின்னூட்டத்தோடு நான் முரண்படுகிறேன். ("அது ஒரு perspective அவ்வளவுதான்.". வரலாறு சொல்லும் கதை என்று தலைப்பிடின் அவர் வரலாற்றை ஆய்வு செய்தே எழுதியிருக்க வேண்டும். இல்லையெனில் வரலாறு என்ற சொற்பிரயோகத்தை அவர் தவிர்த்திருக்க வேண்டும். ஆக, லோஷன் ஆதாரம் கேட்பது ஞாயமே...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner