April 13, 2009

கலைஞர் & ஜெ -ஒரு பார்வை - ஈழத்தமிழர் முட்டாள்களா? பதிவர்களே கவனியுங்கள்...


சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள் எல்லோருக்கும்!

கொண்டாடுகிறீர்களோ இல்லையோ, வாழ்த்துக்கள் சொல்வதில் நான் ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை.

வழமைபோல் நான் கொண்டாடப்போவதில்லை – எதையாவது கொண்டாடக்கூடிய நிலையிலேயோ, நாட்டிலேயோவா நாமிருக்கிறோம்.

முகத்தில் சிரிப்பையே கண்டு பலநாளாகி, வயிற்றுக்கு உணவு சென்றே பலநாளாகி, உயிருக்கே உத்தரவாதமின்றி, உறவுகள் தொலைந்து பலபேர் வாழும் பூமியில் புதுவருடம் மட்டும்தான் இல்லாத குறை!

வானொலிக்காக மட்டும் வாழ்த்துக்களும், சிறப்பு நிகழ்ச்சிகளும் வழங்குவதாய் எண்ணம். (என்ன செய்ய போர்வீரன் என்றால் களமும், ஒலிபரப்பாளன் என்றால் மகிழ்ச்சியும், பாடல், வாழ்த்துக்களும் நிதமும் என்பது விதியானதே)

இன்று இருக்கும் வேலைகளுடன் பதிவு போடுவதாய் எண்ணமிருக்கவில்லை! நாளைய புதுவருடத்துக்கான நிகழ்ச்சிகள், விடுமுறை என்பதால் நேரத்துக்கு வீட்டுக்கு செல்லவேண்டும் என்று பல விஷயங்கள்.

============

அப்படியிருப்பினும் நேற்று முன்தினம் இரண்டுபேரின் பதிவுகளை வாசித்த பிறகு இன்று எழுதியே ஆகவேண்டும் போல இருந்தது.

ஒன்று நான் பதிவராக மாறும் முன்பிருந்தே அதிகம் வாசித்து ரசிக்கும் லக்கிலூக். நான் மிக மதிக்கும் பதிவர்களிலொருவர்.

அடுத்தவர் கொழுவி – சில விஷயங்களை 'படும்' விதத்தில் சொல்பவர் என்பதனால் நான் ரசிக்கும் இன்னொருவர்.


இந்த இரண்டு பதிவுகளுக்குமே பின்னூட்டம் போட்டாலும் - ஒரு பதிவு போட்டே தீரவேண்டும் என்பதனாலேயே இது!

    =============

லக்கிலூக் கலைஞரின் அரசியல் - ஈழத்தமிழர் பிரச்சினை பற்றிய பார்வை போன்றவற்றை விரிவாக நேர்மையாக ஆராய்ந்த பின்னர் ஒரு இடத்தில் 


இன்று இணையத்தில் கலைஞரை வசைபாடும் ஈழத்தமிழர்களும் அம்மா ஆட்சிக்கு வருவதையே விரும்பியிருப்பார்கள் என்பதையும் புரிந்துகொள்ள இயலுகிறது. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் வைகோ அம்மாவோடு இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக இணையத்தில் திமுக எதிர்ப்பினை கடுமையாக கடைப்பிடித்தவர்கள் தான் இவர்கள்

 என்று குறிப்பிடுகிறார்.

தமிழக முதல்வர் கலைஞர் ஈழத்தமிழர் விவகாரத்தில் அசமந்தமாக இருக்கிறார்..  நேரத்திற்கு ஒரு விதமாக நடக்கிறார்...  லக்கியாரே சொல்லியிருப்பது போல வீராவேசம் பேச்சு மட்டும்தான் - செயலளவில் பூச்சியமாகவே இருக்கிறார் என்றெல்லாம் ஈழத்தமிழ்ப் பதிவர்கள் மட்டுமல்லாமல் பல இந்தியத்தமிழ்ப் பதிவர்களே எழுதிவருகின்றனர்.

இதற்காக எழுதும் ஒட்டுமொத்தப் பேரும் கலைஞர் கருணாதியை வெறுப்பவர்கள் என்றோ, கலைஞருக்கும் பதிலாக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்திருந்தால் ஈழத்தமிழர் விவகாரத்தில் நல்ல முடிவை, இலங்கைத் தமிழருக்கு தீர்வொன்றைத் தந்திருப்பார் என்று முட்டாள்தனமாக சிந்திக்கின்றோம் என்று அறியாமையாக நினைத்துக்கொள்வது சரியாகுமா?

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழக அரசியல் பற்றி அறிந்துகொள்ளாமல் இருக்கும் அறிவிலிகளா நாம்?

தமிழினத் தலைவர் என்று பெருமைப்படுத்தப்படுகின்ற கலைஞரே இவ்வாறு எடுத்ததற்கெல்லாம் மத்திய அரசுக்கும். தன் கழக / குடும்ப ஆட்சியின் இருப்புக்காக கோழையாக மாறும்போது
விடுதலைப்புலிகளையும் - அதன் காரணமாக ஒட்டுமொத்த ஈழத்தமிழரையும் முன்பிலிருந்தே எதிர்த்து வந்திருக்கும் ஜெயலலிதா இந்த இடத்தில் என்ன செய்திருப்பார் என்று தெரியாதா?

இலங்கையின் அரசியல் பற்றி ஆர்வமில்லாவிட்டாலும் இலங்கையிலுள்ள தழிழர்களுக்கு இந்திய அரசியல் மீது, குறிப்பாக தமிழக அரசியல் மீது ஆர்வமம், அவதானிப்பும் எப்போதுமே அதிகம்.


இலங்கையிலே தந்தை S.J.V.செல்வநாயகம், அமிர்தலிங்கம், பின் காலஞ்சென்ற தொண்டமான் அவர்களோடு பெரும்பாலும் இலங்கைத் தமிழரின் அரசியல் தலைமைத்துவங்கள் அமிழ்ந்துவிட்டதாகவே கருதலாம். (முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவமும் கூட M.H.M.அஷ்ரப்புடன் அடங்கிவிட்டது)

இப்போது தமிழரின் அரசியல், போராட்டம் இரண்டின் மையப்புள்ளியும் ஒரே இடத்திலேயே இருப்பதை உலகமறியும்.

எனவே தான் அரசியல் - நாடாளுமன்ற வாக்கு மைய அரசியல் என்றவுடனேயே தமிழகம் தான் ஈழத்தமிழருக்கு முன்னிடம் பெறுகிறது. வாசிப்பது, பார்ப்பது, கேட்பது என்று அனைத்தின் மூலமாகவுமே தமிழக அரசியலின் நாளாந்த விஷயங்களைவ வருடக் கணக்காகத் தெரிந்து வைத்திருக்கிறோமே.

எங்களுக்குத் தெரியாதா யாரால் யாருக்கு என்ன செய்யமுடியுமென்று? எண்பதுகளில் M.G.R செய்த உதவிகளும் - 90களில் கலைஞரின் ஆவேசமும் - 90களின் பிற்பாதியில் ஜெயலலிதாவின் குரோதமும் துரோகமும் - வைகோவின் ஆரம்ப உண்மை உணர்வுகள் - இப்போது அவர் அடங்கி அடைக்கலமாயிருப்பது என்று அநேகமாக அத்தனை விஷயமும் தெரியும்.
(இதை வெளிக்கொண்டு வருவதில் வந்ததில் தமிழக வலைப்பதிவர்களுக்கும் தனியான பங்குண்டு)

காரண காரியங்களை (கழக ஆட்சி தங்கி தொக்கி இருக்க) லக்கியார் அருமையாக சொல்லி இருந்தாலும், அவர் போன்ற உண்மையான பல தி.மு.க தொண்டர்களின் ஆதங்கங்களை பல பதிவுகளில் நான் படித்திருந்தாலும் அநேகரின் கருத்து கலைஞர் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே செய்திருக்கலாம்.. குறைந்த பட்சம் முயற்சியாவது எடுத்திருக்கலாம் என்பதே.. 

தமிழினத் தலைவர் என்ற பெயருக்கிணங்க அவரிடம் அதிகம் எதிர்பார்த்து நடவாததனாலேயே அதிகமாக அவர் எம்மால் சாடப் படுகிறார்.. சபிக்கப் படுகிறார்..  


இதைத்தான் கொழுவியும் சாட்டையடி கொடுத்திருக்கிறார். லக்கிலுக்கின் பதிவின் பின்னூட்டத்தில் நானும், சயந்தனும் சொன்னதையும் பல தமிழகப் பதிவுலக நண்பர்களும் ஆமோதித்திருக்கிறார்கள்.

இதற்குள் மானஸ்தன் நம்ம மொக்கை,கும்மிகளை சாடி இருக்கிறார்.. நியாயமான ஆதங்கம்.. எங்களால் முடிந்தவை இவ்வளவு தான்யா.. (முடியுமானவரை மொக்கைகளிநூடு கூட சில விஷயங்களை சொல்ல முயல்கிறேன்)

இந்திய, தமிழக அரசியல் சூழலில் இப்போது ஏன் இலங்கைப் பிரச்சினையில் காத்திரமானதொரு முடிவு எடுக்க முடியாமலுள்ளது என்பது குறித்தும் ஓரளவு தெளிவுள்ளதாலேயே (பார்க்க என்னுடைய முன்னைய பதிவுகள்) யாரையும் நான் கண்டித்து – ஆதரவு கோரி – குரலெழுப்புங்கள் என்று அண்மைக்காலத்தில் பதிவிடவில்லை.

பார்க்க என்னுடைய முன்னைய பதிவுகள்


உரிமையோடு தமிழக உறவுகளிடம் எங்களுக்காக குரல் கொடுங்கள்,ஆதரவுக் கரம் நீட்டுங்கள் என்று நாம் கோரிக்கை விடுத்தாலும் கூட அதில் ஒரு அளவு,வரையறை,சில நியதி,நியாயங்கள் இருப்பதையும் நான் அறிவேன்/நாம் அறிவோம்.. தார்மீகக் கடமை என்றாலும் கூட தமிழக மக்கள் எவ்வளவு தூரம் எமக்காக பரிந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாமறிவோம்..

எங்களால் கொடுமைகளையும், கோரங்களையும்,அடக்குமுறைகளையும் அலசி ஆராய முடியாமல் தான் இங்கிருந்து எழுதுவோரில் பாதிப்பேருக்கு மேல் மொக்கைப் பதிவர்களாக மாறியிருக்கிறோம்.. சொந்தப்பெயரில் எழுதும் பொது பல் விஷய்னக்ளை நாம் சிந்திக்க வேண்டி இருக்கிறது அல்லவா?

எத்தனை கொடுமைகளின்,ரணங்களின் மத்தியில் சிரித்துக் கொண்டே ரசிக்க வேண்டிய பொழுதுகளை நாம் ரசித்துக் கொண்டே இருக்கிறோம்.. 

தமிழக மக்களுக்கே இவர்களால் பெரும்பாலான தீர்வுகள் வழங்கப்படவில்லை. இதற்குள் இவர்களா இனிமேலுமாவது ஈழத்தமிழர்களைக் காப்பாற்றப் போகிறார்கள்?

எத்தனையோ முடிந்து இறுதிக்கட்டம் இது என்று இலங்கை அரசு சொல்கிறது. இன்றும் ஒரு சொற்பப் பேரே – மீதியானோர் புலம்பெயர்ந்து அகதிமுகாம்களில்!

இனி நடவடிக்கை எடுத்துத் தான் என்ன ஆகப்போகிறது?

பார்க்கப் போனால் இத்தனை அழிவுகளுக்குப் பிறகும் தமிழ் மக்கள் 'மகிழ்ச்சியுடன்' புதுவருடம் கொண்டாட இரு நாட்கள் யுத்த நிறுத்தம் அறிவித்திருக்கும் மாண்புமிகு இலங்கை ஜனாதிபதி போற்றுதலுக்குரியவர்.

போங்கைய்யா – போய் தேர்தல் வேலைகளைப் பாருங்க.... நாற்பதில் முடியுமானவரை சுருட்டிக்கொள்ளுங்க. நாங்கள், எங்கள் பிரச்சினையும் ஏதோ ஒரு விதத்தில் உங்களுக்கு வாக்கு சேர்க்க உதவுவோம். எங்கள் சகோதர அப்பாவி தமிழ் மக்கள் போல.

தி.மு.க ஆண்டால் என்ன அ.தி.மு.க ஆண்டால் என்ன ....
அழிவு அழிவுதான்.
மத்தியில் காங்கிரசுக்குப் பதில் அத்வானியின் பா.ஜ.க வந்தால் ஏதாவது மாறுமா?

வழமையான ஏமாளி ஈழத்தமிழன் ஒருவனின் நப்பாசை தான்!



20 comments:

Rajaraman said...

தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.

தயா பாலா said...

ஒரு தலைவருக்கு இருக்கவேண்டிய தகைமைகள் கலைஞருக்கில்லை. கலைஞரை தலைவர் என்று கூறுவதை முதலில் நிறுத்த வேண்டும்...

அவர்கள் ப(பி)ணம் தின்னிப்பேய்கள்.

Kesi said...

ஈழத் தமிழரின் பார்வையில் உங்கள் அலசல் நன்று.உங்க கொதிப்பைக் கொட்டிடீங்க..

என்ன செய்ய நண்பா.. எங்கள் தமிழக மாங்கா மடையர்கள் திருந்த மாட்டாங்க..

அம்மா இல்லேன்னா ஐயா.. ஐயா இல்லேன்னா அம்மா..
இந்த முறையாவது மாறுவாங்களா?

Anonymous said...

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

சோமி said...

///வானொலிக்காக மட்டும் வாழ்த்துக்களும், சிறப்பு நிகழ்ச்சிகளும் வழங்குவதாய் எண்ணம்///
போர்வீரன் போர் புரிந்துகொண்டும் பாட்ட்டுக்கரன் பாடிக்கோண்டும் கூத்தாடி கும்மாளம் அடித்துக் கோண்டிருபதுதான். நமது தமிழர் விடுதைப் போராட்டத்தின் சோகம். ஆனால் இன்றைய காலனித்துவ உலகமயமாக்கல் சூழலில் இது தவிர்க்கவியலாதது
கருணாநிதி மீதான கோபம் ஈழத்தமிழருக்கு உச்சமாக இருப்பதற்கு காரணம் அவர் மீதான வாசிப்பும் நேசிப்பும் இருந்ததுதான்.(ஹி ஹி தமிழ்நாட்டில கலைஞர் ஆட்ச்சிங்கோ)

Anonymous said...

U WILL COME TO KNOW ABOUT KARUNA(TAMILNADU)SOON!HE HAS ALREADY STARTED HIS TONQUE TWISTING COMEDY!THIS MAN NEVER ANSWERED TO QUESTION ABOUT INDIAN MILITARY ASSISTANCE TO SRI LANKAN GOVT INSTEAD HE IS BRINGING OLD STORY ABT JJ!NOW HE STARTED BLAMING LTTE FOR LONG RUNNING CIVIL WAR.DURING JJ REGIME WAS THERE ANY MILITARY ASSISTANCE TO CRUSH LTTE FROM INDIA?KARUNANITHI SHOWING SOLIDARITY WITH EELAM TAMILS WHILE HIS COALITION PARTNER SENDING MILITARY ASSISTANCE TO SRI LANKA!LOOK HW HE PLAYS DOUBLE ROLE IN THIS ISSUE!JJ SAID MANY THINGS ABOUT LTTE BUT NEVER FORCED CENTRAL GOVT TO ASSIST SRI LANKAN ARMY.IT HAPPENED ONLY DURING KARUNANITHI PERIOD!

vanathy said...

எனக்கு இந்தியக் குடி உரிமையும் இல்லை,வாக்குரிமையும் இல்லை,ஆனால் இந்திய விவகாரங்களில் ஈடுபாடு உண்டு.உலகம் சுருங்கி விட்ட நிலையில் அமெரிக்க தேர்தலில் இந்தியருக்கு இருந்த அக்கறையை ஈடுபாடை விட எனக்கு இந்தியாவின் தேர்தலில் அதிகமான ஈடுபாடும் அக்கறை மட்டுமல்ல ,தமிழினத்தைச் சேர்ந்தவள் என்ற முறையில் உரிமையும் உண்டு.
அது மட்டுமல்ல இந்திய மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் ,ஈழத்தமிழரின் உயிர்களையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் விடுதலைப் போராட்டத்தையும் அவர்களின் அரசியல் உரிமைகளையும் பாதித்து வந்திருக்கிறது.இப்போதும் பாதித்து கொண்டிருக்கிறது.
இந்திய அரசின் இந்த நடவடிக்கைகள் நான் பிறப்பதற்கு ;பல காலத்திற்கு முன்பே தொடங்கிவிட்டன ஆனால் அதன் பின் விளைவுகளை ஈழத்தமிழர்கள் இப்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய வம்சாவளி தமிழர்களின் குடி உரிமையைப் பறிப்பதற்கு இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்ததில் இருந்து கச்சை தீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்ததில் தொடர்ந்து ஈழ விடுதலை இயக்கங்களுக்கு முதலில் ஆதரவு கொடுத்து பின்பு அவர்களுக்கு மத்தியில் பிரிவினையைத் தூண்டி சகோதர யுத்தத்தை ஆரம்பித்து வைத்ததில் இருந்து இந்தியாவின் பங்கு தொடர்ந்து கொண்டு போய் அதன் உச்சக் கட்டமாக இந்திய அமைதிப் படையை அனுப்பி பத்தாயிரம் ஈழத்தமிழர்களின் உயிரை எடுத்ததில் இருந்து இன்று இலங்கை அரசின் இனப்படுகொலை யுத்தத்திற்கு உதவி செய்வது வரை இந்திய அரசு ஏதோ ஒரு விதத்தில் ஈழத்தமிழரின் நவீன பின் காலனித்துவ வரலாற்றில் பின்னிப் பிணைந்து தொடர்பு கொண்டுள்ளது.
அந்த விதத்தில்தான் இந்தியாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் --பெரும்பாலான இந்த நடவைக்கைகள் திரைமறைவில் நடப்பவை.- ஈழத்தமிழரை நிச்சயம் பாதிக்கும். என்பதால் இந்தியாவின் தேர்தலில் அக்கறை காட்டுகிறேன்.
அந்த விதத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
ஒரு காலத்தில் நான் திமுகவின் ஆதரவாகத்தான் இருந்தேன் ,அவர்களின் ஆரம்ப கால கொள்கைகளான தமிழ் உணர்வு,சாதி எதிர்ப்பு ,மதச்சார்பின்மை எளிய பாமர மக்களுக்காக குரல் கொடுக்கும் தன்மை என்பவற்றால் ஈர்க்கப் பட்டேன் ,சமீப காலம் வரை செல்வி.ஜெயலலிதாவுடன் ஒப்பிடும் போது திரு கருணாநிதி பரவாயில்லை என்று நினைத்திருந்தேன்
ஆனால் திமுக இன்று கொள்கையில் சோரம் போன ,பதவி ஆசையும் பணத்தாசையும் கொண்ட குடும்ப நலனில் மட்டும் அக்கறை கொண்ட ஒரு குடும்ப இயக்கம்மாக மாறிவிட்டது.
அதை விட மோசம் ,ஈழத்தமிழர்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்பட அதைத் தடுக்க எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் ,இலங்கை அரசுக்கு துணை புரியும் காங்கிரஸ் ஆட்சிக்கு முட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆறு மாதத்துக்கு முன்பு ஆரம்பித்த தமிழ்நாட்டு மக்களின் ஈழ ஆதரவு என்ற மக்கள் கிளர்ச்சியைத் தடுத்ததில் கருணாநிதி அவர்களின் பங்கு பெரியது .அது மட்டுமில்லை ஈழ ஆதரவாளர்களையும் ,தமிழ் உணர்வாளர்களையும் சிறையில் தள்ளி கருத்து சுதந்திரத்தையும் பேச்சு சுதந்திரத்தையும் திரு கருணாநிதி காலில் போட்டு மிதித்து உள்ளார் இந்த விஷயத்தில் இவரும் ஜெயலலிதாவிற்கு சளைத்தவர் இல்லை.
ஜெயலலிதா பிரபாகரனைப் பிடியுங்கள் ,போரில் சாவது தவிர்க்க முடியாதது என்று எல்லாம் திருவாய் மலர்ந்து இருக்கிறார்தான் இவை எல்லாம் வாய் மொழிகள்தான் ,அவர் செயல் ரீதியாக இன்னும் ஈழத்தமிழர்களுக்கு அநியாயம் செய்யவில்லை.
ஆனால் முதல்வர் கருணாநிதி ஈழத்தமிழர்களை கரிக்கட்டைகளாக ஆக்கும் சிங்கள அரசுக்கு உதவும் காங்கிரசுக்கு ஆதரவு காட்டியதின் மூலம் கடந்த பல மாதங்களாகக் கொல்லப் படும் ஒவ்வொரு தமிழர்களின் சாவுக்கும் மறைமுகமாக உதவி உள்ளார்.
எல்லோரும் சொல்கிறார்கள் ,அவரால் என்ன செய்திருக்க முடியும் என்று.
அவரால் நிறைய செய்திருக்க முடியும் ,ஆறு மாதங்களுக்கு முன்பே துணிச்சலாக நேர்மையாக இதய சுத்தியோடு ஈழத்தமிழரின் விடயத்தில் அவர் நடந்திருந்தால் இந்திய மத்திய அரசின் போக்கில் அவர் மாற்றம் கொண்டுவந்திருக்கலாம் இந்தியாவின் ஆதரவு இருந்த படியால்தான் இந்த சின்ன ஸ்ரீலங்கா இவ்வளவு திமிர்த்தனமாக நடக்கிறது. இந்தியாவும் இலங்கை போரில் சம்பத்தப்பட்டு உள்ளதால்தான் மற்றைய உலக நாடுகளும் ஐநா சபையும் இலங்கைமீது காத்திரமான நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள்.
எனவே சொல்லுகிறேன் ,அதிமுக வென்றாலும் பரவயில்லை என்ற நிலைக்கு நான் வந்து விட்டேன்
ஜெயலலிதா தமிழ் உணர்வு இல்லாதர்தான் ,ஆனால் முதியவருக்கு அது இப்போது இருப்பதாகத் தெரியவில்லை.
ஜெயலலிதா மதத்துவேஷக் கொள்கை உள்ளவர்களோடு கூடிக் கொஞ்சுபவர்தான் ஆனால் கருணாநிதி அவர்களும் பாஜக வுடன் கூட்டணி வைத்த்வர்தானே
ஜெயலலிதா ஈழத்தமிழருக்கு எதிரான சில கருத்துகளை சொல்லி இருக்கிறார்,
கருணாநிதி அவர்கள் செய்தே இருக்கிறார்.
ஜெயலலிதா தமிழின எதிரி என்று சொல்லப்படுபவர் ஆனால் எதிரிகளுடன் போராடுவது சுலபம் ,ஏனெனில் அவர்கள் வெளிப்படையானவர்கள்
ஆனால் துரோகிகளோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் ,ஏனெனில் அவர்கள் நயவஞ்சகத்தனமாக இருந்து நீங்கள் எதிர்பாராத நேரத்தில் உங்களை அழித்து நம்பிக்கை துரோகம் செய்து முதுகில் குத்துவார்கள்.
ஒருகாலத்தில் அதிமுக வெற்றி பெற்றால் வருத்தபடுவேன் இப்போது அப்படி இல்லை.
காங்கிரஸ் தோற்றால் மிகவும் மகிழ்ச்சி கொள்வேன்
-வானதி

Anonymous said...

PLEASE VISIT abhara.blogspot.com

பிரதிபலிப்பான் said...

நேர்மையான முறையில் லக்கிலுக்கின் பதிவை அலசி பதில் தந்தமைக்கு.

நானும் தங்களுடைய கருத்தை ஆமோதிக்கிறேன்.

தர்ஷன் said...

PJP ஆட்சிக்கு வந்தால் ஏதும் மாற்றங்கள் இருக்குமா? ADMK வந்தால் ஏதும் செய்யுமா? என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஈழத்தமிழர் நலனைப் புறந்தள்ளி அவர்களின் சகோதர தமிழக மக்களின் வாக்குகளை பெற முடியாது என்ற எண்ணம் இந்திய தலைமைகளுக்கு வரவேண்டும். அவ்வகையில் தமிழர் துரோக Congress கூட்டணியை தமிழக மக்கள் நிராகரிக்க வேண்டுமென்பதே இலங்கையரின் அவா.

Agniputhiran said...

இலங்கைத் தமிழர்ப்பிரச்சினையில் கலைஞர் மீது குறை கூறவும் அவர் உலகத்தமிழர்களுக்கு எதிரானவர் என்பது போலவும் ஒரு மாயப்பிம்பத்தை உருவாக்க இலங்கைப்பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டு தற்போது ஆளாளுக்குக் கட்டுரை எழுதிக் குவித்து வருகிறார்கள். (இவர்கள் எப்போதும் கலைஞரை குறை கூறும் நபர்கள்தாம்! இப்போது இவர்களுக்கு இவ்விவகாரம் கைகளில் கிடைத்திருக்கிறது. தற்போதைய அசாதாரணச் சூழலைச் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள மிகவும் தந்திரமாக முயலுகிறார்கள்)

திமுகவிடமும் கலைஞரிடமும் இப்பிரச்சினையில் இவர்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெளிவாகக் கூற வேண்டும்.

திமுகவின் அண்மைய கால நடவடிக்கைகளான

1. சர்வகட்சிக்கூட்டம்

2. மத்திய அரசுக்குக் கெடு

3. கொட்டும் மழையில் மனிதச் சங்கிலி போராட்டம்

4. எம்.பிக்கள் ராஜினாமா மிரட்டல்

5. நிதி வசூலித்து உணவுப்பொருட்கள் அனுப்பிவைக்க மேற்கொண்ட அணுகுமுறைகள்

6. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து கோரிக்கையளித்தது அதனைத் தொடர்ந்து சர்வ கட்சித் தலைவர்களோடு கலைஞர் பிரதமரைச் சந்தித்து கோரிக்கையளித்தது

7. சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தீர்மானங்கள் இயற்றியது

8. இந்திய மைய அரசை நிர்ப்பந்தப்படுத்தி இந்திய பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்க கடும் முயற்சி மேற்கொண்டது

9. இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை உருவாக்கிச் செயல்படுவது என்று எல்லா நிலைகளிலும் கலைஞர் தன்னால் முடிந்தவரை செயல்பட்டிருக்கிறார். உடற்நலக்குறைபாட்டையும் கவனத்தில் கொள்ளாது செயல்பட்டுக்கொண்டும் இருக்கிறார்.

அதிமுக தலைவி செல்வி ஜெயலலிதா இதுவரை இலங்கைப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் ஒரு சிறு துரும்பையாவது கிள்ளிப்போட்டு இருப்பாரா? இவரைதான் ஆட்சியில் அமர்த்த வைகோ துடிக்கிறார், தா.பாண்டியன் தாவிக்குதிக்கிறார், ராமதாசு ராக்கெட் வேகத்தில் அறிக்கை விட்டுத் தூள் கிளப்புகிறார். திருமா திண்டாடித் திணறுகிறார். திமுகவிற்கு மாற்று என்றால் இன்றைய சூழலில் அதிமுகதான் என்பது ஊரறிந்த விஷயம். திமுகவைப் பலவீனப்படுத்தப் படுத்த அதன் பயன் அதிமுகவிற்கே போய் சேரும் என்ற உண்மை எல்லாம் இந்த கபடவேடதாரிகளும் அறியாதவர்கள் அல்ல. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒத்த கருத்து உடைய திமுகவை எதிர்க்கிறார்கள். அதே சமயம் மாற்றுக் கருத்துக் கொண்ட அதிமுகவை ஆதரித்து கூட்டணி கொள்கிறார்கள். என்னே அரசியல் விநோதம்?

கலைஞர் அவதூறுப்பிரச்சாரக் கட்டுரையாளர்களிடம் என்னதான் எதிர்பார்ப்புகள் இருக்கக்கூடும்?

1. மத்திய அரசுக்கு கொடுக்கும் ஆதரவை திமுக வாபஸ் வாங்கி மத்திய அரசைக் கவிழ்த்து விடுவோம் என்று மிரட்ட வேண்டும்.

அல்லது

2. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் திமுக ஆட்சியை விட்டு இறங்கிப் போராட வேண்டும். இவைதாம் இவர்கள் அதிகபட்சமாகத் திமுகவிடமும் கலைஞரிடமும் எதிர்பார்ப்பவையாக இருக்கக்கூடும். சரி, இப்படி நடந்தால் என்ன நடக்கும்?

மத்திய அரசு பதவிக்காலம் முடியும் இத்தருணத்தில் ஆதரவு வாபஸ் என்ற மிரட்டல் எல்லாம் இனி எடுபடாது. இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்றத்தேர்தல் வர உள்ள இந்த நிலையில் காங்கிரஸை பகைத்துக்கொள்ள நேரிடும். திமுக இடத்தை தட்டிப்பறிக்க அதிமுகவின் தலைவி செல்வி ஜெயலலிதா தவமாய்த் தவம் கிடக்கிறார். கூட்டணி மாற்றத்துக்குத்தான் இது வாய்ப்பளிக்கும்.

தினம் தினம் அறிக்கை விட்டு இலங்கைப்பிரச்சினையில் சூடு கிளப்பும் ஐயா இரமாதாஸ் அவர்கள் தமது அன்பு மகன் அன்புமணியை இன்னும் மத்தியில் அமைச்சராக நீடிக்க வைத்திருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்து. ஒரு இரண்டு மாதம் காலம் கூட பதவியை இழக்க விரும்பாமல் கடைசி வரை பதவிச்சுகம் அனுபவிக்க ஆசைப்படும் நிலையில் இலங்கைத் தமிழர்ப்பிரச்சினையில் நீலிக் கண்ணீர் வடித்து அறிக்கையும் அறிவிப்பும் வெளியிடுவது அப்பாவித் தொண்டர்களை வேண்டுமானால் ஏமாற்றலாம் நடப்பு அரசியலை நன்கு புரிந்து வைத்திருக்கும் நமது மக்களை ஏமாற்ற முடியாது. கடைசி வரை காங்கிரஸ் வசம் ஒட்டிக்கொண்டு இருந்து விட்டு அப்படியே காங்கிரஸை அதிமுகவிடம் ஓட்டிக்கொண்டு போவது மருத்துவரின் மகா மெகத் திட்டமாக இருக்கக் கூடும்.

இவர் கதை இப்படி என்றால் “புரட்சிப்புயல்” வைகோ கதையோ வேறு நிலையில் செல்லுகிறது.

“போர் என்றால் பொதுமக்கள் சாகக்தான் செய்வார்கள், அந்நிய நாட்டுப்பிரச்சனையில் நம் தலையீடு கூடாது.” அதிமுக தலைவியின் அகங்காரக் கூற்றாக அண்மையில் நாளிதழ்களில் வெளிவந்த செய்தி இது. இந்தத் தலைவிக்குத்தான் “புரட்சிப்புயல்” வெஞ்சாமரம் வீசி, அவரை அடுத்து ஆட்சி பீடம் ஏற்றுவதற்குப் பம்பரமாய்ச் சுற்றிச்சுழகிறது.

அப்படியே எதிர்பாராதவிதமாக ஏதோ ஒரு சூழலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புரட்சிப்புயல் வைகோ மீண்டும் உள்ளே செல்லத்தான் அதிக வாய்ப்புள்ளது. இத்தனை ஆண்டுகள் அரசியல் செய்தும் இப்படி ஒரு அரசியல் மாமண்டூகமாகப் புரட்சிப்புயல் திரிவதுதான் வேதனையிலும் வேதனை! வேடிக்கையிலும் வேடிக்கை!

அடுத்து இவர்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் என்னவாக இருக்கக்கூடும்?

இலங்கைப் பிரச்சினையைக் காரணம் காட்டி திமுக அரசு பதவி விலக வேண்டும் என்பதே!

சரி ஆட்சியை திமுக கைவிட்டுவிட்டால் மட்டும் இப்பிரச்சினையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இலங்கைப்பிரச்சினையைத் தீர்த்துவிடுமா? அப்படியே இந்தியா தலையிட்டாலும் இனவாத இலங்கை அரசு பணிந்து விடுமா? இப்படி பல்வேறு பிரச்சினைகள் சிக்கிக் தவிக்கும் இப்பிரச்சினையில் கலைஞரை மட்டும் குறை கூறுவதே இலட்சியமாகக் கொண்டு கட்டுரை புனைவதும் அவரைத் திட்டி தீர்ப்பதையும் நடுநிலை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். திமுக தமிழகத்தில் ஆட்சியில் இருப்பதால்தான் இந்த அளவுக்காவது இலங்கை இனவாத அரசு அடக்கி வாசிக்கிறது என்று இலங்கைத் தமிழர்களே கூறுகிறார்கள்.

சரி திமுகவிடம் இருந்து ஆட்சி மாறி அதிமுகவிடம் சென்றால் மட்டும் கலைஞரை விட செல்வி ஜெயலலிதா இப்பிரச்சினையில் அதிக அக்கறை காட்டி தமிழர்களைக் காப்பாற்றி விடுவாரா?

யார் யாரைவிட தமிழர் நலனில் அக்கறை மிகுந்தவர்கள் என்பதை நாடு நன்கு அறியும்.

இலங்கைப்பிரச்சினையில் அரசியல் ரீதியாக பல முறை பலத்த பாதிப்புக்குள்ளான இயக்கம் திமுகதான் என்பதை மனசாட்சியுள்ளவர்கள் மறுக்க மாட்டார்கள். மறைக்கவும் மாட்டார்கள். இவர்களின் உள்நோக்கம் இலங்கைப் பிரச்சினையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு திமுகவையும் கலைஞரையும் பலவீனப்படுத்த வேண்டும் என்பதே!

தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்

Anonymous said...

இலங்கைத் தமிழர்ப்பிரச்சினையில் கலைஞர் மீது குறை கூறவும் அவர் உலகத்தமிழர்களுக்கு எதிரானவர் என்பது போலவும் ஒரு மாயப்பிம்பத்தை உருவாக்க இலங்கைப்பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டு தற்போது ஆளாளுக்குக் கட்டுரை எழுதிக் குவித்து வருகிறார்கள். (இவர்கள் எப்போதும் கலைஞரை குறை கூறும் நபர்கள்தாம்! இப்போது இவர்களுக்கு இவ்விவகாரம் கைகளில் கிடைத்திருக்கிறது. தற்போதைய அசாதாரணச் சூழலைச் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள மிகவும் தந்திரமாக முயலுகிறார்கள்)

திமுகவிடமும் கலைஞரிடமும் இப்பிரச்சினையில் இவர்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெளிவாகக் கூற வேண்டும்.

திமுகவின் அண்மைய கால நடவடிக்கைகளான

1. சர்வகட்சிக்கூட்டம்

2. மத்திய அரசுக்குக் கெடு

3. கொட்டும் மழையில் மனிதச் சங்கிலி போராட்டம்

4. எம்.பிக்கள் ராஜினாமா மிரட்டல்

5. நிதி வசூலித்து உணவுப்பொருட்கள் அனுப்பிவைக்க மேற்கொண்ட அணுகுமுறைகள்

6. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து கோரிக்கையளித்தது அதனைத் தொடர்ந்து சர்வ கட்சித் தலைவர்களோடு கலைஞர் பிரதமரைச் சந்தித்து கோரிக்கையளித்தது

7. சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தீர்மானங்கள் இயற்றியது

8. இந்திய மைய அரசை நிர்ப்பந்தப்படுத்தி இந்திய பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்க கடும் முயற்சி மேற்கொண்டது

9. இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை உருவாக்கிச் செயல்படுவது என்று எல்லா நிலைகளிலும் கலைஞர் தன்னால் முடிந்தவரை செயல்பட்டிருக்கிறார். உடற்நலக்குறைபாட்டையும் கவனத்தில் கொள்ளாது செயல்பட்டுக்கொண்டும் இருக்கிறார்.

அதிமுக தலைவி செல்வி ஜெயலலிதா இதுவரை இலங்கைப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் ஒரு சிறு துரும்பையாவது கிள்ளிப்போட்டு இருப்பாரா? இவரைதான் ஆட்சியில் அமர்த்த வைகோ துடிக்கிறார், தா.பாண்டியன் தாவிக்குதிக்கிறார், ராமதாசு ராக்கெட் வேகத்தில் அறிக்கை விட்டுத் தூள் கிளப்புகிறார். திருமா திண்டாடித் திணறுகிறார். திமுகவிற்கு மாற்று என்றால் இன்றைய சூழலில் அதிமுகதான் என்பது ஊரறிந்த விஷயம். திமுகவைப் பலவீனப்படுத்தப் படுத்த அதன் பயன் அதிமுகவிற்கே போய் சேரும் என்ற உண்மை எல்லாம் இந்த கபடவேடதாரிகளும் அறியாதவர்கள் அல்ல. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒத்த கருத்து உடைய திமுகவை எதிர்க்கிறார்கள். அதே சமயம் மாற்றுக் கருத்துக் கொண்ட அதிமுகவை ஆதரித்து கூட்டணி கொள்கிறார்கள். என்னே அரசியல் விநோதம்?

கலைஞர் அவதூறுப்பிரச்சாரக் கட்டுரையாளர்களிடம் என்னதான் எதிர்பார்ப்புகள் இருக்கக்கூடும்?

1. மத்திய அரசுக்கு கொடுக்கும் ஆதரவை திமுக வாபஸ் வாங்கி மத்திய அரசைக் கவிழ்த்து விடுவோம் என்று மிரட்ட வேண்டும்.

அல்லது

2. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் திமுக ஆட்சியை விட்டு இறங்கிப் போராட வேண்டும். இவைதாம் இவர்கள் அதிகபட்சமாகத் திமுகவிடமும் கலைஞரிடமும் எதிர்பார்ப்பவையாக இருக்கக்கூடும். சரி, இப்படி நடந்தால் என்ன நடக்கும்?

மத்திய அரசு பதவிக்காலம் முடியும் இத்தருணத்தில் ஆதரவு வாபஸ் என்ற மிரட்டல் எல்லாம் இனி எடுபடாது. இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்றத்தேர்தல் வர உள்ள இந்த நிலையில் காங்கிரஸை பகைத்துக்கொள்ள நேரிடும். திமுக இடத்தை தட்டிப்பறிக்க அதிமுகவின் தலைவி செல்வி ஜெயலலிதா தவமாய்த் தவம் கிடக்கிறார். கூட்டணி மாற்றத்துக்குத்தான் இது வாய்ப்பளிக்கும்.

தினம் தினம் அறிக்கை விட்டு இலங்கைப்பிரச்சினையில் சூடு கிளப்பும் ஐயா இரமாதாஸ் அவர்கள் தமது அன்பு மகன் அன்புமணியை இன்னும் மத்தியில் அமைச்சராக நீடிக்க வைத்திருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்து. ஒரு இரண்டு மாதம் காலம் கூட பதவியை இழக்க விரும்பாமல் கடைசி வரை பதவிச்சுகம் அனுபவிக்க ஆசைப்படும் நிலையில் இலங்கைத் தமிழர்ப்பிரச்சினையில் நீலிக் கண்ணீர் வடித்து அறிக்கையும் அறிவிப்பும் வெளியிடுவது அப்பாவித் தொண்டர்களை வேண்டுமானால் ஏமாற்றலாம் நடப்பு அரசியலை நன்கு புரிந்து வைத்திருக்கும் நமது மக்களை ஏமாற்ற முடியாது. கடைசி வரை காங்கிரஸ் வசம் ஒட்டிக்கொண்டு இருந்து விட்டு அப்படியே காங்கிரஸை அதிமுகவிடம் ஓட்டிக்கொண்டு போவது மருத்துவரின் மகா மெகத் திட்டமாக இருக்கக் கூடும்.

இவர் கதை இப்படி என்றால் “புரட்சிப்புயல்” வைகோ கதையோ வேறு நிலையில் செல்லுகிறது.

“போர் என்றால் பொதுமக்கள் சாகக்தான் செய்வார்கள், அந்நிய நாட்டுப்பிரச்சனையில் நம் தலையீடு கூடாது.” அதிமுக தலைவியின் அகங்காரக் கூற்றாக அண்மையில் நாளிதழ்களில் வெளிவந்த செய்தி இது. இந்தத் தலைவிக்குத்தான் “புரட்சிப்புயல்” வெஞ்சாமரம் வீசி, அவரை அடுத்து ஆட்சி பீடம் ஏற்றுவதற்குப் பம்பரமாய்ச் சுற்றிச்சுழகிறது.

அப்படியே எதிர்பாராதவிதமாக ஏதோ ஒரு சூழலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புரட்சிப்புயல் வைகோ மீண்டும் உள்ளே செல்லத்தான் அதிக வாய்ப்புள்ளது. இத்தனை ஆண்டுகள் அரசியல் செய்தும் இப்படி ஒரு அரசியல் மாமண்டூகமாகப் புரட்சிப்புயல் திரிவதுதான் வேதனையிலும் வேதனை! வேடிக்கையிலும் வேடிக்கை!

அடுத்து இவர்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் என்னவாக இருக்கக்கூடும்?

இலங்கைப் பிரச்சினையைக் காரணம் காட்டி திமுக அரசு பதவி விலக வேண்டும் என்பதே!

சரி ஆட்சியை திமுக கைவிட்டுவிட்டால் மட்டும் இப்பிரச்சினையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இலங்கைப்பிரச்சினையைத் தீர்த்துவிடுமா? அப்படியே இந்தியா தலையிட்டாலும் இனவாத இலங்கை அரசு பணிந்து விடுமா? இப்படி பல்வேறு பிரச்சினைகள் சிக்கிக் தவிக்கும் இப்பிரச்சினையில் கலைஞரை மட்டும் குறை கூறுவதே இலட்சியமாகக் கொண்டு கட்டுரை புனைவதும் அவரைத் திட்டி தீர்ப்பதையும் நடுநிலை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். திமுக தமிழகத்தில் ஆட்சியில் இருப்பதால்தான் இந்த அளவுக்காவது இலங்கை இனவாத அரசு அடக்கி வாசிக்கிறது என்று இலங்கைத் தமிழர்களே கூறுகிறார்கள்.

சரி திமுகவிடம் இருந்து ஆட்சி மாறி அதிமுகவிடம் சென்றால் மட்டும் கலைஞரை விட செல்வி ஜெயலலிதா இப்பிரச்சினையில் அதிக அக்கறை காட்டி தமிழர்களைக் காப்பாற்றி விடுவாரா?

யார் யாரைவிட தமிழர் நலனில் அக்கறை மிகுந்தவர்கள் என்பதை நாடு நன்கு அறியும்.

இலங்கைப்பிரச்சினையில் அரசியல் ரீதியாக பல முறை பலத்த பாதிப்புக்குள்ளான இயக்கம் திமுகதான் என்பதை மனசாட்சியுள்ளவர்கள் மறுக்க மாட்டார்கள். மறைக்கவும் மாட்டார்கள். இவர்களின் உள்நோக்கம் இலங்கைப் பிரச்சினையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு திமுகவையும் கலைஞரையும் பலவீனப்படுத்த வேண்டும் என்பதே!

தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்

தீப்பெட்டி said...

கருணாநிதியை கொஞ்ச காலம் கவனிக்காமல் இருங்கள். அவர் திரும்பி திருந்தி வருவார்
அவரை வைத்தே ஆட்டம் இருப்பதால் அதிகம் ஆடுகிறார்

Anonymous said...

You are right Loshan.

Eazham tamils do not care about TN politics and leaders anymore...
Thay can fool TN people if they want.

All are same, amma or aiyah.

ராஜ நடராஜன் said...

பதிவு மனதில் துயரத்தை மட்டுமே உருவாக்குகிறது.அதனால் மனம் திறந்த இந்தப் பின்னூட்டம்.

பின்னூட்டம் பக்கம் வந்தால் வானதி என்ற பெயரில் யதார்த்தமான கோபத்தை வெளிப்படுத்துகிறது.அக்னிபுத்ரன் (நானறிந்த அக்னிபுத்ரன் பெயரா தெரியவில்லை)பின்னூட்டம் கலைஞர் சார்ந்த சில உண்மைகளை வெளிப்படுத்தினாலும் முழு உண்மைகளைக் கூறுவதாக இல்லை.கலைஞரின் வரலாறு தெரிந்தவர்கள் ஈழம் சார்ந்த அவரது செயல்கள் அவரது இரட்டை நிலையை நன்கு உணர்த்துவதை பதிவர்கள் பாரபட்சமில்லாமல் சொல்கிறார்கள்.

பதிவுகளில் கலைஞரை விமர்சிப்பவர்கள் பெரும்பாலும் தி.மு.க சார்புடையவர்களே.அப்படி சார்பு நிலை மனிதர்களே தி.மு.க விற்கு பாடம் கற்பிக்க வேண்டும் என நினைப்பதன் நோக்கம் என்ன?அரசியல் ஆதாயங்கள் தேடுபவர்களுக்கு வேண்டுமானால் தி.மு.கவை பலவீனப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம்.மனிதநேயம் மட்டுமே நினைப்பவர்களுக்கு ஈழம் குறித்து ஏதாவது விடிவு ஏற்படாதா என்பதே நோக்கம்.

நெஞ்சுக்கு நீதி எழுதிய கலைஞருக்கே வெளிச்சம் அவரது அரசியல் சாணக்கியத்தனங்கள்.சட்டமன்ற தீர்மானம் அடுத்து MP ராஜினாமா என்ற ஆயுதம் குறைந்த பட்சம் இந்திய அரசியலை மாற்றிப் போட்டிருக்கும்.தமிழக முதலமைச்சர் என்ற அதிகார பீடத்தில் இருந்தும் செயலாற்ற இயலாமை,தமிழை மற்ற பக்கவாத்திய அரசியல்வாதிகளை விட அதிகம் நேசித்தவர் என்ற நம்பிக்கையில் விழுந்த அடியினாலேயே அவர் மீது கோபமும்,விமர்சனமும் எழுகிறது.

ஜெயலலிதா பற்றி விமர்சிக்க என்ன இருக்கிறது?சந்தர்ப்ப சூழல்களால் அரசியலுக்கு வந்தவர் என்பதை விட.

பலதரப்பட்ட தமிழக அரசியல் கூத்துக்களை உற்றுநோக்கினாலும் எல்லாம் முதிரா கனிகள் என்ற பார்வையில் கலைஞரின் பல்லாண்டு அரசியலில் ஈழத்தின் செயல்பாடுகள் அவரது இறுதிக்காலத்தின் அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியே.

அமெரிக்கனுக்கு கிடைத்த மாற்றங்கள் வேண்டும் கோசம் தமிழனுக்கு கிட்டாதது வருத்தத்தை மட்டும் உருவாக்குகிறது.

Paheerathan said...

//கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழக அரசியல் பற்றி அறிந்துகொள்ளாமல் இருக்கும் அறிவிலிகளா நாம்?//

இத்தனை வருசமாக இந்திய சினிமாவையும் தொலைக்காட்சி பத்திரிகைகளையும் படித்தே வளர்ந்திருக்கிறோம் அதனால் எந்த ஈழத்தமிழனுக்கும் இந்திய அரசியலும் அரசியல்வாதிகளும் தண்ணி பட்ட பாடம்.
எங்களுக்காக தீக்குளிக்கும் சிறை செல்லும் உறவுகள் முன்னால் இந்த அரசியவாதிகள் எல்லாம் தூசு.
கலைஞர் கடிதம் எழுதினார் , கவிதை எழுதினார் , அம்மா அங்கே அது பேசினா இது பேசினா என்பதெல்லாம் எங்களுக்கு இங்கு பத்திரிக்கை படிக்கும் பொது தலைப்பை மட்டும் படித்துவிட்டு அடுத்த தலைப்புக்கு போவமே ? அது மாதிரியான செய்திகள்தான் . (என்ன லோஷன் ??)

மதன் சொல்வது போல தேர்தலிலே மோசமானவரும் மிகமோசமானவரும் போட்டியிடுவார்கள் அதிலே மோசமானவராவது வரட்டும் என்றுதான் நாங்கள் விரும்பலாம்.

Unknown said...

மலையக மக்கள் படிக்காதவர்கள், ஆகவே அவர்களை மலையக அரசியல்வாதிகள் ஏமாற்றுகிறார்கள் என்கிறோம், ஆனால் தமிழ்நாட்டு மக்களை இவர்கள் எல்லாம் ஏமாற்றுவதை என்னென்று சொல்வது?

புதுவருடத்தை கொண்டாடினால் வாழ்த்துக்கள்.
வவுனியாவிற்கு வந்தேன். வவுனியாவில் கொண்டாட்டங்கள் அமோகம். நான் மட்டும் தான் கொண்டாடாமல் இருக்கும் நிலை இங்கு... கொழும்பே பரவாயில்லை போல...

'மனிதன் மாறிவிட்டான்... மனிதன் மாறிவிட்டான்...'

ஈழச்சோழன் said...

லோசன்!
தப்பு எங்களுடையது (ஈழத்தமிழர்களுடையது) தான். நாங்கள் எப்போதுமே எங்கள் சொந்த நல்ல தலைமைகளை சர்வதேச ரீதியில் பலப்படுத்தியது கிடையாது. மாறாக அவ்வாறான தலைமைகளை (தலைமையை) அவன் அவன் தான் பெயரெடுப்பதற்காக கண்டபடி விமர்சித்து வந்திருக்கின்றார்கள். சாக்கடை அரசியல் என்ற சொற்பதம் எங்கள் தமிழுக்கு அறிமுகம் செய்ய காரணமாக இருந்த இந்த சாக்கடை நாய்களை (கலைஞர் மற்றும் அன்ரி (அவவை அம்மா என்று சொல்லாதேங்கப்பா))நாங்கள் மறந்து விடுவதுதான் சரியான வழி.

அப்பன் இருக்கும் வரை அப்பனின் ருசி தெரியாத என்ற ஒரு வாக்கியம் தமிழில் உள்ளது. அதேபோல் எங்களுக்கு கிடைத்திருந்த நாங்கள் பயன்படுத்த தவறிய தலைமையின் அருமை சில நாய்களுக்கு இன்னும் சிறிய காலத்திற்குள் தெரியவந்துவிடும்.

Anonymous said...

˙ssǝɔɔɔns ǝɥʇ ןןɐ noʎ ɥsıʍ ˙sıɥʇ ǝʞıן ǝʇıɹʍ dǝǝʞ ˙ɹɐǝʎ ʍǝu ʎddɐɥ ɹnoʎ ɥsıʍ ˙ʇɐǝɹƃ ǝɹɐ noʎ uɐɥɐsoן

Anonymous said...

ʞɯʞʞ
˙ssǝɔɔɔns ǝɥʇ ןןɐ noʎ ɥsıʍ ˙sıɥʇ ǝʞıן ǝʇıɹʍ dǝǝʞ ˙ɹɐǝʎ ʍǝu ʎddɐɥ ɹnoʎ ɥsıʍ ˙ʇɐǝɹƃ ǝɹɐ noʎ uɐɥɐsoן

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner