July 02, 2010

கொஞ்சம் திகிலாய்.. கொஞ்சம் நட்பாய்..


நான் உங்கள் நெருங்கிய நண்பன். (இந்தப் பதிவுக்காவது அப்படி நினைச்சுக் கொள்ளுங்கப்பா)

ஒரு நாள் நள்ளிரவு தாண்டிய நேரம்.
நீங்கள் மட்டும் வீட்டில் தனியாக..
வெளியே கடும் காற்றுடன் மழையும் வேறு..

வீட்டின் அழைப்பு மணி அடிக்கிறது..
நீங்கள் வந்து கதவைத் திறந்தால் நான் உடலெங்கும் இரத்தக் காயங்களோடு.. அலங்கோலமாக..

பதறியபடி எனக்கு என்ன நடந்தது என்று அக்கறையாக,நட்போடு விசாரிக்கிறீர்கள்..

இரத்தக் காயங்களோடு இருக்கும் நான்
"ஒரு பயங்கர விபத்தில் அடிபட்டு விட்டது.. உடலெல்லாம் காயம்.இப்படியே வீட்டுக்கு இந்த நேரத்தில் போக முடியாது..இன்றிரவு இங்கே தங்கிவிட்டுப் போகிறேன்" என்று நட்பின் உரிமையில் கேட்கிறேன்.

நீங்களும் சரி என்று எனக்கு முதல் உதவி செய்யவும் குடிப்பதற்கு நீர் எடுத்து வரவும் உள்ளே செல்கிறீர்கள்.

அந்த நேரம் பார்த்து பக்கத்து அறையில் உங்கள் தொலைபேசி அலறுகிறது.
எடுத்துக் கத்தில் நீங்கள் வைத்தால் மறுமுனையில் உங்களதும் எனதும் இன்னொரு நண்பர் சொல்கிற தகவல்....

பதினைந்து நிமிடத்து முதலில் நடந்த பயங்கர விபத்தொன்றில் நான் இறந்துவிட்டேன்.பிணம் இப்போது வைத்தியசாலையில்....

இப்போது எனது கேள்வி..


நீங்கள் அடுத்ததாக என்ன செய்வீர்கள்? உங்கள் மனவோட்டத்தில் என்ன தோன்றும்??


இன்று காலை எனது விடியல் நிகழ்ச்சியிலும் இதே தலைப்பையே கொடுக்கிறேன்.
www.vettri.lk

என் நேயர்களிடமிருந்து வரும் வித்தியாசமான பதில்களையும் பின்னர் உங்களோடு பகிர்கிறேன்..

16 comments:

கன்கொன் || Kangon said...

ஏன் இந்தக் கொலைவெறி? :P

எனக்கு முன்னால் நீங்கள் நிற்கும்போது இறந்ததாக சொன்னாலென்னன, காயப்படவில்லை என்றாலென்ன, நான் கணக்கெடுக்க மாட்டேன்.

அமானுசியங்களில் நம்பிக்கை கிடையாது என்பதால் பயம் பெரிதாக வராது. ;)

கோவி.கண்ணன் said...

//பதினைந்து நிமிடத்து முதலில் நடந்த பயங்கர விபத்தொன்றில் நான் இறந்துவிட்டேன்.பிணம் இப்போது வைத்தியசாலையில்....//

செத்துப் போனவர் உங்கள் இரட்டை பிறவியின் ஒருவராக இருக்கனும், நீங்கள் காயத்தோடு தப்பிச்சிருக்கிங்க.
:)

Unknown said...

ரொம்ப பயங்கரமான கதையா இருக்கே.. மலையாள படமான கேரளா கபே தொகுப்பில் ஒரு படமான ம்ருடின்ஜயம் என்ற படத்தில் இப்படித்தான் எடுத்து இருப்பார்கள்..

இப்ப நானா இருந்தா கடைசி நேரத்தில் என் நண்பன் என்னிடம் சொல்ல விரும்பியிருக்கிறான் அவன் என்ன அலைகளே அவன் உருவமாக இங்கு நிற்கிறது அதனால் அந்த உருவத்திடம் விசாரணை செய்வேன்.. ( தைரியமாதான் சொல்றேன்)...

Vathees Varunan said...

எப்புடியெல்லாம் யோசிக்கிறீங்க

ஆவியாக வந்தாலும் வந்தவன் என்னுடைய நண்பன்தானே அதனால் பயப்படாமல் தொடர்ந்தும் நண்பனுடன் பேசியிருப்பேன்...

கிட்டத்தட்ட இதேமாதிரியான சம்பவம் என் நண்பர் ஒருவருக்கும் நிகழ்ந்தது
இதையும் வாசிக்கவும்

http://vatheesvarunan.blogspot.com/2009/03/1.html

Subankan said...

காலைப் பரிசோதித்துவிட வேண்டியதுதான் ஹீ ஹீ

அவர் சொன்ன‍து பொய்யானால் நண்பனுக்கு உதவிக்கொண்டிருக்கிறேன். பொய்யாக இருந்தால் வாழ்நாளில் முதன்முறையாக இறந்துபோன ஒருவருடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன். இதில் முதலாவது நடந்தால் மகிழ்ச்சி, இரண்டாவது நடந்தால் ஒரு வித்தியாசமான அனுபவம் .

யோ வொய்ஸ் (யோகா) said...

///கன்கொன் || Kangon

அமானுசியங்களில் நம்பிக்கை கிடையாது என்பதால் பயம் பெரிதாக வராது. ;////

Same..

listening Vettr FM

ஆதிரை said...

அவசர உதவிக்கு இருக்கிறதே 119...

பிறகென்ன பயம்?

ஆதிரை said...

இன்னொரு போலிக்கதை??

ஆனாலும், எந்த லோஷன் போலி லோஷன் எனக் கண்டறியாதவனெல்லாம் வலையுலகத்துக்குள் இருக்கமாட்டான். :-)

Karthick Chidambaram said...

நான் ஏற்கனவே இறந்து விட்டேன் ஆனால் இப்போது லோஷன் பேசுவதை கேட்டு கொண்டு உள்ளேன்.

மாயனின் தொலைந்த ப‌க்கம் said...

ஏன் ஐயா உங்களுக்கு இந்த கொலை வெறி!!!!பலர் எதிர் பார்க்காமலும் விரும்பாமலும் செத்துக் கொண்டிருக்க ஏன் உங்களுக்கு இந்த திடீர் நப்பாசை!!!இருக்கின்றதே நமக்கு இரவல்..எவ்வளவு காலம் வாழப் போறமோ தெரியாது...

ஆனா சாவப் பத்தி யோசிக்கிறது நல்ல விஷயம் அண்ணே!!!நீங்க யோசிக்கிறீங்க...யோசிக்க வேண்டியவங்க யோசிக்கிறாங்க இல்லையே!!!!

அண்ணே!நீங்கள் மரணித்தது எனக்கு தெரியாது...முதலில் அழைப்பை துண்டித்து உங்களுக்கு உதவுவேன்...ஆவியாக இருந்தால் என்ன உதவுவதற்கு நட்பு என்ற வரைவிலக்கணம் போதும்...........

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

சந்தோசம் - நீங்கள் விபத்துக்கு உட்பட்டிருந்தாலும் தப்பி வந்திருக்கிறீர்கள்.

//மறுமுனையில் உங்களதும் எனதும் இன்னொரு நண்பர் சொல்கிற தகவல்....

"பதினைந்து நிமிடத்து முதலில் நடந்த பயங்கர விபத்தொன்றில் நான் இறந்துவிட்டேன்.பிணம் இப்போது வைத்தியசாலையில்...."//

இது யாரோ விளையாடும் விளையாட்டு. தான் இறந்து விட்டதாக யாராவது போனில் கதைப்பார்களா? ஆகவே அந்த நண்பருக்கு பிரச்சினையில்லை.

:)

வந்தியத்தேவன் said...

அவரிற்க்கு அல்லது அதுக்கு முதலுதவின் அளித்துவிட்டு விபத்து எப்படி நடந்தது எனக் கேட்பேன்?
நான் எல்லாம் பேய்க்குப் பயப்படுகின்றவன் அல்ல (காலையிலே பேய்க் கதையா? நல்ல காலம் இரவில் வாசிக்கவில்லை)

anuthinan said...

காலை நிகழ்ச்சியை கேட்டக முடியவில்லை அண்ணா!!!! தவற விட்டுவிட்டேன்!!

என்னை பொருத்தவரை பயப்படமாட்டேன் என்று இல்லை!!!!
சிறுவயதிலிருந்தே எனது தாத்தா கூறுவார். உன்னால் ஆவிகளை இந்த ஜென்மத்தில் பார்க்கவே முடியாது என்று!!! எனவே, எனக்கு இந்த மாதிரி வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்தான்!!

(உங்களை பயன்படுத்தியதுக்கு பதில் ஒரு புனை பெயரை பயன்படுத்தி இருக்கலாம்!)

சயந்தன் said...

நான் என்ன செய்ய முடியும் -
நான் தான் இன்னொரு விபத்தில் செத்துப்போய் ஆஸ்பத்திரியில் பிரேதமாக் கிடக்கிறனே.. :)

இப்போ நீங்க என்ன பண்ணுவீங்க

Anonymous said...

ராகவன் : லோஷன் அண்ணா நீங்கள் இருந்தாலும் ON AIR இறந்தாலும் ON AIR தானா?

Bavan said...

விடியல் கேட்க முடியவில்லை, காரணம் பகலில்தான் நித்திரைவிட்டு எழுந்தேன்..:P

நானும் பயப்பட மாட்டேன் என்று பீட்டர் விடமாட்டேன்.. பயப்படுவேன்.. ஆனால் அதிக திகில் படங்கள் விரும்பிப்பார்ப்பதுண்டு.. எனவே உடனே அந்த தொலைபேசியிட்ட நண்பனை வீட்டுக்கு வரச்சொல்லுவேன்.

ஆனால் பயந்து கடைசிவரை கத்தவோ அடிக்கவோ, ஓடவோ மாட்டேன்.. பயத்தை தொண்டைக்குள் அடக்கி விழுங்கிக்கொண்டு உங்களுடன்(ஆவியுடன்) உரையாடுவேன்.

ஆருயிர் நண்பன் என்பதால் நண்பனைப்பற்றி நன்றாகத் தெரிந்திருக்கும்தானே.. ஒரு மாதிரி கதைத்து ஆவியின் காதலி வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடுவேன்..ஹிஹி

எப்படி என் இராஜதந்திரம்.. ஹாஹாஹா

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner