July 15, 2011

தெய்வத்திருமகள்

இன்று வேலைப்பளு அதிகரித்த நாள்; எழுத்து வேலையும் தலைக்கு மேல் இருந்தாலும், மனதார ரசித்த விஷயத்தை நண்பர்களிடம் பகிரவேண்டும் என்பதற்காகவும்,  நிலாவுக்காக ஒரு மணிநேரம் எடுத்து வருகிறது இப்பதிவு.

தெய்வத் திருமகள் நேற்றுப் பார்த்து நெகிழ்ந்ததில் இருந்து 'நிலா' மனசெல்லாம்..

ஒரு நல்ல நோக்கத்திற்காக நிதி சேகரிக்க யாழ் இந்துவின் பழைய மாணவர்களின் கொழும்புக் கிளை ஏற்பாடு செய்திருந்த விசேட முதல் காட்சியில் எம் வெற்றி FM வானொலி மூலமாக நாமும் சிறு பங்காக இணைந்திருந்தோம்..

ஓசி டிக்கெட் என்றாலும் அவர்கள் சேர்க்க வேண்டிய நிதி திருப்திகரமாக இருக்கவேண்டும் என்ற நினைப்புப் படம் ஆரம்பித்துப் பாதி நேரம் வரை மனதோடு பயணித்தது.

படம் பற்றி அறிந்ததில் இருந்து மிக எதிர்பார்த்திருந்த ஒரு படம்..
விக்ரம், பாடல்கள் தந்த எதிர்பார்ப்பை விட இயக்குனர் விஜய் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது..
தனது முதல் மூன்று படங்களிலுமே சிலாகிக்க வைத்து ரசிக்க வைத்தவர்.. கிரீடம், பொய் சொல்லப் போறோம், மதராசபட்டினம்..

(அனுஷ்கா, அமலா பால் ரசிகர்கள் ஓடிப் போங்க... )

ஆனால் இந்தத் திரைப்படம் ஆங்கிலப் படம் I am Samஇன் தழுவல் என்று தெரிந்த பிறகும், அந்த I am Sam ஐப் பார்த்த பிறகும் காத்திருந்த காரணம், அதில் உள்ள சில சிக்கலான பகுதிகளை எவ்வாறு தமிழ்ப்படுத்தப் போகிறார் விஜய் என்கிற ஆர்வம் தான்.
ஆனால் தழுவல் மட்டுமே.. ஆங்கிலப் படத்தின் முக்கியமான கதையோட்டத்தை மட்டுமே எடுத்துக்கையாண்ட விஜய் சிக்கலான, எங்களுக்குப் பொருந்தாத பகுதிகளைத் தமிழ் சினிமாவின் போக்கில் மாற்றிவிட்டார்.



ஆங்கிலப் படத்தில் சீன் பென் காட்டியிருந்த அற்புத நடிப்பை நம் விக்ரம் முந்துவார் என்று எதிர்பார்த்தது வீண் போகவில்லை. அனுஷ்காவும் மிஷேல் பீபரை நெருங்க முயற்சித்திருந்தார்.
ஆனால் ஆங்கிலப்படம் பார்க்காமல் தெய்வத் திருமகளைப் பார்ப்பது படத்தோடு ஒன்றவும் உணரவும் உங்களுக்கு உதவும்.

ஆனால் விஜயிடம் நான் எதிர்பார்த்த ஒன்று கிடைக்கவில்லை.
எழுத்து - இயக்கம் - விஜய்..
குறைந்த பட்சம் Inspired by I am Sam என்றாவது போட்டிருக்கலாமே..

மனவளர்ச்சி குன்றிய தந்தைக்கும், தாயில்லாமல் அவனுடன் வளரும் குழந்தைக்கும் இடையிலான பாசமும், குழந்தையின் எதிர்காலத்துக்காக அந்தப் பெண் குழந்தையைத் தத்தெடுக்க விரும்பும் குஹ்ழ்ந்தையின் தாய் வழி உறவுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வதுமே கதை....

பார்வைகள், இசை, வசனங்கள், உணர்ச்சிகள் மிகு காட்சிகள், அற்புதமான ஒளிப்பதிவு என்று எல்லாம் அளவான ஒரு நிறைவான திரைப்படம்..

விஜயின் மனம் உருவாக்கிய இந்தப் படத்தைக் காவிச் செல்லும் அறுவர் என நான் நினைப்பது..
விக்ரம் - இவர் நடிப்பைப் பற்றி புதுசாக சொல்லவேண்டுமா?

அனுஷ்கா - முன்பு உடலைக் காட்டிய இந்த ஆறடி அழகுப் பதுமை அமைதியாக, ஆவேசமாக, அன்பாக நடித்து அசர வைக்கிறது.

அமலா பால் - இவரை இப்படி மாங்கு மாங்கென்று எல்லாரும் வழிந்து தலையில் தூக்கி வைக்க என்ன காரணம் என்று தெரியாமல் இருந்தேன். (மைனா பார்த்திருந்தும்) நடிக்கிறார்.. கொஞ்சம் கறுப்பழகியாக இருந்தாலும் கண்களும், உதடுகளும் வாவ் சொல்ல வைக்கின்றன..


அந்த அழகான சின்னக் குழந்தை - சாராவா பெயர்? அள்ளி அனைத்து உச்சிமோந்திட வைக்கும் அழகும் துறுதுறுப்பும்.
இந்தச் சின்ன வயதிலேயே உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம்.. தந்தையின் மனவலர்ச்சியைத் தன வளர்ச்சி முந்துகிறது என்று காட்டும் காட்சிகள்.. வாவ்..

நிலா.. நேற்று படம் முடிந்து வானில் பௌர்ணமி நிலாவைப் பார்க்கும்போதும் இந்த நிலா தான் மனதிலே..

நீரவ் ஷா - மனதை ரம்மியப்படுத்தும் ஒளிப்பதிவு.. ஊட்டியில் குளிர்மையும். பின் வரும் காட்சிகளில் தெள்வும் என்று கலக்குகிறார். விழிகளில் பாடலில் மென் வேக ஒளிப்பதிவு, வெண்ணிலவே பாடலின் இருள் ஓவியம் என்பவை விசேடமாக உள்ளன.
close up காட்சிகளிலும் நீரவ் ஷா நிமிர்ந்து நிற்கிறார்.

G.V.பிரகாஷ் - படம் முழுக்க உணர்ச்சிகளைக் காட்டும் உயிர் இசை தான். பாடல்கள் எல்லாமே படத்தோடு ஒன்றைச் செய்வதும், தேவையான இடத்தில் தேவையான இசையைப் பேச வைப்பதும் என்று விஜயுடன் சேர்ந்தாலே G.V.பிரகாஷ் கலக்குவார் என்பதை மூன்றாவது தரமாக நிரூபிக்கிறார்.


ரசிக்க வைத்த பல காட்சிகளில் அதிகமாக ரசித்தவை..

நிலாவும், ஸ்வேதா(அமலா பால்)வும் சந்திக்கும் பள்ளிக் காட்சிகள்
நீதிமன்றக் காட்சிகளில் அனுஷ்காவும் நாசரும் மோதிக்கொள்ளும் இடங்களும் முகபாவமும்
நாசரின் நடிப்பு class..

நீதிமன்றத்தில் ஒரு பக்கம் உச்சக்கட்ட விவாதம் நடந்துகொண்டிருக்க, தங்களைப் பற்றியது தான் அது எனப் புரிந்துகொள்ளாத, விக்ரமும் நிலாவும் தங்களுக்குள் சைகையால் உணர்ச்சியுடன் பேசிக் கொள்ளும் இடம்..

கதை சொல்லப் போறேன் பாடல்.. என் வீட்டிலும் ஹர்ஷுவுடன் அடிக்கடி இதே போல கோக்குமாக்காகக் கதை சொல்லி நான் திணறுவதால் சேம் ப்ளட்..

ஜகடதோம் பாடலில் அனுஷ்காவின் தந்தையாக வரும் Y.G.மகேந்திரன் மனம் மாறும் காட்சிகள்..

M.S.பாஸ்கர் பாண்டியினால் மனம் மாற்றப்பட்டும் கொதிக்கும் இடங்கள். ஆரம்பத்தில் சிரிப்பாக மாறி பின் சீரியசாகும் இடமும் திருப்பம் வரும் இடமும்..
சந்தானம் - வழமையான ரெட்டை அர்த்தகடிகள் இல்லாமலேயே வெளுத்து வாங்குகிறார். அலுத்துக் கொள்வதும்,அலம்பல் செய்வதுமாக சிம்பிளான சிரிப்புவெடிகள்.

''ஒரு சம்பவம் நடக்குறதுக்கு ரெண்டுபேர்ல யாராவது ஒருத்தர் விவரமாய் இருந்தாலே போதும்'' இந்த வசனம் ஹைலைட்டாக மாறும் இடம் கலக்கல்..

தந்தை - மகள் பாசம் அபியும் நானும் திரைப்படத்தில் காட்டியது ஒரு பக்கம் என்றால் இது இன்னொரு அழுத்தமான பாசம்..
நாசரின் மன உணர்வுகள் மாறும் இடமும், அமலா பாலின் தந்தையாக வருபவரின் முகபாவங்களும், பாசத்தால் மனிதர்கள் எல்லோருமே உருகிவிடக் கூடியவர்கள் என்பதற்கான நிரூபணம்.


விக்ரம் - மனிதருக்கு வயது போகிறது என்பது தான் கவலையாக இருக்கிறது. அப்படியே நாம் காணும் விசேட தேவைக்குரியோரைக் காட்டுகிறார். வாழும் பாத்திரமாக..
கனவுக்காட்சியில் கூட அவரை ஹீரோவாகக் காட்டாமைக்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
ஆனால் Why DR சீயான் விக்ரம்? ரசிகர்கள் கேலியாக டாக்டர் விஜய் என்று கூவுகிறார்கள்.

சில சிறு பாத்திரங்களும் ரசனைக்குரியவர்கள்..
அனுஷ்காவின் நண்பி, அவரை வழிந்து வழிந்து காதலிக்கும் ஜூனியர் வக்கீல், விக்ரமை சீண்டும் குறும்பன் என்று இயக்குனர் செதுக்கியிருக்கிறார்.

கொஞ்சம் கண் கலங்கி, கொஞ்சம் ரசனையாக சிரித்து, மடியில் இருந்து படம் பார்த்த மகனை ஆசையுடன் தடவி,செல்லமாக முத்தமிட்டு அனுபவித்த தெய்வத் திருமகளை நீங்களும் அனுபவியுங்கள்..

விஜய் - வாழ்த்துக்கள்...

தெய்வத் திருமகள் - தேயாத நிலா 

38 comments:

கன்கொன் || Kangon said...

:-))))
ஒரே உணர்வுகள்... :-)


// ஆனால் Why DR சீயான் விக்ரம்? ரசிகர்கள் கேலியாக டாக்டர் விஜய் என்று கூவுகிறார்கள். //

:P

நிரோ said...

//கொஞ்சம் கண் கலங்கி, கொஞ்சம் ரசனையாக சிரித்து, மடியில் இருந்து படம் பார்த்த மகனை ஆசையுடன் தடவி,செல்லமாக முத்தமிட்டு அனுபவித்த தெய்வத் திருமகளை நீங்களும் அனுபவியுங்கள்..
தெய்வத் திருமகள் - தேயாத நிலா //
:)
first

வந்தியத்தேவன் said...

எப்படியும் பார்க்கவேண்டும் ஆனால் நேரம் தான் கிடைக்கின்றதோ தெரியவில்லை, லண்டன் வந்து இழந்தவற்றில் முதல் நாள் முதல் ஷோவும் ஒன்று.

romy said...

adai loshan unaku vijay ya ilukkama irukka mudiyaada????,, ean ajith mattum taan nadipaana, avane oru 9. vijay patti pesaaeda... poove unakkaga,, love today ,kaadaluku mariyaadai,tullada manamum tullum ,, kannukul nilavu,, eppadi nadipu.. kannukul nilavu paartu kalagar karunnanini paaraatinar teruyuma... shut ur bloddy mouth....stupid foool

Ashwin-WIN said...

அருமையான விமர்சனம் அண்ணா. அப்படியே ஏன் விமர்சன உணர்வுகளோடு ஒத்துப்போகிறது.. விக்ரமுக்கு வயசாகிரதுதான் ஆனாலும் சாரா (எங்கள் நிலா) விக்ரமுக்கு நாயகியா நடிக்குற காலமும் வரும்..
என்றும் மனசோடு நிலா.

அமரேஷ் said...

/கொஞ்சம் கண் கலங்கி, கொஞ்சம் ரசனையாக சிரித்து, மடியில் இருந்து படம் பார்த்த மகனை ஆசையுடன் தடவி,செல்லமாக முத்தமிட்டு அனுபவித்த தெய்வத் திருமகளை நீங்களும் அனுபவியுங்கள்..
தெய்வத் திருமகள் - தேயாத நிலா //
சா..ஒரு குழந்தை இல்லாமல் போச்சே எனக்கு...lol

நிகழ்வுகள் said...

விமர்சனங்களை பார்த்த பின் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தூண்டுகிறது .

நிகழ்வுகள் said...

///kannukul nilavu paartu kalagar karunnanini paaraatinar teruyuma /// ஹஹஹா இது தான் உச்ச பட்ச காமெடி ;-)

Unknown said...

இப்பதான் பார்த்திட்டு வந்தேன். படம் அருமை

maruthamooran said...

பொஸ்....!

எல்லோரும் தெய்வத்திருமகளை புகழுவதால் படத்தில நல்ல விசயங்கள் இருக்கும் என்று நம்புகிறேன்.

தழுவல் படங்களை எழுத்தாலும் இயக்குனர் விஜய் மீது ஈர்ப்பு இருக்கிறது.

கட்டாயம் படம் பார்க்க வேண்டும். அவன்- இவன், வேங்கை என்று எனக்கு கடுப்படித்த படங்கள் பார்த்த காயங்களை மாற்றவாவது தெய்வத்திருமகள் பார்க்க வேண்டும்.

Shafna said...

hey evanda andha romy? Namma loshanna va stupid enru sonna idiot.... Adai yeruma maadu avar sonnathu actor vijay illada mokka. Director vijay da punnaku. Olunga vasichi vilangatheriyaama edukuda comment yeludurai? Neethan da moadayan.. Olungu mariyaadhaya anna kitta mannippu keluda karumandram pudichavane...

Shafna said...

எவ்ளோ அழகா லோஷண்ணாட ரசனைல ஒரு அழகான விமர்சனத்தினூடாக ஒரு படத்தைப்பார்த்த அதே சந்தோஷத்துல பின்னூட்டத்தையும் வாசிச்சா,அடச்சே எவனோ ஒரு கபோதி மண்டைய குழப்பிட்டானே.வீனாப்போனவன்.எருமை மாடு,

Shafna said...

எனக்கு அந்த பின்னூட்டத்தை பார்க்க பார்க்க அந்த ரோமிய 4 அப்பு அப்பனும்போல கோபம் கோபமா வருது.. 2 கொமட்டையில மொங்கோனும் போல இருக்கு..பைத்தியக்காரன் பைத்தியக்காரன்.

சரியில்ல....... said...

இன்னா பாஸ் சொல்லுறிங்க? ஆங்கிலப்படத்தோட தழுவலா ? ம்ம்ம்... அது கெடக்குது கழுத... படம் பாக்கலாம் ன்னு சொல்லிட்டிங்க'ல.., பாத்திடுவோம்... விமர்சனத்திற்கு நன்றி....

சரியில்ல....... said...

romy said...

adai loshan unaku vijay ya ilukkama irukka mudiyaada????,, ean ajith mattum taan nadipaana, avane oru 9. vijay patti pesaaeda... poove unakkaga,, love today ,kaadaluku mariyaadai,tullada manamum tullum ,, kannukul nilavu,, eppadi nadipu.. kannukul nilavu paartu kalagar karunnanini paaraatinar teruyuma... shut ur bloddy mouth....stupid foool ///

ஹிஹி... விஜய் நடிச்ச நல்ல படங்கள் ன்னு ஒரு லிஸ்ட் குடுத்திருக்கிங்க பாருங்க..... அடேங்கப்பா... ... எங்கையோ போயிட்டிங்க... டென்ஷன் ஆகாதிங்கன்னே.. லெஸ் டென்ஷன் மோர் ஒர்க்... மோர் ஒர்க் லெஸ் டென்ஷன்...

சரியில்ல....... said...

Shafna said...

hey evanda andha romy? Namma loshanna va stupid enru sonna idiot.... Adai yeruma maadu avar sonnathu actor vijay illada mokka. Director vijay da punnaku. Olunga vasichi vilangatheriyaama edukuda comment yeludurai? Neethan da moadayan.. Olungu mariyaadhaya anna kitta mannippu keluda karumandram pudichavane... ///

சரி..சரி.. விடுங்க விடுங்க... கொதிக்காதிங்க...

சரியில்ல....... said...

உங்களுக்கு ஏன் பாஸ் இவ்ளோ கஞ்சத்தனம் ? ஹிஹிஹி... அமலா பால் போட்டோ'வ கொஞ்சம் பெருசா போட்டாதான் என்னாவாம்? எவ்ளோ பீலிங்கா இருக்கு எனக்கு....

Shafna said...

@ சரியில்லை.. எப்படிங்க விடுறது? எப்படிங்க கொதிக்காம இருக்கிறது? நம்ம அண்ணன பார்த்து இப்படி சொன்னவன விடுறதா?து? நம்ம அண்ணன பார்த்து இப்படி சொன்னவன விடுறதா?

அசால்ட் ஆறுமுகம் said...

பயங்கர எதிர்பார்பிற்கு பின் சென்று ஏமாறாமல் மன திருப்தியோடு வீடு திரும்பிய படம்.

// அந்த I am Sam ஐப் பார்த்த பிறகும் காத்திருந்த காரணம், அதில் உள்ள சில சிக்கலான பகுதிகளை எவ்வாறு தமிழ்ப்படுத்தப் போகிறார் விஜய் என்கிற ஆர்வம் தான். //

உண்மை தான் அண்ணா... நானும் அதைபற்றி நிறய யோசித்தேன். அந்த கதையை எப்படி எங்களது கலாச்சாரதுடன் (அமெரிக்க கலாச்சாரம் இல்லாமல்.) பின்னி எடுக்கப்போகிறார்கள் என்று....


// நீதிமன்றத்தில் ஒரு பக்கம் உச்சக்கட்ட விவாதம் நடந்துகொண்டிருக்க, தங்களைப் பற்றியது தான் அது எனப் புரிந்துகொள்ளாத, விக்ரமும் நிலாவும் தங்களுக்குள் சைகையால் உணர்ச்சியுடன் பேசிக் கொள்ளும் இடம்.. //

அந்த இடத்தில் நானும் நாசர் என்ன சொல்லிக்கொண்டு இருந்தார் என்பதை கவனிக்கவே இல்லை...

மொத்தத்தில் நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நல்ல திரைப்படம் பார்த்த உணர்வு....

sinmajan said...

ரசித்துப் பார்த்ததைப் பார்த்தவாறே வசனத்தில் கொண்டுவந்துவிட்டீர்கள் லோசன் அண்னா :-)

கார்த்தி said...

எனக்கு மிகவும் பிடித்து போனது இந்தப்படம்!
அண்ணே நீங்கள் கதையின் கருவை சொல்லியிருப்பதால் படம் பாக்காத ஒருவர் இதை பார்த்தால் அவரின் சுவாரஸ்யம் கெட்டு விடுமே!!
மனவளர்ச்சி குன்றிய தந்தைக்கும்.... என்று தொடங்கும் பந்தியை எடுத்து விட்டிருக்கலாம்!

Anonymous said...

அருமையான விமர்சனம்...

P.K.வேணுகோபாலன் said...

படத்தை பார்த்து ஒருவன் கண்ணில் கண்ணீர் வரவில்லையென்றால் அவன் கண்ணீர் சுரப்பியில் கோளாறு என்று பொருள்.

அருமை அருமை மிக அருமை......

HATS OFF ....விஜய்,விக்ரம்,சாரா....

விடியலை நோக்கி said...

superrrr.................

Anonymous said...

வணக்கம் பாஸ்,

படத்தினைப் பார்க்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டும் வகையில், உங்களின் விமர்சனமும் அமைந்திருக்கிறது, தெய்வத் திருமகள் பற்றிய எல்லோரது பார்வையும் கலக்கலாக அமைந்துள்ளது.
கண்டிப்பாக ஓய்வு நேரம் கிடைக்கும் போது படத்தைத் தியேட்டருக்குப் போய்ப் பார்த்திடுறேன்.

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

படத்தினைப் பார்க்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டும் வகையில், உங்களின் விமர்சனமும் அமைந்திருக்கிறது, தெய்வத் திருமகள் பற்றிய எல்லோரது பார்வையும் கலக்கலாக அமைந்துள்ளது.
கண்டிப்பாக ஓய்வு நேரம் கிடைக்கும் போது படத்தைத் தியேட்டருக்குப் போய்ப் பார்க்கிறேன்.

வாகீசன் said...

//அமலா பால் - இவரை இப்படி மாங்கு மாங்கென்று எல்லாரும் வழிந்து தலையில் தூக்கி வைக்க என்ன காரணம் என்று தெரியாமல் இருந்தேன்.//

இதற்காக உமது கண்களில் கொதிக்கும் எண்ணையை விட இருந்தேன் ஆனால் கடைசியில் நாசர்போல மனம் மாறியதால் தப்பித்தீர்.

kirukkan said...

It made be to cry like hell at last :( still thinking y i cried... cos of happiness or sadness????

romy said...

hellooooo, cool down cool down cool down.hello paawan avare confuse aaitaaru(sahfnaa)


loshan fool ku vijay y vitta matta ella dog yum pudikum special ajith akka.. vijay da maas teruyaama vilayaadureenga..... ettana films flop kudutaalum avarin maad kurayaadu , thatz namma thalabathy ,,,,, suriya or vikram even ajith kaanamna poi viduvaanga todarndu films kuduta....loshan unaga sonda katpanayila vimarsanam podunga ada vitutu...china pulla tanama illa....

romy said...

sahaffna neetan eruma.. adum summa eruma illa sokkipona kaatu eruma...... vijay ya patti teriyaama onnum pesaade.. unaku enda urimayum illaa enda thalaivana patti pesuraduku.... neeyum fool loshanum fool elloeum mutaalunga.....

அஜுவத் said...

விஜய்யின் அற்புதமான் படைப்பு; மதராசப்பட்டினத்தில் இருந்த விஜய் இன்னும் இரண்டு படி உயர்ந்திருக்கிறார் என் மனதில்.
ஆனால் ஒரு மிகப்பெரிய கவலை; நம் நாட்டில் ரசிகர்களுக்கு இவ்வளவு பஞ்சமா??? என்றுதான்.........
விஜய் (இளைய தளபதி) படம் பார்க்க காலை 8.30 மணியில் இருந்து (காய்ந்து கருவாடாகி) இரவு 10 மணி வரை வரிசையிலே காத்து கிடக்கும் அந்த ரசிகப்பெருமக்கள் எங்கே இப்போது??? நேற்று ஞாயிறு தினத்திலும் எமது திரையரங்குகள் காய்ந்து கிடந்தன!!!

ஷஹன்ஷா said...

படம் பார்த்தேன்... அருமை, அழகு, திறமை என்பவற்றை ஓரிடத்தில் கண்டு ரசித்தேன்.. நல்ல படம்..

நிலா.. மை பேவரேட் நேம்...

Shafna said...

hey loosu romy..vijay ya patri nan yeduvume sollaliye da punnaku..veena yean da solla vaikirai...unaku ajith,surya,vikram ivangala partu poraamai...athanaala thaan thevaiyillama sound udurai da sekku maadu... Enna irundhalum namma thala poala varuma? Tamil il type pannuda soamberi,..na yean da solla vaikirai...unaku ajith,surya,vikram ivangala partu poraamai...athanaala thaan thevaiyillama sound udurai da sekku maadu... Enna irundhalum namma thala poala varuma? Tamil il type pannuda soamberi,..

Thabo Sivagurunathan said...

நல்ல விமர்சனம் .!
உங்களுடைய பதிவான "நாங்கள் கையாலாதவர்கள் " என்ற பதிவுக்கு Anonymous ஆக கருத்துரை இட்டதாலோ என்னவோ ,திடீரென நானும் பதிவு எழுத தொடங்கிவிட்டேன் !
என்னுடைய முகவரி
http://oruulaham.blogspot.com/

ம.தி.சுதா said...

/////அந்த I am Sam ஐப் பார்த்த பிறகும் காத்திருந்த காரணம், அதில் உள்ள சில சிக்கலான பகுதிகளை எவ்வாறு தமிழ்ப்படுத்தப் போகிறார் விஜய் என்கிற ஆர்வம் தான்./////

தமிழில் தான் பார்த்துள்ளென் அண்ணா ஆங்கிலம் இனித் தான் தேடணும் காட்டாயம் பார்க்கணும்....

Sivaloganathan Nirooch said...

ம்... அருமையான திரைப்படம் நெஞ்ஞை நெகிழ வைத்துள்ளது

Thenikkaran said...

NADIKAR SIVAJIYIN MARUPIRAVI VIKRAM.......

SEEYAN VIKRAM ROCKS.......NADIKAR SIVAJIYIN MARUPIRAVI VIKRAM.......

SEEYAN VIKRAM ROCKS.......

கலியுக தமிழன் KALIYUGA TAMILAN said...

அன்புள்ள லோசன் அண்ணாவுக்கு, இனிய வணக்கங்கள்
உங்கள் விமர்சனம் மிகவும் புதுமையாக உள்ளது. பாராட்டுக்கள்...... ஆனால், "ஐ அம் ஷாம்" திரைப்படத்தை 70% சுட்டு "தெ.தி.மகள்" எடுத்தமையானது ஒரு மிகச் சிறந்த ஏமாற்று வேலையாகும். ஷியானின் தீவிர வெறித்தனமான ரசிகனாக இருந்த போதிலும் என்னால் இதனை ஏற்க இயலவில்லை.
அடுத்து...... அது யார்? ரொமியோ/இருமியோ, அவருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்....
விஜய்-அஜித் என்று ஆடாதீர்............ உடம்புக்கு நல்லதல்ல......... பார்திங்க இல்ல, சூரியாவோட 6 பெக்ச........ இனி பார்க்க போரிங்க ஷியானோட ராஜ தாண்டவத்த!!!
இனிமேல் எங்க ஷியான் - சூரியா காலம்டா...... ஆண்டவன் கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான், ஆனா கை விட்டுருவான்..... நல்லவங்கள சோதிப்பான், ஆனா கை விடமாட்டான்.....
லைட்டா சொல்லிருக்கென்........ புரியுதா பார்ப்போம்....... இல்லேனா அதிரடிதான்!!!

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner